உல்டா



என் நண்பர்கள் இருவர் குறித்து
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்
ஒருவன் உஷாரென்றும்
மற்றொருவன் சற்றே மந்தமென்றும்.
நானறிந்த வரையில்
அவைகள் அப்படியே
உல்டா என்பதுதான்
அதிலுள்ள விஷேசம்.

கண்ணோடு காண்பதெல்லாம்



நகைச்சுவையும் உடல்நலமும்
என்றொரு புத்தகம் வெளியிட்ட
புகைப்படமொன்று இருந்தது
நீள் மேஜையில்.
காதைக் கிழிக்கும் சத்தத்துடன்
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த
தொலைக்காட்சித் தொடரின்
அன்றைய எபிசோடில்
அடுத்தடுத்த
மாரடைப்பு சம்பவங்கள்.
அவ்வப்போது
திறந்து மூடிக்கொண்டிருந்த
அறைக்கதவு வழியே

கசிந்துகொண்டிருந்தது

அந்த இதய நோய் மருத்துவரின்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதியான பேச்சு.

யோகிராம் சுரத்குமார் – ஓர் நினைவு

விசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார் குறித்த என் அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ள விருப்பம்.

பாலகுமாரன் புத்தகங்களில் (ஆசைக்கடல், குரு) இடம்பெற்ற விசிறி சாமியார் பற்றிய சம்பவங்களைப் படித்த பின், ஒரு சனிக்கிழமை கிளம்பி திருவண்ணாமலை போய் இருந்தேன்.

தியான மண்டபத்தில் (அப்போது பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது) நெடுநேரம் காத்திருந்த பலரோடு நானும் சேர்ந்து கொண்டேன். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் அன்று விசிறி சாமியார் தியான மண்டபத்திற்கு வரவில்லை.

சாமியார் தன் குடிலுக்கு கிளம்புவதாக,யாரோ ஒருவர் சொல்லிப்போனார்.குழுமியிருந்த மற்ற எல்லோரோடு நானும் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.

ஒரு வெள்ளை நிற அம்பாசடர் காரில், கண்களில் குளிர் கண்ணாடியோடு விசிறி சாமியார் வெளிவந்து கொண்டிருந்தார்.

அப்போது நேரம் மதியம் மூன்று மணி இருக்கும். நல்ல சூட்டுடன் கூடிய சித்திரை வெயில்.

வலது கையை உயர்த்தி ஆசீர்வதித்தபடி வந்து கொண்டிருந்தார் விசிறி சாமியார்.

திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து தடதடவென மழை கொட்ட ஆரம்பித்தது. எல்லாம் ஒரு பத்து நிமிடமே. கார் அவர் குடிலைப் போய் சேர்ந்த அடுத்த நிமிடம், மழை நின்று மீண்டும் பளிச்சென்ற வானத்துடன் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

எப்பொழுதும் பசுமையாய் என்னுள் இருக்கும் இந்த சம்பவம், விசிறி சாமியார் குறித்த அழகியசிங்கரின் பதிவைக் கண்டபோது இன்னொரு முறை எட்டிப் பார்த்தது.
0

கவிதையை முன்வைத்துநர்சரி படிக்கும் மகன்இன்று விளையாட தேர்ந்து கொண்டதுநான் வாசிக்க வைத்திருந்தகவிதைப் புத்தகங்களில் ஒன்றை.
தொலைதூர பயணமொன்றில்டேப் ரெகார்டரில் ஒலித்தபாடலின் வரிகள்எங்கோ படித்த கவிதை வரிகளின்இன்னொரு வடிவம்.

முதல் முதல் பார்த்ததோழியின் கணவரிடம்
சகஜமாக உரையாட முடிந்தது
என் முதல் கவிதைத் தொகுதியைமுன்வைத்து.மகன் பிறந்த நாள்கொண்டாண்டத்தின் இடையில்நண்பனின் மனைவி ஒருவர்நான் எழுதிய கவிதை ஒன்றைவரி மாறாமல் சொல்லிவாழ்த்தியது பாராட்டு முகமாய்.

நிகழ் கணங்கள் யாவிலும்
நிறைந்து நடை பயிலும்
கவிதையின் கால்தடங்கள்
வேறு ஒன்றும்…
இன்னொரு முறை
பத்திரமாய்
தரையிறக்கித்
தரப்பட்டிருக்கிறது
இந்த வாழ்வு
என்பதைத் தவிரவேறு ஒன்றும்
விசேசமாய்
சொல்வதற்க்கில்லை
இந்த இன்னொரு
விமானப் பயணம்.சிறகடித்து…காரின் முன்புறம் அமர்ந்தபடி
காலையில் கண்ட வெண்புறா

திறந்த கதவுச் சத்தத்தில்
தாவிப்போய் தன் இருப்பிடமாய்
கொண்டது
இன்னொரு காரின்
இரு சக்கரங்களுக்கு
இடைப்பட்ட இடமொன்றை.

அலுவலக வேலைகள்
அத்தனைக்கும் இடையில்

இன்னமும் சிறகடித்து மனதில்
இம்சையாய் அந்த வெண்புறா இடம் மாறி இருக்குமா – அந்த
இன்னொரு கார் கிளம்பும் ஓசையிலும்.

சிறு கவிதைகள்

01

அழைத்துப் போய்வந்தஆசிரியரின் அத்தனைகெடுபிடிகளுக்குப் பின்னும்இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்இன்பச் சுற்றுலா என்றே.
o
02
இலவசமாய்அரிசி டிவி
இயற்கை
உபாதைக்குகட்டண
கழிப்பிடங்கள்.
o
03
எதிர்வரும் பேருந்தில்
அடிபடும் அபாயம்.இடப்புறம் நகர்ந்து
நடந்தேன்.இளவயது மாதொருத்தியை இடித்தபடி.

o

04யாருமற்ற பூங்காவில்ஊஞ்சல்ஆடிக்கொண்டிருக்கிறான்என் மகன்.எவரையோ சேருமென்றுகவிதைகள்எழுதிக்கொண்டிருக்கிறேன்நான்.
o
05
ஏதோவொன்றின் தொடர்பாகவே
எதுவொன்றின்நினைவும்.

கவிதை௧ள் 3

01
கொஞ்சமும்…

கொஞ்சமும்
எதிர்பார்த்திருக்கவில்லை
தேநீர்க் குவளையை
வைக்கும் ஸ்டாண்டாக
ஒரு கவிதை புத்தகத்தை
வைத்திருப்பார்
அந்த புத்தகக் கடைக்காரர்
என்று.

02
சாயல்…

இரு தலாங்களுக்கிடைப்பட்ட
படிக்கட்டுகளில் வைத்து
காதலைச் சொன்ன கணம்
விழிகள் உருட்டி
மருண்ட உன் முகத்தின்
சாயலேதுமின்றி
இருந்தது
பிரிவதற்காய் நாம்
தேர்ந்து கொண்ட ஒரு
பிற்பகல் வேளையில்
மூடிய லிப்டின் கதவுகள்

உள் வாங்கிப்போன
உன் முகம்.

0

03
உதவும் பொருட்டு…

லிப்டில்
ஏறிய ஒருவனுக்கு
உதவும் பொருட்டு
விரைவாய் மூடும்
பொத்தானை அழுத்தினேன்.
அதுவரை பேசிக்கொண்டிருந்த
அவன் அலைபேசியின்
தொடர்பு விட்டுப் போனது.

மூன்று கவிதைகள்

1. இன்று

இன்று
சமையல் கியாஸ் தீர்ந்து விட்டது.
இன்று
மார்கழி மாதக் குளிர்
சில்லிட்டு இருந்தது

இன்று
சாலையில் பார்த்த
ஒருவன் இடதுகண் மூடிக்
கட்டுப் போட்டிருந்தது

இன்று
(இதுவரை சிரிக்காத)
நண்பன் ஒருவனின்
இடைவிடாத சிரிப்பைக்
காண நேர்ந்தது

இன்று
வந்த கடிதமொன்றில்
நண்பன் தன்
முதல் மனைவியின்
நினைவு நாள்
நாளை என்று
எழுதியிருந்தான்.

இன்று
எழுத முயன்ற
கவிதையில்
பெரிதும் சோகம்
கவிழ்ந்தது

இன்று
இந்தக் கவிதை
தானே தன்னை
எழுதிக்கொண்டது


2. இன்ன பிறவும்…..

அநேகமாய்
முடிவதில்லை

அழகைப் பற்றிய
அவதானிப்பை

அப்படியே
கைமாற்றி விட.

அதிகபட்சம்
முடிவதெல்லாம்

அதைப்போல
இது என்பதாய்

இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி

இப்படித்தான்
இருக்கிறது.

இன்னபிறவும்
இவ்வாழ்வில்.

3. பேச்சுத்துணை

கடிமணம் வாழ்வில்
கட்டாயத் தேவையா
யென்றெல்லாம்
கடிவாளமிட்ட மனதோடு
ஒத்தையில் இருந்தவனை
ஒருவாறு பேசிச் சரிகட்ட
நான் உட்பட
நண்பர்கள் பலரும்

எடுத்துச்சொன்ன பலவற்றில்
எகோபித்த ஒன்று
பின்பகுதி வாழ்க்கையில்
பேச்சுத் துணைக்கென்றாவது
பெண்ணொருத்தி
வேண்டுமென்பது.

மணமாகிச் சில
மாதங்கள் கழித்து
எதேச்சையாய்
எதிர்ப்பட்டவனிடம்
எப்படிப்
பேச்சுத்துணை என்றேன்

எரிக்கும் பார்வையொன்றை
வீசி
எதுகை மோனையாய்
சொல்லிப்போனான்:

எப்போதும் பேசிக்கொண்டே
அவள்
எதிர்ப்பேச்சின்றி துணையாய்
நான்.

தானாய் விழும் அருவி…

கண்கூசும் வண்ண ஒளி மேடையில்களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.
நெடுநாள் கழித்துப் பார்க்கும்நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.

புடவை நகை பற்றிப் பேசவென்றேபுறப்பட்டு வந்திருந்த பெண்கள்.

