வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பு

அழகியசிங்கர் 


சாகித்திய அகாதெமி நடத்திய வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பிற்கு இன்று சென்றேன்.  சிறுகதை வாசிப்பை அமர்ந்திருந்து கேட்டேன்.  அஸ்ஸôமியிலிருந்து மணிகுண்டல பட்டாச்சார்யா, மணிபுரியிலிருந்து ஹவோபம் சத்யபதி, தமிழிலிருந்து கீரனூர் ஜாஹிர் ராஜா தெலுங்கிலிருந்து சம்மெட உமாதேவி முதிலிய எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய கதைகளை ஆங்கிலத்தில் வாசித்தார்கள்.  
ஆங்கிலத்தில் வாசித்த எந்தக் கதையையும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த கிருபானந்தன் என்ற நண்பர் புரிந்தது என்று தலை ஆட்டிக் கொண்டிருந்தார்.  எனக்கு சந்தேகம் அவருக்குப் புரிந்திருக்குமாவென்று.  
தெலுங்குக் கதையை ஆங்கிலத்தில் வாசித்த விதம் படு மோசமாக இருந்தது. ஏன் இந்தக் கதைகளை எல்லாம் தமிழிலும் வாசிக்கக் கூடாது? வாசித்திருந்தால் ரொம்பவும் ரசித்திருக்கலாம்.  ஆங்கிலத்தில் கேட்க நரக வேதனையாக இருந்தது.   
எனக்கு கூட்டம் திருப்தியாக இல்லாவிட்டாலும்,  சாகித்திய அகாதெமி கூட்டத்திற்கு வந்தால் எப்போதும் புத்தகம் வாங்காமல் இருக்க மாட்டேன். இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் ஆர். வெங்கடேஷ் எழுதிய ராஜாஜியைப் பற்றிய புத்தகமும், ஜி நாகராஜன் பற்றி சி மோகன் எழுதிய புத்தகத்தை வாங்கினேன்.  இரண்டுமே படிக்க வேண்டிய புத்தகங்கள். 
இதிலும் ஒரு குறை.  புத்தகம் உள்ளே அரிதாக உள்ள புகைப்படங்களைச் சேர்த்திருக்கலாம்.  128 பக்கங்கள் கொண்ட ராஜாஜி புத்தகத்தில் புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.  அதேபோல் ஜி நாகராஜன் புத்தகத்திலும்..
  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன