படித்ததில் பிடித்தது…..1
புதுமைப் பித்தன்
புதுமைப் பித்தன் இருந்த
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச்
செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து
எத்தனையோ நாட்கள் போக்கியாகி
விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி
புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது
ரெண்டு கப் காபிக்கு காசு இருக்கிறதா
என்று பார்த்துக்கொண்டு காபியும்
சாப்பிட்டுவிட்டு மீதி கையில் காசிருந்தால்
வீட்டுக்கும் எதாவது வாங்கிக்கொண்டு
பேசிக்கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது
இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின்
சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கிவிட்டு
காலையில் காபி சாப்பிட்டு விட்டுத்
திரும்புவதுண்டு !
‘
இப்போது இந்த
வீட்டுக்குள்ளே போனால் எங்கள் பேச்சை
கேட்டிருந்த அந்த சாஷி பூதமான சுவர்கள்
எங்கள் பேச்சை எனக்குத் திருப்பி
சொல்லுமா…? சொல்வதாக வேண்டுமானால்
நான் கதை யெழுதலாம் சுவர்கள் பேசாது.
நன்றி கெட்ட சுவர்கள் – அவை வீட்டுக்
காரன் கட்சி தான் – எழுத்தின் அருமை
தெரியாதவை, உலகமே எழுத்துக்கு – நல்ல
எழுத்துக்கு எதிரியாய் இருக்கும்பொழுது –
வேறு சொல்ல என்ன இருக்கிறது ..?
எழுதாதே எழுதாதே என்று உலகம் கூடி
சொல்ல நன்றாக எழுதினால் ஆபத்துதான்
அதற்கு நானே உதாரணம் என்று
புதுமைப் பித்தன் சொல்லிப் போனாரோ
என் சிந்தனை எங்கேயோ தொடர்கிறது.
PLEASE ATTEND THE MEETING
ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம்
அங்கும் இங்கும் 4………..
எனக்குப் பிடித்த தலையங்கம்….
ஓர் உரையாடல்
வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பு
விட்டுப் போன கவிதைகள்…..
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்
அழகியசிங்கர்
இன்றைய கவிதையின் முன்னோடி க. நா. சு. ஆனால் எல்லோரும் க நா சுவை மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் கவிதை ஒன்றை எழுதினாரா என்பதுகூட பலருக்குத் தெரிவதில்லை.பூனைக் குட்டிகளைப் பற்றி க நா சு அற்புதமாக கவிதை எழுதியிருக்கிறார். அதைத்தான் இங்கு அளித்துள்ளேன்.
‘கவிதையின் சரித்திரத்தை நோக்கினால் அது மிகவும் சிக்கலான மொழிப் பண்பாட்டு மதச் சிக்கலிலிருந்து விடுபட்டு மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரத்தை நாடியே செல்ல முயன்றிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. குறுகிய அளவில் இலக்கணம், செய்யுள் போக்கு என்று ஏற்பட்ட விதிகள் மட்டும் மொழி எல்லைகள் அல்ல. நல்ல கவிஞன் எவனும் இலக்கிய விதகளாலோ, செய்யுள் மரபிலோ தடுத்து நிறுத்தப்படுவதில்லை. அதை சுலபமாகவே அவனால் மீறிவிட முடியும். ஆனால் மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம் விதிக்கிற விதிகளை, எல்லைகளை மீறுவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியம் அல்ல என்றெல்லாம் குறிப்பிடுகிறார் க.நா.சு. இன்றைய கவிதையின் தந்தை க நா சுதான்.
பூனைக்குட்டிகள்
க நா சு
மேஜை மேல் படுத்துறங்கும்
கருப்புக் குட்டி
என்னைப் பேனா
எடுக்க விடாமல்
தடுக்கிறது.
நாற்காலியில்
படுத்துறங்கும்
கபில நிறக்குட்டி
என்னை உட்கார
அனுமதிக்க
மறுக்கிறது.
அடுப்பிலே
பூனைக்குட்டி
உறங்குகிறது
சமையல்
இன்று நேரமாகும்
என்கிறாள்
என் மனைவி.
ஐந்து பூனைக்குட்டிகளே
அதிகம் என்று
எண்ணும் எனக்கு
பாற்கடலில்,
வைகுண்டத்தில்,
எத்தனை பூனைக்குட்டிகள்
இருக்கும் என்று
கணக்கெடுக்கத் தோன்றுகிறது.
கசடதபற ஏப்ரல் 1972