ஐந்து கவிதைகள்

இன்று முத‌ல்
வழிதப்பிய குறுஞ்செய்தியொன்றுஒலித்தது. வேணுகோபால் இறந்துவிட்டான்உடனே கிளம்பி வா.
உண்மையில் வேணுகோபால்என்று எனக்கு யாரும் இல்லை. இன்று முத‌ல்அந்தக் கவலையும் தீர்ந்தது.

முத‌ல் நிலவு
இறுக மூடிக்கிடக்கும்அந்தக் குழந்தையின்கைகளை யாரோவிடுவிக்கிறார்கள்.
அந்தக் குழந்தைதன்னோடு கொண்டு வந்தநட்சத்திரங்கள், நிலவுகள்உ…ரு…ண்…டோடுகின்றன.
கனவில்கடவுள் கோபிக்கிறார்.குழந்தை சிரிக்கிறது.
இரண்டாம் முறையும்நட்சத்திரங்கள், நிலவுகளைதருகிறார்.அது ஒருபோதும்முதல் நிலவுமுதல் நட்சத்திரங்கள்போல் இருந்ததில்லை.

யாரும் சொல்லாத கவிதைஇதுவரை யாரும் சொல்லாதகவிதையைஎடுத்துக்கொண்டுதிரும்பினேன்.
அ‌ங்கேநீ இல்லை.நான் இல்லை.யாரும் இல்லை.எதுவும் இல்லை.எதுவுமற்ற அதுவும் இல்லை.
நீட்சி
முன்பொருநாள்எவனோ ஒருவன்தன் சதைகளை அரிந்துகழுகுக்கு போட்டானாம். அவனது நீட்சியென்றுஅடுக்குமாடி குடியிருப்பின்என் ஜான்னலூரம்காத்துக்கிடக்கின்றனஅதே புறாக்கள்.
***********பாரியின் காலத்திலிருந்துகிளம்பி வந்தகொடியென்று இருசக்கரவாகனம் மீதுபடர்ந்தெழுந்திருந்தது.எடுக்கவா தொடுக்கவாஎன்றதுஎன்னைப் பார்த்து.

“ஐந்து கவிதைகள்” இல் 4 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன