துளி : 8 – சனிக்கிழமை கிளம்புகிறேன்

தாமிரபரணி புஷ்கர்க்கு சனிக்கிழமை நாங்கள் குடும்பத்துடன் போகிறோம். கட்டாயம் வண்ணதாசனைச் சந்தித்து என் சிறுகதைத் தொகுப்பைக் கொடுக்க நினைக்கிறேன். அது நடக்குமா என்பது தெரியாது. ஹோட்டல் கங்காவில் தங்கப் போகிறேன். சுற்றி வேற இடங்களுக்கும் போகத் திட்டம். கூட்டத்தை நினைத்தால் எனக்குத் திகைப்பாக இருக்கிறது. கூட்டம் நெரிசல் உள்ள இடங்களுக்கு நான் போக விரும்ப மாட்டேன். உதாரணமாக ஐய்யப்பன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும் நான் போக விரும்ப மாட்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன