கடவுளின் குழந்தையொன்று
உலகியல் விளையாட்டினை
விளையாடிக் கொண்டிருந்தது.
எது தவறு
எது சரியென
கடவுளிடம் கேட்டுக் கேட்டு
குழந்தை அந்தப்
பொம்மைகளை
தவறு சரியென
இரண்டு வட்டங்களுக்குள்
பிரித்து பிரித்து வைத்தது.
குழந்தை கடவுளிடம்
ஏதோ கேட்பதற்காக
திரும்பிப் பார்த்த
சில நிமிடங்களில்
வட்டங்களிரண்டிலிருந்தும்
பொம்மைகள்
சரிக்கும் தவறுக்குமாக
மாறி மாறி குதித்துக்
கொண்டிருந்தன.
சலித்துப் போனக்
குழந்தை
தவறுகள் வைத்திருந்த
வட்டத்திற்குள்
தானேப் போய்
உம்மென்று உட்கார்ந்து
கொண்டது
Author: virutcham
பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..
கடைச் சொல்
கிளையிலிருந்து
தரைக்கு வீழ்கிற
இலையைப் போன்றே
கணித நுட்பம்
தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?
தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?
காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்கிற
கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?
போதுமான தொரு
வாழ்விலிருந்து மீளும்
சுய விலகல் என்கிறான் ஞானி
ஒரு வேளை
துடித்தடங்கும்
இக்கயிற்றை அறுத்து
தரையிறக்குகையில்
உடைந்த என் குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்
ஒரு தற்க்கொலையின்
காரணத்திற்கான
கடைசிச்சொல்.
குற்றத்துக்கான புள்ளி..
*
திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த பகலில்
சூழ்ச்சிக்கான முதல் புள்ளியைக் கையில் வைத்திருந்தேன்
நாளது வரை நடந்த சம்பவக் குறிப்புகள்
எட்டு மடிப்புக் காகிதக் கோடுகளின்
அழுக்கேறி கிழிந்திருக்கிறது
ஒவ்வொரு எழுத்தின் வன்மத்தையும் அலசித்
தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது
சுலபம் என்கின்றன மனச் சுவர்கள்
பாதுகாப்பின் உச்சியில் நீரோடும் மின்சாரக் கம்பிகள்
தருணங்களின் கணத் துளிகளை ஆவியாக்குகின்றது
திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பகல்
எங்கோ ஓர் இருட்டின் தனிமையில்
சத்தமில்லாமல் திறந்து விடுகிறது குற்றத்துக்கான
இறுதிப் புள்ளியை
******
எதையாவது சொல்லட்டுமா………63
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
வெள்ளை ரோஜா-கவிதைகள் அன்னம் வெளியீடு, அகரம் சிவகங்கை ரூ.5-00
கரைச்சல்களே சங்கீதம்
சிறுமைக்கு நீர் வார்த்தால்
தெருநெடுவே முள் வளரும்.
திருவாய் மொழி எனவே
சேவை மனப்பான்மை
சிவலோகம் போகிறது’
‘அவரவர்கள் பாட்டுக்கு
அகப்பட்டது சுருட்டல்
தவறில்லை என்னுமொரு
தருமம் தழைக்கிறது.’
மூணு மாசம் முன்னாலே
மாரி மகமாயி வந்து
எங்க அக்காவின்
ரெண்டு கண்ணையும்
சூறையாட்டிட்டா
ஒரு மனசு வெச்சு
ஒதவுங்கையா’
புத்திலக்கியம் படைத்து
இந்தச் சமுதாயத்தை
புணருத்தாரணம் செய்யப் போகிறவன்’
அந்த யாசிப்பில் வரும் நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு என்ற எண்களின் இறக்கத்தை ரசிக்கிறானாம். இந்தக் கவிதையின் கடைசி வரிகளில் மனத்தின் வினோதப் போக்கு பிடிக்கப்பட்டிருப்பதால் இந்தக் கவிதையை உயர்வானதாகக் கூறவேண்டும்.
சாரமிருக்குதம்மா’ என்ற பாரதியின் வரியை நினைந்து மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ள நேருகிறது. கவிதை பற்றிய, கவிஞனுக்கு இருக்க வேண்டிய அனுபவம் இங்கு காணப்படவில்லை. மேலும் விஷயம் மிகவும் சாமான்யமாகி விட்டது. என்றாலும் கூட தேனரசன் நம்பிக்கை தருகிறார்.
அன்புடன்,
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
வாழ்க்கையோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்வதும் இதற்கு ஒரளவு காரணம் எனலாம். இக்பாலும், காலிப்பும் பிரிவடையா இந்தியா தந்த பொக்கிஷங்கள். காலிப் இறந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் இக்பால். காலிப்பின் கவித்துவத்தினால் பெரிதும் கவரப் பட்டவர்.
”என்னுடைய இதயத்தின் துளைகளை
ஒன்று சேர்த்து வைக்கிறேன்-
அவளுடைய கண்கள் மறுபடியும்
அதைத் துளைக்கட்டும்”
இதயத்தில் ரத்தம் வரச் சக்தியில்லை”
”காதலின் வலிக்கோ மருந்தில்லை
அற்பமான இதயமே-மறுபடியும்
காதல்வலி கொள்கிறாயே”
அவ்வாறிருக்க-கடவுளே ஏனிந்த ஆரவாரம்”
”உலோபியான மண்ணைப் பார்த்து
கேட்கிறேன் நான்-அதனுள்
புதைத்த அழகுகளை அது
என்ன செய்தது?”
அவள் பார்க்கின்ற வரை நானும் உயிருடன் இருப்பேன்.”
என் மனதைக் கொள்ளை கொண்டு சென்று விட்டாளே,”
ஆனால் அவளோ நான் விரும்பினும் வாராள்”
புதைந்து கிடக்கின்றன. நான்
ஏழை யொருவனின் கல்லறையின்
எரிந்த விளக்கு.”
அந்த நிலத்தில் உனது அந்தரங்கத்தையும்
பாட்டினையும் பகிர்ந்து கொள்பவர் இருக்கக்கூடாது
அங்கொரு வீட்டினைக் கட்டு கதவுகளும்
சுவர்களும் இருக்கக் கூடாது.
அந்த வீட்டிற்குக் காப்பாளர், பக்கத்து
வீட்டுக்காரர் இருக்கக் கூடாது
நீ உடல் நலம் குன்றினால் உன்னைக் கவனிப்பார்
இருக்கக் கூடாது. நீ உயிரை விட்டால் துக்கம்
அனுஷ்டிப்பவர் இருக்கக் கூடாது.”
நீ வருந்தாமல் இரு-அது ஒரு உண்மை
உன்னுடைய ஆலயங்களின் சாமிகள்
எல்லாம் மிகவும் பழையன
அவை உனக்கு வெறுப்பைப் போதித்தன
உனக்குச் சொந்தமானவற்றை
சொந்தமில்லை என்றன
சண்டையிடு அல்லல்படு என்பவை
கடவுளின் விருப்பம்-அறிவுக்குத்
தெரிந்த உண்மை
உன் அறிவு வார்த்தைகளால் நான் களைத்து
வேதங்களையும் கோயில்களையும் விட்டு விடுகிறேன்
எனக்குக் கற்கள் மட்டுமல்ல
என்னுடைய நாட்டின் அற்பமான தூசியும் புனிதமானது”.
ஓயாதடிக்கின்ற அலைகளைக் கேட்டேன்
நீ எதற்கு அடிமை?
ஆயிரக்கணக்கான கீழ்த்திசை முத்துகளுடன்
உன்னுடைய ஓரங்கள் பளபளக்கின்றனவே!
என்னுடைய இதயத்தைப் போன்ற
மாணிக்கம் ஒன்று உன்னிடம் உள்ளதா?
கடல் கரையிலிருந்து வெட்கப்பட்டு ஓடியது
பேசவில்லை.”
எல்லோரும் கூறுவர்
அவனை அறிந்தேன்-அவனை அறிந்தேன்
எனினும் ஒருவரும் அறியவில்லை-
எப்போது நான் வந்தேன்?
என்ன நான் சொன்னேன்?
யாருக்கு நான் சொன்னேன்?”
திவ்யா.
ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979
இறப்புக்குமுன் சில படிமங்கள்
பிரம்மராஜன்
ஜன்னலில் அடைத்த வானம்
குறுக்கிடும்
பூச்செடிகளுடன்
சுப்ரபாதம் இல்லை என்றாலும்
மங்களமான பனிப்புகையில்
விடியல்.
நரைத்த உடைந்த இரவின் சிதறல்கள்
நேரமாய் வந்துவிட்ட
தோட்டியின் கால்களின் முன்.
மண் தின்று எஞ்சிய
எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை
காற்றைத் தவிர
அவனுக்கு மட்டும்
பியானோவென இசைத்து ஒலித்தது
உறங்காமல் திரிந்த
மணிகூண்டு உணர்விழந்துவிட்டது
உறையும் குளிரில்.
பறந்த பறவைகள் வானில் கீறியஓவியம்
பார்த்ததில்
பந்தயம் இழந்தது
நேற்று
விரலிடுக்கில் வழிந்த காலத்தின்
துளிகளை
மற்றொரு கையேந்த
கணங்களை முழுவதும் எரித்தாகிவிட்டது
அவன் இறந்து விட்டான்
இன்றெதற்கு இரண்டாவது மாடியில்
அழகான அறை?
பூக்கள் நிஜமாய்
மலராது அங்கு








