மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 147

அழகியசிங்கர்  

காணாமல் போன ஆறு

சுரேஷ் பரதன்

ஆதியில் அந்த ஆறு

 
ஆதியில் அந்த ஆறு


ஓர்  ஆறாகவே இருந்தது.


அதன் கரையில்

படகுத்துறையும் இருந்தது.


படகோட்டி ஒருவனும்

இருந்தான்


படகோட்டிகாரோட்டியான சில நாட்களில்

படகுத்துறை ஆற்றோடு

போயிற்று


படகுத்துறை போன பின்புதான்

ஆறும் காணாமலேயே

போய்விட்டது.

நன்றி : ஊர் நடுவே ஒரு வன தேவதை – சுரேஷ் பரதன் – வெளியீடு : நான்காவது கோணம் வெளியீடு – பக் : 112 – விலை : ரூ.90 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன