ஒரு வேண்டுகோள்

ஒரே கயிற்றில்
ஒரு டஜன்
கோழிகளையாவது
கால்களில் சுறுக்கிட்டு
சைக்கிளின் இருபுறம்
தொங்கவிட்டு செல்கிறான்
நிதானமாக.
மானசீகமாக வேண்டுகிறேன்.
கொஞ்சம்
விரைந்துச்செல்
நண்பா
சீக்கிரம்…
வெந்நீரில் முக்கியோ
கழுத்து திருகியோ
கொன்றுவிடு.

இலக்கணப்பிழை

உன்னைப் பற்றிய கவிதையில்ஏதோ ஒரு சொல்பொருந்தாமல்சீர் வரிசைத் தப்பிவருவதாக விமர்சித்தான்கவிஞன் ஒருவன் உன்னிடம் வாசித்துக் காட்டினேன்தெற்றுப்பல் தெரிய சிரித்தாய்

தேடல்

எத்தனை முறை உதிர்ந்தாலும்

அத்தனை முறையும்

பூத்துத்தொலைக்கும்

காதலை எழுதிய

இறகொன்றும்

எத்தனை முறை பெய்தாலும்

அத்தனை முறையும்

கொட்டித்தீர்க்கும்

மழையில் நனைந்த இறகொன்றும்

நூறாண்டுகளாய்

அலைந்துக்கொண்டிருக்கும்

சிறகிலிருந்து பிரிந்த

இறகொன்றும்

தேடிக்கொண்டிருக்கின்றன.

தீராத பக்கங்களில்

எந்த கூட்டில்

அமர்ந்துள்ளது அதுவென்று.

எங்கே அவன்?

நானே காலமுமாய் இருப்பதாய்

சொன்னவன்

கடந்து விட்டானா?

கரைந்து கொண்டிருக்கிறானா?

சொல் இருக்கிறது.

சொன்னவன் எங்கே?

கேட்டவன் எவன்?

இந்தச் சாலையும்

இன்று
கொலையேதும் நடக்கவில்லை. ரத்த வாடை வீசாதசாலைகளில் வழிந்தோடுகிறதுஅமானுஷ்யம். குழுக்களாய் கிசுகிசுக்காதசாலைகளில் வீசுகிறதுநிசப்தம் போடும் சப்தம். அம்புக்குறி சுட்டாத சாலைகளில்பொழிகிறதுஅமைதி தரும் அதிர்வு. கொலை நடந்தஎல்லா சாலைகளையும் போலஇந்தச் சாலையும் நீள்கிறதுபயங்கரமாய்…

ஐந்து கவிதைகள்

இன்று முத‌ல்
வழிதப்பிய குறுஞ்செய்தியொன்றுஒலித்தது. வேணுகோபால் இறந்துவிட்டான்உடனே கிளம்பி வா.
உண்மையில் வேணுகோபால்என்று எனக்கு யாரும் இல்லை. இன்று முத‌ல்அந்தக் கவலையும் தீர்ந்தது.

முத‌ல் நிலவு
இறுக மூடிக்கிடக்கும்அந்தக் குழந்தையின்கைகளை யாரோவிடுவிக்கிறார்கள்.
அந்தக் குழந்தைதன்னோடு கொண்டு வந்தநட்சத்திரங்கள், நிலவுகள்உ…ரு…ண்…டோடுகின்றன.
கனவில்கடவுள் கோபிக்கிறார்.குழந்தை சிரிக்கிறது.
இரண்டாம் முறையும்நட்சத்திரங்கள், நிலவுகளைதருகிறார்.அது ஒருபோதும்முதல் நிலவுமுதல் நட்சத்திரங்கள்போல் இருந்ததில்லை.

யாரும் சொல்லாத கவிதைஇதுவரை யாரும் சொல்லாதகவிதையைஎடுத்துக்கொண்டுதிரும்பினேன்.
அ‌ங்கேநீ இல்லை.நான் இல்லை.யாரும் இல்லை.எதுவும் இல்லை.எதுவுமற்ற அதுவும் இல்லை.
நீட்சி
முன்பொருநாள்எவனோ ஒருவன்தன் சதைகளை அரிந்துகழுகுக்கு போட்டானாம். அவனது நீட்சியென்றுஅடுக்குமாடி குடியிருப்பின்என் ஜான்னலூரம்காத்துக்கிடக்கின்றனஅதே புறாக்கள்.
***********பாரியின் காலத்திலிருந்துகிளம்பி வந்தகொடியென்று இருசக்கரவாகனம் மீதுபடர்ந்தெழுந்திருந்தது.எடுக்கவா தொடுக்கவாஎன்றதுஎன்னைப் பார்த்து.