d/bகாற்றில் தத்தி பறக்கும்வெள்ளை காகிதம்சேர்வது எவ்விடம்…வானில் இருந்துயார் வரையும்கோடுகள்இம்மழை…கோலிப் பளிங்கின்கண்ணாடி உலகுள்வடிவங்கள் எப்படி…d – ஐ b – போலவும்b – ஐ d – போலவும்எழுதினால் என்ன..வேகமாக ஓடாமல்எதற்காக சாலைகளில்மெதுவான இந்த நடை…கடலின் அலைகள்எதையோ சொல்ல வந்துஏதும் சொல்லாததேன்… வண்ணங்களால்வசீகரிக்கப்பட்டுபந்தை சுழற்றும்சிறுமிவண்ணங்களைஎண்ண எண்ண வளர்கின்றன நிறங்கள்.

பங்குனிப் பெருவிழா

ராட்சஸ ராட்டினம்
ஐஸ்கிரீம்,வளையல்
கடைகள் எல்லாம் உண்டு
திருவிழா நடைபெறுகின்ற
பதினைந்து நாட்களுக்கு
நடக்கும் அன்னதானத்துக்கு
கூடும் கூட்டத்தால்
கோயிலே அல்லோலஹல்லோலப்படும்
ராஜகோபாலசுவாமிக்கு
ஏற்றவளாகத்தான் வாய்த்திருக்கிறாள்
செங்கமலத்தாயார்
பங்குனிப் பெருவிழாவில்
கண்ணனுக்கு வெண்ணெய்யை
தின்னக் கொடுக்காமல்
முகத்தில் அடித்து சந்தோஷப்படும்
கோபிகைகள் கூட்டம்
விழா முடிந்து
பெருமானும், பிராட்டியும்
ஊஞ்சல் ஆடுவதைப்பார்த்து
ஆதிசேஷன் பொறாமைபடக்கூடும்
ஏகாந்தமாய் இருக்கும்
பெருமாளின் மனசு
அன்னையாய் அணைவரிக்கும்
தாயாரின் மனசு
நெறைஞ்சி போய் கிடக்கும்
மக்களின் மனசு.

அப்பாவி

காய்கறிகாரனிடம் பேரம் பேசுவதில்லை
எதிர் வீட்டுக்காரனிடம் முறைத்துக் கொள்வதில்லை
உறவுகளிடம் உரசிக் கொள்வதில்லை
மளிகைக் கடை அண்ணாச்சியிடம் கடன் வைப்பதில்லை
நடத்துனரிடம் மீதிச்
சில்லரைக்காக சண்டையிடுதில்லை
மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரிப்பதில்லை
யாராவது கிண்டல் செய்தாலும்
பதிலுக்கு அவர்களை நையாண்டி செய்வதில்லை
இப்படி இருப்பதினாலேயே
ஊரில் அவனுக்கு பெயர்
அப்பாவியென்று.

கவிதையின் ஜனனம்

படிப்பவர்கள் இல்லையென்றே
எழுதுபவர்களின் கைகள்
எழுத மறுத்தும்
கவிதைகள் அவர்களை
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றன.
காதில் வந்து வண்டு போல்
சதா ரீங்கரித்து
கொண்டே இருக்கின்றன
கவிதைகள்.
மூக்குகளை மூர்ச்சையாக்குகிற
அளவிற்கு ஊடுருவிப்
பாய்கின்றன
கவிதைகளின் வாசம்.

துலக்கம்

காரின்சடசடத்த மழைச் சத்தம்பச்சையின்சலசலக்கும் பயிரொலிமஞ்சளின்சரசரத்த ஒளி வார்த்தைநீலத்தின்பரபரக்கும் சிறகோசைவெண்மையின்சப்தமற்ற சப்தம்…இனி தோன்றுவதைநீங்கள் எழுத………………………..இப்படி மட்டும்சொல்கிறது கவிதை.நிறங்களுக்குசப்தங்கள் போல்பிரதிக்குவடிவங்கள்…வாசிப்பிற்கேவிரிந்த சிறகுகள்.

எதையாவது சொல்லட்டுமா / 26

ப்போதெல்லாம் யோசிக்கும்போது இந்தக் கவிதைகளை ஏன் எழுதுகிறோம் என்று தோன்றுகிறது. கவிதைகளை வாசிப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்கள். யாருக்ககாக நாம் கவிதை எழுத வேண்டும் என்ற ஒரு கேள்வியைக்கூட நான் கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் யோசிக்கும்போது எனக்காகத்தான் நான் கவிதையை எழுதுகிறேன் என்றாலும், நானே எழுதி நானே வாசிக்கத்தான் கவிதை எழுதுகிறேனா என்ற கேள்வியும் உடன் எழுகிறது. நகுலன் அவர் கவிதைத் தொகுதியைப் புத்தகமாகப் போடுபவர்களைப் பார்த்து 50 பிரதிகளுக்குமேல் போடாதீர்கள் என்பார். தலையை எண்ணி கவிதைப் புத்தகத்தைக் கொடுத்து விடலாம் என்றும் சொல்வார்.
ஆரம்பத்தில் எனக்கு வள்ளலார் கவிதைகள் மீது ரொம்ப ஆசை. என்னடா வரிகளை இப்படி கொட்டு கொட்டென்று கொட்டுகிறாரே என்று தோன்றும். பின் என் மனநிலை மாறிவிட்டது. இன்று ஆயிரக்கணக்கான பேர்கள் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கவிதையைப் புரிந்துகொண்டு அதில் ஆழ்ந்து சிந்தித்து எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அலுவலகம் செல்லும்போது மின்சார வண்டியில் எதாவது கவிதையை வாசித்துக் கொண்டே போவேன். இப்படி கவிதை வாசிப்பு கவிதை எழுதுபவனாகக் கூட மாற்றி விட்டது. நானும் 200 கவிதைகளுக்குமேல் எழுதிவிட்டேன்.
மின்சாரவண்டியில் மாம்பலத்தில் ஏறியவுடன், நான் வாசித்த கவிதை என் மனதில் இருந்தால், அது குறித்து யோசித்துக்கொண்டே போவேன். இப்படிப் பல கவிதைகளை நான் ரசித்திருக்கிறேன். ஆனால் கவிதை ரசனை என்பது என் மனதில் திட்டமிட்டுத்தான் நடக்கும். இதற்கும் என் அலுவலகப் பணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்படி நான் செயல்படுவதை கவிதை ரசனை இல்லாதவர்களுக்குக் கிண்டலாகப் படும். ”என்ன கவிஞரே, கவிதை யோசிக்கிறீங்களா?” என்று கிண்டலடிப்பார் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி. சுட்டுப்போட்டாலும் அவருக்குக் கவிதையே வராது. யோசிப்பது என்பது 24 மணிநேரமும் கவிதையைப் பற்றியே யோசிப்பது என்பதும் கிடையாது. பிறகு இயற்கை வளமான பகுதிகளைச் சுற்றிப் பார்த்தால் போதும், இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள், உங்களை மாதிரி கவிஞர்களுக்கு கவிதை எழுத மூட் வந்து விடுமே என்பார்கள். என்ன இப்படியெல்லாம் அபத்தமாகப் பேசுகிறார்களே என்று தோன்றும். ‘கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதியிருக்கிறார், ஏன் சார், உங்களுக்கு அப்படியெல்லாம் எழுத வரவில்லை,’என்பார் ஒருவர். அவர்களுக்கு எப்படி விளக்குவது என்பது நமக்குப் புரியாது. கவிதை ரசனை இல்லாதவர்கள்தான் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தமக்கும் கவிதையைப் பற்றி தெரியும் என்பதுபோல் பேசுவார்கள்.
ரொம்ப அறிவாளியான என் நண்பர் ஒருவர், தினமலர் இதழில் வெளிவரும் துணுக்குக் கவிதைகளைக் கொண்டாடு கொண்டாடு என்று கொண்டாடுவார். அவருக்கு விருட்சம் இதழில் வரும் கவிதையைப் பற்றி புரியாது. இப்படியெல்லாம் உள்ள அவதியான சூழ்நிலையில்தான் கவிதை எழுத முயற்சிக்கிறோம். கவிதையைப் பற்றி சிந்திக்கும் என் நண்பர்கள் பலர், தங்களை கவிஞர் என்று சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். பட்டி மன்றத்தில் வாசிப்பதுபோல், கவிதையை இரைந்து சத்தம் போட்டு வாசிக்கக் கூட விருப்பப் பட மாட்டார்கள்.
இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு ஞாயிற்றுக்கிழமை சமயவேல் என்ற கவி நண்பர், ஜெயமோகன் எழுதியதைப் பற்றி குறிப்பிட்டார். சமயவேல், ஆனந்த், காளி-தாஸ், கனகதாரா போன்றவர்கள் போலி ஜென் கவிஞர்களாம். (இன்னும் ஜெயமோகன் எழுதியதை நான் படிக்கவில்லை) எனக்கு கேட்க வேடிக்கையாக இருந்தது. பிரமிள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். விருட்சம் இதழில் அவர் பெயரைக் குறிப்பிடும்போது, பக்கத்தில் ஞானக்கூத்தன், பசுவய்யா பெயர்கள் எல்லாம் வரக்கூடாதாம். இது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் அலுவல் விதிப்படி எங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு பெண்மணி வேறு ஒரு கிளைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்படி ஒரு பிரிவு ஏற்படும்போது, கூட்டம் நடக்கும். கூட்டத்தில் பலர் பேசுவார்கள். நான் அந்தச் சந்தர்ப்பத்தில் எதாவது கவிதை வாசிப்பேன். நான் அப்படி ஏற்கனவே எழுதிய கவிதை ஒன்றை வாசிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன், அலுவலகத்தில் உள்ள நண்பர் ஒருவர், ‘நான் இப்போதே எழுந்து வெளியே போய்விடுகிறேன்,’ என்று மிரட்டினார். கடைசியில் நான் பேசும்போது, வெளிக் கதவைச் சாத்தி விடுகிறேன்…யாரும் வெளியே போகக்கூடாது…என்று மிரட்டி என் கவிதையை வாசித்தேன்.
வாசித்து முடித்தவுடன், கவிதையை கேட்பதற்கும், ரசிப்பதற்கும் ஆட்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்று வருத்தமாக இருந்தது.

அன்புள்ள நண்பர்களே,

நவீன விருட்சம் 87-88வது இதழ் தயாராகி விட்டது.

இந்த இதழ் எதிர்பார்த்தபடி 6 மாதம் மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்குமேல்தான் இதழ் குறித்து சிந்திக்க முடிந்தது. அதனால் தாமதம்.

இதழில் கீழ்கண்டவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதழ் அனுப்ப முகவரிகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நானும் என் எழுத்தும் ஐராவதம்
கையெழுத்து முத்துசாமி பழனியப்பன்
கவிதை நந்தாகுமரன்
யாவரும் கேளீர் அசோகமித்திரன்
துரோகத்தின் கத்தி ஆதி
கிழிசல் சேலை குமரி எஸ் நீலகண்டன்
இலா கவிதைகள் 6 இலா
பழம் புத்தகக் கடை விட்டல்ராவ்
விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
யாருக்காக ப மதியழகன்
G ராமசாமி 60+ ன் புலம்பல்
மூன்று கவிதைகள் அய்யப்பன் மாதவன்
அவளா இது மீனு
ஆறு கவிதைகள் அழகியசிங்கர்
இரு கவிதைகள் விநாயக முருகன்
தமிழ்ப் பேசும் ஆங்கில படம் தாஜ்
பெண் கவிதைகள் மொழிபெயர்ப்பு குவளைக்கண்ணன்
அம்மா மாதிரி செல்வராஜ் ஜெகதீசன்
குற்றச்சாட்டு நீலமணி
மொழிபெயர்ப்புக் கதை எம்.ரிஷான் ஷெரீப்
ஐயப்பப் பணிக்கர் கவிதை
சில குறிப்புகள் அழகியசிங்கர்
கழைக்கூத்தாடிச் சிறுவன் ப மதியழகன்
மைனஸ் மாத்ருபூதம் உஷாதீபன்
வரம் யோசிப்பவர்
ஐராவதம் புத்தக விமர்சனம்
அரசியல்வாதியும் அவர் வளர்த்த பூனையும் குமரி எஸ் நீலகண்டன்
ஊழிக்காலம் எம்.ரிஷான் ஷெரீப்
மெய்ப்பொருள் மிருணா
கவிதை நந்தாகுமரன் (2 முறை ஒரே கவிதை பிரசுரமாகிவிட்டது)

வழக்கம்போல் நல்லி விளம்பரத்துடன் இதழ் 80 பக்கம் வரை கொண்டு வந்துள்ளேன். இதழில் தவறு கண்டால் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து சுட்டிக்காட்ட தவற வேண்டாம். 88வது இதழுடன் 22 ஆண்டிற்கான பணியை விருட்சம் மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து விருட்சத்திற்குப் படைப்புகள் அனுப்புவர்கள் navina.virutcham@gmail.com மூலம் அனுப்பவும்.முதலில் படைப்புகள் navinavirutcham.blogspot லும் பின் இதழிலும் வரும். படைப்பாளிகள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். நவீன விருட்சத்திற்கு அனுப்பியதை வேறு எங்கும் அனுப்ப வேண்டாம். அல்லது அனுப்பினால் விபரம் தெரிவிக்கவும். இதழ் குறித்து உங்கள் கருத்துக்களை அல்லது திட்ட வேண்டுமென்று தோன்றினால் திட்டுக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதழ் பிரதிகளைக் கூடிய சீக்கிரம் அனுப்பி விடுகிறேன்.

நன்றி.

அழகியசிங்கர்

விமர்சனங்களைத் தாங்காத கலைஞன்

பெற்றோரைப் பேணாதபிள்ளையென்ன பிள்ளை? பேரிரைச்சல் இல்லாத அருவியென்ன அருவி? பேரின்பம் காணாத பிறவியென்ன பிறவி? சிற்றின்பம் துறக்காத துறவியென்ன துறவி? மனைவியர் மனசு நோகப்பண்ணும்கணவனென்ன கணவன்? மற்றெந்த உயிரையும்மதிக்காதமனிதனென்ன மனிதன்? மனதில் கல்மிஷம் கொண்டலையும்பிறப்பென்ன பிறப்பு? விமர்சனங்களைத் தாங்காதகலைஞன் என்ன கலைஞன்?

தங்கப் பெண்

ஃபேன்சி கடையில்
வேலை பார்க்கும் அவள்
அலங்காரமாய் பேசி
கவரிங் நகைகளை
விற்று வீட்டுக்கு
திரும்பும் வழியில்
வழக்கம் போல் அந்த
பெரிய நகை கடையில்
தொங்கும் தங்க
விலைப் பட்டியலைப்
பார்த்தாள். தற்போதெல்லாம்
கிராமின் விலைக்கும்
அவள் எதிர்கால
நம்பிக்கைக்குமான தூரம்
வெகு தொலைவாகி
விட்டதால் அவள்
அந்த கடை வருகிறபோது
குனிந்தே செல்கிறாள்.
அந்த கடையில்
வேலை பார்க்கும்
அந்த பையன்
மிகவும் வருத்தத்தில்
இருக்கிறான் இப்போதெல்லாம்
அவள் தன்னை
பார்ப்பதில்லை என்று.

வாழ்தல் நிமித்தம்

தீர்மானித்துக் கொண்டேன்கலங்குவதில்லை…யென.நம்பிக்கை கொள்ளவோதாக்குப் பிடிக்கவோஏதுமில்லையென்றதெளிவுக்கு வந்தேன்.சாகும் முறை குறித்த குழப்பம்கொஞ்சமும் இல்லை.கடலில் மூழ்குவதென்பதுபால பாடம்.(ஆடைகளைக்கவனமாக ஊக்குகளால்இணைப்பது குறித்தகவிதைகளுக்கு நன்றி!).எதற்குமொருமுறைஇருக்கட்டுமேயெனஇறப்புச் செய்தி கேட்கும் முகங்களைமனத் திரையில்ஓட விட்டேன்.எதிர்பாரா ஒரு தருணம்கேட்டதொரு பெருவிம்மல்.எந்த முகம்அந்த முகம்என விழிக்க நனைந்திருந்தனகண்கள். சுயம் வெட்கி ஆரம்பித்ததுயென் வாழ்க்கை குறித்த அத்தனைச்சிரிப்புச்சத்தங்களும்…