ழ – விருட்சம் இணைந்து நடத்தும் அஞ்சலி கூட்டம்
சமீபத்தில் காலமான கவிஞர் ஞானக்கூத்தன் நினைவைப் போற்றி அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது.
தலைவர் : எழுத்தாளர் அசோகமித்திரன்
கலந்து கொள்பவர்கள் : இந்திரா பார்த்தசாரதி, கி அ சச்சிதானந்தன், வைதீஸ்வரன்,சா கந்தசாமி, வி அரசு, ம ராஜேந்திரன், வெ ஸ்ரீராம். வெளி ரங்கராஜன், பாரவி, திருப்பூர் கிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன், ராஜ் கண்ணன், க்ருஷாங்கினி, பெருந்தேவி, ஆர் வெங்கடேஷ் இன்னும் பலரும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
இடம் : விழாவேந்தன் என் கே டி முத்து ஹால்
4/எ டி பி கோயில் இரண்டாவது சந்து
(மெட்ரோ வாட்டர் அலுவலகம் எதிரில்)
ஐஸ் ஹவுஸ் பஸ் நிலையம் அருகில்
திருவல்லிக்கேணி, சென்னை 5
தேதி 13.08.2016 (சனிக்கிழமை)
நேரம் மாலை 5.30 மணிக்கு
அனைவரும் வருக,
அன்புடன்
(ழ ராஜகோபாலன் – அழகியசிங்கர்)
இன்னும் யாராவது பேச விருப்பப்பட்டால், கூட்டத்தில் கலந்துகொண்டு பெயர்களைக் கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்று சர்வதேச பூனைகள் தினம்
நான்…
போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
போல என்னால் சிரிக்க இயலாது
போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
போல என்னால் அழ இயலாது
கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
போலவே எனக்கும் வலிக்கும்
போலவே எனக்கும் பசிக்கும்
போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை
போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்
தக்ஷிலா ஸ்வர்ணமாலி
– எம்.ரிஷான் ஷெரீப்
குறிப்பு
சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். ஒரு ஆசிரியையாகக்
கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்,
இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல்
என இதுவரையில் பத்து தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.
சில தகவல்கள்
தெலுங்கிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழி பெயர்ப்பு செய்யும் வித்தைக் காரர் அவர். முதன் முதலாக அவர்கள் அவர் கணவருடன் என் வீட்டிற்கு ஒரு முறை வந்திருந்தார். ஐராவதம் அவர்களின் மாறுதல் தொகுப்பிலிருந்த கதை ஒன்றை தெலுங்கிற்கு மொழி பெயர்க்க அனுமதி பெற. “ஐராவதம் கேள்விப்பட்டால் சந்தோஷப்படுவார். நீங்கள் மொழி பெயருங்கள்,” என்றேன். அந்தக் கதையை மொழிபெயர்த்த கௌரி கிருபானந்தன் அதை ஒரு தெலுங்கு பத்திரிகையில் பிரசுரமாக வழி வகுத்தார்.
மனதுக்குப் பிடித்த கவிதைகள்
சீரியல் மகத்துவம்…
உரையாடல் தொடருகிறது….
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 2
மனதுக்குப் பிடித்த கவிதைகள் 1
புத்தர் அழுதார்
வெய்யில்
யாரோ தினமும்
ஒரு பூவைக் கொன்று
புத்தரின் கையில் வைத்துவிடுகிறார்கள்
விரல்கள் நடுங்க…
பூ அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
நேற்று அதிகாலையிலும் கூட
கண்ணீர் கசிவதாய் பதறினேன்
பனித்துளிகள் என்று சிரித்தார்கள்
மாலை நேரத்து
மந்திர உச்சாடனத்தில்
புத்தரின் விசும்பல் யாருக்கும்
கேட்காமல் போக
இன்றும் கூட யாரோ
ஒர பூவைக் கொன்று.
நன்றி : குற்றத்தின் நறுமணம் – வெய்யில் – கவிதைகள் – விலை : ரூ.80 – வெளியீடு : புது எழுத்து, 2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112
தொலை பேசி : 98426 47101
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 22
இந்தக் கூட்டம் விருட்சம் நடத்தும் 22வது கூட்டம். ஏன் இதுமாதிரி கூட்டங்கள் நடத்த வேண்டுமென்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன். கீழ்க்கண்டவாறு அதற்கான பதில்களை சொல்ல விரும்புகிறேன் :
1. எழுத்தாளர்கள் அவர்களுடைய நண்பர்களை சந்திப்பதற்கு. நான் வாசகர்கள் என்று சொல்வதைத் தவிர்க்கிறேன்;
2. ஒரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிப் பேச;
3. ஒரு படைப்பாளி அவர்களுடைய படைப்புகளைப் பற்றி அவர்களே அறிமுகப் படுத்திக்கொள்ள;
4. இதுமாதிரியான கூட்டங்களை எப்படி எதிர்கொள்வது என்று பார்வையாளர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுததுக்கொள்ள
கடந்த 22 கூட்டங்களாக இதை ஓரளவுக்கு நடைமுறையில் சாத்தியப் படுத்த முயற்சி செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். இப்போது நடைபெறுவது பெருந்தேவியின் கவிதைகள் குறித்த கூட்டம். கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.