புத்தக விமர்சனம்:
வெளியீடு.
ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும்
ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அழகியசிங்கரின் ‘ரோஜா
நிறச்சட்டை’ அவரது நான்காவது கதைத் தொகுதி. எல்லாக் கதைகளுமே, வங்கிகளில் நடக்கும்
தினசரி அலுவல்களின் சவால்களும், முரண்களும்தான் ! வங்கி மேலாளர், அதிகாரிகள், கடைநிலை
ஊழியர்கள், தற்காலிக வேலையில் இருப்பவர்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் என,
கதை மாந்தர்கள் சுற்றி வருகின்றனர். மிக இயல்பாக, வங்கியிலும், வெளியிலும் அங்கு பணிபுரிபுரிபவர்களின்
மனோ பாவங்களை, எந்த ஏற்ற இறக்கங்களும் இல்லாமல், ஒரே நேர்க் கோட்டில் கதை சொல்லிக்கொண்டே
போகிறார் அழகியசிங்கர். ஒவ்வொரு கதையிலும் யதார்த்தம் முழுமையாக விரவியுள்ளது !
கதைகள், கட்டுரை வடிவை அடைந்து விடுகின்றன
– கதையின் மையப்புள்ளியிலிருந்து சற்று விலகி, வாசகனின் கற்பனைக்கு வழிவிட்டுத் திரும்பவும்
கதைக்குள் திரும்பி, சட்டென முடிந்துவிடுகிறது,! கதைசொல்லியின் கவனம் கதைக் களத்தைச்
சுற்றிச் சுழலுவதே இதன் காரணம் – அதுவே கதையின் நம்பகத்தன்மையையும் கூட்டுகிறது.
‘சில்’லென்ற காற்றில் நண்பனின் தோள்மீது கை போட்டுக்கொண்டு வங்கியில் நடந்தவைகளைப்
பற்றிக் கதை கதையாகக் கேட்டுக்கொண்டே நடைப்பதைப் போன்றதொரு அனுபவம்!
அர்த்தம் என்ன ? எதற்கு ’ஹலோ’? சொல்பவரின்
பின்னணி என்ன ? ஏன் ஒருவருக்கு ‘ஹலோ’ சொல்லப்
பிடிப்பதில்லை ? இப்படிப் பல கேள்விகளுடன் சுழல்கிறது ‘ ஹலோ ‘ என்ற சிறுகதை ! எல்லாம்
ஹலோ என்கிற ஒரு வார்த்தையைச் சுற்றி !
பாம்பு கதைகளில் நகரத்திலிருந்து டிரான்ஸ்பர்
ஆகிக் கிராமங்களிலும், சிறிய டவுன்களிலும் வங்கி அதிகாரிகள் சந்திக்கும் சவால்களையும்,
பிரச்சனைகளையும் ஒரு வித வருத்தத்துடன் கையறு நிலையில் சொல்கிறார் – வீட்டையும், குடும்பத்தையும்
விட்டு, உண்மையிலேயே வசதிகளற்ற தொலை தூரக் கிராமங்களில் அவர்கள் படும் துயரங்கள் அவை
! அவர்கள் சந்திக்கும், மெஸ் நடத்தும் பெண்மணி, பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர், துப்புரவுப்
பணியாளர், வாடிக்கையாளர்கள் அனைவரும் இரத்தமும் சதையுமாக உலா வருகின்றனர்.
அமெரிக்காவின் தாக்கத்தில் பெண்
வாடிக்கையாளர் ஒருவரிடம் முறை தவறி நடந்துவிட, அதன் விளைவுகளை சந்திக்கிறார் வங்கி
அதிகாரி ஒருவர். தவறினை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுவிட்டாலும், இறுதியில் அவளுக்குப்
பணம் கொடுத்துத் தன் வேலையைத் (கூட மானத்தையும் !) தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார் – இன்னும் வசதிகளே இல்லாத வேறொரு கிராமத்துக்கு மாற்றப்படுகிறார்
!
உண்மையிலேயே ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வாசிக்கும் அனுபவத்தினைத் தருகிறது ; ஸ்டீபென்
லீகாக் சிறுகதை போல ! – உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட
மாமியின் நிலை நம்மையும் கவலைப்பட வைக்கிறது. சம்பந்தப் பட்ட அதிகாரி வேறொரு கிராமத்துக்கு
மாற்றல் ஆகிறார் – ’கிராமத்துக்கு மாற்றல்’ என்பது ஒரு தண்டனையாகவே சித்தரிக்கப் படுகிறது!
‘ உண்மையிலேயே புரியாத ஒரு பிரச்சனைதான் – இந்தக் காலத்து பள்ளி / கல்லூரிக் குழந்தைகளை
கவனமாகக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பது மிகவும் கடினம்தான் !
பார்க்கும் பாபுவிடமிருந்து, அவன் டிபனுக்காகத் தான் செலவு செய்த இருபது ரூபாயை வாங்குவாரா,
மாட்டாரா – இறுதி வரையில் நம்மையும் அலைய விடுகிறார் – ’இருபது ரூபாய்’ கதையில் !
‘மனித மனம் எப்படி சம்பந்தம் இல்லாமல், நடக்கின்ற நல்லவை / கெட்டவை களுக்கெல்லாம் எதனுடனாவது
முடிச்சுப் போடுகிறது என்று சொல்லுகிறது. நம் நம்பிக்கைகளின் போலித்தன்மையையும், அதன்
விளைவுகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தச் சிறுகதை.
குறிப்பிடும் சில இடங்கள் ( மேற்கு மாம்பலம் ), டாக்டர் (சீனிவாச கண்ணன்) மற்றும் அவரது
உறவுகள் – மனைவி, அப்பா – நிஜத்தில் உள்ளவை. நிகழ்வுகளின் நம்பகத்தன்மையும், வேகமும்
இதனால் உறுதிப் படுகிறது.
முடித்தபோது, வங்கியில் பணி புரியும் பலருடன் பழகி, ட்ரான்ஸ்பரில் சென்று திரும்பி
வந்த உணர்வு ! கதாசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள், எண்ணங்கள், மற்றவரைப் பற்றிய கணிப்புகள்
ஆங்காங்கே தெளிவாய்த் தெரிகின்றன ! வாசிக்கும்போது ஆசிரியரும் நம்முடன் கூடவே வருவது
போல் ஒரு பிரமை – இது தவிர்க்கப் படவேண்டியதா என்பது விவாததுக்குரியது !
கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்
தன் திசையில் வெகுதூரம்..
கடந்து வருபவன்’ சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை
தேடுவதாக மட்டுமே இருந்து விடுவதில்லை. இத் தேடல்கள் அனுபவங்கள் சார்ந்தவையாக,
கவிஞரின் ஆழ்மனதில் எழும்பும் கேள்விகளை முன் வைப்பவையாக இருக்கின்றன. உண்மையோ
கற்பனையோ, பொதுவான சம்பவங்களைச் சுற்றியவையோ அல்லது கேள்விப்படாத விசித்திரங்களை
வெளிச்சத்துக்கு கொண்டு வருபவையோ, மனதை வருடுபவையோ அல்லது அதிர வைப்பவையோ.. எல்லா
வகை அனுபவங்களையும் உள்ளடக்கியவை கவிதைகள். நம்மைச் சுற்றி நாம் வளர்த்துக்
கொண்டிருக்கும் பாதுகாப்பான எச்சரிக்கை வளையங்களைத் துணிச்சலுடன் வெட்டியெறிந்து
முற்றிலுமாக கவிஞரின் கோணத்தில் வாழ்க்கை அனுபவங்களைக் கடத்துகிறவை.
கவிதைகள் இதை அநாயாசமாகச் செய்திருக்கின்றன. பெண்ணின் பார்வையில் நகருகிற
பெரும்பாலான கவிதைகள் ஆணினால், சமூகத்தினால் ஏற்படும் தீராத மன அழுத்தத்தை,
அதிலிருந்து மீள இயலாத துயரத்தை, சந்திக்கும் துரோகத்தை, இதுதான் யதார்த்தம் என
ஏற்றுக் கொண்டு நகர வேண்டியிருக்கும் இயலாமையை மட்டுமின்றி எரிதழலாய் வெடித்தெழும்
சாத்தியக் கூறுகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.
அசைவையும் ஒரு மோப்ப நாயினை ஒத்துத் தொடரும் சமூகத்தைச் சாடுகிறது “நான் ஒருஓவியம்
வரைந்தேன்”. அன்பின் வயப்பட்டு உதாசீனங்களைப் பொருட்படுத்தாது தன் இருப்பைத்
தொலைத்து நிற்கும் பெண்ணைப் பார்க்கிறோம் ‘அன்பின் தீக்கொடி’யில்.
‘இசைக்குறிப்புகள்’,, ‘நதி இலை எறும்பு’ ‘அவ்வளவே’, ‘‘நிழல் கொதிக்கும் உன்
போர்க்களத்தில்’, ‘யுத்தத்திற்கான சாட்சி’, ‘அதிர்ந்த கனவின் ஒற்றையடி நீள்பாதை’ என
நீள்கிறது நிராகரிப்பின், இயலாமையின் வலியைப் பேசும் கவிதைகள்:
அறியப் போவதில்லை
அளக்கும்
சிறகிற்கும்
தாண்டும்
சிறகிற்கும்
என்பதை...” [‘வானம் மறுதலிக்கும் சிறகுகள்’]
தேயும் பிறைநிலவை
காண எத்தனிக்காதே
ஊரும்
மானின்
நீ காணக்கூடும்” [ ‘அங்கிருந்த காட்சிப்பிழை’]
முகத்தில் வீசுபவனிடமிருந்து,
கருணையாய் ரட்சிக்கவரும்
ஒளிய முயன்று
எங்கெங்கும்
அயர்ச்சியில்,
சாய்க்கிறேன்
குயில் குஞ்சு ஒன்றின்
சிறகின் அடியில்”… ‘ஆசுவாசம்’ தேடும் இவ்வரிகளின் பிரதிபலிப்பாகவே
அமைந்துள்ளன பல கவிதைகள்.
கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது, ‘கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர
வானம்’, ‘இருப்பின் ஒரு பிரதி’, மற்றும் ‘உறவுச் சிக்கலில்..’
நெரிசலுக்குள் சிக்கிக்கொண்ட
போல்
எனது இருப்பு”
கலைத்து அடுக்கும் மரணம், நம்மை நிதானிக்க வைக்கிறது:
இருண்மைக்குள்
போல
மரணம்” [விஸ்தாரம் அடையும் பாதைகள்]
ஃப்ராக் கடவுளை தரிசிக்கும் போது இலேசாகிப் போகிறது மனது.
தலைப்புகளே ஒரு குறுங்கவிதையாக இரசிக்க வைக்கின்றன: ‘கடலின் முடிவில் மறையும்
போலுள்ள வானம்’, நன்நீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி’.
கைவிட்ட தருணம்..” என அற்புதமான காதலை அழகாகக் கொண்டாடும் கவிதைகள் யாவும் அழகு.
‘நீலநிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்’ குறிப்பாக என் மனம் கவர்ந்த ஒன்று. கனிந்த
பொழுதொன்றில் காதலர்களிடம் வந்து சேருகின்ற பூனைக்குட்டி திருமணப் பந்தமாகவும்
இருக்கலாம். அல்லது உருக்கொண்ட கருவாகவும் இருக்கலாம். ஏதோ ஓர் நிர்ப்பந்தத்தால்
வேண்டாம் என ஒரு மனதாக இருவரும் அதைக் காட்டில் கொண்டு விடத் தீர்மானித்து நடக்கத்
தொடங்குகிறார்கள். பிறகு என்ன செய்தார்கள் என்பதை நீங்களே வாசித்து
அறிந்திடுங்கள்.
தீர்மானிக்கும் ‘நீங்கள்’ ஆகிய நம்மைக் கடந்து, தன் திசையில் வெகுதூரம் சென்று
கொண்டிருக்கிறார் கவிஞர். திரும்பிப் பாராது அப்பயணம் தொடரட்டுமாக!
கடந்து வருபவன்’
செல்வராஜ்
வெளியீடு [ puthuezuthu@gmail.com ]
விலை ரூ.90/-
கசடதபற APRIL 1971 – 7வது இதழ்
கசடதபற MARCH 1971 – 6வது இதழ்
ஞானக்கூத்தன்
அன்று வேறு கிழமை
நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று
பதுங்கிப் போன நாய் வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர
மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய் ஒடுங்கி.
நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து, அவர்கள் மீண்டும்
பாடை தூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்….
முத்துசாமியின் நாடக வெளியிட்டு விழா
ஒரு நாடகத்தில் வசனம் எப்படி பேச வேண்டும் என்பதற்காக தீவிரமான பயிற்சி கொடுப்பவர் முத்துசாமி. ஒருமுறை நான் ஏற்பாடு செய்த விருட்சம் கூட்டடத்தில் ஞானக் கூத்தன் கவிதைகள் சிலவற்றை எடுத்து நாடகமாக அவர் நடிகர்களை வைத்து நடித்துக் காட்டினார். அவர் சிறுகதை எழுத்தாளரும் கூட. சிறப்பாக பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் பேசுவதும் எழுதுவதும் ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும். அவர் பேசும்போது அவரைச் சுற்றி அவருடைய ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டு இருக்கும். 21 நாடகங்கள் கொண்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. ரூ700 க்கு இப் புத்தகத்தை நேற்று போதி வனம் விற்றுக்கொண்டிருந்தது.
கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்
புத்தக விமர்சனம் 4
நண்பர்களே,
வணக்கம்.
நவீன விருட்சம் என்ற 97வது இதழ் வெளிவந்து விட்டது. வழக்கம்போல் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று 64பக்கங்கள் கொண்ட இதழ்.
இதழில் பங்கு கொண்ட படைப்பாளிகளின் விபரம்.
1. என் தஙகையைப் புகழ்ந்து – விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
மொழி பெயர்ப்பு : பிரம்மராஜன்
2. எதிர்பாராத சந்திப்பு – விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
மொழி பெயர்ப்பு : தேஜøகிருஷ்ணா
3. விபத்தில் சிதைந்த காதல் கதை – சிறுகதை – உஷாதீபன்
4. நான் ஒரு சகாதேவன் – கட்டுரை – வைதீஸ்வரன்
5. ஏன் இப்படி ஆயிற்று – சிறுகதை – அழகியசிங்கர்
6. ம.பொ.சியின் ஆறு கதைகள் – கட்டுரை – பெ சு மணி
7. ஒரு பூவின் சாலை மரணம் – கவிதை – ஜெ பாஸ்கரன்
8. சந்திரா மனோகரன் கவிதை
9. மயிலாடுதுறை பாசஞ்சர் – கவிதை – சபரீஸ்
10. இரு கதைகள் – மா தக்ஷ்ணமூர்த்தி
11. புத்தக விமர்சனம் – அழகியசிங்கர்
12. பூத்துக் குலுங்கும் நித்தியம் –
கவிதை – நா கிருஷ்ணமூர்ல்த்தி
13. ஜன்னவி கவிதைகள்
14. இரண்டு கவிதைகள் – அழகியசிங்கர்
15. அஞ்சுகிறேன் – கவதை – பிரதிபா
16. துரை ஜெயபிரகாஷ் கவிதைகள்
17. அற்புதத்தின் ஒரு துளி – கவிதை – நந்தாகுமாரன்
18. கல்தூண் – கவிதை – எஸ் வி வேணுகோபாலன்
19. முதற்சான்றிதழ் – கவிதை – ஜெ பாஸ்கரன்
20. கடிதங்கள்
21. எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்
22. முட்டையினுள் -குந்தர் கிராஸ் – மொ பெ கவிதை