வருபவர்களும் பேசுபவர்களும்….

விருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் 39வது கூட்டம் நடைபெற உள்ளது வரும் சனிக்கிழமை அன்று.
கடந்த 12 மாதங்களாக ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது கூட்டம் ஆரம்பித்தபோது எந்தத் தலைப்பில் இக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் இருந்தது. பின் தானாகவே ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொருவர் பேசுவது போல் கூட்டத்தை மாற்றிக் கடந்த 12 மாதங்களாக நடத்திக்கொண்டு வருகிறேன். வருகிறேன் என்று சொல்வதை விட வருகிறோம் என்று சொல்வது சரியாக இருக்கும். பேசுவோர், கூட்டத்திற்கு வருபவர்கள் என்று எல்லோரும் சேர்ந்துதான் இதை நடத்துகிறோம்.
முதலில் இக் கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அந்த யோசனை போய்விட்டது. எல்லாக் கூட்டங்களையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.
இக் கூட்டம் நடத்த எனக்கு எப்போதும் உறுதியாக நிற்பவர்கள் கிருபானந்தன், ராஜேஸ் சுப்பிரமணியன், சந்தியா நடராஜன் அவர்கள். இன்னும் பல எழுத்தாள நண்பர்களுடன் தொடர்புகொண்டு பேச அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
வருபவர்களும் பேசுபவர்களும் நடத்தும் கூட்டம் இது. இக் கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன்.

20 ஆண்டுகளுக்கு முன்னால்…..

20 ஆண்டுகளுக்கு முன்னால் என்னை ஜெயா டிவி பேட்டி எடுத்தது. இன்று பொதிகை டிவி. காலை 6.30 மணிக்குப் போய்விட்டேன். ஜெய டிவியில் பேட்டி எடுக்கும்போது மேக்கப் போடவில்லை. வேர்த்து விறுவிறுக்க உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் படப்படப்பாக இருந்தேன். நான் பேசிவிட்டு வந்தாலும் நிறையா வந்துக்களைப் பயன்படுத்தினேன்.

இன்று பொதிகை டிவியில் ஒளிபரப்பு ஆவதற்கு முன் லைட் மேக்கப் போட்டார்கள். நேரிடையாகப் பேசினேன். எந்தப் படப்படப்பும் இல்லை. பேசும்போது கவனமாக வந்துக்களைக் கூறவில்லை. நான் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் நவீன விருட்சம் பத்திரிகை என்று எல்லாவற்றையும் பேசினேன். அடுத்த வாரம் விங்க் கிடைக்கும். முகநூலில் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.

‘மேலும்’ விமர்சன விருது

பொதுவாக விமர்சர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் üமேலும்ý ஆசிரியர் சிவசு ஒவ்வொரு ஆண்டும் விமர்சகர்களுக்குக் கௌரவம் அளிக்கிறார்.
இந்த ஆண்டு விமர்சன விருது பெறுபவர்கள்: க வை பழனிச்சாமி, வாசுதேவன், சண்முக விமல்குமார். மூவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வரும் 08.07.2018 ஞாயிறு காலை 10 மணியிலிருந்து மாலை வரை தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கமும் நடத்துகிறார். இக்ஷா மையம், எழும்பூரில் நடக்கும் இக் கூட்டத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ýகூட்டத்தின் முதல் அமர்வில் üபூக்கோவும் தொல்காப்பியரும்ý என்ற தலைப்பில் ராஜா அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார். பூக்கோவையும் தொல்காப்பியத்தையும் எப்படி தொடர்பு படுத்திப் பேசப் போகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

விருட்சம் என்ற பெயர் இருந்தாலும்…….

ஜாபர்கான்பேட்டை, 7, 3வது தெரு, ராகவன் காலனியில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. விருட்சம் என்ற பெயர் இருந்தாலும் நண்பர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் கூட்டம் இது. ஏற்கனவே வாசகசாலை என்ற அமைப்பு அசோக்நகர் வட்டார நூலகத்தில் வாரம் செவ்வாய்க் கிழமை கூடி கூட்டம் நடத்துகிறார்கள்.

எங்களுக்கும் இலக்கியக் கூட்டம் நடத்த அனுமதி அளித்த மாவட்ட நூலக அலுவலருக்கு நன்றிகள் பல. இதேபோல் பல நூலகக் கட்டடங்களில் கூட்டங்கள் நடத்த இலக்கிய ஆர்வலர் பலர் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இலக்கியம் செழித்து ஓங்கும்.
நாங்கள் நடத்தும் கூட்டம் மாதம் ஒரு முறை. கடைசி வியாழக்கிழமை மட்டும். அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

எல்லோரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வரப்பெற்றோம் பகுதியில்

விருட்சம் வெளியீடாக பத்மஜா நாராயணன் எழுதிய கவிதைத் தொகுதி யான üபிணா பற்றி சனிக்கிழமை தமிழ் இந்துவில் வரப்பெற்றோம் பகுதியில் செய்தி வந்துள்ளது.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 37

திருக்குறளும் – நானும்

சிறப்புரை : சி ராஜேந்திரன், ஐஆர்எஸ்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004

தேதி 16.06.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : C RAJENDIRAN, IRS, Vice Chairman, Settlement Commission, Customs, Central Excise and Service Tax, Additional Bench, South Zone, Chennaim. voiceof valluvar1330@gmail.com

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 36வது கூட்டம்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 36வது கூட்டம். அது குறித்து அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். எல்லோரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்பன்
அழகியசிங்கர்
9444113205

விருட்சம் சந்திப்பு கூட்டம் 35

வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் கு ப ராஜகோபாலனும் நானும் என்ற தலைப்பில் சாரு நிவேதிதா பேச உள்ளார். அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

அழகியசிங்கர்
9444113205

வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு

வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இலக்கியக் கூட்டத்திற்கு எல்லோரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 33

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 33

கு அழகிரிசாமியும் நானும்

சிறப்புரை : கல்யாணராமன்

இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
4 லேடீஸ் தேசிகா தெரு
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

தேதி 17.02.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : சமீபத்தில் ஆரஞ்சாயணம் என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகமாக ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. பேராசிரியர், விமர்சகர்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205