சகுனம்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 

கோ ராஜாராம்

நீண்டதொரு காலம் போய்,
மீண்டுமொரு சந்திப்பு
அதற்கென விரைவாய் அடியெடுத்து வைத்தேன்
நிலைக்கும் அப்பால் தெருவிலே வந்தேன்
உற்சாகங் குமிழிட்டு உள்ளத்தை விரித்தது
நடையினிலே நான் மிதந்தேன்
    பசபசவென்று உடலெடுத்த
    பூனையொன்று குறுக்கிட்டது
சீயென்றேன்.  தூவென்றேன்
காணக் கூசினேன் பூனையை
திரும்பிவிட அடிவைத்தேன்
துள்ளி விழுந்தது
துரிதமாய் வந்த காரினடியில்
துடித்துப் புரண்டது, பூனை
மனங் குமறிக் குமைந்தேன்
    கூசினேன் – என்னைக் காட்டிக்கொள்ள

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன