11.09.2020 அன்று சூம் மூலம் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம்.

அழகியசிங்கர்

கடற்கரை மத்தவிலாஸம்  அங்கதம் அவர்கள் பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி என்ற தலைப்பில் வாசித்தார்.

24 கவிஞர்கள் பங்கு கொண்டு கவிதை வாசித்தார்கள்.

https://www.youtube.com/watch?v=yAyGsb-yPAs&t=6s

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 9 – பகுதி 2

அழகியசிங்கர்


11. இப்போது என்ன புத்தகம் படிக்கிறீர்கள்?

அமெரிக்கன் நூலகத்திலிருந்து வாங்கி வந்த இன்னொரு புத்தகம்.  புத்தகம் பெயர் முராகாமியின் இன்னொரு நாவல் üகில்லிங் காமென்டேடர்.ý  முடிக்க இன்னும் 100 பக்கங்கள் இருக்கிறது.  படித்து முடித்தவுடன் இங்கே வைத்துவிட்டுப் போய்விடுவேன்.  கின்டலில் 15 நாட்களுக்கு ஓரம் பாமுக்கின் ரெட் ஹய்ர்டு உமன் நூலகத்திலிருந்து எடுத்துள்ளேன். படித்துக்கொண்டிருக்கிறேன்.

12. நீங்கள் முடிக்க வேண்டிய விருட்சம் பத்திரிகையை முடித்து விட்டீர்களா?

முடித்துவிட்டேன்.  109வது இதழ்.  இங்கே 100 பக்கங்கள் வரை சரி செய்து வைத்திருக்கிறேன்.  சென்னையில் அச்சடித்து விடுவேன்.  இந்த மாதத்திற்குள் இதை எப்படியாவது கொண்டு வர வேண்டும்.

13. உங்களைச் சுற்றிலும் பல அநிதிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அதெல்லாம் உங்களைப் பதட்டமடையச் செய்யவில்லையா?

நிச்சயமாக.  யாராக இருந்தாலும் பதட்டமடையச் செய்யத்தான் செய்யும்.  நான் ஒரு சாதாரண மனிதன். ஆனால் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஆராய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.  கருத்து சொல்வதைப்போல் அபத்தமும் இதில் இருக்கிறது.  இது மாதிரியான நிகழ்வுகள் நடக்காமலிருக்க நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.  பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை.

14. அமெரிக்காவில் இருப்பதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அமெரிக்காவில் 2 மாதம்தான் தங்கியிருந்தேன்.  2 மாதங்களை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன். அமெரிக்கா ஒரு சுதந்திரமான நாடாக நான் நினைக்கிறேன்.  இங்கே இரவு 12 மணிக்குமேல் கூட பெண்கள் தனியாக கார் ஓட்டிக்கொண்டு வர முடிகிறது. லாஸ் வேகாஸ் மாதிரியான இடத்தைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

15. இனி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் சொல்லியாகிவிட்டது என்று தோன்றுகிறது. 

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 9-Part 1



அழகியசிங்கர்

1. அமெரிக்கா அனுபவம் எப்படி?

பிரமாதம்.  நான் அமெரிக்கா வந்து 2 மாதங்கள் முடிந்து விட்டன. இதோ சென்னை கிளம்புகிறேன்

2. எப்படிப் பொழுது போயிற்று?

எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் பொழுது போகப்போகிறது.  அமெரிக்காவில் கூடுதலாகப் பொழுது இருந்தது.  சென்னையில் அது குறைவு.

3. என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?

ஆங்கிலப் புத்தகங்கள்தான் வாங்கினேன்.  ஆரம்பத்தில் கடையில் வாங்கினேன்.  ஆனால் மிகக் குறைவான விலையில் அமெரிக்கன் நூலகங்களில் வாங்கினேன்.

4. எந்தப் புத்தகம் படீத்தீர்கள்?

பெரும்பாலும் தமிழ் நூல்கள் படிக்கிற ஆசாமி நான்.  இங்கு ஆங்கில நூல்களைப் படிக்கும்படி நேரிட்டது. முராகாமியின் 2 நாவல்கள்.  மொராவியாவின் நாவல் ஒன்றையும் முழுதாகப் படித்தேன். இதைத் தவிர ஐ பி ஸிங்கரின் சிறுகதைகள்.  ஜே டி சாலிங்கர், பிலிப் ராத்,  ஜப்பானிய எழுத்தாளரான காஷ÷ இஷøகுரோ நாவல்கள்.  இவற்றில் சில புத்தகங்களை முழுதாகப் படிக்க முடியவில்லை.  இரண்டு கதைகளையும் ஒரு கவிதையும் மொழி பெயர்த்துள்ளேன்.

5. முக்கியமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நேரம்.  இங்கே கிடைத்ததுபோல் நேரம் எங்கும் கிடைக்காது.  இந்த நேரத்தை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  நான் சரியாகத்தான் பயன்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன்.

6. எழுதினீர்களா?

எழுதினேன்.  முதலில் பயண நூல் மாதிரி ஒன்றை எழுதலாம் என்று துவங்கினேன்.  காலையில் 5 மணிக்கு விழிப்பு வந்து விடும். எழுத ஆரம்பித்துவிடுவேன்.  ஆனால் அது பயணம் பற்றிய நூலாக வரவில்லை.  எங்குச் சென்றாலும் என் அப்பா போகாதே என்று தடுத்துவிடுவார்.  அது பற்றி எழுதுகிற நூலாக மாறும்போல் தோன்றியது.  அதனால் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.  பிலிப்ரோத் அவர் அப்பாவைப்பற்றி எழுதிய பாட்டிரிமோனி புத்தகம் படித்தேன். அதுமாதிரியான புத்தகமாக எழுத முயற்சி செய்யலாமென்று தோன்றியது. ஆரம்பத்தில் கவிதைகள் சில எழுத முயன்றேன்.  அதுவே 26 கவிதைகள்.

7. கவிதை எழுதுவது எளிதா? சிறுகதை எழுதுவது எளிதா?

என்னைப் பொறுத்தவரைக் கவிதை எழுதுவதுதான் எளிது.  சிறுகதைக்கு முயற்சி அதிகமாகத் தேவைப்படும்.  கவிதை என்றால் யார் தூண்டுதல் இல்லாமலே எழுதி விடலாம்.  ஆனால் கதைக்குத் தூண்டுதல் தேவைப்படுகிறது. கட்டுரைக்கும், நாவலுக்கும் இது பொருந்தும்.

8.  நீங்கள் எழுதியது கவிதையா என்று எப்படித் தெரியும்?

அதில் கொஞ்சம் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.  என்னால் மற்றவர்கள் படைப்புகளைப் படித்து நிறை குறைகளைக் கண்டு பிடித்து விட முடிகிறது.  நான் எழுதியதைப் படிக்கும்போது மற்றவர்கள் யாராவது நல்ல மாதிரியாகச் சொன்னால் தேவலை என்று தோன்றும்.

9. தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.  எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும்.  இந்த முறை தேர்தலில் கலந்து கொள்ள முடியவில்லை.

10. அமெரிக்காவில் திரைப்படம் பார்த்தீர்களா?

பார்த்தேன்.  தடம் என்ற தமிழ் படம் பார்த்தேன்.  அதன் பிறகு நெட்டில் நிறையா தமிழ்ப்படங்களைப் பார்த்தேன்.   பார்த்ததால் தமிழ் படங்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது.  இதைப் பற்றியும் எதாவது எழுத முடியுமா என்று யோசிக்கிறேன். சென்னையில் இந்த வசதி உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் திரை அரங்குகளில்  போய்ப்  படம் பார்க்க உத்தேசித்துள்ளேன்.

                                                                                                          (இன்னும் வரும்)

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 8

1. 106வது இதழ் விருட்சம் என்ன ஆயிற்று?
இந்த மாதத்திற்குள் வந்து விடும்.

2. நீங்கள் விருட்சம் ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன
ஆமாம். இதழ் வந்தவுடன் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ண நினைக்கிறேன். ரைட்டர்ஸ் கேப்பில் எனக்குப்பிடித்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேச.

3. சிறுபத்திரிகை என்பதே தேவையில்லை என்ற கருத்திற்கு என்ன சொல்கிறீர்கள்?
தமிழ் இந்துவில் அப்படி ஒரு கருத்து ஏற்படுகிற மாதிரி ஒரு தலையங்கம் வந்தது. திரும்பவும் படிக்கலாமென்றால் அந்தப் பத்திரிகை கண்ணில் படவில்லை. அந்தக் கருத்து சரியில்லை. எக்ஸ்பிரஷன்தான் சிறுபத்திரிகை. அதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். வாசகர் கையில்தான் ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதெல்லாம் இருக்கிறது. சிற்றேடு மாதிரி ஒரு இதழை தமிழவன் மட்டும்தான் கொண்டு வர முடியும். அதைத்தான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.

4. ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
அது மாதிரியான ஒரு சம்பவத்தை நினைத்து வருத்தமாக இருந்தது. திகில் கதை எழுதும் ராஜேஷ்குமார் கூட இதுமாதிரியான நிஜ சம்பவத்தைக் கற்பனை செய்து எழுத முடியாது என்று தோன்றுகிறது.

5. சமீபத்தில் தபாலில் வந்த ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்ல முடியுமா?
எனக்கு சமீபத்தில் தபாலில் வந்த புத்தகங்களைப் பற்றி கூற விரும்புகிறேன். முதல் புத்தகம். üநூலகத்தால் உயர்ந்தேன்ý என்று ஆலந்தூர் கோ மோகனரங்கன் எழுதிய புத்தகம். இது ஒரு புதையல் மாதரி எனக்குத் தோன்றுகிறது. 1096 பக்கங்கள் கொண்ட புத்தகம். பல சம்பவங்களைக் கொண்ட புத்தகம் இது. இன்னொன்று மணல் வீடு என்ற பத்திரிகை. 34-35 கொண்ட மணல்வீடு பத்திரிகையைப் பார்த்து அசந்துவிட்டேன். 232 பக்கங்கள் கொண்ட இதழ். நம்ப முடியவில்லை பெரு. விஷ்ணுகுமார் அவர்களின் ழ என்ற பாதையில் நடப்பவன் என்ற கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைப் புத்தகத்தை உடனே படிக்க வேண்டும். படித்துவிட்டு எழுத வேண்டும்.

6. சமீபத்தில் பார்த்தத் தமிழ்ப் படம்.
சமீபத்தில் நான் பார்த்த ஒரு தமிழ்ப் படம் ஏன்டா பார்க்கப் போனோம் என்று என்னைக் கலங்க வைத்து விட்டது. இனிமேல் நல்ல திரைப்படங்கள் தமிழில் வராதா என்ற ஏக்கம் கூட ஏற்பட்டு விட்டது.

7. எதுவும் நம் கையில் இல்லை என்பதை நம்புகிறீர்களா?
எதுவும் நம் கையில் இல்லை. கேரளாவில் வெள்ளம் வந்து அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. நம் கையில் இல்லை.
8. உங்கள் புத்தக லைப்ரரிக்கு வந்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் சிறு பத்திரிகைகளை யாரோ கொள்ளை அடித்துக்கொண்டு போவது போல் கனவு கண்டேன்.
மோசமான கனவு

9. கோட்பாடு ரீதியாக விமர்சிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?
கோட்பாடு ரீதியாக எழுதப்படுகிறவற்றைப் பற்றி படித்துப் பார்க்கிறேன். ஒரே குழப்பமாக குழப்புவதுபோல் தோன்றுகிறது.

10. பிரமிள் புத்தகத் தொகுப்புப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அத்தனையும் வாங்கி வைத்துவிடலாம். ஆனால் படிக்க வேண்டுமே?

11. உங்களின் மனதுக்குப் பிடித்த கவிதைத் தொகுதி எப்போது வரப்போகிறது?
கூடிய சீக்கிரம். முதலில் 100 கவிதைகள்.

12. சமீபத்தில் நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களைப் பற்றி கூறுங்கள்.
இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். ஒன்று நீங்களும் படிக்கலாம் தொகுதி 2. இன்னொரு புத்தகம். சத்யஜித்ரேயின் அபுர் சன்ஸôர் திரைக்கதையை மொழிப்பெயர்த்தப் புத்தகம். எளிதாகப் படித்துவிடும்படி எல்லாப் புத்தகங்களும் 100 பக்கங்களுக்குள் அடங்கி விடும்.

13. எதற்காக நீங்களும் படிக்கலாம் புத்தகம் கொண்டு வந்துள்ளீர்கள்.
நான் படிக்கிற புத்தகங்களை படித்து முடித்தவுடன் சில நாட்களில் மறந்து விடுகிறேன். அப்படி மறக்காமல் இருக்கத்தான் ஞாபகப்படுத்தும் விதமாக நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன்.

14. வாழ்க்கை எளிதாக இருக்கிறதா?
இல்லை.

15. நீங்கள் ஆத்திகரா நாத்திகரா
ஆத்திகன். அசோக் நகரில் உள்ள ஹனுமார் கோயிலில் பொங்கல் சாப்பிடுவதை விரும்புவேன்.

16. உங்களுக்குக் கூட்டத்தில் பேசுவதற்கு எளிதாக வந்து விட்டதா?
எளிதாக வந்து விட்டது.

17. இந்த மாதம் யார் பேசுகிறார்கள்
சத்யானந்தன்.

18. எதைப் பற்றி பேசுகிறார்?
சினிமா தொலைக்காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும்

19. இத்துடன் போதுமா?
போதும்.

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 5

1. நீங்கள் யார்?

ரமணர்தான் நான் யார் என்ற விசாரணையில் இறங்கினார். என்னைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்டால் என்ன அர்த்தம். நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் யார்?

2. இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

தமிழவனின் ஆடிப்பாவைபோல என்ற நாவலில் 204வது பக்கம் படித்துக்கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் வரும் காந்திமதி என்ற பெண்ணைப் பார்க்க விரும்புகிறேன்.

3. யாருக்கு இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கும்.

யாருக்கு என்று தெரியாது. ஆனால் பலர் க்யூவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

4. உங்கள் பத்திரிகையில் வரும் கதை, கவிதை, கட்டுரையை யாரெல்லாம் படிக்கிறார்கள்.

யாரெல்லாம் என்பது தெரியாது. ஒருவர் நிச்சயமாகப் படிக்கிறார். அது நான்தான்.

5. துயரத்தின் உச்சம் என்ன?

இன்னொரு துயரம்.

6. நின்றுகொண்டே வாசிக்கப் போவதாக ஒரு திட்டம் வைத்திருக்கிறீர்களே?

ஆமாம். கடந்த சில ஆண்டுகளாக நான் தரையில் அமருவதில்லை. தரையில் பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக்கொள்வதுமில்லை. டைனிங் டேபில் வந்தபிறகு தரையில் அமர்ந்து சாப்பிடுவதுமில்லை. அதேபோல் ரொம்ப நேரம் நிற்பதுமில்லை. ஒரு முயற்சி செய்யலாமென்று 16.10.2017 அன்று ஒரு மணி நேரம் நின்றுகொண்டு இரண்டு கதைகளைப் படித்தேன். ஒரு கதை அசோகமித்திரனின் காந்தி கதை. இன்னொன்று போர்ஹஸ்ஸின் ‘கிளை பிரியும் பாதைகளின் தோட்டம்.’ பிரம்மராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது நல்ல அனுபவமாக இருந்தது. அதிகமாக இதுமாதிரி கதைகளைப் படிக்க உள்ளேன்.

7. சமீபத்தில் வந்துள்ள உங்கள் புத்தகத்தின் பெயர் என்ன?

திறந்த புத்தகம். 50 கட்டுரைகள் கொண்ட 203 பக்கங்கள் கொண்ட புத்தகம்.

8. எத்தனைப் பிரதிகள் அச்சடித்தீர்கள் என்று நான் கேட்கப் போவதில்லை.

நீங்கள் கேட்டாலும் நான் சொல்லப் போவதில்லை.

9. படிக்க நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்க நேரம் கிடைப்பதில்லை என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஏற்றுக்கொள்கிறேன்.

10. 80 வயதிலும் தனியாக இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவருக்காக வருந்துகிறேன். அவரைப் பார்க்கும்போது தடுமாற்றம் நிழல் போல் அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

11. பின்நவீனத்துவம் என்றால் என்ன என்ற சுரேஷ் புத்தகத்தில் எதை நீங்கள் ரசித்தீர்கள்?

எழுதி முடித்தவுடன் எழுத்தாளனும் அவனுடைய எழுத்துக்கு ஒரு வாசகன்தான் என்ற கருத்து பிடித்திருந்தது.

12. இப்போதெல்லாம் நீங்கள் சினிமா பார்ப்பதில்லையா?

பார்ப்பதில்லை. பார்க்கும்படியாகவும் இல்லை. ஒரு சினிமாவை தியேட்டரில் அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கிப் பார்ப்பதை விரும்பவில்லை. அதற்குப் பதில் ஒரு சிறுகதையை எடுத்துப் படிக்கலாம்.

13. போதும் உங்கள் சிறுகதை மோகம்..

சரி, ஒரு கவிதையைப் படிக்கலாம்..கட்டுரையைப் படிக்கலாம்..நாவலைப் படிக்கலாம்.

14. உங்கள் கையில் புத்தகம் இல்லை. ஒன்றுமில்லை. பொழுதை எப்படிப் போக்குவீர்கள்?

சும்மாவே உட்கார்ந்து இருப்பேன். அதைப் போல அற்புதமான விஷயம் ஒன்றும் இல்லை.

15. எழுத்துப் பிடிக்குமா எழுத்தாளர்களைப் பிடிக்குமா?

எழுத்துதான் பிடிக்கும்..

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்

 

1. இப்போது நடக்கும் ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் யார் நினைப்பதற்கு..நான் சாதாரண குடி மகன்.

2. குடி மகன் என்றால் எப்போதும் ‘குடி’க்கிற மகனா?

இல்லை. இல்லை.  நான் வெறுமனே தண்ணீர் மட்டும்தான் குடிப்பேன்.

3. டாஸ்மா கடைக்குக் கூட்டம் முண்டி அடிக்கிறதே..உங்கள் புத்தகங்களை வாங்க யாரும் உங்கள் வீட்டிற்கு வருவதில்லையே..

புத்தகம் வாங்க யாரும் வராவிட்டால் பரவாயில்லை. ஆனால் டாஸ்மா கடை முன் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்?

‘மறுதுறை மூட்டம்’ என்ற நேர்காணல் புத்தகம் எழுதிய நாகார்ஜ÷னனை. இப் புத்தகம் ஒரு வித சுயசரிதம் போல் இருக்கிறது.  154 பக்கங்கள் படித்துவிட்டேன்.  240 பக்கங்கள் வரை இப் புத்தகம் உள்ளது. இதுமாதிரியான வெளிப்படையான புத்தகத்தை நான் இதுவரை படித்ததில்லை.

5. உங்கள் பேரன் என்ன செய்கிறான் ?

பால்கனியிலிருந்து நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தைத் தூக்கிப் போடுகிறான்.

6. உங்கள் முன்னால் கவிதைப் புத்தகம், சிறுகதைப் புத்தகம், கட்டுரைப் புத்தகம், நாவல் புத்தகம் இருக்கிறது.. எதை எடுத்துப் படிப்பீர்கள்?

கவிதைப் புத்தகத்தை.  சீக்கிரம் படித்து முடித்து விடலாம்.

7. எந்த எழுத்தாளர் கையெழுத்தை நீங்கள் ரசித்திருக்கிறீர்கள்..

பிரமிள் கையெழுத்தை.  புரியும்படி பிரமாதமாக எழுதியிருப்பார். கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மணி மணியாக இருக்கும் கையெழுத்து.  அவர் கையெழுத்தை  அவரிடம் பாராட்டியிருக்கிறேன்.  பொறாமைப் படாதீர் என்பார்.

8. எதன் மீது உங்களுக்குப் பக்தி அதிகம்?

விருட்சம் பத்திரிகை மீது.  100 இதழ்கள் வந்தபிறகும் இன்னும் நிறுத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை.

9. நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

மாதம் ஒரு முறை கூட்டம் கூடி கவிதைகளை வாசிக்க எல்லோரையும் அழைக்க நினைக்கிறேன்.

10. சமீபத்தில் டில்லி சென்ற உங்கள் விமானப் பயணம் எப்படி இருந்தது?

விமானத்தில் போகும்போது காரணம் இல்லாத பயம் தொற்றிக்கொண்டிருந்தது.  சென்னை வரும்போது விமானம் ஒரே ஆட்டமாக ஆடியது.  வானிலை சரியில்லை என்று காரணம் சொன்னார்கள்.  இன்னும் சில பயணங்கள் மேற்கொண்டால் விமானப் பயணப் பயம் என்னை விட்டுப் போய்விடும்.

12. 102வது இதழ் நவீன விருட்சம் முடிந்து விட்டதா?

முடிந்துவிட்டது.  அசோகமித்திரன் நினைவாக இந்த இதழ் வெளிவருகிறது.  100 பக்கங்களுக்கு மேல்.  அடுத்த வாரத்திற்குள் வந்துவிடும்.

13. சமீபத்தில் சந்தித்த கவிஞர் நாராணோ ஜெயராமனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சும்மா இருந்தால் போதும் என்கிறார்.  எந்தப் புத்தகம் கொடுத்தாலும் படிக்க விரும்பவில்லை அவர்.

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

1. இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளதா?
 
ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.
 
2. இப்போது என்ன புத்தகம் ஆங்கிலத்தில் படிக்க எடுத்து வைத்திருக்கிறீர்கள்?
 
THE CRAFT OF FICTION BY PERCY LUBBOCK என்ற புத்தகத்தைப் படிக்கப் போகிறேன்.
 
3. விருட்சம் சார்பாக கவிதைக்காக பரிசு கொடுக்க விரும்பினால், யாருக்கு பரிசு வழங்குவீர்கள்?
 
என்னை வம்பில் மாட்டாதீர்கள். நான் யாருக்கும் பரிசு வழங்க விரும்பவில்லை.
 
4. இலக்கியக் கூட்டங்களுக்கு இப்போதெல்லாம் செல்வதில்லையா?
 
ஒரு இலக்கியக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. அங்கு போவதற்கு கிளம்பினேன். 5 மணிக்கு மாம்பலத்திலிருந்து கிளம்பினேன். மயிலாப்பூர் போய்ச் சேரும்போது மணி 6 மணி மேல் ஆகிவிட்டது. பின் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு வரும்போது மணி 9 ஆகிவிடுகிறது. இலக்கிய கூட்டம் போகலாமா வேண்டாமா என்ற யோசனை வருகிறது.
 
5. அப்படியென்றால் கூட்டம் எங்கே நடைபெற வேண்டும்?
 
அவரவர் பகுதிகளில்தான் கூட்டம் நடைபெற வேண்டும். மாம்பலத்தில் கூட்டம் நடந்தால், மாம்பலத்தில் உள்ளவர்கள் கூட வேண்டும். மயிலாப்பூர் என்றால் மயிலாப்பூர். திருவல்லிக்கேணி என்றால் திருவல்லிக்கேணி.
 
6. அப்படியாவது கூட்டம் நடத்த வேண்டுமா?
 
ஆமாம். இன்று தமிழில் யாரும் புத்தகமே படிக்க மாட்டார்கள். கூட்டம் மூலம் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்.
 
7. வாழ்க்கை என்றால் என்ன?
 
வாழ்க்கை என்றால் திங்கள், செவ்வாய், புதன், வியாழன்….
 
8. ரோடில் செல்லும்போது, டூவீலரில் போவீரா, காரில் போவீரா, பஸ்ஸில் போவீரா, நடந்து போவீரா..
 
டூ வீலரில்தான் போவேன். காரில் கூட்டம் இல்லாத இடத்திற்குப் போவேன். பார்க்கில் மட்டும் நடப்பேன். பஸ்ஸில் நஹி.
 
9. உங்களைப் பார்க்க நண்பர்கள் வருவார்களா? நண்பர்களைப் பார்க்க நீங்கள் போவீர்கள்.
 
இரண்டுமே நடப்பதில்லை. அவசியம் இருந்தால்தான் சந்திப்பு நிகழும்.
 
10. உங்கள் வீட்டில் எந்த அறைக்குச் செல்ல விரும்பவில்லை?
 
அப்பா படுத்திருந்த அறைக்கு..
 
11. புத்தகம் பதிப்பது மூலம் நீங்கள் லாபம் சம்பாதிக்க விரும்புகிறீரா பொழுதுபோக்கா?
 
பொழுதுபோக்கு..
 
12. பொழுதுபோக வேண்டுமென்றால் என்ன வழி இருக்கிறது
 
எத்தனையோ வழி உண்டு. டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்கிக் கொள்ளலாம்.
 
13. கவிதை எப்படி இருக்க வேண்டும்?
 
படித்தவுடன் மனதில் பிடித்துக்கொள்ள வேண்டும். இன்னும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.
 
14. சமீபத்தில் நீங்கள் மகிழ்ந்த தருணம் எது?
 
முதன் முதலாக என் கவிதைகளைப் பிரசுரம் செய்த மலர்த்தும்பி என்ற பத்திரிகையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
 
15. தூக்கத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
 
தூக்கம் வந்தால் தூங்கி விடுங்கள். பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும்.
 
16. நீங்கள் ஒரு நண்பரோடு படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எது
 
சிலப்பதிகாரம். கோவலன் பற்றி ஒரு வரி வருகிறது :
 
நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
 
17. இத்துடன் போதுமா?
 
போதும். பின்னால் தொடர்வோம்.
 

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

அழகியசிங்கர்

 

1. நீங்கள் நல்லவரா கெட்டவரா?
கெட்டவன்
2. நீங்கள் கெட்டவரா நல்லவரா?
நல்லவன்
3. யாரைப் பார்த்து உங்களுக்குப் பயம்?
என்னைப் பார்த்து
4. நீங்கள் எழுதுவதை திரும்பவும் படிப்பதுண்டா?
படிப்பதில்லை.  படித்தால் ஏன் எழுதினோம் என்று தோன்றலாம்.
5. எது எளிது? கவிதை எழுதுவது எளிதா? கட்டுரை எழுதுவது எளிதா? கதை எழுதுவது எளிதா? நாவல் எழுதுவது எளிதா?
எதுவும் எளிதல்ல.  படிப்பதுதான் எளிது.
6. சமீபத்தில் நீங்கள் படிக்கும் புத்தகம் எது?
ரமண மகரிஷியின் சரிதமும் உபதேகமும்.  3வது பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.
6. யார் எழுத்து உங்களுக்குப் பிடித்திருக்கிறது?
அது என்னமோ தெரியவில்லை.  எல்லோருடைய எழுத்தும் பிடித்துதான் இருக்கிறது.
7. சமீபத்தில் முகநூலில் கண்டுபிடித்த உண்மை என்ன?
பிரம்மராஜன், ஆத்மாநாம் பற்றியெல்லாம் எதுவும் எழுதக் கூடாதென்று.
8.  நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா?
ஆமாம்.  படிக்கட்டுகளில் இறங்கும்போதும் ஏறும்போதும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று.
9. ஏன்?
சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண் மாடிப்படிக்கட்டுகளிலிருந்து வேகமாக ஓடி வந்து தலைக் குப்புற விழுந்து இறந்து விட்டாள்.
10. நீங்கள் யாரைப் பார்க்க ஆசை படுகிறீர்கள்?
அமெரிக்காவில் இருக்கும் என் பேத்தியை.
11. இலக்கியக் கூýட்டங்கள் கசக்கின்றனவா?
கசக்கவில்லை.  அவற்றை இன்னும் எப்படி செம்மைப் படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
12. காலையில் எழுந்தவுடன் என்ன செய்கிறீர்கள்?
வண்டியை எடுத்துக்கொண்டு பார்க் செல்கிறேன்.  நடக்கிறேன்.  கூடவே சந்தியா நடராஜன் வருவார்.  இருவரும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து கொண்டிருப்போம். பின் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று ஒரு சாம்பர் வடை ஒரு காப்பி வாங்கி பாதி பாதி சாப்பிடுவோம்.
13. 500, 1000 நோட்டுகள் உங்களிடம் இல்லையா?
கொஞ்சமாக இருந்தது. வங்கியில் கட்டிவிட்டேன்.  போன மாதம் எனக்கு செலவு கூட அதிகம் ஆகவில்லை.
14. அப்பா எப்படி இருக்கிறார்?
அப்படியே இருக்கிறார்.  கடந்த ஒரு வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கிறார்.  பாலகுமாரன் தினமலர் தீபாவளி மலரில் அவர் அம்மாவிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.  நான் அப்பாவிற்கு அதுமாதிரி கடிதம் எழுத யோசனை செய்கிறேன்.
15 இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு யார் உதவி செய்வார்கள்?
என்னைச் சுற்றி விரல்விட்டு எண்ணக் கூடிய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் உதவி செய்வார்கள்.
16. விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரும் புத்தகங்களுக்கு பணத்திற்கு எங்கே போவீர்கள்?
என் பென்சன் பணத்திலிருந்து புத்தகம் கொண்டு வருகிறேன்.