தாயிடம் குழந்தைபால் குடித்ததாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்.சக்தி பார்த்த சிவன்தாண்டவமாடியதாகக்குற்றம் சாட்டுகிறார்கள்இதயம் ரத்தம் பாய்ச்சுவதாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்.கருவறை மானுடரை அனுமதித்ததாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்
பூமலர்ந்ததாகக்குற்றம் சாட்டுகிறார்கள்காவிக்கு அடியில்சதை இருந்ததாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்திராட்சைமதுவானதாகக்குற்றம் சாட்டுகிறார்கள்தங்க மாலையைக் கழுத்து அணிந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்கைகள் கொடை வழங்கியதாயக்குற்றம் சாட்டுகிறார்கள்வள்ளுவர்காமத்துப்பால் எழுதியதாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்கண்கள் இமைதிறந்துகாட்சி உண்டதாகக்குற்றம் சாட்டுகிறார்கள்சுவாசித்தலைஅவ்வப்போது செய்ததாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்காற்றால் இலைகள் அசைந்ததாகக்குற்றம் சாட்டுகிறார்கள்.
மரம் மாறும் பறவைகள்
ராஜினாமா செய்தவனுக்கு நண்பனாயிருப்பதில்
சில சவுகரியங்கள் இருக்கிறது
மேலாளர்களின் அரசியல் பற்றி
தைரியமாக சொல்லலாம்
ஒளித்து வைத்திருக்கும்
பணி உயர்வு புத்தகங்களைக்
காட்டலாம்
சந்திக்கப்போகும்
நேர்முகத் தேர்வுகளைப்பற்றி
சந்தேகம் கேட்கலாம்
நண்பனாய் இருத்தலின்
அசெளகரியம் என்பது
அவனது புதிய சம்பளத்தை கேட்காமல் இருப்பது
கேட்டுவிட்டு கவலைப்படாமல் இருப்பதுo
************
சமீபத்தில் வேலை
மாறிப்போன நண்பனொருவன்
புதிய அலுவலகத்தைப்
பற்றிபேசிக்கொண்டிருந்தான்
புதிய நண்பர்களைப்பற்றி
புதிய பொறுப்புகளைப்பற்றி
புதிய தலைமைகளைப்பற்றி
உணவகங்கள் பற்றி
பெசன்ட் நகர் கடற்கரையில்
அவனுடன் அமர்ந்திருந்த
புதிய பெண்ணைப்பற்றி
கடைசிவரை சொல்லவில்லை.
மொழி
மொழிதன் இருப்பைக்கலைத்துக் கொள்வதொருமனப் பிறழ்வில்-ஒரு துயரம்ஒரு மகிழ்வு-ஒரு தாங்கவொணாகணம்கனம் கொண்டமொழியின் இருப்புவிஸ்வரூபம் பெறுகிறது கானின்வான் மறைத்த கிளைகளோடும்பருத்த தண்டுகளோடும்அது தாவரச் செறிவின்பசிய ஒளிர்வில்மூடுண்டு விரிகிறது.சிள்வண்டு சிறகசைப்பும்நிசப்தம் கொத்தும்பறவை சப்தங்களும்மன வெளியைநிறைத்துப் பரவஅடர்ந்திருக்கும் சருகுகளில்புதைந்து நடக்கமோகம் கொள்கின்றனகால்கள்…பின்னும்மொழியொரு தீராக் கானகம்!
எதையாவது சொல்லட்டுமா / 22
திரும்பவும் ஆத்மாநாம் வந்து விட்டார்.திரும்பவும் ஆத்மாநாம் உயிர்தெழுந்து விட்டாரா என்று தோன்றுகிறது. சமீபத்தில் பெருந்தேவி கவிதையைப் படிக்கும்போது அப்படித்தான் தோன்றியது. முத்தம் என்று ஆத்மாநாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து பெருந்தேவி அக்கவிதையுடன் தன்னுடைய கூற்றையும் சேர்த்து எழுதியிருந்தார். 30 ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாம் இப்படி அவர் கவிதையைத் தொடர்ந்து எழுதியிருந்தால் சந்தோஷப் பட்டிருப்பார். அவர் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை. அவர் ஒரு பெண்ணுடன் அன்புடன் இருந்தார். உடவே பெண் வீட்டில் அந்தப் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி முடித்து விட்டார்கள். ஆத்மாநாமிற்கு நிறைவேறாத காதல். அவருடைய வியாபாரம் படுத்துவிட்டது. அவர் லாகீரி வஸ்துகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். மனப் பிறழ்வு ஏற்பட்டு விட்டது.
அவரை முப்பது ஆண்டுகளுக்கு முன் 3 முறைகளுக்குமேல் சந்தித்திருப்பேன். முதல் முறை இலக்கு என்ற இலக்கியக் கூட்டத்தில். ஞாநி தங்கியிருந்த பீட்டர்ஸ் ரோடு அடுக்ககத்தில் சந்தித்தேன். நானும் போயிருந்தேன். ‘இவர்தான் ஆத்மாநாம்’ என்று யாரோ சொன்னார்கள். ஆத்மாநாமை விட ஞானக்கூத்தன் பெயர்தான் பிரபலம். ழ என்ற பத்திரிகை பிரதிகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். எனக்கு ஏனோ அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அடர்த்தியான தலைமுடியுடன் பார்க்க பர்சனாலடியாக இருந்தார். அவர் உருவம் முரட்டுத்தனமதாக இருந்தாலும், மென்மையான உணர்வு கொண்டவர். ழ பத்திரிகையை எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். நானும் விருட்சம் பத்திரிகை வைத்திருந்தால் அப்படித்தான் கொடுத்திருப்பேன். அன்று ஆத்மாநாமைப் பார்த்தேனே தவிர பேசவில்லை. ஆனால் அவரைப் பார்க்கும்போது ஏதேவிதமான சோகம் கப்பிக்கொண்டிருந்தது.
இரண்டாவது முறை ஞாநி திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன். ஞாநி மியூசியம் தியேட்டரில் எல்லோருக்கும் முன்னால் பத்மாவுடன் சேர்ந்து வாழப் போவதாக அறிவிப்பு செய்தார். எல்லோருக்கும் டீ வழங்கினார். பின் நாடகம் அரங்கேறியது. எனக்கு அப்படிச் சொல்லி திருமணம் செய்து கொண்டதே ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் ஆத்மாநாம் இருந்த இடத்திற்கு நான் வந்து உட்கார்ந்தேன். நகுலனைப் பற்றி நான் ஏதோ கேட்டேன். ஆத்மாநாம் ஏதோ பதில் சொன்னார். அதன் பின் விமலாதித்த மாமல்லனைப் பார்த்தவுடன் எழுந்து போய்விட்டார். மாமல்லனிடம் அவர் கொடுத்தப் புத்தகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
மூன்றாவது முறை ஆத்மாநாமை நண்பர் வைத்தியநாதனுடன் பார்த்தேன். அப்போது நான், வைத்தி, ஆத்மாநாம் மூவரும் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். ஆத்மாநாமிடம் அவருடைய நிஜமே நிஜமா கவிதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். ஆத்மாநாம் ஆனந்த்தை வீட்டிற்குக் கூப்பிட்டார். மனைவியை அழைத்துக்கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அப்போதுதான் ஆத்மாநாமின் காகித்தில் ஒரு கோடு, அவரவர் கை மணல், சூரயனுக்குப் பின்பக்கம், நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். ஆத்மாநாம் புத்தகத்தில் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டேன். ஆனந்த்தும் எழுதிக் கொடுத்தார். நான் கேட்டேன் ஆனந்தை ”இந்த வீட்டிற்கு என்ன வாடகை என்று.” வைத்தியநாதன் உடனே, ”இதுமாதிரி லெளகீக விஷயங்களைப் பேசாதீர்கள்,”என்று சொல்ல எப்படிப் பேசுவது என்று திகைத்தேன். ஆனந்தின் கவிதை ஒன்றில் சற்றே பறந்து கொண்டிருந்த பறவையைப் பற்றி கேட்டேன். பின் அங்கிருந்து நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் மூவரும் அண்ணாசாலையில் உள்ள உடைகள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றோம். ஒன்றும் வாங்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து வைத்தியநாதன் பேசும்போது ஆத்மாநாம் அன்று சரியாய் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆத்மாநாமின் பிரச்சினை. உடனடி புகழ். கவிதை எழுதி புகழ் எங்கு கிடைக்கும். அதுவும் உடனடியாக. இகழ் வேண்டுமானால் உடனடியாகக் கிடைக்கலாம். வாழ்க்கையின் நிராசையுடன் வாழ்ந்து வாழ்வை முடித்துக் கொண்டவர் ஆத்மாநாம். எதற்கு இதெல்லாம் சொல்கிறேனென்றால் பெருந்தேவியின் முத்தம் கவிதைக்கான தொடர்ச்சியைப் பார்த்திருந்தால் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.ஆனால் அவர் ஆதரவு அற்று, அன்பு காட்ட யாருமில்லாமலும் தற்கொலை செய்து கொண்டார். பெருந்தேவி திரும்பவும் ஆத்மாநாமை நம்மிடம் கொண்டு வந்து விட்டார். இன்றெல்லாம் ஆத்மாநாம் இருந்திருந்தால் 60 வயது இளைஞராக இருந்திருப்பார்.
இதோ பெருந்தேவியின் கவிதையை இங்கு கொடுக்கிறேன்.
முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக் கொடுங்கள்(ஆத்மாநாம் பெருந்தேவி)
பரபரத்து இலக்கை நோக்கி
நீங்கள் மற்றவர்கள்
முன்னேறிக் கொண்டிருக்கையில் முழிபிதுங்கித் திணறுகையில்
உங்கள் நண்பி வந்தால் உங்கள் அன்பனைக் கண்டால்
எந்தத் தயக்கமும் இன்றி விழி சோர
இறுகக் கட்டித் தழுவி சொல்லும் தடுமாறி
இதமாக பின்னர் ஞாபகமும்
தொடர்ந்து முக்குளிக்க
நீண்டதாக பால்வீதியினும் நீளமுத்தம் கொடுங்கள் அமுதம் பெறுங்கள்உங்களைப் பார்த்து பொறாது
மற்றவர்களும் பார்த்தும் பாராது
அவரவர் வழிசெல்பவரும்
நண்பிகளுக்கு முத்தம் அன்பர்களுக்கு அமுதம்
கொடுக்கட்டும் கொடுப்பர் அதேபோல்
விடுதலையின் சின்னம் முத்தம் விடுபட்டதன் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும் அழிவில்லை காண்
மறந்துவிட்டு பிறவாநிலையின்
சங்கமமாகிவிடுவீர்கள் ஒரே புள்ளியில்
பஸ் நிலையத்தில் வெயிலின் ல்லும் உருக
ரயிலடியில் காத்திருப்பின் காலும் பூபூக்க
நூலகத்தில் உதவாப் புத்தகங்களுக்கிடையில்
நெரிசற் பூங்காக்களில் பட்டுப்போன செடிகளின் நடுவில்
விற்பனை அங்காடிகளில் கோயில்களில்
வீடு சிறுத்து டி.வி. பெருத்த அறைகளில்
நகர் பெருத்த மனம்சிறுத்த தருணங்களில்
சந்தடி மிகுந்த தெருக்களில் தனியெனும் பாலையில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி முத்தமே அடைக்கலம்
கைவிடாதீர்கள் முத்தத்தை கைவிடப்படாதீர்கள் முத்தத்தால்
உங்கள் அன்பைத் தெரிவிக்க அன்பிலாத நோய் தீர
ஸாகஸத்தைத் தெரிவிக்க அவநம்பிக்கை சாவு காண
இருக்கும் சில நொடிகளில் தனதற்ற
உங்கள் இருப்பை நிரூபிக்க மரபான
முத்தத்தைவிட முத்தம்போலும்
சிறந்ததோர் சாதனம் தீராத தீர்வு
கிடைப்பதரிது அரிது அரிது
ஆரம்பித்து விடுங்கள் ஆரம்பத்திலேயே
முத்த அலுவலை உதட்டின் கடமையை
இன்றே நந்நாள்
இப்பொழுதே நற்பொழுது
இக்கணமே பொற்கணம்
உம் சீக்கிரம் பார்த்து நழுவ விடாதீர்கள்
உங்கள் அடுத்த காதலி அடுத்தடுத்து
காத்திருக்கிறாள் அன்பின் களப்பணியில்
முன்னேறுங்கள் காலத்தைக் கிடப்பில் போட்டு
கிறிஸ்து பிறந்து ம்
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து ம் தயக்கமேன்
இருபத்தியோறாம் நூற்றாண்டை பல்லாண்டு பாடுவோம்
நெருங்கிக் கொண்டிருக்கிறோம் முத்தமிட்டடைவோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து குத்துப்பாட்டுகளை மறந்து
சுத்தமாக வரமாக
முத்தம் பரமாக
முத்தத்தோடு முத்தம் முத்தங்காண முத்தம்
என்று இப்போதே
முத்த சகாப்தத்தைத் துவக்கலாம்
துவங்குங்கள் துவங்கியாயிற்று.
Two poems
தலைமுறைகள் தாண்டிய பாட்டு பூவுடன் இணைந்த மணம் போல் அழகுடன் கமழ்ந்த திறனால் களபலியான தங்கம்மையே தாயம்மையே அந்தப்புரம் அழைத்து அறநெறி தவறிய கொற்றவனின் கொடும் நீதியில் குமுறிக் கொந்தளித்து பிறவி அளித்த அன்னை மண்ணிலேயே கன்னிகழியா கண்மணிகள் உம்மிருவரை உயிருடன் கரைத்துவிட்டு மலையும் மடுவும் தாண்டி நதியும் கரையும் கடந்து தெற்குத் தெற்கொரு தேசமாம் பசுமைசூழ் வள்ளியாற்றங்கரை இரணியல் வந்து எங்களுடன் பயணித்த சிங்க விநாயகரையும் அவர் பார்வையிலேயே ஒடுப்பறையில் நாகரம்மனையும் நாகரம்மன் சன்னிதியில் தங்கம்மை தாயம்மை உம்மிருவரையும் குடிவைத்தோம் கும்பிட்டோம தலைமுறை தலைமுறைதாண்டிவந்து பகைமறந்து மன்னித்து பாரிடமெங்கணும் மாதர்குல நீதிகள் செழித்தோங்கிட பொங்கலிட்டோம் குரவையிட்டோம் வாழ்த்துறோம் வணங்குறோம
காமிரா கண்
முதுமையிலும் இனிமை காண உறுப்புக்கள் ஒத்துழைக்காதிருந்தும் வயதேறுவதை பொருட்ப்படுத்தாமல் இளமை மிடுக்கை மனதில் மேயவிட்டு வாழ முயன்றுகொண்டிருக்கையில் குறிப்பிட்ட கோணங்களில் அடிக்கடி படமெடுத்து பத்திரிகைகளில் போட்டு படுகிழமென்று பகிரங்கப்படுத்தும் காமிராக்காரர்களுக்கு தெரிவிக்கவேண்டியது நன்றியா எதிர்ச்சொல்லா
இரண்டு கவிதைகள்
01 தொடர்பிலிருந்து நீ விலகிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறிதொரு மார்க்கத்தில் உன்னை பின்தொடர யத்தனிக்கும் வேளையில் நீயாகவே அழைத்துப் பேசி தொடரச் செய்கிறாய் இந்த விளையாட்டை இன்னுமோர் முறையும். O 02 புதிதாய் வந்து நின்றிருந்த காரின் முன்புறம் நெடுநேரம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது மகனின் கையிலிருந்த கல்லொன்றை காண நேர்ந்த பொழுதுக்குள் வரைந்து தள்ளியிருந்தான் நிறைய கோட்டோவியங்களை. சுற்றியிருந்தோரிடமிருந்து ஏதும் சுடுசொல் வருவதற்குள் பட்டென்று சொல்லி ஓடிப்போனான் ‘பெரிய ரப்பர் கொண்டு அழித்தால் போய்விடும் அப்பாவென்று.’ o
எதையாவது சொல்லட்டுமா / 21
சீர்காழி வந்து 6 மாதம் ஓடிவிட்டது. நேற்று நாகூர் விரைவு ரயில் வண்டியில் படுத்துக்கொண்டிருந்தபோது யோசித்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் இப்படித்தான். பஸ்ஸில் பயணம் செய்வது மோசமாக உள்ளது. கால் வீங்கி விடுகிறது. அப்புறம் சரியாகி விடுகிறது. ரயிலில் பயணிப்பது அப்படி அல்ல. எப்போது ரயில் விடப்போகிறார்கள் என்று காத்திருந்து மே மாதத்திலிருந்து விட ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அனுகூலம் இது. என்னைப்போல் எத்தனைப் பேர்கள். எத்தனைக் குடும்பங்கள்.
ஆனால் ரயிலில் எப்போதும் வெயிட்டிங் லிஸ்டில்தான் இடம் கிடைக்கிறது. பின் படுப்பதற்கான இடமாக மாறி விடுகிறது. கலகலவென்று இருக்கிறது ரயில். விதவிதமான பயணங்கள். விதவிதமான மனிதர்கள். நான் ஒவ்வொரு வாரமும் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு வரத் தவறுவதே இல்லை.
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஜீ எஸ் டி ரோடில் ஒரு இடத்தில் ஒரு முஸ்லிம் முதியோரை யாரோ போட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். அவர் மயக்க நிலையில் ரோடில் இருந்தாராம். பின் அவருக்கு உரிய கவனம் கொடுத்தபிறகு யார் அவருடைய உறவினர்கள் என்பதை அவர் சொல்ல விரும்பவில்லையாம். அவர்களைப் பார்க்க வேண்டுமென்கிற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்படவில்லையாம்.
சரி நான் முதியோர் இல்லம் என்று சொல்கிறேனே எதைச் சொல்கிறேன் என்று தெரியவில்லையா? வேற எதைச் சொல்வேன். முதியோர் இல்லத் தலைவி என் மனைவிதான். என் வீட்டைத்தான் முதியோர் இல்லம் என்று சொல்கிறேன். என் தந்தைக்கு 89 வயதாகிறது. மாமியாருக்கு 85 வயதாகிறது. என் வீட்டிற்கு வந்து உதவி செய்கிற பணியாளருக்கு 75 வயதாகிறது. இவர்கள் மூவரையும் என் மனைவிதான் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள். நான் வாரம் ஒருமுறை முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிட்டு சீர்காழி வந்து விடுகிறேன்.
89 வயதாகிறது என்று அப்பா சொன்னவுடன் ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டிற்கு வரும் எல்லோரிடமும் ஹோமியோபதி மருந்தைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறார். எல்லாருக்கும் என்ன வியாதி என்று கேட்டு அதற்கு ஏற்ற மாதிரி மருந்தை வாங்கியே கொடுத்து விடுகிறார். முன்புபோல் வெளியே நடக்க முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்குமுன் அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டு போவார். அவர் பயன்படுத்தியது made in england சைக்கிள். சைக்கிள் இவரை ஓட்டுகிறதா? அல்லது இவர்தான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போகிறாரா என்று தோன்றும். ஒருமுறை ஏற்பட்ட விபத்தால் சைக்கிள் பக்கம் போவதில்லை. ஒருமுறை உறவினர்கள் என்ற பெயரில் என் அப்பாவை மையமாக வைத்து ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். கணையாழியில் வந்திருந்தது. அதைப் படித்ததிலிருந்து நான் எழுதும் எதையும் அவர் படிப்பதில்லை.
84 வயதாகிற என் மாமியார் வீட்டிலேயே நடமாடிக் கொண்டிருக்கிறார். சமையலறைச் சென்று எதுவும் செய்ய முடியவில்லை. யார் உதவியுமின்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியாது. பாதங்கள் கோணல் மாணலாக வீங்கி விட்டன. சாப்பிடுவது மிகக் குறைவு.
டிவியில் சீரியல் பார்ப்பதுதான் ஒரே பொழுது போக்கு.
எதையாவது சொல்லட்டுமா / 20
குற்றமும் தண்டனையும்
சமீபத்தில் தி நகரில் உள்ள போதீஸ் கடையில் உள்ள பணத்தைக் கொள்ளை அடித்தச் செய்தியை பேப்பரில் படித்தேன். போதீஸ் மட்டுமல்ல இன்னும் பல சம்பவங்கள். இந்தத் திருடர்களைப் பிடிக்க நல்ல அனுபவமுள்ள பல காவல் துறையைச் சேர்ந்தவர்கள் செயல்பட வேண்டும். கிட்டத்தட்ட கொள்ளையர்களைப் பிடிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பலவிதமான பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஒரு விதத்தில் யார் குற்றவாளிகள் என்று யோசித்தால் எல்லோரும் குற்றவாளிகவே இருக்க நேரிடுமோ என்று தோன்றுகிறது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்தான். லஞ்சம் வாங்குவதும் மற்றும் குற்றமல்ல. லஞ்சம் கொடுப்பவனும் குற்றவாளி. அதுமாதிரி நிலைக்கு ஆளாகிற அரசாங்கமும் குற்றவாளிதான். பணத்தின் மீது பலருக்குப் பித்துப் பிடித்துவிடுகிறது. இப்படிப் பித்துப் பிடிப்பது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது. பித்து என்கிற விஷயமே ஆபத்தானதுதான்.30 ஆண்டுகளுக்குமேலாக நான் வங்கியில் பணிபுரிகிறேன். அங்கு நடக்கும் பல குற்றங்களைப் பார்க்கிறேன். முன்பெல்லாம் கள்ள நோட்டுக்களை அதிசயமாகத்தான் பார்ப்பேன். இப்போது எல்லா நோட்டுக்களையும் கள்ள நோட்டுக்களாக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. ATM, Internet மூலம் நடக்கும் குற்றங்களை என்ன சொல்வது. இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது. முன்பெல்லாம் வங்கிக் கிளை மிக எளிதாக லட்ஜர்களை வைத்துக்கொண்டு கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு பணத்தைக் கொடுப்பார்கள். அல்லது போடும் பணத்தைச் சேமித்து வைப்பார்கள். அதன்பின் ராஜீவ் காந்தி காலத்தில் கணினிகள் உள்ளே நுழைந்தன. வேலைப் பளு குறையாவிட்டாலும், கணினிகள் சில பணிகளை எளிதாக்கி விட்டன. ஆனால் கணினிகள் பயன்கள் ஒரே கிளையில் மட்டும் சுற்றி சுற்றி வந்தன. பிரச்சினை என்று எதுவந்தாலும் அந்தக் கிளையுடன் நின்று விடும். அதாவது குற்றம் நடந்தால் அந்தக் கிளையை மட்டும் சார்ந்துவிடும்.வங்கியில் அதற்கு அடுத்த முன்னேற்றமாக சிபிஎஸ் வந்தது. யார் வேண்டுமானாலும் வங்கியில் உள்ள எந்தக் கிளையிலும் பணம் எடுக்கலாம், பணம் போடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ரொம்ப அற்புதமான மாற்றம். கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்த என் பையனுக்கு தி நகரில் உள்ள ஒரு வங்கியில் பணம் கட்டுவேன், அவன் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு. ஆனால் சிபிஎஸ்ஸில் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். நம் பணம் நம்மிடம் இருந்துகொண்டிருக்கிறதா என்ற பயம். யாராவது நினைத்தால் எந்த வங்கிக் கிளையிலிருந்தும் நம் பணத்தை எடுத்துக் கொண்டு போய்விடலாம். இப்போது குற்றத்தைப் பற்றி சொல்கிறேன். பணத்தின் மீது அதீதப் பித்துக் கொண்ட என் வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த ஒரு பெண்மணி, வேறு வேறு கிளைகளில் பணத்தைச் சுருட்டும் வழக்கம். அவர் எப்போது இந்தக் குற்றத்தைச் செய்ய ஆரம்பித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் திரும்ப திரும்ப அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது வகையாக மாட்டிக்கொண்டு விட்டார். நான் சொல்ல விரும்புவது அவர் ஒரு குற்றவாளியாக இருந்தாலும் குற்றத்தை எளிதில் செய்யும்படி இந்த சிபிஎஸ் சிஸ்டத்தில் இது இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.குற்றம் என்பது ஒரே கிளையில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து பல வழிகிளிலிருந்தும் இன்னும் எளிதாக பல கிளைகளிலும் தொடருகிறதா என்றெல்லாம் அச்சம் ஏற்படுகிறது. சக ஊழியரே சக ஊழியரை நம்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோமா? ஒருவர் குற்றத்தை வேண்டுமென்று செய்கிறார். இன்னொருவரோ அந்தக் குற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் அங்கீகாரம் கொடுத்து விடுகிறார். சக ஊழியர் என்ற நம்பிக்கைப் பேரில். இந்தக் குற்றத்தைச் செய்த பெண்மணி தெய்வ நம்பிக்கை உள்ளவர். சந்தனம், குங்குமம் பொட்டெல்லாம் இட்டுக் கொண்டு வருபவர். ஒரு குடும்பம் இரு குழந்தைகள் உள்ளவர். ஏன் அவருக்கு பண ஆசை அதிகமாகப் போனது. இதில் அந்தப் பெண்மணி மட்டும் குற்றவாளி இல்லை. அந்தப் பெண்ணை நம்பி தெரியாமல் செய்த செய்கையால் மற்ற அதிகாரிகளும் குற்றவாளிகளாக மாறி விடுகிறார்கள். நான் என்ன சொல்ல விரும்பிகிறேன் என்றால் இது மாதிரி குற்றத்தைத் தூண்டும்படியான வசதியை அளிக்கும் வங்கியும் குற்றவாளியாக இருக்குமோ? திருடர்கள் எப்படி குற்றவாளிகளோ? அவர்களைப் பிடிக்கிற காவல் துறையைச் சேர்ந்தவர்களும் குற்றவாளிகளா?
புத்தக விமர்சனம்
கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து படைப்பிலக்கியம், சினிமா, நாடகம், ஆய்வு ஆகிய தளங்களில் இயங்கி வருபவர் ஆசிரியர். 176 பக்கங்களில் ஒரு நூல் எழுதியுள்ளார். ஐம்பது பக்கங்கள் இலக்கியம், 25 பக்கங்கள் நாடகம், 100 பக்கங்கள் சினிமா பற்றி கணையாழியில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ் கலாசாரத்தின் அதமப்பொது மடங்கு ரசனை (Lowest Common Denominator) பற்றி பொரிந்து தள்ளியுள்ளார். புத்தகமாக எடிட் பண்ணும்போது அந்த சாடுதல் பகுதிகளைக் கத்திரித்திருக்கலாம்.முதல் கட்டுரை கு.ப.ரா பற்றி. கு ப ரா பற்றி ல.ரா சொன்னது, ந பிச்சமூர்த்தி சொன்னது, சி சு செல்லப்பா சொன்னது, தி ஜானகிராமன் சொன்னது என்று மேற்கோள்களிலேயே பாதி கட்டுரையை ஓட்டி விடுகிறார்.நுருன்னிஸா, தாய், விடியுமா, பெண்மனம் ஆகிய நான்கு கதைகளை கு.ப.ரா எழுதிய கிட்டத்தட்ட எண்பது கதைகளில் சிறந்ததாக சிலாகித்துப் பேசுகிறார் ஆசிரியர்.அடுத்தக் கட்டுரை சுந்தர ராமசாமி பற்றியது. வாழ்க்கை முழுவதும் சு.ரா என்ன தேடினார் என்று தெரியவில்லை. அந்தத் தேடலின் சக பங்குதாரர்களாகத்தான் இலக்கியவாதிகளை அவர் கருதினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. விருந்தினரை அவர் அனிச்ச மலர்களாக கருதினார் என்று சு.ராவின் நற்பண்புகளைப் பாராட்டுகிற எஸ்.சுவாமிநாதன் அவருடைய எழுத்தில் நேர்மை இருந்ததற்கு அவர் சில ஆண்டுகள் எழுதாமல் இருந்ததை உதாரணமாய்க் காட்டுகிறார். அவரது வாழ்க்கைக்கான முத்தாய்ப்பான எழுத்தை அவர் எழுதவில்லையோ என்று தோன்றுகிறது என்று எஸ்.சுவாமிநாதன் அங்கலாய்க்கிறார். சு.ராவின் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், அவர் தமிழில் மொழிபெயர்த்த சில வெளிநாட்டு கவிஞர்களின் கவிதைகள், இவற்றைப் பாராட்டும் கட்டுரை ஆசிரியர் அவரது நூல்கள்பற்றி பிறர் வைத்த எதிர்மறை விமர்சனங்களை பட்டியல் போடுவது நம்மை மருள வைக்கிறது.ரேவதி வர்மா என்பவரின் சிறுகதைத் தொகுப்பு நூலை விமர்சனம் செய்திருக்கிறார் ஆசிரியர். ரேவதி வர்மாவா? ரேவதி சர்மாவா? அச்சுப்பிழை நம் கண்ணை உறுத்துகிறது.மணிக்கொடி சீனிவாசன் 1930களில் எழுதிய பத்திரிகைக் கட்டுரைகளைத் தொகுத்து, அவர் மகள் தொகுத்து நூலக வெளியிட்டிருக்கிறார். இதைப்பற்றி ஆசிரியர் பாராட்டி ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். பத்திரிகை எழுத்து என்பது Ephemeral தற்காலிகமானது. கால வெள்ளத்தில் கரைந்து போகக்கூடியது. படைப்பு இலக்கியமோ காலம் கடந்து நிற்பது. யாராலும் படிக்கப் படாதது என்ற ஆஸ்கர் வைல்டின் cynical வரிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.நாடகம் பகுதியில் நடனக் கலைஞர் அனிதா ரத்னத்தின் நாச்சியா கனவுகள் நாட்டிய நாடகம் பற்றி ரசித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார் ஆசிரியர்.இன்னொரு கட்டுரை சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் பற்றிய பாராட்டுக் கட்டுரை. உலக மயமாதல், அதனுடைய வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பலவற்றில் சொந்த மண்ணில் கலாச்சார வேர்களும் சேர்கிறது என்கிற வாதத்தை வேறொரு இடத்தில் பதிவு செய்யும் ஆசிரியர், இசை நாடக மரபை புதுப்பிக்க வேண்டுமென்று வாதிடுவது பொருந்தாத ஒன்றாக எனக்குப் படுகிறது.நூறு பக்கங்கள் சினிமா பற்றி ஆசிரியர் எழுதி உள்ளது மிகுந்த சுவாரஸ்யமான பகுதி. Randor Guy போன்ற வெற்று வரலாற்றுப் பதிவாக இல்லாமல் தீர்க்கமான நுணுக்கமான அலசலுக்கு தமிழ் இலக்காக்கி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர்.கமலஹாசனின் விருமாண்டி, சேரனின் தவமாய் தவமிருந்து, சஞ்சய் லீலா பன்ஸாலியின் ஹிந்தி சினிமாவான Black பற்றிய அலசல்களை என்னைக் கவர்ந்தன.கண்ணகி, பராசக்தி, ஒளைவையார், எதிர்பாராதது, அந்த நாள், அமரதீபம், நாடோ டி மன்னன், பதிபக்தி, மாலையிட்ட மங்கை, கல்யாணப் பரிசு, பாகப்பிரிவினை, வீரப்பாண்டிய கட்டப்பொம்மன், படிக்காத மேதை மீண்ட சொர்க்கம் போன்ற படங்களை தமிழ் சினிமாவைப் பற்றிய பேச வைக்கிற படங்களாக இரண்டு இடங்களில் பட்டியிலிடும் ஆசிரியர், அவற்றின் நிறைகுறைகளை விரிவாக தனது வரப்போவதாக அறிவித்துள்ளார். நம்முடைய சினிமாவும், உலக சினிமாவும் என்ற நூலில் எடுத்துரைப்பார் என்று நம்புகிறேன்.நானும் நாடகங்களும் என்று மறுவாசிப்பில் நவீன தமிழ் இலக்கியம் என்றும் வேறு இரு நூல்களை எழுதத் திட்டமிட்டுள்ள ஆசிரியரின் இந்த முயற்சி வாசகர்களை ஈர்க்க வேண்டும், ஆசிரியரின் பிற நூல்களை அவர்கள் வாசிக்க தயாராக வேண்டும்.
இலா கவிதைகள் 6
1.
தாலாட்டு
கீழிருந்து மேல் செல்லும் மழையில்கண்ணாடி அறைக்குள் கண் சுருக்கிஎறும்பின் சிறுநடையில்சிலபொழுது செலிடாகிவினாடிகளைக் கோபித்துவேனிலை விரட்டும்படி செய்துபனிப்பாறை மீதேறி அமர்கையில்பவளங்கள் முத்துக்கள்முக்கனிகள் முன்வைத்துபால் பொங்கப் பசி நிறைக்கதாலாட்டில் சாய்ந்துமீளாமல் போனேன்
2.
கண்ணாடிச் சாலை
கண்ணாடிச் சாலையில்நடக்க வேண்டியதாயிற்று
தவிர்த்து தள்ளிவைத்து காற்றாக மட்டுமேபயண முடிவுஓரடி வைத்தேன்காலடியில் கும்மிருட்டு
3.
பயணம்
குழந்தைகள் ஆரவாரம்புதியவர்களின் வரவுகண்ணசைவில் கவனிப்புவேளைக்கு உணவுஉயிர் காக்கும் தவிப்பின்றிநீரலையில் பயணம்
கண்ணாடியில் மோதிக்கொண்டேஇருக்கிறேன்கடல் சென்று சேர்வதற்கு
4.
மானும் புலியும்
வரிக்குதிரையின் கோடுகளில்வரிசையாய்க் குருவிகள்சுவற்றில் சாய்த்து வைத்திருந்தவீணையின் கம்பிகள் மீதேறிபரணைக்குச் செல்லும் எறும்புகள்மூடாமல் இருந்த கிணற்றுக்குள்எட்டிப் பார்த்தபடி கொக்குகரையேறும் யானைக் கூட்டம்கால் நீட்டிக் கதை பேசினஅங்கு வந்த மானும் புலியும்
5.பூஜ்ஜிய வட்டம்
ஒளிவட்டத்தின் உட்குழியில்நின்று கொண்டிருக்கநேற்று நடக்கப் போவதையும்நாளை நடந்ததையும்ஒத்துப் பார்க்கும்நாழிகை கடந்த போதும்கணக்குப் புத்தகத்தைகைவிட முடியாமல்திரும்பவும் பூஜ்ஜிய வட்டத்திற்குள்வந்து விழுந்தேன்
6.
மேற்குச் சூரியன்
உத்திரத்திலிருந்து தொங்கும்பொம்மை விமானமேறிஉலகெங்கிலும் பவனிவரஆழ்கடலின் மீன்குரல்கேட்டு பனிமலை மீதிறங்கிகழுகிடம் இறக்கைகள்இரவல் வாங்கிவிடியாத இரவிடம்கோபித்து கொள்கையில்மேற்குச் சூரியன்தெரியத் தொடங்கியது.