பா. சிவபாதசுந்தரம்
கழற்றி எறிந்த மாலையின்
பூக்களை மேயும் ஆடுகள்
அரிசிதனை கலைத்து
காசை பொறுக்கும் சிறுவர்கள்
காலையில் போன
கதிரவன் வருகின்றான்
மாலை மரியாதையுடன்
மந்திரியும் வர
நாலு நாள் கழித்து
கருமாதி முடிவாச்சு
நான் செத்து இன்றோடு
நாட்கள் பத்தாச்சு
பா. சிவபாதசுந்தரம்
கழற்றி எறிந்த மாலையின்
பூக்களை மேயும் ஆடுகள்
அரிசிதனை கலைத்து
காசை பொறுக்கும் சிறுவர்கள்
காலையில் போன
கதிரவன் வருகின்றான்
மாலை மரியாதையுடன்
மந்திரியும் வர
நாலு நாள் கழித்து
கருமாதி முடிவாச்சு
நான் செத்து இன்றோடு
நாட்கள் பத்தாச்சு
|
Click here
|
ஒரு ஊசாட்டமும் இல்லை
என் செம் மண் தெருவை
தார் ஊற்றி கொன்றது யார்
90களின் பின் அந்தியா இது
அப்போது காகங்கள் என்றாலும்
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்
ராணுவ வீரர்களின் சூ கால்கள்
தெருவின் விரை மீது
ஊன்றி ஊன்றி மிதிக்கும்
ஜீப் வண்டிகளின்
டயர் தடங்களில் நசுங்கிய
கைப் பாவைகளைக் கேட்டு
எந்தக் குழந்தை என்றாலும்
அழுது வடிந்து கொண்டிருக்கும்
முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு
தெரு நாய்கள் குரைத்து குரைத்து
அச்சம் எழுப்பி
தெருவெல்லாம் கதறி ஓடும்
90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்
உடல் கொடுகி விழி நிமிர்ந்து
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்
உரமாக விதைக்கப்பட்டவர்களின்
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்
விழுந்து கரிக்கும்
ஒரு ஊசாட்டமும் இல்லை
கைகளும் கண்களும்
கறுப்பு துணியால் கட்டபபட்டு
சும்மா கிடந்தது தெரு
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்
அழுந்தியிருக்கவில்லை
‘நீல’ வானத்தில் பறவைகளின்
சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு
எங்கள் விளையாட்டு திடல்களில்
யுத்த விதை விழுந்து மண் பிளந்து
வேர் கொண்டு எழுந்த நாட்களில்
ஒன்றா இது
1999ல் பயத்தோடு விளையாடி கழித்த
முன் இரா ஒன்றில்
‘ஜஃபர் மச்சான்’ இனம் தெரியாத
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்
அவர் மெளத்தாகி கிடந்த
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்
அவர் மரணத்திற்கு சாட்சியாய்
இருந்தது
பின் அதையும் கதற கதற
சுட்டு கொன்றுவிட்டார்கள்
அழகியசிங்கர்
சேலத்தில் உள்ள ஒரு எழுத்தாள நண்பர், ü400 பக்கங்களுக்கு மேல் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன், அதைப் புத்தகமாகக் கொண்டு வர, யாராவது பதிப்பாளரைத் தெரியுமா?ý என்று கேட்டார். ஒரு பதிப்பாளர் பெயரைக் குறிப்பிட்டேன். உடனே அவருக்குப் போன் செய்து பேசிவிட்டார். பதிப்பாளர் தற்போது நாவல் போடுவதில்லை என்று மறுத்துவிட்டாராம். கட்டுரைப் புத்தகங்களைத்தான் கொண்டு வருகிறாராம். திரும்பவும் எனக்கு போன் பண்ணி எழுத்தாள நண்பர் சொன்னார். அவர் நாவல் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் அவர் நூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய நாவல்கள் சினிமாப் படங்களாக ஒரு காலத்தில் வெளி வந்திருக்கின்றன. வெகுஜன வாசகர்களுக்கு அவர் நன்றாக அறிமுகமானவர்.
ரவிஉதயன்
பூவின் இதழ்களை
பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல
வரைந்திருந்தாள்.
பட்டாம் பூச்சியின் சிறகுகளை
பூவின் இதழ்களைப் போல்
வரைந்து முடித்து விட்டு
சிறு கடவுளாகி சிரிக்கிறாள் நேஹா.
இப்பொழுது நான் காண்கிறேன்!
பட்டாம் பூச்சியின் சிறகுகள்
விரிய பூ மலர்வதையும்!
பூவின் இதழ்களோடு
பட்டாம் பூச்சி பறப்பதையும்!
அழகியசிங்கர்
அலுவலக வளாகத்தில்
வைத்திருந்த யமஹா
வண்டி திருட்டுப்போயிற்று.
திருட்டுக்கொடுத்த சுவடே
தெரியாமல் இருந்தது இடம்
விரைப்பாய் காவலர்
விரைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தனர்
எடுத்துச் சென்றவன் சிரித்தபடியே
போயிருப்பான்
வண்டி வைத்திருந்தவரை
காண்டினில் சந்தித்தேன்
முகத்தில் உற்சாகத்துடன்
உலா வந்திருந்தார்
‘வேண்டும் மென் தகடுகள்’
என்றேன்
எடுத்து வருவதாகச் சொன்னவர்
முகத்தில்
அதிகப்படியான சந்தோஷம்
பின்
தெரிந்தது
அவர் வண்டி லபக்கென்று
போயிற்று
ஏனோ –
அன்று
வளாகம் முழுவதும்
கூட்டமாய் வண்டிகள்
ஒதுக்குப்புறமாய் வண்டியை
வைத்திருந்தேன் நானும்
திருட்டுப் போனதை அறிந்து
என் வண்டி இருக்கிறதா என்று
பார்த்தேன் பார்த்தேன்
பார்த்துக்கொண்டே இருந்தேன்
வண்டிகள் பலவற்றில்
என் வண்டியும் இருந்தது
எப்போதும் அவர் யமஹாவில்
ஒயிலாக தென்படுவார்ட
புது வண்டி தோரணையும் சேர்ந்து
முகத்தில்
நகைப்பு மறைய
எதிரில்
அலுவலக பாதுகாவலர்களுடன் வந்தார்
அங்குமிங்கும்
தேடி
உதட்டைச் சுழித்து
களைத்துப் போனார்
மென்தகடுகள் விற்கும் வியாபாரி
என்றதால்
‘இனி வெளி ஆட்கள்
வண்டிகள் வரக்கூடாது வளாகத்திற்குள்’
என்று உத்தரவிட்டது
அலுவலகக் கட்டிடம்
இரக்கமின்றி
பரபரப்பில்லாமல்
வெறும் செய்தியாய்ப்
போயிற்று திருட்டு..
-ஜெம்சித் ஸமான்
35 வயதை கடந்துவிட்ட
அநாதை அக்கா
இப்போது சகோதரிகளின்
பராமரிப்பில் இருக்கிறார்
வெய்யில்
மழை எது வந்தாலும்
யாரும் அந்த சகோதரியை கவனிப்பதில்லை
இரவில் உறங்குவதை தவிர
வீட்டின் உள்ளே வரவும்
அனுமதியில்லை
சிறு குழந்தைகளை போலதான்
அந்த அக்காவின் உலகமும் வேறு
ஆனால் குழந்தைகளுடன் இருப்பதை போல
இவர்களுடன் யாரும்
அன்பாக இருப்பதில்லை
ரொட்டி துண்டங்களை
அப்படியே உண்டுவிடும் அக்காவுக்கு
ரொட்டித் துண்டங்களை சிறிது சிறிதாக பிய்த்து
யாருமே உண்ணக் கொடுப்பதில்லை
சுடச் சுட தேநீரை அருந்தி முடிக்கும்
அக்காவுக்கு
சூடு ஆறிய தேநீரை
யாரும் அருந்தக் கொடுப்பதில்லை
குளிப்பாட்ட
ஆடை மாற்ற
முகம் கழுவ
உணவு அருந்த
தலை சீவ
அடம் பிடிக்கும் குழந்தைகளை
எந்த அம்மாக்களும்
அப்படியே விட்டு விடுவதில்லை
எனக்கு தெரிந்த அக்காவை மட்டும்
ஏன் அப்படியே விட்டு விடுகிறார்கள்
சிறு குழந்தைகள்
வீட்டு திண்ணைகளில்
சிறு நீர் கழிக்கும் போதும்
வீட்டு வாசலில்
மலம் கழிக்கும் போதும்
மகிழ்வோடு துப்பரவு செய்யும்
அன்பான அம்மாக்கள்
ஏன் எனக்கு தெரிந்த
அக்காவை மட்டும்
சுடு சொற்களால் வஞ்சிக்கிறார்கள்
மாத விலக்கு நாட்களென்றால்
அந்த அக்காவை கடப்பதற்கே
முகம் சுழிப்பாக இருக்கும்
அந்த அக்காவும்
ஒரு பெண்தான் என்பதை
எப்படி மறந்தார்கள்
தயவாக பணிக்கும்
அக்காவின் ஏக்கம் தளும்பும் விழிகளை
இவர்கள் ஒரு நாள் என்றாலும்
கூர்ந்து பார்த்ததில்லையா..?
நடு நிசி கடந்து
விழிப்பு தட்டும் போதெல்லாம்
குளிரில் விறைத்து நடுங்கும்
இரவின் அமைதியை
கீறிக் கொண்டு எழும்பும்
அந்த அக்காவின் சுய பிதற்றல்கள்
இப்போது கேட்பதில்லை
அக்கா அமர்ந்திருக்கும் வாசலில்
இப்போது பதிதாக
பூக் கன்றுகள் பூத்திருக்கின்றன
அவர்கள் குழந்தைகள் விழையாட
நிழல் கூடாரங்கள்
அமைத்திருக்கிறார்கள்
கூடாரமில்லாத முற்றத்து
வெய்யிலில்தான் ஒரு நாள்
அக்கா தண்ணீர் கேட்டு கேட்டே
இறந்து கிடந்தா