மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 148

அழகியசிங்கர்  

ஒவ்வாச் சுருதி  

ராஜசுந்தரராஜன் 

குளிர் கண்டிருந்தது காற்றில், 

என்னவோ செய்தது என் உடம்புக்கு

.
கட்டுக்கயிறில் நிம்மதியற்றுப் 

பரபரத்தது வீட்டு நாய்.

கட்டற்றுப் புணர்ந்தன தெரு நாய்கள் .


விடலை என் 

எதிரே தோன்றி 

ஒரு விற்பனைக்காரி 

வேண்டுமோ என்றாள்


முழம் மல்லிகை.


நன்றி :  உயிர் மீட்சி – ராஜசுந்தரராஜன் – இது ஓர் அன்னம் வெளியீடு – வெளியான ஆண்டு : 1986 – விலை ரூ.5.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன