நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..3

அழகியசிங்கர்

இன்று பாரீஸில் உள்ள ஒலிம்பிக்ஸ் கடைக்குச் சென்று துணிப்பை வாங்கினேன். ஒரு பையின் விலை ரூ.2. அதிக விலை கொடுத்து வாங்கினேனா அல்லது குறைவான விலையில் வாங்கினேனா என்பது தெரியவில்லை.
என் வீட்டிலிருந்து 18 கே பஸ் பிடித்துச் சென்றேன். வண்டிகடைசியில் நின்ற இடத்தில்தான் ஒலிம்பிக்ஸ். 500 பைகள் வாங்கிக் கொண்டு வந்தேன். ஒரு முட்டாள்தனம் செய்து விட்டேன். வீட்டிலிருந்து பெரிய பையை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதனால் அவஸ்தைப் பட்டேன். பைகளை விரல்களால் தூக்க முடியவில்லை. நான் திரும்பவும் 18 கே பஸ் பிடித்து வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. தூக்க முடியாமல் பையைத் தூக்கிக்கொண்டு வந்ததால் பையைப் பார்க்கும்போது ஏனோ வெறுப்பாக இருந்தது. 500 பைகள் ஆயிரம் வரை ஆகிவிட்டது.
மொத்தப் பைகளும் தீருவதற்குள் இரண்டு புத்தகக் காட்சிகளை முடித்துவிடலாமென்று தோன்றியது.
வெளியே பைகளை வாங்கிக்கொண்டு வரும்போது கிலோ கணக்கில் பைகள் கிடைக்குமென்று பாதசாரதிகள் சொன்னார்கள். கிடைக்குமா என்பது தெரியவில்லை.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 7வது கூட்டம்

அழகியசிங்கர்

நாளை மாலை 5.45க்கு வழக்கம்போல் கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு, ஜாபர்கான் பேட்டை, சென்னை (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு, அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) இலக்கியக் கூட்டம். அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பும் புகைப்படமும்

வேணு வேட்டராயன் கவிதைப் படிமமும் அழகியலும் பற்றிப் பேசினார் அவர் ஆரம்பிக்கும்போது ஆங்கிலத்தில் பேசினார். பின் தமிழுக்கு மாறினார். கவிதையைப் பற்றி மட்டுமல்லாமல் ஓவியத்தைப் பற்றியும் பேசினார்.

அவருடன் போட்டோ எடுத்ததை இங்கே பதிவிடுகிறேன். போன மாதம் நடந்த நாகார்ஜ÷னனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள மறந்து விட்டோம்.

நாளை நடைபெற இருக்கும் வேணு வேட்ராயன் கூட்டம்

கவிதைப் படிமமும் அழகியலும் என்ற தலைப்பில் நாளை விருட்சம் இலக்கியச் சந்திப்பில் ஸ்ரீராம் குரூப் அலுவலகம் மூகாம்பிகை வளாகம் சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 பேசப் போகிறவர் வேணு வேட்ராயன். அவர் மருத்துவர். கவிஞர். அவருடைய முதல் புத்தகமான அலகில் அலகு விருட்சம் வெளியீடாக வருகிறது.
மூன்று படைப்பாளிகளை அவரால் மறக்க முடியாது என்கிறார். ஒருவர் ஜெய மோகன், இன்னொருவர் பிரமிள், மூன்றாமவர் தேவதேவன்.
72 கவிதைகள் அடங்கியத் தொகுப்புதான் அலகில் அலகு. இவருடைய கவிதைகள் வித்தியாசமானவை. இவர் கவதைகளைப் படிக்கும்போது இவரே ஒரு படிமக் கவிஞராக எனக்குத் தோற்றம் தருகிறது. இந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.

இந்த ஞாயிறு இளம் காலை
ஏன் நீலம் தரித்து நிற்கிறது.
நீண்ட நெடும் இரவெல்லாம் தோய்ந்த
நெஞ்சின் அடர்நீலம்
கடலலை மேல் மென்வானில் பாரித்து கிடக்கிறது.
மெல்ல சாலையில் ஊர்ந்து சென்றால்
எங்கு காணினும் நீலமடா !

(பழ சாறு கடையில் மொசம்பி பழங்களிலும்
நீலம் வழிகிறது)

இவருடைய எந்தக் கவிதையிலும் தலைப்பு இல்லை. 78 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை .60 தான். நாளை மாலை 6 மணிக்குக் கூட்டம். மழை வராது என்று நினைக்கிறேன். அவசியம் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சமும் கூட்டமும்

போன மாதம் மறுதுறைமூட்டம் என்ற தலைப்பில் நாகார்ஜ÷னன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
முதலில் அவர் கூட்டத்திற்கு வந்திருந்து பேசுவதற்கு விருப்பப்படவில்லை. ஆனால் என் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் பேச ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் தனியாக மேடை மாதிரி ஒரு இடத்தில் பேச விருப்பப்படவில்லை. நானும் அப்படியெல்லாம் இல்லை. எல்லோரும் சமமாகத்தான் அமர்ந்துகொண்டு பேசுவோம் என்றேன்.
நான் காமெராவில் அவர் பேச்சை பதிவு செய்ய நினைத்தேன். அவர் வேண்டாம் என்றார். பின் அவர் பேசியதை ஒலிப்பதிவு செய்தேன். சிலர் சொன்ன பதில்கள் அவரை ஆத்திரமடையச் செய்தது. அவர் கோபம் எனக்கு ஆச்சரியம்.
நான் இதுமாதிரியான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இதற்குக் கூட்டம் வருவதைப் பற்றியும் வராமல் போவதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை.
மேலும் கூட்டத்திற்கு வருபவர்களை நான் மதிக்கிறேன். இலக்கியக் கூட்டம் நடத்தினாலும் நானும் பங்கு கொள்ளும் ஒருவன் அவ்வளவுதான்.
அடுத்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 44

தலைப்பு : கவிதைப் படிமமும் அழகியலும்

சிறப்புரை : வேணு வேட்ராயன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004

தேதி 17.11.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : மருத்துவர். அலகில் அலகு என்ற முதல் கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடாக வர உள்ளது.

அன்புடன்
அழகியசிங்கர்

9444113205

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 5வது கூட்டம்

தலைப்பு : சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்

தொடர் உரை: முனைவர் வ வே சு

இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,
ஜாபர்கான் பேட்டை, சென்னை
(காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் நோக்கி வரவேண்டும்)

தேதி 25.10.2018 (வியாழக்கிழமை)

நேரம் மாலை 5.45 க்கு

பேசுவோர் குறிப்பு : . விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வுப் பெற்றவர். இலக்கியப் பேச்சாளர். தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் 52 கூட்டங்கள் தொடர்ந்த நடத்தி உள்ளார்.

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் –
தொலைபேசி எண் : 9444113205

துளி : 8 – சனிக்கிழமை கிளம்புகிறேன்

தாமிரபரணி புஷ்கர்க்கு சனிக்கிழமை நாங்கள் குடும்பத்துடன் போகிறோம். கட்டாயம் வண்ணதாசனைச் சந்தித்து என் சிறுகதைத் தொகுப்பைக் கொடுக்க நினைக்கிறேன். அது நடக்குமா என்பது தெரியாது. ஹோட்டல் கங்காவில் தங்கப் போகிறேன். சுற்றி வேற இடங்களுக்கும் போகத் திட்டம். கூட்டத்தை நினைத்தால் எனக்குத் திகைப்பாக இருக்கிறது. கூட்டம் நெரிசல் உள்ள இடங்களுக்கு நான் போக விரும்ப மாட்டேன். உதாரணமாக ஐய்யப்பன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும் நான் போக விரும்ப மாட்டேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 43

தலைப்பு : மறுதுறை மூட்டம்
Fog on the Other Shore

சிறப்புரை : நாகார்ஜ÷னன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004

தேதி 13.10.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : அமைப்பியல்வாத விமர்சகர்
அனைவரும் வருக,
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205