கோடு

எறும்பின் பாதையில்
ஆள்காட்டிவிரல் தேய்க்கும் சிறுமி
சிரிப்பை மறந்து
அமர்ந்திருக்கிறாள்

வரிக்குதிரை சந்திப்புகளைக்
கடக்கும் கண்ணிழந்தவர்களை
யாரோ கைபிடித்துக் கொள்கிறார்கள்

சாக்குக்கட்டிகளை
கடந்து செல்லும்
மனிதர்களைப் பார்த்தபடி
சில்லறைக்குக் கீழே
வரையபட்டிருக்கிறான்
கைவளைந்த கடவுள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன