சில நேரங்களில் சில மனிதர்கள்

கணீர் குரலுக்கு சொந்தக்காரர்கன்னையா ஓதுவார்.தேவாரம் பாடும் போதெல்லாம்கேட்பவருக்கு கண்ணீரேவருமென்பார் அப்பாஅவர் இறந்த நாளொன்றில்யார் கண்ணிலும் நீர் இல்லை.அவர் தேவாரம் பாடாததுதான்காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்அந்த நாளில்.அசராமல் கரகம் ஆடக் கூடியவள்மேலத் தெரு மஞ்சுளாகரகம் அசையாமல்கண்ணில் ஊசியெடுத்தபடியேகாலில் படம் வரைபவள்.சமீபத்தில் ஜாக்கெட்டில் குத்தப் பட்டநூறு ரூபாய்களுடன் பார்க்கும் போதுஎடை அதிகமென இறக்கி வைத்திருந்தாள்கிளி மூக்கை நீட்டியிருக்கும் கரகத்தையும்இன்னும் சில ஆடைகளையும்உலகில் சூரியன் உள்ளவரைஉனை மறவேன் எனஎதுகை மோனையுடன்எழுதிக் கொடுத்தவனைவாரச்சந்தையில் பார்த்த பொழுதுஅவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.சூரியன் இல்லாத அவன் உலகை நினைத்துகொஞ்சம் வருத்தமாக இருந்தது.காரைவீட்டு பெரியசாமி அண்ணாச்சியென்றால்எல்லார்க்கும் பயம்மீசைக்காக சிறுவர்களும்காசுக்காக பெரியவர்களும் அடங்குவார்கள்.தளர்ந்த அவரைப் போனவாரம் பார்த்த பொழுது“கான்கிரீட் ஊருக்குள்ளகாரைவீட்டுக்கு மதிப்பில்லப்பா”என்றார்.கடனை அடைப்பதற்காய் சொல்லிதுபாய் போன சங்கிலிதிருமணம் முடிந்து திரும்பி வந்தான்.வெளியூர் வேலைக்குக்கூடஅனுப்ப மாட்டாள் மனைவிஅத்தனை பாசமென்றான்.யார் கண்டதுசக்களத்தி பயமாய் இருக்கலாம்.முந்நூற்றுஅறுபத்துஏழாவது முறையாய்மஞ்சள் சுடிதாரில் வருகிறாய்ஏன் வேறு நிறமில்லையாஎன்றேன் கெளரியிடம்.இப்படி நீநியாபகம் வைத்திருப்பதை கேட்பதற்காகத்தான்என்றாள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன