நீ வருவாய்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 

ஐராவதம்

ரொம்ப நாளாய்
உனக்காகக்
காத்திருந்தேன் –
மயான பூமியிலே.
நீ வரக்காணோம்.
சரி என்று சட்டையை
மாட்டிக்கொண்டு
ஜரிகை அங்க வஸ்தரம் தொங்க
மியூஸிக் அகடமிக்குப்
புறப்பட்டேன்.
அங்கே இப்போது ஸீஸன்
இல்லையாம்.
ஸீஸனில் பாடியவர்கள்
சிகிச்சைக்குப் போய் விட்டார்கள்.
சரிதான் என்று யூனிவர்ஸிடிக்குப்
போனேன்.  அங்கே கோடை லீவாம்.
வைஸ் சான்ஸலர் வைப்பைக்
கூட்டிக்கொண்டு கனடா
போய்விட்டாராம் கான்பரன்ஸ்
ஒன்றிற்காக.
கான்பரன்ஸ் தலைப்பு
üஇன்றைய கல்வி
மகத்தான அழிவு சக்தி.ý
வெயிலாக இருந்தினால்
வேறெங்கும் போகவில்லை.
உன்னைப்பார்க்க முடியவில்லை
அதனாலென்ன.  இன்றில்லாவிட்டால்
நாறை வரப்போகிறாய் நீயாகவே
துணையில்லாமல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன