Category: Uncategorized
சாட்சி
ஆற்றோரம்
நீர் வற்றிய
சிறு பகுதி
தூண்டில் மிதவையை
பார்த்திருக்கும் ஒரு சிறுவன்
எனக்கோ பசி
ஏறுவதில் குதூகலம்
இறங்குவதில் கிலேசம்
விட்டுப் போக மனமில்லை
அடிவாரத்தையும்
மலைமுகட்டையும்
மலைச்சிகரம்
கார்மேகம் மேனியை
தொட்டுவிட்டுச் சென்றது
கண்ணீரை
மழையாகப் பொழியுமோ
கானல் நீரைப்
பருகினேன்
களைப்பு நீங்க
குளிக்க நினைத்து
காலை உடைத்துக் கொண்டேன்
பூக்கள் உதிர ஆரம்பித்துவிட்டது
வசந்த காலத்தின் தொடக்கம்
தென்றலினூடே வருகிறது.
எதையாவது சொல்லட்டுமா………71
அன்பின் பிரார்த்தனை
அன்பையும்
புதிர் விளையாட்டு!
ஒரு வெயில் மதியப்பெருவெளியின் கானகத்தில்
வரிப்புலியொன்றும்
புள்ளிமான் இனத்தினது இரண்டும்
மிகுந்த வேட்கையிலிருந்தன
முதலாவது வாழ்வு பசிக்காகவும்
இரண்டாவது மரண பசிக்காகவும்
சாத்தான் முகம் மலர்த்தி தாடை வருடி
அசை உண்ட தருணம்
தாகம் உப்பிய பேராற்றங்கரை
காளிச்சிலைக்குள்
மெல்லப் புகுந்து ஒளிந்து கொண்டான்
கடவுள்!
பிழை
நதி வெள்ளம்
கடல் நோக்கி
என்னவளின்
வீட்டின் கதவு
திறக்காது
தாமதமாய்ப் போனால்
மேகங்கள் தூது போகும்
என்னவளின்
செளக்கியத்தைச் சொல்லாது
மழை நீர் பேதம் பார்த்தா
மனிதனைத் தொடும்
பயணம் இரவுகளைத்
தொலைக்கும்
பிரிவு வரத்தை
யார் தான் வேண்டுவார்கள்
வெண்மேகம் கரைந்தோடும்
நினைவுப் போரலைகள்
விண்ணைத் தொடும்
நெஞ்சம் நிழலாடுகிறது
நிழல்கள் கூட
உன்னைப் போலவே
தெரிகிறது
எழுதுகோலில் மை
இருக்கிறது
கவிதை எதிரில்
உட்கார்ந்திருக்கிறது.
பூனைகள் உலகம்
1 – நினைவுப் பூனை
____________________
அன்றொரு பூனை பார்த்தேன்
முதுகு தடவி கொடுக்க ஆளின்றி
கண்ணில் மென்சோகம் கவிழ்ந்து
மெதுவாய் நடந்து சென்றது
.
பூனையின் சொந்தக்காரன்
இழுத்த இழுப்பில்
கழுத்தில் பட்டையொடு
விரைந்ததப் பூனை
.
பின்னொருநாளில்
அந்த பூனையைப் பார்க்கையில்
சோகம் கழிக்க என்று
கையேந்த யோசித்த நேரம்
கையில் கீறி
ரத்தம் சொட்டச் செய்தது
வீட்டுப் பூனையின் நினைவு
****
2 – பூனையின் குரல்
_________________
நாயும் பூனையும்
நித்தம் சண்டையிடும் வீட்டில்
நாயின் குரல் ஓங்கி இருந்தது
இருவரையும் நிறுத்தச் சொல்லிக்
கத்தி சென்றான்
வீட்டுக் காரன்
பூனையின் குரல் அவனிடமும்
வழக்கம் போலவே
தாழ்ந்திருந்தது.
உன் நியாயத்தை
எஜமானனிடமாவது
எடுத்து சொல்
என்றேன் பூனையிடம்
என் அடிமைகளிடம் நான்
அதிகம் பேசுவதில்லை
என்றது அந்த பூனை.
******
3 – இளிச்சவாய் பூனை.
___________________
மகளின் கதைப் புத்தகத்தில்
அறிமுகமானது அந்த பூனை
காதளவு நீளும் புன்னகையுடன்
உனக்கும் சிரிப்புக்கும்
சம்பந்தம் இல்லை என்றேன்
சிரிப்பை எனக்களித்து
ஓடிப் போய்விட்டது.
இப்போதெல்லாம் நிறையபேர்
ஏளனம் செய்கிறார்கள் என்னை
இளிச்சவாய் பூனையென்று.
உருவம் காட்டாமலேயே
தோளமர்ந்து சிரிக்கிறது
ஆலிஸின் பூனை
மிதக்கும் பல்லி
அந்த பல்லி
ஒவ்வொரு இடத்துக்கும்
ஒவ்வொரு ஒப்பனையில்
பறந்து சென்றது
செயற்கைகோளின் துணையுடன்.
அதை
மரப்பல்லி , காட்டுப்பல்லி,பறக்கும்பல்லி
என்றனர் சிலர்
அது பெண் பல்லி என்பது
மட்டும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
பல்லிக்கு இறக்கை கட்டினால்
பறவையாகிவிடுமா?
பல்லி வளருமா? யாராவது வளர்ப்பார்களா?
பல்லி இழந்த வால் என்னவாகும்?
என விவாதித்தனர் சிலர்.
பல்லி எதிர்காலத்தில் வளர்ந்து
டைனோசர் ஆகி விடுமா என்றஞ்சியோர்
‘நீ பல்லியே அல்ல – கொசுதான்’
என போதித்தனர் அதன் காதில்.
பல்லி இனம் அழிந்து
ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டனவே
எனக்கூறிக் கொண்டே அதன் தலையை
நசுக்க வந்தோரிடம்
தன் தலையை கழற்றிவிட்டு விட்டு
பிரபஞ்சபத்தில் மிதக்கத் தொடங்கியது பல்லி
•••
பிப்ரவரி / மே 1979
ஒரு கவிதை
இந்தக் காலத்தில்
பிரும்மத்தை
கள்ளச் சந்தையில்
விடீயில்
மந்திரிகளின் பொய்களில்
எதிலும் (மே) குறைபிரசவத்தில்,
அவசரத்தில்
தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்தான்
காணமுடியும் போலிருக்கிறது.
-மீண்டும்-
இந்தக் காலங்களில்
தெய்வத்திற்கும் (கூட) ஊர்
சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது
என நினைத்தேன்-
சினிமாவெறும் கோவிலில்
நேற்று இரவு அவள் வந்தாள்
சிரித்தாள்
சொல்லறுற்றாள்
”எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை”
S SAMPATH