முன்னோடி படைப்பாளுமைகளை கௌரவிக்கும் முகமாகவும், தீவிர இலக்கிய உணர்வாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் மணல்வீடு இலக்கியவட்டம் கடந்த இருவருடங்களாக இலக்கிய விருதுகள் வழங்கிவருவருகிறது. அதன் நீட்சியாக இந்த வருடம் அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருதுக்கு நவீன விருட்சம் சிறுசஞ்சிகை தெரிவு பெற்று இருக்கிறது . மேற்சொன்ன விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்து மூன்றாம் தேதி (03 – 08 -19) ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோடில் அமைந்துள்ள ராணா விடுதி நிகழ்வரங்கத்தில் நடக்க இருக்கிறது. ஆர்வலர்களும் அன்பர்களும் நேரில் வந்திருந்து விழாவை சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன் .
இவண்
மு . ஹரிகிருஷ்ணன்
தெரிவுக்குழு
செ. ரவீந்திரன்
சுதாகர் கதக்
விவேகானந்தன் ஐ . எப் . எஸ்
நக்கீரன்
குறிப்பு
விருது ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் தொகையும், சான்றிதழும் நினைவு பரிசொன்றும் உள்ளடக்கியது . மாற்றத்திற்குட்டபட்ட விழா நிகழ்ச்சி நிரல் இத்துடன்.
மணல்வீடு இலக்கிய வட்ட நிகழ்வு – 10
நிகழ்விடம் – ராணா விடுதி நிகழ்வரங்கம் – சூரம்பட்டி நான்கு ரோடு – ஈரோடு
நாள் – 03 – 08 – 2019
நேரம் – காலை பத்து மணிக்கு
அமர்வு – 1
சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருது வழங்கும் நிகழ்வு
அஃக் பரந்தாமன் நினைவு இலக்கியவிருது
-நவீன விருட்சம் – ஆசிரியர் – அழகிய சிங்கர்
நிகழ்வில்
நாஞ்சில் நாடன் – பிரம்மராஜன் – மோகனரங்கன் – ஷா அ ந. விச்வநாதன் கமலாலயன் பிரவீன் பஃ றுளி
பேப்பரின் இருளும் ஒளியுமே நகரின் இரவு பகலாக மாறுகிறது
ஒவ்வொரு நாள் காலையிலும்
பேப்பரிலுள்ள செய்திகள் மாற்றமடைகின்றன
இதைக் கண்டு பேப்பர் பையன் கலக்கமடைகிறான்
காலப்போக்கில் அவன் குல்பி ஐஸ்காரனாக மாறுகிறான்
இரவுகளில் குல்பி ஐஸ் விற்கும்போது
அதை வாங்குவோர் சிலர் கேட்கிறார்கள்
உன் கரத்தில் பேப்பர் வாசம் அடிக்கிறதே
மேலே அண்ணாந்து பார்த்து
அவன் தனக்குள்ளே சிரித்துக்கொள்கிறான்
நன்றி : மீள மேலும் மூன்று வழிகள் – புது எழுத்து, 2/205 அண்ணாநகர், காவேரிப்பட்டிணம் 12, கிருஷ்ணகிரி மாவட்டம் – முதல் பதிப்பு : டிசம்பர் 2013 – விலை : ரூ.70
காலில் செருப்பின்றி
நான்கு மைல் தொலைவு
நடந்து சென்று படித்தது….
மூன்று ஜோடி உடைகளையே
மாற்றி மாற்றிப் போட்டது
ஐந்து பைசா பென்சிலைத் தொலைத்து
அப்பாவிடம் அடி வாங்கியது….
பள்ளியிறுதி வகுப்பு வரை
தமிழ் மொழியில் கற்றது.
ஒரு புத்தகத்தில் அடங்கிய
புனை கதைகளாக விரிகின்றன
இத்தனையும் என் மகனுக்கு
நன்றி : உலா பதிப்கம், 132 வங்கி ஊழியர் குடியிருப்பு, திருவனைக்காவல், திருச்சிராப்பள்ளி 620 005
காற்றில் பறந்து என் மேசைக்கு வந்த இலைச்சருகு கோடை நகர்ந்த கதையைச் சொல்லி சரசரக்கிறது
நன்றி : கோடை நகர்ந்த கதை – கனிமொழி ஜி – உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18- பக்கம் : 72 – விலை : 65 – வெளியான ஆண்டு : மார்ச்சு 2016
வரும்
போகும்
வரும்
போகும்
என்ற பெயரில் சி மணியின்
கவிதைத் தொகுதி
க்ரியாவில் அந்த நாளில் பார்த்தது
ஆனால்
வந்துகொண்டிருக்கும்
போய்க்கொண்டிருக்கும்
எல்லாம் நடக்கும்
போன ஆண்டு இதே உலகப் புத்தகத்தினம் அன்று ராகவன் காலனி 3வது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தேன்.
இந்த முறை அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கு 3 அமெரிக்கன் நூலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அங்கிருந்து பல புத்தகங்களை எடுத்துக்கொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டு வருகிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஐ பி ஸிங்கரின் சிறுகதைகளைப் படிக்கிறேன்.
ஒரு முறை நூலகத்தைச் சுற்றி வரும்போது ஒரு மூலையில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனைக்கு என்று எழுதப்பட்டிருந்தது. சாதாரண புத்தகமாக இருந்தால் கால் டாலரும், கனமான அட்டைப் போட்டிருந்த புத்தகமாக இருந்தால் 1 டாலரும் ஏன்றும் போட்டிருந்தது. இதைத் தவிர நேஷனல் ஜியாகரபி, டைம் பத்திரிகை விலை குறைவாக விற்கிறார்கள். ஒவ்வொரு நூலகத்திலும் ஒவ்வொரு விதம். டிவிடி, சிடி எல்லாம் விற்கிறார்கள். விற்கிற இடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். நாம்போய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நன்கொடையாக ஒரு மரப்பெட்டியில் காசைப் போடவேண்டும்.
இந்த உலகப் புத்தக தினத்தை ஒட்டி நான் கீழ்க்கண்ட புத்தகங்களை அமெரிக்கன் நூலகத்திலிருந்து வாங்கிக்கொண்டு வந்துள்ளேன். பெரும்பாலும் நாவல்கள்தான். இன்னும் சில புத்தகங்கள் வாங்குவதாக உத்தேசித்துள்ளேன்.
1.The Grapes of Wrath – Steinbech 2. In a Mirror – Mary Stolz 3. All the Missing Girls – Megan Miranda 4. This is my God – Herman Wouk 5. The Truffle with weddings – Laura Durham 6. Book J – translaated from Hebrew by David Rpsemnerg 7. Truevine – Beth Macy 8. The Secret of Rain and Lightining – Nancy Pickard 9. A Certain Justice – P D James 10. People Like us – Dominick Dunne 11.The Last Symbol – Dan Brown t 12. Granny Dan – Danielle Steel 13. The Long Road Home – Danielle Steel
இன்னும் நூலகங்களுக்குப் போய் புத்தகங்கள் கொண்டு வாங்கி வர உத்தேசம். சென்னைக்குக் கொண்டு வருவதற்குத் தனியாகப் ஒரு பெட்டியை ஏற்பாடு செய்ய நினைத்துள்ளேன்.
ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார். அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மறைந்தார்.
நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன்.
அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன். முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன். தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்
கேள்வி கேட்பவர் : தொழில் ரீதியாக நான் ஒரு மருத்துவன். நான் அறுவை சிகிச்சைச் செய்பவனாக என் தொழிலை ஆரம்பித்தேன். பின், மனோதத்துவ நிபுணனாகத் தொடர்ந்தேன். மேலும் நான் சில மனோதத்துவப் புத்தகங்களையும் எழுதியிருக்கிறேன். நம்பிக்கையின் மூலம் குணப்படுத்த முடியுமென்று நம்புகிறவன். நான் உங்களைப் பார்க்க வருவதற்கு முக்கிய காரணம், ஆன்மிக விதிகளைக் கற்பதற்குத்தான்.
ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் : ஒரு நோயாளியின் நோயைத் தீர்க்குமுன் நீங்கள் எந்தவிதமாக நோயைத் தீர்க்க முயற்சி செய்கிறீர்கள்? நோயைத் தீர்ப்பது என்றால் என்ன? எப்போது சொல்வீர்கள், ஒரு மனிதன் குணமடைந்துவிட்டானென்று?
கே.கே : நான் நோயைக் குணப்படுத்துவதோடல்லாமல், மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை சரி செய்வேன். மனதைச் சரிசெய்ய முயற்சி செய்வேன்.
மஹாராஜ் : மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் ஆராய்ச்சி செய்வீர்களா? எந்தத் தருணத்தில் அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளது?
கே.கே : உடலுக்கும், உணர்வுநிலைக்கும் இடையில் மனது
உள்ளது.
மஹாராஜ் : உடல் உணவால்தானே உருவாக்கப்பட்டுள்ளது?
உணவு இல்லாமல் மனம் இருக்க முடியுமா?
கே.கே : உணவால்தான் உடல் உருவாக்கப்பட்டு நிலைத்திருக்கிறது. உணவு இல்லாவிட்டால் மனமும் பொதுவாக தளர்ந்து விடும். ஆனால் உணவு மட்டுமல்ல மனம். வேறு ஒன்று ஒரு மனம் உடலில் இயங்கக் காரணியாக இருக்கிறது. அப்படி மாற்றக்கூடிய ஒன்று என்ன?
மஹா : மரம் நெருப்பை உண்டாக்கக் காரணமாக இருந்தாலும், மரம் நெருப்பாகாது. அதேபோல், மனதை உருவாக்க
உடல் காரணமாக இருந்தாலும் அது மனமாகாது. ஆனால் யாருக்கு மனம் தெரியவரும்? யோசனைகளையும், உணர்வுகளையும் ஏற்றுக்கொள்பவர்களை நீங்கள் மனம் என்று கருதுகிறீர்களா? மரம் இருக்கிறது, நெருப்பும் இருக்கிறது, கூடவே நெருப்பைப் பயன்படுத்திக் கொள்பவரும் இருக்கிறார். யார் மனதை பயன்படுத்திக்கொள்கிறார்? அப்படிப் பயன்படுத்திக் கொள்பவருக்கும் உணவுதான் அடிப்படையா? அல்லது அது இல்லாமல் தனிமையாக இயங்கக் கூடியவரா?
கே கே : மனதை உணரக்கூடியவர் தனிமையாக இயங்கக் கூடியவர்.
மஹா : எப்படி உங்களுக்குத் தெரியும்? உங்களுடைய அனுபவத்திலிருந்து பேசுங்கள். நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை. நீங்கள் அப்படிச் சொல்லலாம். எப்படித் தெரியும்?
கே.கே : எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி ஊகிக்கிறேன்.
மஹா : சத்தியம் நிலையானது. உண்மை மாற்றமில்லாதது. எது மாறக்கூடியதோ அது உண்மையில்லை. எது உண்மையோ அது மாற்றம் அடையாதது. இப்போது சொல்லுங்கள், எது உங்களிடம் மாற்றம் இல்லாதது? உணவு இருக்கும்வரை, உடலும், மனமும் இருக்கிறது. உணவு நின்றவுடன், உடல் அழிந்து விடுகிறது. மனமும் கரைந்துவிடுகிறது. ஆனால் உற்று நோக்குபவனும் அழிந்து விடுகிறானா?
கே கே : இல்லை என்றுதான் நான் ஊகிக்கிறேன். ஆனால் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.
மஹா : நீங்கள்தான் அதற்கு ஆதாரம். உங்களுக்கு வேறு எந்த ஆதாரமும் கிடைக்காது. நீங்கள் தான். உங்களுக்குத் தெரியும் உங்களை. நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள். என்னதான் மனது செய்தாலும், அது தன்னுடைய விருப்பத்திற்காகச் செய்யும். ஆன்மாவின் இயற்கை அன்புதான். அன்பு செலுத்திக் கொண்டிருந்தது, அன்பு செலுத்திக்கொண்டிருக்கும், அன்பு செலுத்தும். ஆன்மாதான் உடலையும், மனதை நெருக்கமாகவும்,
ஆர்வமுள்ளதாகவும் மாற்றும்.
கே கே : ஆன்மா என்பது உடலாகவும், மனதாகவும் இல்லையென்றால், அது உடல் இல்லாமலும், மனம் இல்லாமலும் இயங்க முடியுமா?
மஹா : ஆமாம். நிச்சயமாக இருக்கும். உண்மையில் அது அனுபவமாக உள்ளது. மனமும் உடலையும் இல்லாமல் தனியாக இயங்கக் கூடியது. அது விழிப்புணர்வுடன் இயங்கிக் கொண்டிருப்பது.
விழிப்புணர்வுடன் இருப்பது பேரின்பம்.
கே கே : உங்களுக்கு வேண்டுமென்றால் உண்மையான அனுபவமாக இருக்கலாம். ஆனால் எனக்கில்லை. எப்படி நான் அதே அனுபவத்தைப் பெறுவது? என்ன பயிற்சிகளை எடுத்துக்கொள்வது? என்ன நடைமுறையைப் பின்பற்றுவது?
மஹா : நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உடலும் இல்லை. மனமும் இல்லை. ரொôம்பவும் ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும். உடலாலும், மனதாலும் பாதிப்பு இல்லாமல் வாழ வேண்டும். முழுவதுமாகவும், தனியாகவும், அதாவது நீங்கள் இறந்து போனால் எப்படியோ அப்படி. இதற்கு என்ன அர்த்தமென்றால் உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, இந்த உடலாலோ மனதாலோ..
கே.கே : பயங்கரமானது
மஹா : நான் உங்களைத் தற்கொலை செய்துகொள்ளும்படி சொல்லவில்லை. உங்களாலும் முடியாது. நீங்கள் உடலை மட்டும் கொலை செய்யலாம். ஆனால் மூளையின் தொடர்ச்சியை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் நினைப்பதுபோல் ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. எந்தப் பாதிப்பும் ஏற்படாத மாதிரி அப்படியே இருங்கள். இப்படி தனியாக உடலுக்கும், மனதுக்கும் தொடர்பு இல்லாதவாறு இருக்கும்போது, நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை. நீங்கள் உங்களுடைய உண்மையான தன்மைக்கு ஆட்படுவீர்கள். உங்கள் உடலுக்கும், மனதிற்கும் என்ன நடப்பதென்பதை மாற்றுவதற்கு உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால், நீங்கள்தான் உடல் அல்லது மனம் என்று
கற்பனை செய்வதை நிறுத்தி விடலாம். என்னதான் நடந்தாலும், உங்கள் உடலுக்கோ மனதிற்கோ நடப்பதாகவும் உங்களுக்கில்லை என்றும் அசையாமல் இருங்கள்.
சொல்லுங்கள் என்ன முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள்? உடலையும், மனதையும் மாற்றமே இல்லாத ஆன்மாவுடன் பார்ப்பதற்கு.