பூனைகள்………..பூனைகள்…………….பூனைகள்……25

அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும்

அரசியல்வாதி ஒரு பூனை வளர்த்தார் அன்றாடம் பாலுடன் அனுசரணையாய் வளர்க்கப் பட்டது அந்தப் பூனை அவர் மடியில் கிடந்து மாமிசம் சாப்பிட்ட பூனை அது.
அரசியல்வாதி எம். எல். ஏ ஆனார். எம். பி ஆனார். மத்திய மந்திரியும் ஆனார் பூனைக் காவல்படையுடன் சுற்றும் அவர் அருகே இன்று அந்த பூனையால் அண்ட இயலவில்லை
அரசியல்வாதியின் மனைவியாய் நெடுங்காலம் இருந்த பின் ஒரே நாளில் திடீரென முதல் மனைவியாய் பதவி உயர்வு பெற்ற அந்தப் பெண்ணின் சமையல் அடுப்பில் தூங்குகிறது இன்று அந்த பூனை

குமரி எஸ்.நீலகண்டன்..

மீண்டும் வாசிக்கிறேன் 2

மலையோ மனிதன் வார்த்த………

எஸ்.வைத்தியநாதன்

மலையோ

மனிதன்

வார்த்த

கட்டிடமோ –

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

உயர –

அழகும்கூட –

எங்கும்

விரிந்தேன் –

வெளியோடு

சேர.

சேர்ந்தேன் –

எங்கும்

நிறைந்தேன்.

மலையோ

வார்த்த

கட்டிடமோ –

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

மீண்டும் வாசிக்கிறேன் 1

நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள்

1. நட்பு

நானுன்னை வெறுக்கவில்லை
நானுன்னோடு சண்டை போட
விரும்புகிறேன் – நன்றாக கவனி நண்பா,
விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட.
எனினும் இதிலிருந்து இன்னொன்றும்
நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் –
நான் சண்டை போடாத எல்லோரையும்
நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை.

2. நிலை

மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும்
தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ
இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்….
திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி.
கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது…
கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில்
மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால்
வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது –
இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் –
விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும்
கறுப்பு நிறங்களின் தாறுமாறில்
பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன்.
அங்கே நிற்கின்ற நிலையில்
எனக் கொன்றும் புரிகிறது –
நடுத் தெருவில் அப்போது தான்
புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின்
கண்ணில் கசியும் சோகம்.

3. விடுதலை

மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும்
மத்தியான வெளியில்
படபடத்துப் போகும்
வசீகரமாயொரு வண்ணத்துப் பூச்சி.
திடீரெனப் பாய்ந்தறையும் காற்று, கூடவே
திடீரெனத் துடிக்கும் ஒரு எண்ணம் –
வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து ‘விட’லாம்.
ஆனால் ஏனோ நல்ல வேளை
காற்று போய் எங்கோ மீண்டும்
பழையபடி பதுங்குவதற்குள்
வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் எண்ணத்தை நான்
காற்றில் விட்டு விட்டேன்…………………….

(ழ அக்டோபர் 1980 / 11வது இதழ்)

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

லூயிஸ் சிம்ஸன்

அன்பு : எனது கருவி

அன்புதான் எனது கருவி
அதுதரும் தப்பித்தல் மூலம் நாம் உதித்தெழுகிறோம்
நாம் உண்டாக்கும் ஒலி அதிர்வுகளின் மேல்
நாமே பயணம் செய்கிறோம்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும்
ஒரு நட்சத்திரத் துளிரில்
கண்ணி வயப்பட்டு, பிரமித்து
அமரத்துவம் பெற்ற ஆன்மாவாகின்றனர்

ஹலோ டோ க்கியோ
ஹலோ யூஜூரு கரகரி என் குரல் கேட்கிறதா?
நகரங்களிலேயே இருளடர்ந்த சான்பிரான்சிஸ்கோ,
என் குரல் உனக்குக் கேட்கிறதா?

இதோ, ஆதியந்தமற்ற வெளி
இதோ, ஆதியந்த மற்ற ஏகாந்தம்
இவற்றுள் ஏதும் உனக்கு விசித்திரமாய்ப் படுகிறதா?

இங்குள்ளவர் மிகப் பலர்
இதோ காந்தி இதோ யேசு
மோஸஸ் இன்னும் பல செயல் திறனாளிகள்

நட்சத்திர ஒளியின் மூலம்
இந்த இரவு தீவிரம் பெற்றுள்ளது
என் உலகைக் கண்டுபிடிக்க
இந்த இரவினூடே நான் போய்க் கொண்டிருக்கிறேன்

தமிழில் : கால. சுப்ரமணியம்


நவீன விருட்சம் இதழ் 6 – OCTOBER – DECEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ்
நித்தியம்
அதிகாலை விழித்த கிழவன் பார்வையில் வாசல்முன் அன்றைய சுமை.
நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல்வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சுஅனைத்துமே அடக்கம் அச்சுமையில்
அவிழ்க்கப்பட்ட சுமையில்ஆற்றவேண்டிய காரியங்களால்நிறைந்து போனது முற்றம் முழுதும்.கதவின் கீச்சொலி
வைக்கோலின் குசுகுசுப்புஜன்னலின் பளிச்சிடல்கால்நடைகளின் பெருமூச்சுபறவைகளின் இன்னிசைமனிதர்களின் பேச்சரவம்சக்கரங்களின் சடசடப்பு
அந்தியும் வந்ததுஇன்பமயமான நீண்ட அந்திமாலை
மூலம் : லிதுவேனியக் கவிதை
ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன்.
நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

டேவிட் சட்டன்

கம்ப்யூட்டர் அறை, நடு இரவு

குகையின் சில்லிப்பாய்க் காற்று……
இரண்டு மேலங்கிகளாவது இங்கே வேண்டும்.
பருவகாலங்களில்லை, வேறுபாடுகளுமில்லை.
சுவர்களின் ரீங்காரமே இரவிலும் பகலிலும்.
அலமாரி அடுக்குகளில் ஏறி வீழ்கிறது
வெள்ளோட்டுக் கூரையின் வெளிச்சம்.

எல்லாமே இங்கு நிழலின்றிச் சுதந்திரமாயுள்ளன.
சந்தேகமின்மையின் இருப்பிடம் இதுவே
இங்கேதான் நான் வாசம் புரிகிறேன்
கட்டளைக்கிணங்கும் அசரீரிகளினிடையில் இயக்கி
பாதுகாப்பாய் உணர்கிறேன்
இந்தத் திரையைப் பார்த்து
நடுநிசியின் குழிந்த கண்களுடன் குறிப்பெடுக்கத் தாமதிக்கையில்
உடனே தோன்றுகிறது
பசுமைத் தீயில் ஒளிரும் எழுத்தாகக் காவியத்தின் பதில்
‘ஆரம்பி’
இதன் சமாச்சாரங்களெல்லாம் எனக்குப் புரியும்
ஆணையிடுகிறேன்.
இந்த விசித்திர விலங்குகள் புர்ரிட்டுக்கொண்டு அடிபணிகின்றன.
அர்த்தமற்ற ஆனால் அழகான இவற்றை
வசப்படுத்த எனக்கு 15 ஆண்டாயிற்று.
சுண்டெலி சமைத்த, நேர்த்தியான தர்க்க வளைகளாய்
எலித்தன்மையுடன் ஓடும் போட்டித்திறனால்
கட்டுப்பட்ட இதன் உட்புறத்தில்
பிரமிக்கிறது குறிகளின் மின்சாரம்.

வீடு செல்லும் நேரம்…..வெளிப்பக்கத்தில் குறியிடல்…
காவல்காரனுக்கு ‘நல்லிரவு’ வாழ்த்து.
கொடூரமான வெளிப்புற இருட்டு.
மங்கிய நிலவின் வெள்ளித் தீவிரத்தை
அலங்கோலப் படுத்தும் முரட்டு அந்தகாரம்.
உயர எழுந்த பெருத்த மேகங்கள்

காலியான நடைபாதைகளில் நடந்து
கட்டுப்பாடற்ற காற்றின் தாக்குதல்களில் சரணடைகிறேன்.
உள்முகத்தின் பின்னே –
எதிர்காலத்தின் கருத்த பூட்ஸ்களில்
இளகியோடுகின்றன, மனதின் உறைபனித் துகள்கள்.

மூலம் : ஆங்கிலம்

தமிழில் : கால. சுப்ரமணியம்

நவீன விருட்சம் இதழ் 6 – OCTOBER – DECEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

எம் கோவிந்தன்

நானும் சைத்தானும்

தேவனுக்குரியதை தேவனுக்கும்
தேசத்திற்குரியதை அதற்கும்
தர நான் முன் வந்தபோது
யாரோ என் முன் வந்து சொன்னான்
‘எனக்குரியதை கொடு’
‘யார் நீ’ என்றேன்
‘தெரியாதோ சைத்தானை’ என்றான்
‘கேட்டுக்கொள்
என்னுடையவை எல்லாம் எனக்குத்தான்
என்பதே இன்றுமுதல் என் வேதம்’ என்றேன்
சைத்தான் உரக்க சிரித்தான்
என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான்
செவியில் மெல்ல சொன்னான்
‘எனக்கு வேண்டியதைத்தான்
தந்தாய், நன்றி’

(மலையாள அறிஞர், கவிஞர் எம் என் ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறையிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்)

மொழிபெயர்ப்பு : ஜெயமோகன்

நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர்

வண்ணங்கள்

வண்ணங்கள் சாவதில்லை

அவை கரைந்து விடுகின்றன

அல்லது அடித்துக்கொண்டு போகப்படுகின்றன

அல்லது பூமியின் அந்தகாரத்தில்

விதைக்கப்படுகின்றன.

வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன

மேகங்களின் ஒளிர்ந்து

உதடுகளில் புன்னகை பூக்கின்றன

கண்ணீரைப் பெருக்கி

ஒளியை ஈன்றெடுக்கின்றன

வண்ணங்களாகிய நாம்

வண்ணங்களை உருவாக்கும் நாம்

வாழ்க்கையை

நம் முதுகுகளில் சுமந்துகொண்டோ

நம் பின்னால் இழுத்துக்கொண்டோ

நம் சிறகுகளில் அலைந்துகொண்டோ

இங்கு வந்து சேர

நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம்.

இருள் முதல் ஒளிவரை உள்ள

எல்லா வண்ணங்களுமான நாம்

பல தடவைகளில்

அடித்துக்கொண்டு போகப்பட்டு

மறுபடியும் பிறந்திருக்கிறோம்

இன்றும்

காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம்

அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம்

வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால்

இன்றும்

நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச்

சுவைக்கிறோம்

கனவுகளை உருவாக்குகிறோம்

மூலம் : பஞ்சாபி

(ஆங்கில வழி தமிழில் – மேலூர்)

நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989

(சுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. நாற்பத்தைந்து நூல்களுக்கு மேலாக பஞ்சாபியில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளும் கதைகளும் ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய, அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர்
நடத்தல்
நான் நடக்கிறேன்என் கால்களால் அல்ல கண்களால் -சாலைகளையும் தெருக்களையும் இதயத் தொகுதிகளையும்இரவின் இருளையும் கடந்து செல்கிறேன்சுற்றிலும் மக்களின் காடுஎன் கண்களின் துணையோடுஅதைக் கடந்து செல்கிறேன்கண்களுக்கேஅதனூடு செல்லும் திறன் உண்டு.
என் கால்கள் களைத்துவிட்டனமிகவும் களைத்துவிட்டனஆனால்நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்மக்கள் கூட்டங்களில் சிக்குண்டுநான் முன்னேறிப் போகிறேன்என்றாலும்இதயங்களின் வலி என்னும் எல்லையைக் கடக்கஎன்னால் முடியவில்லை
நான் நடக்கிறேன்என் கால்களால் அல்ல கண்களால்- ஒரு நீண்ட பயனம்
மூலம் : பஞ்சாபி
(ஆங்கில வழி தமிழில் – மேலூர்
)
நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989