Author: virutcham
உண்மை
பார்வைகள்
ழ கவிதைகள்
அல்லது அதன் அடியிலிருந்தா?
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
பூமியில் நிற்கும்போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்குத் தெரிய வேண்டும்.
எதையாவது சொல்லட்டுமா……….57
ப்ளோரிடா
ப்ளோரிடா என்ற இந்த ஊர்
எனக்குப் பிடித்திருக்கிறது
வீதியெல்லாம் நீரால்
துடைத்தது மாதிரி சுத்தமாய் இருந்தது
அங்கங்கே ஓங்கி உயர்ந்த மரங்கள்
வரிசையாய் வீற்றிருந்தன
இங்கேதான்
என்னைக் கவர்ந்த எழுத்தாளர்
ஐ.பி.சிங்கர் வாழ்ந்தாராம்..
மியாமி கடற்கரையில்
ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைக்
கடந்தவண்ணம்
காரில் பறந்தவண்ணம் இருந்தோம்
ஐ.பி சிங்கர் பெயரில் ஒரு தெருவைக்
கடந்து சென்றதாக புதல்வன் சொன்னான்
என் மனதுக்குகந்த எழுத்தாளர்
ஏதோ ஒரு வீட்டில்
வாழந்திருப்பார்
இங்கிருக்கும்போது
அவர் ஞாபகமும் அவர் எழுத்தின் மணமும்
சுற்றி சுற்றி வந்தன..
ஏன்…………..?
ஒரு மாதமாய்…….
நாங்கள் மூவரும்
இந்த வீட்டில் இருந்தோம்
பல ஆண்டுகளாய்
அப்படி இல்லை
புதல்வன் தூர தேசத்தில் இருந்தான்
நானோ இன்னொரு கோடியில் இருந்தேன்
வீட்டில் அடைப்பட்டிருந்தாள் மனைவி
இங்கே –
மூவரும் ஒரே நேரத்தில்
ஒரே இடத்தில் கூடியிருந்தோம்
உண்டு உறங்கினோம்
வெளியே கிளம்பி
ஊர்ச் சுற்றத் தொடங்கினோம்
வாழ்க்கையில்
இந்தத் தருணம் கிடைத்தது குறித்து மகிழ்ந்தோம்
எங்களின் வார்த்தைகளின் பரிமாற்றம்
சில நொடிகளே….
இதோ
ஒவ்வொருவாய்
ஒவ்வொரு திசைக்குப் பயணமாகிறோம்….
(12.08.2011 / Florida 1.20 pm)
நியுயார்க்
நான் தெருவில்
காலடி எடுத்து வைத்தபோது
உயரமான அந்தக் கட்டிடங்கள்
என்னை வியக்க வைத்தன
ஒன்றொடு ஒன்று ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதுபோல்
கட்டிடங்கள்
ஒவ்வொன்றையும் அண்ணாந்து
பார்க்க பார்க்க தட்டாமாலை
சுற்றுவதுபோலிருந்தது.
தெருவெல்லாம் கூட்டம் கூட்டமாய்
ஆண்களும் பெண்களும்
நடந்தவண்ணம் சென்று கொண்டிருந்தார்கள்
மாலை வேளையில்
டைம் ஸ்கெயர் என்ற இடத்தில்
கூட்டமாய் கூடியிருந்தார்கள்.
ஒருவர் சத்தமாய் கிதாரை வைத்துக்கொண்டு
பாட்டு பாடிக் கொண்டிருந்தார்
பலர் கூட்டமாய் கூடி
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
ஓவியர்கள் சுற்றி இருந்தவர்களை
உட்காரவைத்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள்
வயதானவர்கள்
நடக்கமுடியாமல் அங்கிருந்த நாற்காலிகளில்
அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கட்டிடங்கள் மேல்
வண்ணமயமான விளக்குகளின் வெளிச்சத்தில்
விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
எங்கும் ஹோ ஹோ என்ற சத்தம்
கேட்டுக்கொண்டிருந்தன.
பெண்கள் அரைகுறை உடைகளுடன்
மிதந்த வண்ணம் இருந்தார்கள்.
திசை தெரியாத திசைக்கு
நாங்களும் சுழன்று கொண்டிருந்தோம்.
பதினேழாம் வயது
எனது ஐ.க்யூ’வை கணக்கிலெடுத்து,
என்னுயரத்திற்கு சரியானவன்
எனக்கணித்து ,
என் வாழ்நாள் முழுதும்
துணையாக உடன் வரத்தக்க
பொருத்தமான ஒருவனை
தேர்ந்தெடுத்தால்,
அவன் ஏற்கனவே
பல சலிப்பூட்டும் இளம்பெண்களின்
காதலனாகவே இருந்திருக்கிறான்
அவன் தனது நீண்ட காலக்கனவை
என்னுட்ன் விவாதிக்கிறான்
இவனும் மற்ற இளைஞர்கள்
போலவே நிகழ்காலத்தில்
வாழ மறுக்கின்றவனாகவே
இருக்கிறான்.
சலித்துத்தான் போகிறது
எனக்கும்.







