ஒற்றைச் சுவடு
there are images in this attachment, they will not be displayed. Download
the original attachment
பட்டுத்
தெறிக்கும்
பார்க்கும்
கண்ணாடி
விம்பங்கள்
பற்றி
காற்றிற்கசையும்
திரைச்சீலைகளிடமும்
படாக்
கதைகள்
இருக்கின்றன
அனைத்தும்
ஜீவராசிகளின்
ரகசியங்களையும்
இருப்பினும்
வாய்
திறப்பதில்லை
ஆதித்யா,
உன்
தனிமை
பேசுகிறேன்.
கேட்கிறாயா?
“
தனித்தவனாக
இல்லை.
இந்தச்
சாலையோர
மஞ்சள்
பூக்கள்,
காலையில்
வரும்
தேன்சிட்டு,
புறாக்கள்,
கிளிகள்,
மைனாக்கள்,
எனது
எழுத்துக்கள்
என
எனைச்
சூழப்பல
இருக்கத்
தனித்தவனாக
இல்லை.
நீ
பிதற்றுகிறாய்.
வழி
தவறி
வந்திருக்கிறாய்
“
இல்லை.
உன்
மனதுக்கு
நீ
தனித்தவன்.
இதுவரையில்
நீ
வாழ்ந்த
வாழ்க்கையில்
ஒரு
முகமூடியை
அணிந்தபடியே
ஊர்கள்
தோறும்
சுற்றி
வந்திருக்கிறாய்.
நீ
நீயாக
இருந்ததில்லை.
இப்பொழுதும்
ஒப்புக்
கொள்ள
மறுக்கிறாய்.
நீ
ஆதித்யா.
ஆனால்
ஆதித்யாவாக
என்றும்
நீ
இருந்ததில்லை.
உனது
சுயத்தை
வெளிக்
காட்டத் தயங்கியபடி உள்ளுக்குள் மருகுகிறாய். “
போகட்டும்.
எனக்கு நீ வந்திருப்பது பிடிக்கவில்லை. அதுவும் கேள்விகளோடு…கேள்விகள்…கேள்விகள்..கேள்விகள். உன் வருகையின் நோக்கமென்ன ? “
கொண்டிருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நீதான் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தாய். ஒத்துவராதெனச் சொல்லி அவள் விலகி விலகிப் போனபோது அவள் குறித்துக் கவிதைகள் பாடினாய். உனது குருதியைத் தொட்டுக் கடிதம் எழுதி அவளை உன் பக்கம் ஈர்த்தாய். அவள் உனக்காக அவள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையா ? நீ மாற்றிக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம் ? “
சலனத்துக்கோ
இடம் கொடுக்காதவள். எப்பொழுதும் அவளைச் சூழவும் மிகுந்த அன்பானவர்களை மட்டுமே கொண்டவள். அப்படிப்பட்டவள் உன் மேல் நம்பிக்கையில்லாமலா தனது தாய்நாட்டை விட்டு, பெற்றவர்கள், உடன்பிறப்புகள் அனைத்தையும் விட்டு உன்னுடன் உனது நாட்டுக்கு வந்துவிடுவேன் எனச் சொன்னாள் ? நீயழைத்தது போல் அவள் அப்படி உன்னை அழைத்திருந்தால் நீ போவாயா? மாட்டாய். நீ செல்ல மாட்டாய். அவளில்லாவிட்டால் இன்னொரு அழகி. இன்னொரு அப்பாவிப்பெண். மடங்கா
விட்டால்
பெருவிரலின் ஒரு துளி இரத்தம், சில கவிதைகள் போதுமுனக்கு. “
நடத்தைகளும்
அப்படியவளை விதிக்கச் செய்தன. நீ ஒழுங்கானவனாக இல்லை. இதனாலேயே உன் முதல் மனைவி விஜியையும் பிரியநேர்ந்ததென்பதனை நீ மறந்துவிட்டாய். பின்னர் உனது பணத்தினை மொய்த்தபடி இரவுகளுக்கு நிறையப் பெண்தோழிகள். அது இன்றுவரையிலும் தொடருகின்றதென்பதனை ஒரு தூயவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்? நீ அவளை மெய்யாலுமே காதலித்திருந்தாயெனில், அவளது நேசமும் அன்பும் மட்டுமே உனக்குப் போதுமெனில் அவள் சொல்லமுன்பே உன் தீய சினேகிதங்களை விட்டிருக்கவேண்டுமல்லவா ? உனது துர்நடத்தைகளை விட்டும் நீங்கியிருக்கவேண்டுமல்லவா ?”
பார்த்தாள்.
“
வேண்டுமென
விரும்பினாள். நள்ளிரவிலும், நேரம் காலமின்றியும் உனக்குத் தொலைபேசும் ஒழுக்கம் தவறிய பெண்களின் அருகாமையைத் தவிர்க்கச் சொன்னாள். உனக்கது பிடிக்கவில்லை. உனக்குக் காதலியும் வேண்டும். இரவுகளில் கன்னம் தடவப் பெண் தோழிகளும் வேண்டுமென்றால் எந்தத் தூயவள் ஏற்றுக் கொள்வாள் ? ஓரிரு நாள் பொறுத்துப்
பார்த்தாய்.
காதல் குறித்த அழகிய உவமைகள் கொண்டும், பிதற்றல்கள் கொண்டும் அவளது கோரிக்கைகளை நிறுத்தப்
பார்த்தாய்.
உனது வார்த்தைகளைத் தடிக்கச் செய்தாய். விஜி தீக்குளித்த அன்றும் உனது வார்த்தைகள்தானே தடித்தன? ஒவ்வொரு காதலும் உன்னை விட்டு நீங்கிய
பொழுதாவது
அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா நீ ? “
வருகிறாய்?
“
கொள்.
“
மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்
ஐராவதம் பக்கங்கள்….
புத்தக மதிப்புரையும், புத்தக வாசிப்பும்…….
***பசித்த பாம்பும், பிடரனும் மற்றும் பார்வையாளர்களும்
ரவிஉதயன்
சேமித்தக் காற்றையெல்லாம்
இசையோடு ஊதி
பாம்பிடம் கேட்கிறான்
சீறலை.
மீதம் வைத்திருந்த
வலுவைஎல்லாம் திரட்டி
படமெடுத்துப் பாம்பு
கேட்கிறது சீறலோடு
பிடரனிடம்.
தன் இரையை.
சுற்றிலும்
பசியின்விழிகளோடு
பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
அவ்வளவு பயந்திருந்தார்கள்
பசியைக் கண்ணுற்று.
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
13
ஆனால் பந்தநல்லூர் இன்னும் பெரிய கிராமம். அடிக்கடி பஸ்கள் போய்க்கொண்டிருக்கும். நான் திரும்பவும் மயிலாடுதுறைக்கு வந்துவிட்டதால், அசிக்காடு என்ற கிராமத்திற்கும், பந்தநல்லூர் கிராமத்திற்கும் அடிக்கடி சென்று கொண்டிருப்பேன்.
அகலமான பாதையில் பந்தநல்லூர் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம். இருபக்ககம் வழியில் தென்படும் பசுமை நிறைந்த வயல்கள். உயரம் உயரமான பனை மரங்கள். பறவைகளின் கீச் கீச் சப்தம். டூவீலரில் வந்து கொண்டிருக்கும்போது நடு நடுவே பாம்புகள் ஓடும். சில சமயம் பாம்பை மிதித்துவிட்டு பரக்க பரக்க ஓடுவேன். வண்டியில் பாம்பு சுருண்டு விடுமா என்று பயந்திருக்கிறேன். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.
நெருக்கடியான சென்னை வாழ்க்கையை விட்டு விட்டு இப்படி வந்ததுதான் பெரிய மாற்றம் என்று தோன்றுகிறது.
அழகியசிங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘உன் அனுபவம்தான் என் அனுபவம்,’ என்றார்.
(இன்னும் வரும்)
நான், பிரமிள், விசிறி சாமியார்…..18
நிறைவு
மட்பாண்டம் செய்யும் குயவனுக்கு
அதில் தண்ணீர் குடித்தவனின் இன்சொல் நிறைவு,
பலவேடங்கள் கட்டி நடிக்கும் நடிகனுக்கு
திரை நோக்கி வீசப்படும் காசுகள் நிறைவு
பாடங்களைத்திறம்பட நடத்தும் ஆசிரியருக்கு
கற்றுத்தேர்ந்த மாணவனின் உயரம் நிறைவு
வெகுநேரமாகக் காத்திருக்கும் காதலிக்கு
காதலனின் கெஞ்சல் நிறைவு
தோல்வியால் கீறிக்கிழிந்த இதயத்துக்கு
நல்ல இசை நிறைவு
பிளந்து கிடக்கும் பாலைநிலத்துக்கு
அவற்றை நிரப்ப வரும் மழை நிறைவு
நல்ல வரிகள் தேடி வந்த வாசகனுக்கு
இந்தக்கவிதை நிறைவு.
– சின்னப்பயல்
அவரசர கோலம்…
அழகியசிங்கர்
அவரசர கோலம்...
கிடுகிடுவென்று
கீழே இறங்கி அவர்
வேகமாக ஓடி விட்டார்
இன்று காரோ
டூ வீலரோ
நானும் அவரும் பக்கத்தில்
பக்கத்தில் குடியிருந்தாலும்
சந்திப்பது இல்லை.
இதுதான் வாழ்க்கையின் அவசரம்
என்று நினைக்கிறேன்
தெருவில் உள்ள எல்லோரும்
அவசரம் அவசரமாகக்
கிளம்புகிறார்கள்
யாரையாவது பார்த்து
புன்னகைப் புரியலாமென்றால்
ஓட்டமாக ஓடி விடுகிறார்கள்..
பேச நேரம்கூட இல்லை
சரி திரும்பி வரும்போது
சந்திக்கலாமென்றால்
மௌனமாக வீட்டிற்குள்
நுழைந்து கதவைச் சாத்திக்
கொண்டு போய் விடுகிறார்கள்.
வழக்கமாக வரும் வாரவிடுமுறையில்
யாரும் படுக்கையை விட்டு
எழுந்து கொள்வதில்லை….
வாரம் முழுவதும் சுற்றிய
அலுப்பை அன்றுதான்
தீர்த்துக் கொள்கிறார்களா…..
ஓஹோ……