நாற்காலிகளுக்கு இடைப்பட்டநடைபாதைப் பாய்விரிப்பில்
உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டுஉள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து
மகன்மேல் ஒரு கண்ணோடுமடிமேல் தாளமிட்ட மங்கை.

குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி அரங்கெங்கும் நடந்தபடி இருந்த
அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்?

ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில்
கைதட்டல் சத்தத்தை யாருக்கோகேட்கச் செய்துகொண்டிருந்தவனின்
இசையார்வத்தை எதில் சேர்க்க?

எப்பொழுதும் நிகழக்கூடும்
இவளின் அழைப்பை எண்ணிகைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.

தன்னளவில் எதற்கும் பொதுவாய் தானாய் விழும் அருவியென
ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்.

எப்படி இருந்திருக்கக்கூடும்?…

ஜன்னலோரப் புறாக்களின்
சிறகடிப்போடு புலர்ந்ததந்த காலைப் பொழுது.

முதல் அழைப்பிலேயே
கண்விழித்து முகம் பார்த்து சிரித்த மகன்.

பையனை ஏற்றிவிட்டுவந்த
பள்ளிக்கூடப் பேருந்தில்
சிரித்த முகங்களோடு
சீருடைச் செல்லங்கள்.

எப்போதும் போலன்றி
இவளும் இன்முகம் கொண்டொரு சிரிப்புடன்.

வழியெங்கும் நெரிசலின்றி
வரவேற்ற வழக்கமான சாலை.

அவனது அலுவலகஅடுக்குமாடி கட்டிடத்தின்அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த
இவன்வயது இளைஞன் ஒருவனின்மாரடைப்பு பற்றிய செய்தி
வந்து சேர்ந்ததும்அந்த ஒரு காலைப் பொழுதில்தான்.

எப்படி இருந்திருக்கக்கூடும்அவனின் காலைப்பொழுது?

மூன்று கவிதைகள்

01
இசைபட…!

அனேக நேரங்களில் அடித்துப் பிடித்து ஓடி வரும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ காத்திருக்க முடியாமல்விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில்வெறுமனே இருக்க நேர்கிறது।
யாசிக்கும் கைகளுக்கு
யோசித்துக் கொடுப்பதற்குள்பெரும்பாலும் நகர்ந்துவிடும்
பேருந்துகளிலும்
இருக்க நேர்கிறது.
முன்பைவிட விரைவாய் நகரும்இவன் விட்டு நகர்ந்த
வரிசைகளையும்
எப்போதும் காண நேர்கிறது.

வேண்டாத நேரங்களில்வெறுமனே இருக்கும்
சலூன் நாற்காலிகளையும்காண நேர்கிறது
கணக்கற்ற பொழுதுகளில்.

எதிர்பாராப் பொழுதொன்றில்
இசைபட ஒன்றும் நேர்கிறது இவளது வருகையைப் போல।

உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்கவிதை…அச்சில் வந்த
கவிதைகளைப் பற்றிஅதிகமாய்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
காதல் தவிர்த்து
எழுதலாமே என்கிறீர்கள்। கவிதையைப் பற்றி எழுதுவதை தவிர் என்கிறீர்கள்.

இத்தனை கவிதைகளா
இதற்குள் என்கிறீர்கள்.
இத்தனைக்கும் எப்படி
நேரம் என்கிறீர்கள்.

இன்ஸ்பிரேசன் இதற்கெல்லாம்
எது என்கிறீர்கள்?உணர்வுதளம் தாண்டி
ஒன்றும் வரவில்லை என்கிறீர்கள்। அச்சுநேர்த்தி பற்றியும்
அதிகம் சொல்கிறீர்கள்। அடர்த்தி இன்னமும்
வேண்டும் என்கிறீர்கள்.

செய்த கவிதைகளே
நிறைய என்கிறீர்கள். அதிகமும் படித்தல்
ஆகச் சிறந்தது என்கிறீர்கள். எதையும் வாய்மொழியாய்
சொல்வதற்கில்லை நான்.

என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்
கவிதை ஒன்றை
எழுதிவிட்டு வந்து உங்களை
எதிர்கொள்ளவே ஆசை।
குழந்தைக் கேள்விகள்..!

ஏன்வீடு திரும்ப வேண்டும்?

ஏன்சக்கரங்கள் சுழல்கின்றன?

ஏன்அம்மா வேலைக்கு போவதில்லை?

எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்எல்லோரும் இத்தனை வாகனங்களில்?

வளர்ந்த பின் தான்வேலைக்கு போகணுமா?

சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா?

குழந்தைத்தனமாகவே இருப்பதில்லைஎப்போதும் குழந்தைகளின் கேள்விகள்। அறிவிப்பு
நண்பர்களே,
நவீன விருட்சம் 81-வது இதழ் இன்னும் சில தினங்களில் வெளிவந்துவிடும். நவீன விருட்சத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி உரித்தாகும்.
இனிவரும் படைப்புகள் நவீன விருட்சம் 82வது இதழிற்காக தேர்ந்தெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்தக்கொள்கிறேன்.
அன்புடன் அழகியசிங்கர்