பன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்

இன்று மாலை 6 மணிக்கு வைதீஸ்வரனும் நானும் என்ற தலைப்பில் தமிழ் மணவாளன் அவர்கள் பேசுகிறார்கள். இதுவரை ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் நடக்கும் 12வது கூட்டம் இது..
முகவரி இதுதான் :
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
ஏற்கனவே 11 கூட்டங்களையும் பதிவு செய்திருக்கிறேன். இரண்டு கூட்டங்களின் ஆடியோ உள்ளது. மீதி கூட்டங்களின் ஆடியோ வீடியோ எடுக்கப்பட்டிருக்கின்றன. இதோ இந்தக் கூட்டத்தையும் பதிவு செய்ய உள்ளோம்.
இனி வரும் கூட்டங்களில் கூட்டத்தின் தன்மையை மாற்றி யோசிக்கலாம் என்று நினைக்கிறோம்.
வைதீஸ்வரனின் முழுக் கவிதைத் தொகுதியை வாங்கி இக் கூட்டத்தை சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரதியை வைத்துத்தான் இதுவரை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த முறை மட்டும் பிரதியுடன் அதை எழுதிய ஆசிரியரின் வருகையும் உள்ளது.

அன்புடன்
அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன