விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 4வது கூட்டம்

தலைப்பு : வைதீஸ்வரன் கதைகள்

சிறப்புரை : டாக்டர ஜெ பாஸ்கரன்

இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,
ஜாபர்கான் பேட்டை, சென்னை
(காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் நோக்கி வரவேண்டும்)

தேதி 27.09.2018 (வியாழக்கிழமை)

நேரம் மாலை 5.45 க்கு

பேசுவோர் குறிப்பு : மருத்துவர், சிறுகதை, கட்டுரை ஆசிரியர்.

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205

விருட்சம் சந்திப்புக் கூட்டம்…

நாளைக்கு மாலை 6 மணிக்கு நடைபெறப்போகும் கூட்டம் 42வது கூட்டம். இக் கூட்டத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 42

தலைப்பு : சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும்

சிறப்புரை : சத்யானந்தன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004

தேதி 15.09.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாக எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளி.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

இந்து தமிழிற்கு என் நன்றி

கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் என்ற தலைப்பில் இன்றைய இந்து தமிழில் என் முழு சிறுகதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்து தமிழிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி…

நேற்று பெய்த மழையில் காலையில் கூட்டம் நடக்குமா என்ற சந்தேனம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது. 10.30 மணிக்குக் கிளம்பும்போது மழை விட்டிருந்தது. எல்லோரும 11 மணிக்குக் கூடினோம். கலந்துகொண்டவர்கள் பலரும் உற்சாகமாக இருந்தார்கள்.
உப்புக்கணக்கு என்ற நாவலைப் பற்றி பலரும் பேசினோம். சிறப்பாக புனையப்பட்ட வரலாற்று நாவல். கூட்டத்தில் நடந்த விவாதத்தை உற்று நோக்கினால் நாம் காந்தியைப் பற்றி மோசமாக எதாவது சொல்லிவிடுவோமா என்று தோன்றியது.
கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி.

சாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம்

சாதாரண மனிதன் என்ற தலைப்பில் எழுத்தாளர் நரசய்யா மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். உண்மையில் சிட்டி சாதாரண மனிதர் அல்ல.
நாளை நடைபெறும் விருட்சம் கூட்டம் குவிகம் இல்லத்தில் நடைபெறுகிறது. ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டம். முக்கியமாக சுதந்திர தினத்தன்று நடைபெறுகிறது. அப் புத்தகத்தின் பெயர் உப்புக்கணக்கு. இது ஒரு நாவல். இதை எழுதியவர் வித்யா சுப்ரமணியன். விருட்சம் வெளியீடாக இந் நாவல் வெளிவந்துள்ளது. 342 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.300. ஆனால் நாளை வாங்குபவர்களுக்கு இப் புத்தகம் ரூ.200க்குக் கிடைக்கும்.
எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் நேரிடையாகவே கையெழுத்துப் போட்டு இப் புத்தகத்தைத் தர உள்ளார். கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இது சாதாரண மனிதர்கள் நடத்தும் கூட்டம். எல்லோரும் வர வேண்டும்.
கூட்டம் நடக்குமிடம் : கூட்டம் நடக்குமிடம் : Kuvigam Illam Flat 6, 3rd Floor, A Wing, Silver Park Apartments, 24 Thanikachalam Road, T Nagar, Chennai Near by Hindi Prachara Sabha
TOMORROW AT 11 AM.

சுதந்திரத் தினத்தை முன்னிட்டு முன்பதிவுத் திட்டம்

வித்யா சுப்ரமணியம் அவர்களின் üஉப்புக்கணக்குý என்ற நாவல் நம் நாடு சுதந்திரம் அடையும் தறுவாயில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தை பின்னணியாகக் கொண்ட சரித்திரம் கலந்த சமூக நாவல். விருட்சம் வெளியீடாக திரும்பவும் வெளிவந்துள்ளது. 340 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.300.
கிட்டத்தட்ட 100 நாவல்களும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி உள்ளார் வித்யா சுப்ரமணியம். உப்பு சத்தியாக்கிரகத்தை அடிப்டியாக வைத்து எழுதப்பட்ட üஉப்புக்கணக்குý என்ற நாவல் வாசிப்பதற்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும்.
சுதந்திரத் தினத்தில் இப்புத்தகம் வெளியாக உள்ளது. முன்பதிவு திட்டத்தில் சலுகை விலையாக ரூ.200க்குத் தர உத்தேசித்துள்ளேன்.
ஆகஸ்ட் 15 தேதிக்குள் பதிவு செய்பவர்கள் கீழ்க்கண்ட விருட்சம் கணக்கில் ரூ.200-ஐ முன்பணமாகச் செலுத்திப் புத்தகத்தை வாங்குவதற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அழகான குடும்பக்கதையில் மிக லாவகமாக சுதந்திரப் போராட்டத்û8த நுழைத்து இறுதி வரை குடும்பத்தையும் சுதந்திரப் போராட்டத்தையும் இரு தண்டவாளங்கள் போல் கொண்டு சென்றிருக்கிறார் இந் நாவலில்.
கீழ்க்கண்ட கணக்கில் பணம் செலுத்தி முன்பதிவுத் திட்டத்திற்கு ஆதரவு தர கோருகிறேன்.

NAVINA VIRUTCHAM ACCOUNT
INDIAN BANK,
ASHOKNAGAR BRANCH
ACCOUNT No. 462584636
IDIB Number. IDIB000A031
CONTACT : AZHAGIYASINGAR – 9444113205

மூகாம்பிகை வளாகத்தில் 13 கூட்டங்கள் நடத்தி விட்டேன் தெரியாமல் 12 என்று எழுதி விட்டேன்..

இதுவரை 13 கூட்டங்கள் நடத்தி உள்ளேன். அதைவிட முக்கியம் ஒவ்வொரு கூட்டமும் கவனத்தில் வைத்தக்கொள்ளும்படி அமைவது.
நேற்று நடந்த தமிழ் மணவாளன் கூட்டம் சிறப்பாக இருந்ததோடல்லாமல் ஒன்றரை மணி நேரம் போய்க்கொண்டிருந்தது. வைதீஸ்வரனும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.
12வது கூட்டம் என்பதால் எனக்குப் பிடித்த இனிப்பான பாதுஷாவை வாங்கிக்கொண்டு வந்தேன். எல்லோருக்கும் இனிப்பை வழங்கினேன்.
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆடியோ நிச்சயமாக உள்ளது. கீழ்க்கண்டவாறு நடந்த கூட்டங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

1. ஜ÷ன் 2017 நடந்த கூட்டம் – திருப்பூர் கிருஷ்ணன் – ஜானகிராமனும் நானும்
2. ஜøலை 2017 நடந்த கூட்டம் – பெருந்தேவி – புதுமைப்பித்தனும் நானும்
3. ஆகஸ்ட் 2017ல் நடந்த கூட்டம் – கடற்கரை – ஏ கே செட்டியாரும் நானும்.
4. செப்டம்பர் 2017 – ஓஷோவும் நானும் – செந்தூரம் ஜெகதீஷ்
5. அக்டோபர் 2017 – சந்தியா நடராஜன் – திருவாசகமும் நானும்
6. நவம்பர் 2017 – ராஜேஸ் சுப்பிரமணியன் – லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்
7. டிசம்பர் 2017 – தஞ்சாவூர் கவிராயர் – தஞ்சை ப்ராகாஷ÷ம் நானும்
8. பிப்பரவரி 2018 – கல்யாணராமன் – கு அழகிரிசாமியும் நானும்
9. மார்ச்சு 2018 – த நா குமாரசாமியும் நானும் – முனைர் வ வே சுப்பிரமணியன்
10. ஏப்ரல் 2018 – கு ப ராஜகோபாலனும் நானும் – சாருநிவேதிதா
11. மே 2018 -சுனில்கில்கானியும் நானும் – சா கந்தசாமி
12. ஜøன் 2018 – சி ராஜேந்திரன் – திருக்குறளும் நானும்
13. ஜøலை 2018 – வைதீஸ்வரனும் நானும் – தமிழ் மணவாளரன்.
ஜனவரி மாதம் புததகக் கண்காட்சியை ஒட்டி கூட்டம் நடத்தவில்லை. யாருக்காவது கூட்டத்தில் பேசியதை காதால் கேட்க வேண்டுமென்றால் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

பன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்

இன்று மாலை 6 மணிக்கு வைதீஸ்வரனும் நானும் என்ற தலைப்பில் தமிழ் மணவாளன் அவர்கள் பேசுகிறார்கள். இதுவரை ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் நடக்கும் 12வது கூட்டம் இது..
முகவரி இதுதான் :
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
ஏற்கனவே 11 கூட்டங்களையும் பதிவு செய்திருக்கிறேன். இரண்டு கூட்டங்களின் ஆடியோ உள்ளது. மீதி கூட்டங்களின் ஆடியோ வீடியோ எடுக்கப்பட்டிருக்கின்றன. இதோ இந்தக் கூட்டத்தையும் பதிவு செய்ய உள்ளோம்.
இனி வரும் கூட்டங்களில் கூட்டத்தின் தன்மையை மாற்றி யோசிக்கலாம் என்று நினைக்கிறோம்.
வைதீஸ்வரனின் முழுக் கவிதைத் தொகுதியை வாங்கி இக் கூட்டத்தை சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரதியை வைத்துத்தான் இதுவரை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த முறை மட்டும் பிரதியுடன் அதை எழுதிய ஆசிரியரின் வருகையும் உள்ளது.

அன்புடன்
அழகியசிங்கர்

ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்

வரும் சனிக்கிழமை (21.07.2018) அன்று மாலை 6 மணிக்கு முனைவர் தமிழ்மணவாளன் வைதீஸ்வரன் கவிதைகள் ஆன மனக்குருவி என்ற புத்தகத்தைப் பற்றி பேச உள்ளார். 1961லிருந்து 2017 வரை எழுதப்பட்ட 366 கவிதைகளின் தொகுப்பு நூல் இது. வைதீஸ்வரன் வரைந்துள்ள ஓவியங்களும் இப் புத்தகத்தில் காணலாம். 488 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.450. ரூ.200க்கு இப் புத்தகத்தை வைதீஸ்வரன் கையெழுத்துப் போட்டு கொடுக்க உள்ளார். முதன் முறையாக ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிற கூட்டத்தில் வைதீஸ்வரனும் நேரிடையாகக் கலந்து கொள்கிறார்.
தமிழ்மணவாளன் அனுப்பிய அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.