தேடல்

எத்தனை முறை உதிர்ந்தாலும்

அத்தனை முறையும்

பூத்துத்தொலைக்கும்

காதலை எழுதிய

இறகொன்றும்

எத்தனை முறை பெய்தாலும்

அத்தனை முறையும்

கொட்டித்தீர்க்கும்

மழையில் நனைந்த இறகொன்றும்

நூறாண்டுகளாய்

அலைந்துக்கொண்டிருக்கும்

சிறகிலிருந்து பிரிந்த

இறகொன்றும்

தேடிக்கொண்டிருக்கின்றன.

தீராத பக்கங்களில்

எந்த கூட்டில்

அமர்ந்துள்ளது அதுவென்று.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன