விருட்சம் சார்பில் சூம் மூலமாக ஆறாவது கூட்டம்

அழகியசிங்கர்

விருட்சம் சூமில்  ஆறாவது  கவிதை வாசிக்கும் கூட்டம்   03.07.2020  வெள்ளிக்கிழமை –  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 
கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு : 
1. கவிச்சுடர் கா.ந.கல்யாண சுந்தரம் 2. கவிஞர் செல்வா ஆறுமுகம் 3. கவிதாயினி கனகா பாலன்  4. கவிதாயினி பத்மஜா நாராயணன் 5. கவிதாயினி கனிமொழி ஜீ  6. கவிஞர் நிஷாந்தன்
– ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் ஒரு கவிதை வாசிக்க வேண்டும்.
– உங்கள் கவிதைகளை மட்டும் வாசிக்க வேண்டும்
– உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தவிரக் கவிதையைத் தவிர வேற எதுவும் கூட்டத்தில் சொல்லக் கூடாது.
– அரசியல் கவிதையில் வரக் கூடாது
– எந்த மதத்தையும் இழிவுபடுத்தும்படி கவிதை வாசிக்கக் கூடாது.

azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: Virutcham Poetry Readimg 6 Time: Jul 3, 2020 07:00 PM India Join Zoom Meeting https://us04web.zoom.us/j/79593448510?pwd=UXJDaDc3SjVvOTlNcjRGd3Z6MmpoUT09Meeting ID: 795 9344 8510 Password: poem3

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 148

அழகியசிங்கர்  

ஒவ்வாச் சுருதி  

ராஜசுந்தரராஜன் 

குளிர் கண்டிருந்தது காற்றில், 

என்னவோ செய்தது என் உடம்புக்கு

.
கட்டுக்கயிறில் நிம்மதியற்றுப் 

பரபரத்தது வீட்டு நாய்.

கட்டற்றுப் புணர்ந்தன தெரு நாய்கள் .


விடலை என் 

எதிரே தோன்றி 

ஒரு விற்பனைக்காரி 

வேண்டுமோ என்றாள்


முழம் மல்லிகை.


நன்றி :  உயிர் மீட்சி – ராஜசுந்தரராஜன் – இது ஓர் அன்னம் வெளியீடு – வெளியான ஆண்டு : 1986 – விலை ரூ.5.

சூம் மூலமாக ஐந்தாவது கவிதை வாசிக்கும் கூட்டம்

அழகியசிங்கர்

விருட்சம்  நான்காவது  சூம்  கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை  26.06.2020 (வெள்ளிக்கிழமை)  அன்று  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.  கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்கள் பின்வருமாறு :  1. லாவண்யா 2. மனோன்மணி புது எழுத்து 3. சத்தியானந்தன் 4. சரஸ்வதி 5. சுரேஷ் பரதன்  6. எஸ்.லக்ஷ்மணன்


azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Virutcham Poetry Reading 5
Time: Jun 26, 2020 07:00 PM India

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/71479569401?pwd=cmJ2SXI3OW1DVDcxYkUxd1NIcUJVUT09

Meeting ID: 714 7956 9401
Password: poem26

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்..

அழகியசிங்கர்

திரும்பவும் சந்திப்பு நிகழ்கிறது.  பா ராகவன் குறித்து நாவலைப் பற்றிப் பேச.


ஜெகன் : வணக்கம்.
மோகினி : வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : யதி நாவலை நானும் முழுவதுமாகப் படித்து விட்டேன். 
மோகினி : இந்த நாவலை இலக்கியத் தரமான நாவலாகக் கருதுகிறீர்களா?
அழகியசிங்கர் : நிச்சயமாக. பரிசுக்குரிய நாவலாகவும் கருதுகிறேன்.
ஜெகன் : நம்ப முடியாத சம்பவம் இதில் நிறைய இருக்கின்றன.
அழகியசிங்கர் : நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும்.  இந்த இலக்கியப் பிரதியில் எல்லாம் இருக்கிறது. 
மோகினி : அடுக்கடுக்காக பல நிகழ்ச்சிகள்.  பல சம்பவங்கள். எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் எதாவது கிடைக்கும்.
ஜெகன் : உண்மைதான். ஆனால் படிக்கும்போது நம்புவது கடினம்.
அழகியசிங்கர் : இந்தப் பிரதியில் நான் ஒரு இடத்தில் படித்தேன்.  சித்ரா என்ற கதாபாத்திரம் விமல் என்ற கதாபாத்திரத்துடன் பேசுகிற மாதிரி.  உண்மையில் சித்ரா ஒரு ஆவி உலகத்தில் நடமாடும் கதாபாத்திரம்.
மோகினி : இதையெல்லாம் எவ்வளவு தூரம் நம்புவது.
அழகியசிங்கர் : சமீபத்தில் நடிகர் விக்ரம் நடித்த டேவிட் என்ற படத்தைப் பார்த்தேன்.  விக்ரமுடன் அவர் அப்பா பேசுவதுபோல் பல காட்சிகள் வருகின்றன.  ஆனால் டேவிட் அப்பா உயிருடன் இல்லை.  இது ஒரு சர்ரியலிஸ படமாக இருக்கும்போது தோன்றுகிறது.  அதே போல் யதி ஒரு சர்ரியலிஸ நாவலாக இருக்கும். பல நம்பமுடியாத சம்பவங்களைக் கொண்ட நாவல்,
ஜெகன் : இதில் இடாகினிப் பேயெல்லாம் வருகிறது.  அதை இரண்டாவது பையன் வினய்தான் தன் கைவசப்படுத்தி வைத்திருக்கிறான்.
மோகினி : சித்ராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தபின் கல்யாணத்திற்கு முதல் நாள் வினோத் காணாமல் போய்விடுகிறான்.  சித்ரா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்.  ஆவி ரூபத்தில் அவனைப் பழி வாங்க நினைக்கிறாள். அவன் அண்ணன் வினய் மூலமாக முயற்சி செய்து பார்க்கிறாள்.  
ஜெகன் : நாவல் முடிவில் நால்வரும் அவர்கள் அம்மாவிற்குப் பிறந்தவர்கள் இல்லை என்பதுபோல் வருகிறது.
மோகினி : எல்லாம் பூடகமாகக் கொண்டு போயிருக்கிறார்.  கடைசி வரை அவர்கள் அம்மா  தன் பிள்ளைகளிடம் நீங்கள் என் பிள்ளைகளென்று சொல்லவில்லை.  
ஜெகன் : இந்த இடத்தில் இந்தப் பிரதியில் இப்படி வருகிறது எதற்கு அதிர்ச்சியடைய வேண்டும்?  ஏதோ ஒரு பெண் வடிவிலிருந்துதான் எல்லோரும் தோன்றுகிறோம்.  ஏதோ ஒரு பெண் வடிவை அம்மா என்கிறோம் என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே ஒன்றுதான்.
மோகினி : அதேபோல் இன்னொன்றைச் சொல்லவேண்டும். அம்மாவின் அப்பா காலராவில் இறந்து போன நிகழ்ச்சியும் வருகிறது. 
அழகியசிங்கர் : இதை இன்னொரு முறை படித்தால்தான் புரியும்.  படிப்பதுகூட அங்கங்கே பக்கங்களைப் புரட்டிக்கொண்டு படிக்கலாம். எனக்கு என்னவோ எதைத் தேடிக்கொண்டு போனார்களோ அது நால்வர்களுக்கும் கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. சொறி முத்து சித்தர் என்ற கதாபாத்திரம் விசித்திரமாக இருக்கிறது. அம்மாவின் மரணத்தில் பங்குகொள்ள மூத்த அண்ணன் கூட நாய் ரூபத்தில் வந்து விடுகிறான். படித்த திருப்தியை உண்டாக்கிய நாவல்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 147

அழகியசிங்கர்  

காணாமல் போன ஆறு

சுரேஷ் பரதன்

ஆதியில் அந்த ஆறு

 
ஆதியில் அந்த ஆறு


ஓர்  ஆறாகவே இருந்தது.


அதன் கரையில்

படகுத்துறையும் இருந்தது.


படகோட்டி ஒருவனும்

இருந்தான்


படகோட்டிகாரோட்டியான சில நாட்களில்

படகுத்துறை ஆற்றோடு

போயிற்று


படகுத்துறை போன பின்புதான்

ஆறும் காணாமலேயே

போய்விட்டது.

நன்றி : ஊர் நடுவே ஒரு வன தேவதை – சுரேஷ் பரதன் – வெளியீடு : நான்காவது கோணம் வெளியீடு – பக் : 112 – விலை : ரூ.90 

சூம் மூலமாக நான்காவது கூட்டம்

அழகியசிங்கர்

விருட்சம்  நான்காவது  சூம்  கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை 19.06.2020 அன்று  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 
கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்களை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறேன். இதுவரை கவிதை வாசித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
29.05.2020 அன்று கவிதை வசித்தவர்கள் : 1. தேவேந்திர பூபதி  2. லக்ஷ்மி மணிவண்ணன் 3. யவனிகா ஸ்ரீராம்  4. திருக்கூனன் கண்டராதித்தன். 
05.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி   4. பானுமதி  5. உமா பாலு 6. வசந்த தீபன்  7 ஆர்.கே  8 . வேணுவேட்ராயன் 9. சுரேஷ் ராஜகோபாலன்
12.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. இராய செல்லப்பா 2. கால சுப்ரமணியம் 3. ப்ரியம் 4. திருநாவுக்கரசு 5. புதிய மாதவி 6. தாமரைச் செல்வன்

azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: virutcham poetry meeting 4 Time: Jun 19, 2020 07:00 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us04web.zoom.us/j/73802493495?pwd=TDBLay9DNEpZRUFnM1h0d3VJcWRUdz09 Meeting ID: 738 0249 3495 Password: poem

வெட்டுக்கிளிகள்


அழகியசிங்கர்

வெட்டுக்கிளிகளே“

வெட்டுக்கிளிகளே

உங்களை யாரு கூப்பிட்டார்கள்?

எங்கள் இடத்தில்தான்

நீங்கள் இருக்கிறீர்கள்

நாங்கள் ஏன் போக வேண்டும்?
(16.6.2020)

என் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ராஜேஷ் சுப்பிரமணியன்….

 அழகியசிங்கர்      

  Shifting Shadows என்ற பெயரில் 92 கவிதைகளை ஆங்கிலத்தில் என் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ராஜேஷ் சுப்பிரமணியன்.... சுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளார்.  அவர் மொழி பெயர்த்தது சிறப்பாக இருக்கிறது.  அதில் ஒரு கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

Book

The book lay in front of me.
Have not opened and read it.

The cover was excellent.
The printed pages looked wonderful.
The book caused much ecstasy
In imagination.

The one who had given me the book asked
“Have you read the book in full?”.
“Not yet”.
The book still remained closed.

Numerous books are being published, every day.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 146

அழகியசிங்கர்

யானை என்ன யானை

கிருஷ்ணன் நம்பி

யானை என்ன யானை?
யானை கொம்பன் யானை!
யானை மீது யாரோ?
யானை மீது ராஜா!
யானை என்ன ஆச்சு?
யானை செத்துப் போச்சு!
ராஜா என்ன வானார்?
நாட்டு மன்னர் ஆனார்!
நாட்டு மன்னர் எங்கே?
நாட்டு மன்னர் நாமே!
நாமும் அவரும் ஒன்றோ ?
நம்முள் ஒருவர் ராஜா!

நன்றி : கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (முழுத்தொகுப்பு) – தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன் – காலச்சுவடு பதிப்பகம் – பக்கம் : 480 – விலை ரூ.350 – முதல் பதிப்பு : நவம்பர் 2009

விருட்சம் சார்பாக நாளைக்கு கவிதை வாசிக்கப் போகிறவர்கள்

 

சூமில் நாளை மாலை 7 மணிக்குக் கீழே குறிப்பிடப்பட்ட கவிஞர்கள் கவிதை வாசிப்பார்கள்.


1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி 3. சிபிச்செல்வன் 4. ஸிந்துஜா 5. பானுமதி 6. உமா பாலு 7. ஆர் வெங்கடேஷ் 8. ஆர்.கே 9. வேணுவேட்ராயன் 10. சுரேஷ் ராஜகோபாலன்
கலந்து கொள்பவர்கள் எல்லோரும் 1 நிமிடம் அவர்களைக் குறித்து அறிமுகப்படுத்திக்கொண்டு 5 நிமிடங்கள் கவிதை வாசிப்பார்கள்.
 Meeting ID: 756 8182 3543   Password: virutcham