மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 35


அழகியசிங்கர்  

நீர் பருகும் மர நிழல்கள்

சத்யன்




டீயில் தோய்த்த ரொட்டித்துண்டுகள்
என் நாளேட்டில் புதிய பக்கத்தைத் துவக்கின.
இரவு மழையினால் இளம் குளிர்
கால்சராய் பையில் என்கைகள்
நேற்றைய உணவு நேரத்தை
தூக்கத்தில் மறக்கச் செய்து
ப்ளாஸ்டிக் போர்வைகளில்
முடங்கிக் கொண்டிருந்த குடிமக்கள், நகரை
லட்சியம் செய்யவில்லை.
காற்றில் மிதந்துவரும் ஸ÷ப்ரபாதம்
கொடிக்கம்பியில் வரிசைப் புறாக்கள்
வேலியில் படர்ந்திருந்த ஒற்றை ரோஜா
கிரிக்கெட் பயிலும் பெண்கள்
தேங்கி நிற்கும் குட்டையில்
சிறகு சிலிர்த்து குளிக்கும் குருவிகள்
இன்னும் எங்கள் உலகில்
செயற்கை படியவில்லை என்றன.
பருக்கைகளுக்குப் பாய்ந்துவரும் மீன்கள்போல்
நேற்றைய கனவின் சிதிலங்கள்
காப்பிக் கோப்பையில் கனவுமுகங்களைத் துழாவின.
பஸ்களின் ஹார்ன் ஒலியில்
பாஸ்பரûஸ கரைத்து ஆபீஸ் சேர்ந்தேன்.
திவசக் காக்கைகளுக்கு அன்னம் இட்டு
காத்திருக்கும் அந்தணனாய்
கடிதங்கûடிள எதிர்பார்ப்பது
பழக்கமாகிப்போனது.

KAIPPRATHIYAL SILA THIUTHANGAL – COLLECTION OF POEMS – SATHYAN – PUBLISHED BY MEETCHI BOOKS – 61 N G G O COLONY, DHARMAPURI 636 705 – FIRST EDITION :  MAY 1986 – PRICE : 6

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 34

அழகியசிங்கர்

மோனாலீஸ

வத்ஸலா




பாட்டியின் வைரமூக்குத்தி
அத்தையின் மஞ்சள்நிற புடவை
அப்பாவின் சட்டையிலிருந்து எட்டிப் பார்க்கும் பேனா
பச்சைநிற ஹெல்மெட்டுக்குள் தெரியும்
என் முகம்
கண்களால் நகைக்கும் தபால் மாமா
கீழ்வீட்டு க்ரோட்டன்ஸ் இலை
வாஷ்பேஸின் குழாயின் மேல்குமிழி

இவற்றுள் எதனைக் கண்டு
கனவில் இதழ் விரித்தாய்
என் பொடி மகளே?

நன்றி : சுயம் – வத்ஸலா – கவிதைகள் – பக்கங்கள் : 96 – வெளியீடு : ஸ்நேகா, 348 டி டி கே சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 – விலை : ரூ40 – முதல் பதிப்பு : 2000

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 33

அழகியசிங்கர்  



 உலகம்



ஷண்முக சுப்பையா




அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி.
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்.
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு.
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்.
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை.

நன்றி : எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு : ஏப்ரல் 1975 – 19 – எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 – விலை ரூ.3 – 62 பக்கங்கள்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 32

கண்ணன் – என் காதலன்   

 

சி சுப்பிரமணிய பாரதி 

ஆசை முகமறந்து போச்சே – இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தேற்றம் – அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலுமில் லாமல் – அவன்
உறவை நினைத்திருக்க முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் – அந்த
மாயன் புகழினையெப் போதும்

கண்கள் புரிந்துவிட்ட பாலம் – உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே – ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்க வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் – இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி?

நன்றி : பாரதி பாடல்கள் – ஆய்வுப் பதிப்பு – தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் – விலை ரூ.80 – தமிழ்நாட்டரசின் பாரதி நூற்றாண்டு விழாத் திட்ட உதவியில் வெளியாகும் புதிய பதிப்பு – இரண்டாம் பதிப்பு : 1989 


          

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 31

ஏனென்றால்….

ஜெ. பிரான்சிஸ் கிருபா


நீரென்று தெரியும் மீனுக்கு
மீனென்று தெரியாது நீருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

குரலென்று தெரியும் குயிலுக்கு
குயிலென்று தெரியாது குரலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

புயலென்று தெரியும் கடலுக்கு
கடலென்று தெரியாது புயலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

உயிரென்று தெரியும் உடலுக்கு
உடலென்று தெரியாது உயிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

கதிரென்று தெரியும் பகலுக்கு
பகலென்று தெரியாது கதிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நிலவென்று தெரியும் இரவுக்கு
இரவென்று தெரியாது நிலவுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நீயென்று தெரியும் எனக்கு
நானென்று தெரியாது உனக்கு
ஏனென்று கேட்காதே என்னிடம்!

நன்றி : சம்மனசுக்காடு – கவிதைகள் – ஜெ பிரான்சிஸ் கிருபா – பக்கம் : 111 – விலை ரூ.95 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 – தொலைபேசி : 044 – 24896979 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 30

சிட்டுக்குருவிப் பாட்டு

பாரதிதாசன் 


சிட்டுக்குருவிச் சிறுபெண்ணே,
சித்தம் போலச் செல்பவளே,
கொட்டிக் கிடக்கும் தானியமும்
கொல்லைப் புழுவும் திண்பவளே,
எட்டிப் பறந்தாய் மண்முழுதும்
ஏறிப் பறந்தாய் வானமெல்லாம்
இஷ்டப் படிநீ செய்கையிலே
ஏன்? என்பாரைச் üசீý என்பாய்.

உன்னைக் கேட்பேன் ஒருசேதி.
உரிமைத் தெய்வத்தின் மகளே,
தின்னத் தீனி தந்திடுவேன்.
தெரிவிக்காமல் ஓடாதே!
மன்னன் அடிமைப்பணி யில்லான்.
வாய்மைச் சிறகால் உலகேழும்.
மண்ணும் காந்திப் பெருமானார்
மகிழும் தோழி நீ தானா?

நன்றி : பாரதிதாசன் கவிதைகள் – மணிவாசகர் பதிப்பகம், 55 லிங்கித்தெரு, சென்னை 600 001 – இந்தப் பதிப்பில் புதிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன – விலை ரு.17.50 (பிளாஸ்டிக் உறையுடன்)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 29

நேற்றையக் கனவு

 

திரிசடை

என் நேற்றையக் கனவில்
அந்தப் பாலம் தகர்ந்தது.
வெகுநாள் வருந்தி,
வியர்வை சிந்தி,
கல்லுடைத்து,
வெயிலில் வெந்து,
பகிர்ந்துகொள்ள எவருமற்ற நிலையில்
தனியே ஏங்கி அழுது
சிறுகச் சிறுக நான் கட்டி முடித்திருந்த
அந்தப் பாலம்
நேற்று என் கனவில் தகர்ந்தது

மீண்டும் அதைக்கட்ட
எனக்குக் காலம் இல்லை.
காலம் இல்லையென்றால் கனவேது?
கனவு இல்லையென்றால் ஆக்கமேது?
என் கனவை உணர்ந்த ஒரு இதயம்
எனக்காக அதைக் கட்டும்
தன் கனவில்.

PUBLISHED BY : 
THAMIZH SANGAM OF 
METROPOLITAN WASHINGTON AND bALTIMORE INC.
C/O DR N GOPALSAMY, 11205 GREENWATCH WAY, 
NORTH POTOMAC MD20878, U S A

 

 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 28



 எதன் கைதி

 

சமயவேல் 

அடிக்கடி வெளியே
எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஜன்னல்
அல்லது நிலையோரம்
சமையலறை ஜன்னல்
பின்வாசல்
அல்லது ஓர ஜன்னல்
மாற்றி மாற்றி
எட்டி எட்டிப் பார்க்கிறேன்
அலுக்காமல் தெருவைப் பார்த்தபடியே
நிற்கிறேன் அல்லது
மொட்டை மாடி ஏறி
எல்லாத் திசைகளையும் பார்த்து
நிற்கிறேன்
எவ்வளவு பார்த்தாலும்
வீட்டுக்குள் நுழைந்ததும்
திரும்பவும்
எட்டி எட்டி

நன்றி : அகாலம் – கவிதைகள் – சமயவேல் – பக்கம் : 52 – வெளிவந்த ஆண்டு : மே 1995 – விலை ரூ.12 – சவுத் ஏசியன் புக்ஸ் 6/1 தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை 600 002

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 27



போகன் சங்கர் கவிதை

முத்தம் செய்வதெப்படி
எனக் கேட்ட
முதிரா முலைப் பெண்ணே…

முத்தத்தைப்
பலவகைகளில் செய்யலாம்

தெய்வத்தைத் தொழுவதைப் போல
பக்தியுடன்
சிலர் செய்வார்
பழம் சாப்பிடுவது போல
பசியுடன் சிலர் செய்வார்
பட்டாம்பூச்சி
பிடிப்பது போல்
பயத்துடன் சிலர் செய்வார்
முள்கரண்டியில்
இறைச்சியைக்
குத்துவது போல
இன்னும் சிலர் செய்வார்
நான் எப்போதும்
முத்தத்தை
யுத்தத்தைப் போலதான்
செய்வேன்

நன்றி : எரிவதும் அணைவதும் ஒன்றே – கவிதைகள் – போகன் சங்கர் – பக்கம் : 112 – விலை : ரூ.90 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 600 083, தொலைபேசி : 044-24896979 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 26


அழகியசிங்கர்  

தெரிதல் புரிதல்

பிரம்மராஜன்








நான் எழுதிக்கொண்டிருப்பதை
எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எழுதிக்கொண்டிருப்பதாக எழுதுவதை
எழுதுகிறேன்.
எழுதுவதை எழுதுகிறேன் என்று
எழுதிக்கொண்டிருப்பதை எழுதுகிறேன்.
எழுதுவதால் எழுதுகிறேன்.
தெரிகிறேன் என்பதால் பார்க்கிறாய்
பார்ப்பவன் பார்க்கப்படுகிறான்
தெரிகிறதா
கேட்கப்படுபவன் கேள்வியாக
தெரிபவன் தெரிதலாக
புரிபவன் புரிதலாக
பூப்பவன் புதிராக
அடுக்கடுக்காய் அதிர்ச்சியாக
சிந்திப்பவன் சிக்கலாக
சிற்பி உளியாக
ஓவியன் காணுதலாக
சிக்கல் சிரமமாக
சிரமம் சிந்தனையாக
சுடர் சாம்பலாக
சாம்பல் உன் எலும்பாக
பாஸ்பரஸ் பகற்கனவாக
பகற்கனவு பதியன் பூவாக
பூத்தது புதிராக புரியாதாய்
புதிய புத்தம் கவிதையாய்
அடுக்கடுக்காய் அணூ அணுவாய்
அலையில் அலையில்
தழுவித் தழுவி
கழுவிக் கரைந்த உடலாக
கரைமீது கால்.

நன்றி : ஞாபகச்சிற்பம் – கவிதைகள் – பிரம்மராஜன் – பக் : 64 – முதல் பதிப்பு : ஜøன் 1988 – விலை ரூ.12 – தன்யா – பிரம்மா பதிப்பகம், பர்ன் வூயு, குன்னூர் தெரு, ஊட்டி 643 001