வட்டம் 3
என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை
ஏதோ நாவல்
ஏதோ கதை
என்றெழுதிய
வையும்
குப்பைக் கூடையில்
ஏக வாரிசு
என்றாலும் என்ன?
சுசீலாவே
செத்துவிட்டாள்
என் எழுத்து மறைந்தபின்
நான்
இருந்தென்ன
இலலாமல் போனால்
தான்
என்ன?
நகுலன்
வட்டம் 3
என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை
ஏதோ நாவல்
ஏதோ கதை
என்றெழுதிய
வையும்
குப்பைக் கூடையில்
ஏக வாரிசு
என்றாலும் என்ன?
சுசீலாவே
செத்துவிட்டாள்
என் எழுத்து மறைந்தபின்
நான்
இருந்தென்ன
இலலாமல் போனால்
தான்
என்ன?
நகுலன்
வட்டம் (2)
பேனாவுக்கு மையிட்டு
அதன் முனைதீட்டி
வெள்ளைக் காகிதத்தை
மேசை மீது விரித்து
எழுத வருங்
கால்
பேனாவின் முனை
மூளையின் மண்டைக்
கனத்தில்
குடை சாயும்
வெள்ளைக் காகிதத்தின்
வைரத் தின்மையில்
அதன்
கூர் மழுங்கும்;
சேலை அவிழ்க்
காலமென்றா
லோ
சுசீலாவும் செத்துக்
கிடக்கின்றாள்
– நகுலன்
வெளியிட்டபடி சிறகுகளை உள்ளடக்கிச்
அருகில் புன்னகைச்சொல்லொன்றை உதிர்த்தபடி துயில்கிறாள்
ஒவ்வொருக்கும் அந்தக் கடைசி மாதம் கசப்பாகத்தான் இருக்கும். எப்போது இதிலிருந்து விடுதலை ஆகி ஓடிவிட முடியும் என்றுதான் தோன்றும். என்னுடைய கடைசி மாதத்தில் நான் அப்படி நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை. கடந்த 35 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தின் நிழலில் அசையாமல் என் பொழுதை ஓட்டிவிட்டேன். ஆனால் இப்போது திரும்பவும் நினைத்துப் பார்த்தால் திகைப்பாகத்தான் இருக்கிறது.
ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
ஆளை அனுப்பிக் கொல்கிறது
மறுநாள் போனால் தீக்கனலாகக்
கண்ணை உருட்டிப் பார்க்கிறது
வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
வீட்டில் ஒருவல் நலமில்லை
என்னும் பற்பல காரணம் சொன்னால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
வாரம் முழுதும் பூதத்துடனே
பழகிப் போன சிலபேர்கள்
தாமும் குட்டிப் பூதங்களாகிப்
பயங்கள் காட்டி மகிழ்கின்றார்
தட்டுப் பொறியின் மந்திரகீதம்
கேட்டுக் கேட்டு வெறியேறி
மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
மதியாதிந்தப் பெரும்பூதம்
உறைந்து போன இரத்தம் போன்ற
அரக்கை ஒட்டி உரை அனுப்பும்
‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ ன்னும்
இந்தப் பேச்சை அது கேட்டால்
முபீன் சாதிகா
சிரத்தில் புகும் கால்
கண்ணில் ஆழ ஏறி
மறுபுறம் வந்த தாள்
முடங்கும் சினை முயன்று
அட்சரம் வரியாய்
பதித்து நுடங்க மேலாய்
மூக்கின் நுனியில் எழுத்தின்
முகமதை வடிக்க இங்கு
இவண் நுதல் பெயர்ந்து
பறக்கும் காற்றில் கரைய
கூந்தல் தாழ்ந்து இலக்கமிட
என்பும் துருத்தி முதுகின்
கூன் போல் மடிந்து
வலியன்ன காணும்
வளைவில் கதறியும் புறப்பட்டே
கோவென் ஒலி
லக்ஷ்மி சிவகுமார்
.