தானாய் விழும் அருவி…

கண்கூசும் வண்ண ஒளி மேடையில்களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.
நெடுநாள் கழித்துப் பார்க்கும்நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.

புடவை நகை பற்றிப் பேசவென்றேபுறப்பட்டு வந்திருந்த பெண்கள்.

நாற்காலிகளுக்கு இடைப்பட்டநடைபாதைப் பாய்விரிப்பில்
உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டுஉள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து
மகன்மேல் ஒரு கண்ணோடுமடிமேல் தாளமிட்ட மங்கை.

குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி அரங்கெங்கும் நடந்தபடி இருந்த
அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்?

ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில்
கைதட்டல் சத்தத்தை யாருக்கோகேட்கச் செய்துகொண்டிருந்தவனின்
இசையார்வத்தை எதில் சேர்க்க?

எப்பொழுதும் நிகழக்கூடும்
இவளின் அழைப்பை எண்ணிகைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.

தன்னளவில் எதற்கும் பொதுவாய் தானாய் விழும் அருவியென
ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன