வன்முறையின் சாட்சி

எட்டுக்காலம் அளவில்
அந்தச் செய்தி வந்திருந்தது.

ரத்தம் வழியும் புகைப்படங்களுடன்
பேருந்தும்
பேருந்தும் பேருந்தும் மோதி
முப்பத்தாறு பேர்
சம்பவ இடத்தில் பலி

பிய்ந்த கைகள்
உடைந்த கால்கள்
சிதைந்த தலை

ஆதி வன்முறையின்’
கடைசி சாட்சியென
இன்னும் அதிகமாய்
இரண்டு லட்சம் பிரதிகள்
விற்றிருக்கிறது பத்திரிக்கை.

“வன்முறையின் சாட்சி” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன