Two poems

தலைமுறைகள் தாண்டிய பாட்டு பூவுடன் இணைந்த மணம் போல் அழகுடன் கமழ்ந்த திறனால் களபலியான தங்கம்மையே தாயம்மையே அந்தப்புரம் அழைத்து அறநெறி தவறிய கொற்றவனின் கொடும் நீதியில் குமுறிக் கொந்தளித்து பிறவி அளித்த அன்னை மண்ணிலேயே கன்னிகழியா கண்மணிகள் உம்மிருவரை உயிருடன் கரைத்துவிட்டு மலையும் மடுவும் தாண்டி நதியும் கரையும் கடந்து தெற்குத் தெற்கொரு தேசமாம் பசுமைசூழ் வள்ளியாற்றங்கரை இரணியல் வந்து எங்களுடன் பயணித்த சிங்க விநாயகரையும் அவர் பார்வையிலேயே ஒடுப்பறையில் நாகரம்மனையும் நாகரம்மன் சன்னிதியில் தங்கம்மை தாயம்மை உம்மிருவரையும் குடிவைத்தோம் கும்பிட்டோம தலைமுறை தலைமுறைதாண்டிவந்து பகைமறந்து மன்னித்து பாரிடமெங்கணும் மாதர்குல நீதிகள் செழித்தோங்கிட பொங்கலிட்டோம் குரவையிட்டோம் வாழ்த்துறோம் வணங்குறோம

காமிரா கண்

முதுமையிலும் இனிமை காண உறுப்புக்கள் ஒத்துழைக்காதிருந்தும் வயதேறுவதை பொருட்ப்படுத்தாமல் இளமை மிடுக்கை மனதில் மேயவிட்டு வாழ முயன்றுகொண்டிருக்கையில் குறிப்பிட்ட கோணங்களில் அடிக்கடி படமெடுத்து பத்திரிகைகளில் போட்டு படுகிழமென்று பகிரங்கப்படுத்தும் காமிராக்காரர்களுக்கு தெரிவிக்கவேண்டியது நன்றியா எதிர்ச்சொல்லா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன