மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

– 112

அழகியசிங்கர்  

பட்டினி போட்ட அலாவுதீன் விளக்கு

செந்தூரம் ஜெகதீஷ்

எதற்குமே பயனற்றவன்தான் 

ஒரு படைப்பாளி

காய்கறி கூட

பேரம் பேசி வாங்க

அவனுக்குத் தெரியாது

ரிக்ஷாக்காரனிடம்

மாரடிக்க அவனால் முடியாது

பணங்காசுக்கு

ஆலாய்ப் பறக்க அவனால் இயலாது

இல்லறத் தேவைகளின்

பூதாகரமான பசியை

அவன் புரிந்து கொள்ளவே மாட்டான்

லௌகீக வலையில்

சிக்காமல் நழுவும் மீன் அவன்

ஆனாலும் 

யதார்த்தம் என்னும் நெருப்பில்

அவனும் 

வெந்து குழம்பாகிப் போகிறான்

ருசியின் மயக்கத்தோடு

நன்றி : இன்னும் மிச்சமிருப்பவை – நவம்பர் 1999 – சிந்து பதிப்பகம், 

112 ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14 வெளியான ஆண்டு : 1999 – விலை : ரூ.30  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன