அலைதலின் முற்றுகை

அலைதலின் முற்றுகை 
கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த 
மனம் எனது 
தவறவிட்ட 
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை 
மழையும் வெயிலும் 
துரத்திக் கொண்டிருக்கிறது 
மேல்நோக்கி 
கீழிறங்கி 
அந்தரத்தில் மிதந்து அலையும் 
இறகு ஒன்றினைத் தனதாக்க 
நெஞ்சு விம்ம விம்ம 
கைகளை நீள.. நீள… நீட்டுகிறேன் 
ஓணான் அடிக்கும் குழந்தைகளை 
யதேச்சையாய்க் கடக்கிறேன் 
தொப்பலென 
உனதான எனக்கானத் தாய்மடியில் 
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்
*** 
–ஆறுமுகம் முருகேசன் 

புதிர் விளையாட்டு!

கடவுள் சாத்தானாகப் பெயர்ந்த
ஒரு வெயில் மதியப்பெருவெளியின் கானகத்தில்
வரிப்புலியொன்றும்
புள்ளிமான் இனத்தினது இரண்டும் 
மிகுந்த வேட்கையிலிருந்தன

முதலாவது வாழ்வு பசிக்காகவும்
இரண்டாவது மரண பசிக்காகவும்

சாத்தான் முகம் மலர்த்தி தாடை வருடி
அசை உண்ட தருணம்
தாகம் உப்பிய பேராற்றங்கரை
காளிச்சிலைக்குள்
மெல்லப் புகுந்து ஒளிந்து கொண்டான்
கடவுள்!
       
          

புத்தனாவது சுலபமல்ல

முன் முடிவுகளெல்லாம்
குப்பையென மண்டிக் கிடக்கும்
மனக்குடுவையை சுத்தப்படுத்து முதலில்
அப்புறம் சுத்தப்படுத்தலாம்
புத்தன் முகத்தை!

உலகெனும் பெருங்கோப்பையில்
நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது யுக காலம்.

விருப்பத்தேர்வு உன்னிடமே விடப்பட்டுள்ளது,  
அதன் ஒரு சிறு கண நேரம்
அல்லது
ஒரு முழுயுகம் எடுத்துக்கொள்ளலாம் நீ.

கல் புத்தன்  
கடவுள் புத்தனாக
ஒரு ஒருத்தருக்கும் ஒவ்வொரு அவகாசம்
சுயமாய் தீர்மானிக்கப்படட்டும். 

                              

வாழ்வாதாரம் என்றொன்றைத் தேடி..!

 
 
 
எனது நிழல் வரைந்துக் கொண்டிருக்கிறது இன்னும் என்னை.. 
எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாடல்??

எழுதிப் புரியாத வாழ்வு
எழுதப் புரிதலென்பதில்    
உன்னைப் போலவே எனக்கும்
உடன்படிதலில் இல்லை பேரன்பே! 

                                             

Reply
Forward