நீ வருவாய்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 

ஐராவதம்

ரொம்ப நாளாய்
உனக்காகக்
காத்திருந்தேன் –
மயான பூமியிலே.
நீ வரக்காணோம்.
சரி என்று சட்டையை
மாட்டிக்கொண்டு
ஜரிகை அங்க வஸ்தரம் தொங்க
மியூஸிக் அகடமிக்குப்
புறப்பட்டேன்.
அங்கே இப்போது ஸீஸன்
இல்லையாம்.
ஸீஸனில் பாடியவர்கள்
சிகிச்சைக்குப் போய் விட்டார்கள்.
சரிதான் என்று யூனிவர்ஸிடிக்குப்
போனேன்.  அங்கே கோடை லீவாம்.
வைஸ் சான்ஸலர் வைப்பைக்
கூட்டிக்கொண்டு கனடா
போய்விட்டாராம் கான்பரன்ஸ்
ஒன்றிற்காக.
கான்பரன்ஸ் தலைப்பு
üஇன்றைய கல்வி
மகத்தான அழிவு சக்தி.ý
வெயிலாக இருந்தினால்
வேறெங்கும் போகவில்லை.
உன்னைப்பார்க்க முடியவில்லை
அதனாலென்ன.  இன்றில்லாவிட்டால்
நாறை வரப்போகிறாய் நீயாகவே
துணையில்லாமல்

மனித பாவங்கள்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 


பாலகுமாரன்

இரட்டைத் தடங்களில்
எதிர்ப் பட்ட ரயில்கள்
ஒன்றை ஒன்று கண்டதும்
கண் சிமிட்டிக் கொண்டன
பொறி பறந்தது
நெருங்கி வந்ததும்
வந்தனம் கூறின
குழ லொலித்தது
பிரிந்து போகையில்
இகழ்ச்சி நிரைத்து
எச்சில் துப்பின
என் முகத்தில் கரி அடித்தது –
தடங்களைக் கடக்கையில் தெரிந்தது
ரயில்களின் சினேகிதம் கண்டு
கட்டைகள் குலுங்கிச் சிரிப்பது

சகுனம்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 

கோ ராஜாராம்

நீண்டதொரு காலம் போய்,
மீண்டுமொரு சந்திப்பு
அதற்கென விரைவாய் அடியெடுத்து வைத்தேன்
நிலைக்கும் அப்பால் தெருவிலே வந்தேன்
உற்சாகங் குமிழிட்டு உள்ளத்தை விரித்தது
நடையினிலே நான் மிதந்தேன்
    பசபசவென்று உடலெடுத்த
    பூனையொன்று குறுக்கிட்டது
சீயென்றேன்.  தூவென்றேன்
காணக் கூசினேன் பூனையை
திரும்பிவிட அடிவைத்தேன்
துள்ளி விழுந்தது
துரிதமாய் வந்த காரினடியில்
துடித்துப் புரண்டது, பூனை
மனங் குமறிக் குமைந்தேன்
    கூசினேன் – என்னைக் காட்டிக்கொள்ள

தீபப்ரகாசன்

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.

அக்டோபர் 1970 இதழ்

பயம்

கூரையில் தொங்கும் விளக்கு
கூட்டும் நிழல் பெரிதென்று
    படுக்கை விளக்கைப்போட்டுப்
    படிக்கப் புத்தகம் எடுக்க,
    விளக்குக் கூண்டின் நிழல்
    விரிந்து சுவரை மறைத்தது.

விளம்பரம்

புதுமைக்கூத்தன்

மல்லிகையிரவில்
விளக்குத்தூணிருட்டில்
விருந்துக்கழைத்தன
வளையொலிகள்
காலணா நாணயமாய்
கண்ட குங்குமம்
மனைவித் தன்மை
மிகுந்ததாலா?

அக்டோபர் 1970 இதழ் 

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.

தமிழை எங்கே நிறுத்தலாம்

ஞானக்கூத்தன்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்
அச்சுப் பொறிகள் அடிக்குமோ?
முத்துச்சாமி போன்றவர் சொன்னால்
மாட்டே னென்று மறுக்குமோ?

காசுகள் ரெண்டு கையிலிருந்தால்
எதையும் எங்கும் நிறுத்தலாம்
காசு படைத்தவன் தமிழைக் கொண்டுபோய்
எங்கெல்லாமோ நிறுத்தினான்.

புலவர் பலரும் தமிழை இறுக்கிக்
குகைக்குள் கொண்டு தள்ளினார்.
குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்
கண்ணைக் கண்ணைக் கட்டினார்.

குகையிலிருந்த தமிழைக் கண்டு
குமுதம் கட்டிக் கொண்டதும்
சுப்ரதீபக் கவிஞர்களெல்லாம்
வஜனம் எழுதிக் களிக்கிறார்

தொழில்மய மாகத் திருமணமாகாக்
காளைகள் சுற்றும் நாட்டிலே
அவர்களுக் கென்றே ஏடு நடத்துவோர்
மூட்டைஅவிழ்த்துத் தருகிறார்.

வேற்று நாட்டுச் சரக்குகளோடு
உள்ளூர்ச் சரக்கை ஒப்பிட்டால்
தலையில் தலையில் அடித்துக் கொண்டால்
தேவலாம் போல இருக்குது.

மோச மின்னும் போவதற்குள்ளே
வித்தைக்டகாரர் வரவேண்டும்
வித்ததை தெரிந்த எழுத்துக் கலைஞர்
விலகி நிற்கக் கூடாது.

வித்தை தெரிந்தவர்க் கெல்லாமின்று
வேலை இருக்குது பலவாக.
நம்
கையிலும் ரெண்டு காசுகளுண்டு
இனி
தமிழை எங்கே நிறுத்தலாம்.

(நன்றி :: கசடதபற ஒன்றாவது இதழ் அக்டோபர் 1970)

ஸ்டெல்லா புரூஸ் சில நினைவுகள்

அழகியசிங்கர்     
                                                                                                
                                                                      
– 
ராம் மோஹன் என்கிற ஸ்டெல்லா புரூஸ்ûஸ எனக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும்.  பழகுவதற்கு இனிமையான மனிதர்.  என்னால் சற்றும் நம்ப முடியாத விஷயம் மார்ச்சு முதல் தேதி அவர் தற்கொலை செய்துகொண்ட விஷயம். ஏன் என் நண்பர்களால் கூட அதை ஜீரணிக்க முடியவில்லை.  நான், வைத்தியநாதன், இராஜகோபால், ஸ்ரீனிவாஸன் முதலிய இலக்கிய நண்பர்கள் கூடும் கூட்டத்தில் ஒவ்வொரு மாத ஞாயிற்றுக்கிழமைதோறும் எங்களைச் சந்திக்க அவர் வருவது வழக்கம். 
நெடு நெடு வென்று நல்ல உயரமாக இருப்பார்.  கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு ஸ்டைலாக தோற்றமளிப்பார்.  தன் மனதில் தோன்றுவதை தெளிவாகப் பேசுவார். முதலில் அவர் கவிதைகள் மூலமாகத்தான் எனக்கு அறிமுகம்.   
ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதை ஒன்று :
பொழுது விடிந்து 
தினமும் நான்
வருவேனென்று
கடற்கரை மண்ணெல்லாம் 
குஞ்சு நண்டுகள்
கோலம் வரைந்திருக்கின்றன
எளிமையான வரிகளைக் கொண்ட கவிதைகள்.  அவர் பேசுவதுபோல எழுத்தும் இருக்கும்.  நாட்டு நடப்புகளைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் உற்சாகம் குன்றாமல் பேசிக்கொண்டு இருப்பார்.  
ஆத்மாநாம் ஆரம்பித்து வைத்த ‘ழ’ என்ற சிற்றேட்டில்தான் அவர் கவிதைகள் வெளிவரும்.  வசீகரமான வரிகள் கொண்ட எழுத்து அவருடையது.  நான் சந்தித்தப்போதுதான் அவருடைய நாவல் =ஒருமுறைதான் பூக்கும்+ ஆனந்தவிகடனில் தொடர் கதையாக வந்து கொண்டிருந்தது.  
ஆத்மநாமுடன் எனக்கு அதிகம் பழக்கமில்லை.  ஆனால் ஸ்டெல்லா புரூஸ÷டன் அதிகம் பழக்கம் உண்டு.  இன்னும் கேட்டால், ஸ்டெல்லா புரூஸ÷டன் நான் பேசும்போது ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.  ஆத்மாநாமின் தற்கொலையின் தொடர்ச்சியை ஸ்டெல்லா புரூஸ÷டம்தான் தொடர்கிறேன்.  ஆத்மாநாமிற்கு இரங்கல் கூட்டம்  நடக்கிறது.  ஸ்டெல்லா புரூஸ் அதில் கலந்து கொள்ளவில்லை.  ஏன் அவர் சென்னையில் இல்லை?  ஏனோ அந்த இரங்கல் கூட்டத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  
அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.  கையில் வைத்திருந்த பணத்தை வங்கியில் போட்டு, அது கொடுக்கும் வட்டியை வைத்துக்கொண்டு  எளிமையான வாழ்க்கையை நடத்தியவர்.  தி நகரில் பூங்கா லாட்ஜில் அவர் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.  மிகச் சிறிய அறை.   அந்த அறையில் அவரைச்  சந்திப்பது வழக்கம்.  சென்னையில் சில தினங்களும், அவருடைய ஊரான விருதுநகரில் சில தினங்களுமாக இருப்பார்.    புத்தகம் படிப்பது, எழுதுவது இதுதான் அவருடைய அன்றாட வாழ்க்கை.  எந்த சாதாரண விஷயத்தையும் சுவாரசியமாகப் பேசுவார்.  தினமும் அலுவலகம் போய்க் கொண்டு அவதிப் படும் எனக்கு, அவருடைய சுதந்திரம் பொறாமையாக இருக்கும்.  
அவர் தொடர்கதை ஆனந்தவிகடனில் வெளிவரும் சமயத்தில் அவருக்கு ஏகப்பட்ட கடிதங்கள் அவர் தொடர்கதையைப் பாராட்டி வரும்.  சிலர் வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைக்கு அவருடைய அறிவுரையைக் கேட்பார்கள்.  சிலர் அவருக்குப் பரிசும் அளிப்பார்கள்.  இதுமாதிரியான சந்தர்ப்பத்தில்தான் அவர் ஹேமாவைச் சந்தித்ததார். ஹேமா அவருடைய வாசகி.  அவருடைய எழுத்தில் மயங்கி அவரைத் திருமணமும் செய்து கொண்டவர். 
       வழக்கமாக நாங்கள் சந்திக்கும் கடற்கரையில் ஒருநாள், ‘ஹேமாதான் என் மனைவி’ என்று அங்கு கூடியிருந்த எல்லோரிடமும் அறிமுகப் படுத்தினார் ஸ்டெல்லா புரூஸ். ஹேமாவிற்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்.  எனக்கு அவர் அறிமுகப்படுத்தியதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருந்தது.
ஹேமா அவர் வாழ்க்கையில் நுழைந்தபிறகு, அவருடைய அறை வாழ்க்கை ஒழிந்தது.  ஒழுங்கான அமைதியான கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கைத் தொடங்கியது.  அவர் ஆலந்தூரில் இருந்தபோது, சில தடவைகள் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறேன். ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா, ஸ்டெல்லா புரூஸ் மூவரும் குடியிருந்தார்கள்.  ஹேமாவின் தங்கை பிரேமாவிற்கு இருதய நோய். அதன்பின் அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள டாங்க் தெருவிற்குக் குடி வந்து விட்டார்கள். ஹேமாவின் சகோதரரின் சொந்தமான குடியிருப்பு அது.
யார் அவர்கள் வீட்டிற்குச் சென்றாலும், சிரித்த முகத்துடன் ஹேமாவும், ஸ்டெல்லாபுரூஸ÷ம் வரவேற்காமல் இருக்க மாட்டார்கள்.  எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்களுடன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கலாம்.  ஸ்டெல்லா புரூஸ் பற்றி ஹேமா வைத்திருந்த உயர்ந்த அபிப்பிராயத்தை என்னால் மறக்கவே முடியாது.   என் குடும்பத்தில் எதாவது விசேஷம் என்றால், ஹேமாவும் அவரும் தவறாமல் கலந்து கொள்வார்கள்.  அவருக்கு ஆன்மிகத்தைப் பற்றிய பிரமை இருந்தது.  
‘உடம்பு 25.10.1988’ என்ற கவிதை ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். 
அதில் : ‘வேட்கையும் இச்சையும் பிதுங்கும்
மனிதர்களின் ஊடே
காற்று நிறைந்த வயிறாய்
உடல் தனியே சென்று கொண்டிருந்தது ‘
என்றெல்லாம் வரும்.  அந்தக் கவிதை முழுக்க முழுக்க அவர் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது.  ஆன்மிகம் என்ற ஒன்றை அவரே நம்பியது.  அவர் அதைப் பற்றி குறிப்பிடும்போது, என்னால் நம்ப முடியாமல் கேட்பேன்.  
சில ஆண்டுகளுக்கு முன்னால், பிரேமா இதய நோய் தாக்குதலால் இறந்து விட்டார். தங்கையை இழந்தத் துக்கத்துடன், ஹேமா இருந்து வந்ததாகவும், இது குறித்துகூட ஸ்டெல்லா புரூஸிடம் அவர் தெரிவித்ததில்லை என்று ஸ்டெல்லா புரூஸ் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
அவர் நவீன விருட்சம் இதழில் ‘மரணங்கள்’ என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘ஹேமாவை அவளுக்கு ஏற்பட்ட சிறு நீரகங்கள் பழுதுபட்ட பிரச்னையில் இருந்து மீட்டு காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வலுவாக என்னிடம் இருந்தது.  அதற்கான அரிய சில சக்திகளும் எனக்குள் முனைந்து குவிந்திருந்தன,  கிட்டத்தட்ட மூன்றரை மாத முயற்சியில் அதற்கான பலன்களும் அவளில் ஏற்பட்டிருந்ததை மாதாந்திர மருத்துவ சோதனைகள் டாக்டர்களே ஆச்சரியப்படும்படி எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன,’ என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.  ஹேமாவிற்கு ஆன்மிக அனுபவம் ஏற்பட்டதாக குறிப்பிடுகிறார்.  அதே கட்டுரையில்,
 ‘ஹேமாவின் உயிருக்கு எந்த விதத்திலும் ஆபத்து வராது என்ற நம்பிக்கை எங்கள் இருவருக்குள்ளும் வந்தது.  கூடிய விரைவில் மரணத்தை நெருங்கப் போகும் ஒரு மனுஷிக்கு இத்தகைய ஆன்மீக அனுபவங்கள் அதுவும் ‘பாசிட்டிவ்’ வான செய்திகளையும் உள்ளடக்கிய அனுபவங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை என்ற எங்கள் நம்பிக்கை ஜøன் மாத மத்தியில் தகர்ந்து போனது.+ என்று குறிப்பிடுகிறார்.  ஸ்டெல்லா புரூஸ÷ற்கு இது ஒரு அடி.  
என்னிடம் அடிக்கடி இதைச் சொல்லி புலம்பிக் கொண்டிருப்பார்.  வியாதியின் தீவிரத்தை உணர்ந்து இது மிஸ்டிக்கல் அனுபவத்தால் சரி செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றும்.  இதைத் தெளிவாகவே அவரிடமும் எடுத்துச் சொன்னதுண்டு.  அவரும் அதைப் புரிந்துகொண்டாலும் நம்ப மறுத்தார். 
ஹேமா உடல்நிலை சரியில்லாத சமயத்தில், நான் அடிக்கடி பந்தநல்லூரிலிருந்து போனில் விஜாரித்துக் கொண்டிருப்பேன்.  ஸ்டெல்லா புரூஸின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனை ஏற்பட்டு விட்டதே என்ற வருத்தம் எனக்கிருந்தது. ஒரு முறை இரவு நேரத்தில் அவருக்குப் போன் செய்திருந்தேன்.  வெகு நேரம் கழித்து அவர்தான் போனை எடுத்தார்.  ஹேமா அறையில் நோயின் அவதியில் படுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.  போனில் பேசிக்கொண்டிருந்த ஸ்டெல்லா புரூஸ் யாரோ கூப்பிடுகிறார்களென்று போனை வைத்துவிட்டுப் போய்விட்டார்.  அதன் பின் அவர் போனை எடுக்கவே இல்லை. எனக்கோ அன்று இரவு முழுவதும் திகைப்பாக இருந்தது.  அடுத்தநாள் காலையில் ஹேமாவிற்கு எதாவது ஆகிவிட்டதா என்று விஜாரிக்க நினைத்தேன்.  
ஹேமாவின் மரணம் ஜøலை மாதம் ஹேமா எதிர்பார்த்தபடியே நடந்தது.  ‘எனக்குச் சாவைப் பத்தி பயம் இல்லை.  ஆனால் இந்த வலியைத் தாங்கிக்கொண்டு எப்படி இருக்கிறது,’ என்று ஹேமா என்னிடம் சொன்னது இன்னும் கூட ஞாபகத்திற்கு வருகிறது.  
ஹேமாவிற்குப் பிறகு ஸ்டெல்லா புரூஸ÷ம் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை நான் நம்பவில்லை.  ஹேமா மறைவிற்குப் பிறகு ஸ்டெல்லா புரூûஸ சந்தித்த போதெல்லாம், எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும்,  இரண்டு மூன்றுமுறை நண்பர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போவேன்.  ஸ்டெல்லா புரூஸ் ஹேமாவைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார்.  ஹேமா இல்லாத வாழ்க்கையை அவரால் கற்பனை செய்யமுடியில்லை.  ‘நான், ஹேமா, பிரேமா மூவரும்தான் இந்த வீட்டிற்கு வந்தோம்.  இப்போ பிரேமா இல்லை, ஹேமா இல்லை.  நான் மட்டும்தான் இருக்கிறேன்,’ என்று விரக்தியுடன் குறிப்பிடுவார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் நான் தற்காலிக மாற்றல் உத்தரவு பெற்று சென்னை வந்துவிட்டேன்.  சென்னைப் புத்தகக் காட்சி ஒட்டி ஒரு தினம் ஸ்டெல்லா புரூûஸப் பார்க்கப் பேயிருந்தேன். ‘எனக்கும் சில சமிக்ஞைகள் வர ஆரம்பித்துவிட்டன.  நான் அதிக நாள் இருக்க மாட்டேன்,’ என்று அவர் சொன்னதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது.  அவருக்கு வயது 67 ஆக இருந்தாலும், உடல் நிலை சரியாகவே இருந்தார்.  பயப்படும்படியாக எந்த நோயும் இல்லை.  இரவு நேரத்தில் கண் சரியாகத் தெரியாது என்பதால், வெளியே தனியாகப் போக மாட்டார்.  
ஹேமா இல்லை என்ற நிலையை எண்ணி எண்ணி குழப்பிக் கொள்கிறாரென்று நினைத்தேன்.  அவருக்கு அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு சினிமாவிற்கு கதை வசனம் எழுத வாய்ப்புக்கூட கிடைத்தது.  அதை அவர் மறுத்தும் விட்டார்.  மேலும் அவர் ஹேமாவைப் பற்றி சொல்லி சொல்லி குழம்பிப் போயிருந்தார்.  அவருடைய பல விஷயங்களை என்னால் நம்ப முடியவில்லை. 
எனக்கு அவர் இருந்த வீட்டைவிட்டு காலி செய்து வந்தால் சரியாக இருக்கும் என்று கூட தோன்றியது.  அதே இடத்தில் இருந்தால், ஹேமாவை மறக்க முடியாமல் அந்த வலி இருந்துகொண்டிருக்கும்.  சமீபத்தில் என் பெரியப்பா பெண்ணின் கணவர் இறந்து விட்டார்.  உடனே என் பெரியப்பாப் பெண், கணவருடன் வாழ்ந்த சொந்த வீட்டை விட்டு வேறு ஒரு வீட்டிற்குக் குடி பெயர்ந்து விட்டார்.  ஸ்டெல்லா புரூஸ÷ம் அவ்வாறு செய்திருக்கலாம்.
  
மனம் குழம்பிப் போயிருந்த ஸ்டெல்லா புரூûஸ டாக்டர் ருத்திரனிடம் அழைத்துப் போகலாமென்று நினைத்தேன்.  டாக்டர் ருத்திரன் கூட, +அவருடன் யாராவது இருப்பது அவசியமென்றும், மனக் குழப்பத்திற்கான மாத்திரிகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும்.  என்னிடம் அழைத்து வாருங்கள்,+ என்று குறிப்பிட்டார். 
ஸ்டெல்லா புரூûஸ அப்படியெல்லாம் அழைத்துக் கொண்டு போக முடியாது என்பது எனக்குத் தெரியும்.   மேலும் ருத்திரன் பேச்சை எடுத்தால், ருத்திரனுக்குத் தெரிந்ததைவிட எனக்கு அதிகமாகத் தெரியும் என்றெல்லாம் சொல்வார் என்பதும் எனக்குத் தெரியும்.  அந்தச் சமயத்தில்கூட அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார் என்பதை நான் நம்பவில்லை. ஏன்எனில், தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றியெல்லாம் அடிக்கடி ஸ்டெல்லா புரூஸ் என்னிடம் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள துணிந்தார் என்பதை நினைக்கவே வருத்தத்தை அளிக்கிறது.  
அவர் கடைசியாக எழுதிய ‘மரணங்கள்’ என்ற கட்டுரையில், ஹேமா அவரிடம் சொன்னது போல ஒரு வரி வருகிறது.’எப்போ இறந்தாலும் சரி, இறந்த அப்புறமும் அரூபமா உங்க கூடவேதான் இருப்பேன்,’ என்று. அரூபமாக ஹேமா வந்திருந்து ஸ்டெல்லா புரூûஸயும் அழைத்துக் கொண்டு போய் விட்டாரா?  அந்தக் கட்டுரையின் முடிவில், ஸ்டெல்லா புரூஸ் இப்படி எழுதி உள்ளார்: ‘ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கண்ணீரோடும் அழுகையோடும் நத்தையாய் நகர்ந்து கொண்டிருக்கின்றன…’
அவர் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. இரண்டு அற்புதமான ஜீவன்களை இழந்து விட்டேன் என்று சொல்வதைத் தவிர  வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவருடைய இறுதி யாத்திரையில் உறவினர்கள் சிலரும், நண்பர்கள் சிலர் மட்டும்தான் இருந்தோம்.  
(08 ஆகஸ்ட் ஸ்டெல்லா புரூஸ÷ன் பிறந்த தினம்.  அவர் நினைவாக இக் கட்டுரை வெளிப்படுகிறது)

எதையாவது சொல்லட்டுமா……97

  

    அழகியசிங்கர்

    ரொம்ப நாளைக்குப் பிறகு ஜெயகாந்தன் சிறுகதை வெளியீடு கூட்டத்திற்கு சென்றேன்.  இதற்கு முன் ஜெயகாந்தன் என்ற பெயரையே மறந்து விட்டேன்.  சமீப காலத்தில் யாரும் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் பெயரை யாரும் உச்சரிப்பதில்லை.  அவர் மீது யாருக்கும் எந்தக் கோபமும் இல்லை.  பல ஆண்டுகளுக்கு முன்னாலே அவர் எழுதுவதை நிறுத்தி விட்டார்.  பத்திரிகைகளில் கூட அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வருவதில்லை.  ஒருமுறை அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரைப் பற்றி பேச்சு வந்தது.  அவர் நலமாக வீடு வந்து சேர்ந்துவிட்டார் என்ற செய்தியுடன் அவரைப் பற்றி பேச்சு நின்று விட்டது. 


    அவர் சிறிய வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டார்.  சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிக் குவித்தவர்.  அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய பெரிய பத்திரிகைகள் காத்துக்கொண்டிருந்தன.  குறிப்பாக விகடன் அவர் எழுத்தை பிரசுரம் செய்ய காத்துக்கொண்டிருந்தது.  அந்தக் காலத்தில் தமிழ் எழுத்தாளர்களிடையே மதிப்பை உயர்த்தியவர் ஜெயகாந்தன் என்று குறிப்பிடுவார்கள். 

    ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்தில் சட்டையும் பேன்டும் அணிந்துகொண்டு  மிடுக்காக செல்பவர் அவர் ஒருவர்தான். பொதுவாக மற்ற எழுத்தளார்கள் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு போவார்களாம்.

    முழுக்க முழுக்க எழுத்தையே நம்பி பெரிய வெற்றி அடைந்தவர் அவர் ஒருவர்தான். மியூசிக் அகாடமி, சென்னையில் 24ஆம் தேதி நடந்த கூட்டத்தில், உட்கார இடம் கூட கிடைக்காமல் பலர் அவதிப் பட்டார்கள்.  அப்படி கூட்டம்.   ஜெயகாந்தன் கதைகள் என்ற அவர் புத்தகமும், அவருடைய பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைப்பெற்றன. டாக்டர் ராம்தான் ஜெயகாந்தன் கதைகள் என்ற புத்தகத்தைத் தொகுத்தவர்.  அவர் நீண்ட வரவேற்புரையை நிகழ்த்தினார்.  சிறு பத்திரிகைகளிலிருந்து பெரிய பத்திரிகைக்கு நுழைந்தவர் ஜெயகாந்தன் என்று குறிப்பிடுவார்கள்.  ஆனால் சிறுபத்திரிகையைச் சேர்ந்த யாரையும் பேசக் கூப்பிடவில்ல

    நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஜெயகாந்தன் ஆலந்தூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பேச வந்தார்.  அவர் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் நானும் கலந்து கொண்டேன்.  கையில் வைத்திருந்த துண்டு மாதிரியான துணியை பாரதி மாதிரி முண்டாசு கட்டிக்கொண்டார்.  அவர் பேச ஆரம்பித்தபோது ஆவேசமாகப் பேசினார்.  அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களையே அவர் திட்ட ஆரம்பித்தார்.  எனக்கு அவர் அப்படி திட்டி பேசியதைக் கேட்டு அவர் துணிச்சலை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.  அந்த வயதில் ஆச்சரியமாக இருந்தது.  நானும் எங்கள் மாம்பலம் ஏரியாவில் ஒரு இடத்தில் பேச போனபோது ஜெயகாந்தன் மாதிரி ஆவேசமாகக் கத்தினேன்.  பின் யோசித்தபோது அது முட்டாள்தனம் என்று தோன்றியது.  அந்தக் கூட்டத்திற்குப் பின் நான் ஜெயகாந்தன் கூட்டங்களுக்குப் போவதில்லை.  அவர் எப்படி பேசுவார் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தேன். 

    கொஞ்சம் கொஞ்சமாக நான் சேகரித்து வைத்திருந்த ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவம், சினிமா அனுபவம் போன்ற புத்தகங்களை என் நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன்.  அவர்கள் படித்தார்களா என்பதுகூட தெரியவில்லை.  ஏனென்றால் யாரும் திரும்பவும் புத்தகங்களைக் கொடுக்கவும் இல்லை.  படித்த மாதிரியும் சொல்லவில்லை. 

    ஜெயகாந்தனால் தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் பல எழுத்தாளர்கள் அவர் எழுத்தை தொடர்ந்து அதே பாணியில் எழுத ஆரம்பித்தார்கள். 

    பின்னாளில் ஜெயகாந்தன் பேசும்போது, அவரிடம் அந்த ஆவேசம் குறைந்து விட்டது.  ஆனால் பேசும்போது ஒருவிதத் தெளிவை என்னால் உணர முடிந்தது.  எந்த விஷயத்தைப் பற்றியும் அவர் தெளிவான சிந்தனையுடன் பேசுவார் என்று தோன்றியது.  நானோ மாறி விட்டேன்.  ஜெயகாந்தன் கூட்டத்தைவிட நான் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்குத்தான் போவேன்.  கூட்டத்தில் பேசத் தெரியாத, விரும்பாத எழுத்தாள நண்பர்களுடன்தான் பேசுவேன்.

    24ஆம் தேதி அன்று ஜெயகாந்தன் கூட்டத்திற்கு வந்திருந்தபோது, அவர் எழுந்து சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை.  ஆனால் அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கும்.  அந்தக் கம்பீரத்திற்கு எந்தக் குறைவும் இல்லை.  இன்றைய எழுத்து அவருடைய எழுத்தையெல்லாம் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது.  ஆனால் ஜெயகாந்தனை நம்மால் மறக்க முடியாது. 

எதையாவது சொல்லட்டுமா……96


    அழகியசிங்கர்

            இன்று மதியம் தொலைபேசியில் ஒரு கேட்ட குரல் ஒலித்தது.  ”நீல பத்மநாபனா?” என்று கேட்டேன்.  ‘ஆமாம்’ என்று பதில் வந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக் சென்டரில் அவருடைய கூட்டம்.  

               
                உண்மையில் அந்தக் கூட்டம் சனிக்கிழமையே முடிந்து விட்டது என்று நினைத்துவிட்டேன்.  உடனே நான் சில நண்பர்களுக்கு போன் மூலம் கூட்டம் பற்றிய தகவலைத் தெரிவித்தேன்.  இந்தக் கூட்டத்தின் முக்கியமான பங்கு என்னவென்றால், பல எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கலாம்.  முக்கியமாக நீல பத்மநாபனை சந்திக்குமிடமும் இதுதான்.  வயதின் முதிர்ச்சியில் அவர் தளர்ந்து காணப்பட்டார்.  
       அவருடைய ‘இலைஉதிர் காலம்’ நாவலைப் பற்றி சுப்ர பாலன் என்ற எழுத்தாளர் விமர்சனம் செய்தார்.  பின் நீல பத்மநாபன் சுருக்கமான ஒரு உரையை வெளிப்படுத்தினார்.  கூட்டம் 40 அல்லது 50 பேர்கள் கொண்டதாக இருந்தது.  நீல பத்மநாபன் நாவல்கள் முழுவதையும் மறு வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டுமென்று தோன்றியது.  இன்றைய சூழ்நிலையில் தமிழில் புத்தகம் படிப்பவர்களே அரிதாக மாறிக்கொண்டு வருகிறது.  அதுவும் தமிழில்.  ஒரு போராட்டமே நடத்தினால்தான் புத்தகம் படிக்க வைக்க முடியும்.  நீல பத்மநாபன் அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் அவருடைய படைப்புகளால் தலை நிமிர்ந்து நின்றவர்.  அவருக்கு எல்லா பரிசுகளும், மரியாதைகளும் கிடைத்து விட்டன. அவர் திரும்பவும் அவர் எழுத்துக்களையே திரும்பிப் பார்க்கும் நிலையில் உள்ளார். 

    எனக்கு எப்போதும் நீல பத்மநாபன் என்று சொன்னால், நகுலன் ஞாபகம்தான் வரும்.  திருவனந்தபுரம் என்றால் நகுலன், நீல பத்மநாபன், காசியபன், ஷண்முக சுப்பையா பேர்கள்தான் ஞாபகத்தில் வரும். 

       நீல பத்மநாபனை பலர் கேள்வி கேட்டார்கள்.  நான் ஒரு கேள்வி கேட்டேன்.  ‘உங்கள் நண்பர் நகுலனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று.

         ‘நகுலன் என் குருமாதிரி.  நான் எழுதுவதை அவரிடம் காட்டி அபிப்பிராயம் கேட்பேன்.  அவர் அதைப் படித்துவிட்டு எல்லோரிடமும் குறிப்பிடுவார்,’என்றார். 

    நீல பத்மநாபன் பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.   

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)


மரம்

வானத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து – மத்து ஆடுகிறது
என் நிழல்
வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என்
பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்.

என்னை வெட்டிச் சாய்க்க
வருகிற வீரன்
என் நிழலை மட்டும்
வெட்டிச் சாய்த்து விட்டானானால்
நான் ஓங்கிக் கிளைத்து வளருவேன் –
ஒன்பதாய்ப் பெருகுவேன்
என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும் –
முடியுமா
என் நிழலை மட்டும்
அப்புறப் படுத்திவிட….?
                                                                                                 க நா சுப்ரமண்யம்