பிணா என்ற பத்மஜா நாராயணன் கவிதைத் தொகுதி

இந்த முறை பிணா என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளேன். மொத்தம் 41 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. விலை ரூ.50. தமிழில் கவிதை நூல் கொண்டு வருவதுபோல ஆபத்தான சமாச்சாரம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் பல கவிதைத் தொகுப்புகள் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்ததில்லை. பெரிதாக விற்கவில்லை என்று கவலைப் பட மாட்டேன்.

பினா கவிதைத்தொகுப்பில் ஒன்றை கண்டுபிடித்தேன். அத் தொகுதியில் உள்ள கவிதைகளை சத்தமாக வாசித்தல். அப்படி வாசிக்கும்போது மனதில் பதியும்படி கவிதை வரிகள் நம்மை வசப்படுத்துகின்றன. மௌனமாக வாசிக்கும்போது கவிதை வரிகள் நம்மை விட்டு நழுவி விடுகின்றன. கவிதைகளை வாசிக்கும்போது அதிக இடைவெளி கொடுத்து வாசிக்க வேண்டும். வேசமாக ஒரு நாவலைப் படிப்பதுபோலவோ சிறுகதை வாசிப்பதுபோலவோ படிக்கக் கூடாது என்பது அடியேனின் கருத்து

அப்பாவைத் தேடி

1970லிருந்து நான் மேற்கு மாம்பல வாசி. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவரைச் சந்தித்தேன். அவர் பத்திரிகைகளில் கதை எழுதிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் கல்கி, அமுதசுரபி, கலைமகள். கதைப் போட்டிகளில் அவர் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி இருக்கின்றன.

ஒரு கதை பத்திரிகையில் வர என்ன செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் ஒரு டைப்ரைட்டர் முன் அமர்ந்துகொண்டு தட்டச்சு செய்து கொண்டிருப்பார். ஒரு கதையை எழுதிவிட்டு பலமுறை படித்துத் திருத்திக்கொண்டிருப்பார். அது செய்வது அவசியம் என்று சொல்வார். 1953 ஆம் ஆண்டிலிருந்து எழுதியிருக்கிறார். அவருடைய கதைத் தொகுதியான அப்பாவைத் தேடி புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறேன். 25 கதைகள். 278 பக்கங்கள். விலை ரூ.250.
இத் தொகுப்பு நூலை வ சா நாகராஜன் வீட்டிற்குச் சென்று முதல் பிரதியை அவருடைய மனைவியிடம் கொடுத்தேன்.

இடம் பொருள் மனிதர்கள்

என் நண்பர் மாதவ பூவராக மூர்த்தியின் கட்டுரைத் தொகுப்புதான் üஇடம் பொருள் மனிதர்கள்.ý இன்றைய சூழ்நிலையில் எழுத்தில் ஹாஸ்ய உணர்வு என்பது மருத்துக்குக் கூட கிடைப்பதில்லை. அதைப் போக்கும் விதமாகத்தான் மாதவ பூவராக மூர்த்தியின் இந்தப் புத்தகம் தெரிகிறது. அவர் ஒரு நடிகர், நாடக இயக்குநர், நாடகம் எழுதுபவர். சிறுகதை எழுதுபவர். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்பு இவருடையது வந்துள்ளன. இதெல்லாம் மீறி நல்ல மனம் கொண்ட மனிதர். இந்தப் புத்தகத்தைக் கொண்டு வர எனக்கு ரொம்ப நாட்கள் ஆயிற்று. அவருடைய ஒவ்வொரு கட்டுரையும் ரசித்துப் படிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவும் செய்யலாம்.
இன்று காலையில்தான் மூர்த்தி தன்னுடைய புத்தகப் பிரதியை அவருடைய நண்பர் ஆர் கேயிடமும், அவர் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
156 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.130 தான்.

வழங்க வளரும் நேயங்கள்…

என் ஒன்றுவிட்ட சகோதரர் எழுதிய புத்தகம்தான் üவழங்க வளரும் நேயங்கள்,ý என்ற சிறுகதைத் தொகுதி. ஒரு நீண்ட கதையும் பத்து சிறுகதைகளும் கொண்ட புத்தகம் இது. கதையை வர்ணனை வார்த்தை ஜாலம் இல்லாமல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த மாதம் ஐந்தாம் தேதி என் மாமா கோபாலன் அவர்கள் (80 வயது) பெற்றுக் கொள்ள அதை வழங்குபவர் ஸ்ரீதர்-சாமா என்கிற புனைபெயரில் எழுதும் சுவாமிநாதன் அவர்கள். 162 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.120 மட்டுமே. இந்த ஆண்டு விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரப்பட்ட நூல் இது.

இரண்டு புத்தகங்கள்

இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு என்னுடைய இரண்டு புத்தகங்கள் வர உள்ளன. இதைத் தவிர இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்களும். ஒவ்வொன்றாக முகநூலில் அறிமுகப்படுத்த உள்ளேன். ஒரு புத்தகம். üதிறந்த புத்தகம்ý என்ற பெயரில் உள்ள என் கட்டுரைத் தொகுப்பு. 207 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது. விலை : ரூ.170. இரண்டாவது என் முழுக் கதைத் தொகுப்பு. 664 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.600. ஆனால் புத்தகக் காட்சி அன்று வர உள்ளதால் சலுகை விலையாக ரூ.300க்கு இப் புத்தகம் தர உள்ளேன். இப் புத்தகத்தை வரும் 13.01.2018 க்குள் முன் பதிவு செய்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை பதிவு செய்தவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொலைபேசி மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் பதிவு செய்துகொண்டவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
ACCOUNT NUMBER No. 462584636
`IFSC CODE : IDIB 000A031
Tel No. 9444113205 e mail: navina.virutcham@gmail.com

வெளியில் இருந்து வந்தவன்

ஒருமுறைதான் சந்தித்தேன். 1991ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை அன்று சென்னைக்கு என்னைப் பார்க்க வந்தார். வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டேன். மனமுவந்து சாப்பிட்டார். பின் அவர் கவிதைத் தொகுதி எப்படி கொண்டு வரவேண்டுமென்று அறிவுரை கூறிவிட்டு கவிதைத் தொகுதி கொண்டுவர பணமும் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார். அவர் வேற யாருமில்லை உமாபதி என்கிற கவிஞர். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. கோவில்பட்டியா சென்னையா தெரியவில்லை.
என்னுடைய இந்த முகநூலை பார்ப்பாரா? தெரியவில்லை. அப்படி என்ன விசேஷம் அவரிடம். அவருடைய கவிதைத் தொகுப்புதான். ழ பத்திரிகையில் அவருடைய கவிதை ஒன்று பிரசுரம் ஆனது. அசந்து விட்டேன். மரணம் என்ற கவிதை அது.
தன் கவிதைத் தொகுதி புத்தகமாக வருவதில் ரொம்பவும் கூச்சப்படுவார் என்பதை அவருடைய நண்பார்களான சுந்தர ராமசாமியும், ராஜ மாத்தாண்டனும் தெரிவித்துள்ளார்கள். அவர்களுடைய தூண்டுதல் பேரில்தான் அவருடைய கவிதைத் தொகுதி வெளிவந்தது. அதுவும் விருட்சம் வெளியீடாக. 1991ஆம் ஆண்டு.
‘வெளியிலிருந்து வந்தவன்’ என்ற உமாபதி புத்தகத்துடன், ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற நகுலன் புத்தகமும் கொண்டு வந்தேன். ஒரே ஆண்டில்.
பின் பீக்காக் பதிப்பக உரிமையாளர் சசச்சிதானந்தத்துடன் சேர்ந்து 3 புத்தகங்களுக்கும் ஒரு அறிமுகக் கூட்டம் ஏற்பாடு செய்தேன். பீக்காக் பதிப்பகம் மௌனி கதைகள் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தது. நான் உமாபதி, நகுலனின் கவிதைத் தொகுதிகள்.
கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்தவுடன், யாரும் ஒரு புத்தகம் கூட நகுலனின் இரு நீண்ட கவிதைப் புத்தகத்தையும், வெளியிலிருந்து வந்தவன் புத்தகத்தையும் வாங்கவில்லை. சச்சிதானந்தன் கொண்டு வந்த மௌனி கதைகள் சில பிரதிகள் விற்றன. எனக்குப் பெரிய ஏமாற்றம்.
நான் கொண்டு வந்த இந்த இரண்டு புத்தகங்களைப் பற்றியும் எப்படி விவரிக்கிறது என்று தெரியவில்லை. உமாபதியின் கவிதைத் தொகுதியின் விலை ரூ.15தான் 80 பக்கங்கள் கொண்ட புத்தகம். அதேபோல் நகுலனின் இருநீண்ட கவிதைகள் புத்தகத்தின் விலை ரூ.12தான். ஆனால் யாரும் வாங்கத் தயாராய் இல்லை.
உமாபதி புத்தகம் லைப்ரரி ஆர்டர் வந்து எல்லாம் தீர்ந்து விட்டது. ஆனால் நகுலன் புத்தகத்தை வைத்துக்கொண்டு பல ஆண்டுகளாகத் தவித்துக்கொண்டிருந்தேன்.
சுந்தர ராமசாமி உமாபதியின் புத்தக முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறார் : ‘நமது கலைஞர்கள் ஒதுங்கி ஒளியக் கூடியவர்கள். நமது ஜோடனையாளர்கள் அசுர உழைப்பாளிகள். தமிழின் துரதிருஷ்டம் .இது,’ என்கிறார்.
உமாபதியைப் பற்றி ராஜ மார்த்ôண்டன் இப்படி எழுதுகிறார் :
‘உமாபதியின் கவிதைகள், சுய அனுபவத்தின் மனச் சாய்வற்ற வெளிப்பாடுகள். இன்று கவிதை எழுதுகின்ற பெரும்பாலோருக்கு அரிதேயான கவிதை மொழி இவருக்கு இயல்பாகக் கைகூடி வருவதும், தன்கேயான ஒரு கவிதை மொழியைத் தெரிந்து கொண்டதும், பிற கவிஞர்களிடமிருந்து இவரை தனித்து இனங்காட்டும் முக்கிய அம்சம். அவ்வகையில் குறிப்பிடத் தகுந்த தமிழ்க் கவிஞர் சிலரில் உமாபதியும் ஒருவர்,’ என்கிறார்.
நான் கொண்டு வந்த இரண்டு புத்தகங்களையும் புத்தகக் கண்காட்சியில் அந்த ஆண்டில் பல கடைகளில் கொடுத்து விற்க வைத்தேன். அன்றைய புத்தகக் காட்சி ஒரு மோசமான புத்தகக் காட்சி. எல்லா ஸ்டால்களும் பற்றி எரிய ஆரம்பித்தது. நான் விற்பதற்குக் கொடுத்த கவிதை நூல்களும் நெருப்பில் எரிந்துவிட்டன.
நிச்சயமாக ‘வெளியிலீருந்து வந்தவன்’ என்னிடம் கிடைக்காது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். இதோ ஒரே ஒரு புத்தகம் கிடைத்துவிட்டது. உடனே அப் புத்தகத்தை ஸ்கேன் பிரிண்ட் செய்துவிட்டேன். மிகமிகக் குறைவான பிரதிகள்தான் அச்சடித்துள்ளேன். 80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.50தான் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை இங்கு தர விரும்புகிறேன்.
என் கவிதை

மூட்டுகளில் பரவலாக வலி
உணவு நேரத்தில் பசி கரைகிறது
பச்சை பிடிக்கும். வானம்
நீலமாய் இருக்கிறது. மனைவி
தினம் சினிமா கேட்கிறாள். வீட்டில்
தொலைக்காட்சி பார்க்கிறாள்.
பிள்ளைகளின் புத்தகங்கள்
அருவருப்பாய் இருக்கிறது.
கடையில் üசானிடரி நாப்கின்ý
கேட்க கூச்சமாய் இருக்கிறது.

பாதசாரிகசள் காரணத்தோடு
இடித்துப் போகிறார்க. தினசரிகள்
சுட்டுப் பொசுக்குகின்றன.
செருப்பு அறுந்த அடுத்த அடி
எச்சில் மிதக்கிறது.
படிக்க ஆசையாய் இருக்கிறது.
கவிதைகள் இல்லாத
கவிதைப் புத்தகங்கள்
காட்சி சாலைக்குள் மனிதன்
வெளியே
அலகு உதிர்ந்த கிளி
தோலுரித்த ஆடு.

எனது கவிதைகள்.

திரும்பவும் உமாபதியை சந்தித்தால் அவருடைய கவிதைப் புத்தகத்தைக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன்.

அழகியசிங்கர் கதைகள்

விருட்சம் வெளியீடாக ‘அழகியசிங்கர் கதைகள்’ என்ற பெயரில் என் முழுத் தொகுப்பைக் கொண்டு வர உள்ளேன். வருகிற 12ஆம் தேதி புத்தகம் தயாராகிவிடும். 650 பக்கங்களுக்குக் குறையாதப் புத்தகமாக வருகிறது. 64 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், 1 நாடகம், ஐந்தாறு சின்னஞ்சிறு கதைகள். நான் முதன்முதலாக எழுதிய கதையிலிருந்து இப்போது எழுதி இருக்கும் கதை வரை கொண்டு வந்திருக்கிறேன். எப்படி கதை எழுத வந்தேன், எப்படி கதையை எழுதுகிறேன் என்று ஒரு கட்டுரை தயார் பண்ணி எழுதி முடித்திருக்கிறேன். இதுவரை விருட்சம் வெளியீடாக கெட்டி அட்டைப்போட்ட புத்தகமாக எதையும் நான் கொண்டு வந்ததில்லை. மேலும் இவ்வளவு பக்கங்களுக்கு எந்தப் புத்தகமும் கொண்டு வந்ததில்லை. என்னுடைய முழு கதைத் தொகுதியை இவ்வாறு கொண்டு வருகிறேன். இன்னும் சில தினங்களில் புத்தகமும் தயாராகிவிடும். இது சம்பந்தமாக எளிமையான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளேன்.

6 குறுநாவல்கள் கணையாழியில் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ‘அங்கிள்’ என்ற என் சிறுகதைக்கு கதா விருது கிடைத்திருக்கிறது.

650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.600. ஆனால் 12ஆம் தேதிக்குள் வாங்குபவர்களுக்கு ரூ.300 க்குத் தர உத்தேசித்துள்ளேன். தபால் செலவு அதிகமாகும் என்பதால், சென்னையில் உள்ளவர்கள் புத்தகக் காட்சியின்போது விருட்சம் ஸ்டாலில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கீழ்க்கண்ட கணக்கில் பணத்தைச் செலுத்தி எனக்குத் தகவல் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முன்பே என் அறிவிப்பைப் பார்த்து பணம் செலுத்தியவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
ACCOUNT NUMBER No. 462584636
`IFSC CODE : IDIB 000A031
Telephone Nos. 9444113205 and 9176613205

650 பக்கங்களுக்கு மேல்

62 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம் கொண்ட üஅழகியசிங்கர் கதைகள்ý என்ற மொத்தப் படைப்புகளுக்கான புத்தகம் கொண்டு வருகிறேன். புத்தகக் காட்சிக்குள் வந்துவிடும். 650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகம் கெட்டி அட்டைப்ப்போட்டு தயாரிக்கப்பட உள்ளது. இதன் விலையை ரூ.600 ஆக வைப்பதாக உள்ளேன். நான் இதுவரை 12 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இத் தொகுப்பு என் 13வது தொகுப்பு.

என் முதல் கதையின் பெயர் üசெருப்பு.ý 1978ஆம் ஆண்டு எழுதியது. ஒரு சிறுபத்திரிகையில்தான் பிரசுரம் ஆனது.

அந்தக் கதையைப் படித்துவிட்டு என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, ‘உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,’ என்றாள். உடனே நான் என் காலில் மாட்டியிருந்த செருப்பைப் பார்த்தேன்.

‘உங்கக் கால் செருப்பைச் சொல்லலை, சார்.. உங்கக் கதையைச் சொல்றேன்,’ என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு என் கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அந்த நேரத்தில அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதேபோல் முதன் முதலாக போராட்டம் என்ற என் குறுநாவல் ஒன்று கணையாழியில் அக்டோபர் 1986ல் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன். என்னால் நம்ப முடியவில்லை. இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியம்தான் அப்போது. ஆனால் அந்தத் தருணத்தில் வங்கியில் எழுதிய சிஎஐஐபி தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன். அப்போது கணையாழியில் குறுநாவல் வருவதுதான் வெற்றி என்று நினைத்துக்கொண்டேன்.

அப்போது கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் ஒன்று சொன்னார். ”கதைக்காக பணம் அனுப்ப மாட்டோம். ஆனால் கணையாழி பத்து வருடங்கள் வரும்,” என்று. ஆனால் சில மாதங்களிலேயே அனுப்புவதை நிறுத்தி விட்டார். ஏன் என்று நானும் கேட்கவில்லை. போராட்டம் என்ற கதையைத் தொடர்ந்து 6 குறுநாவல்கள் கணையாழில் ஒவ்வொரு வருஷமும் தி ஜானகிராமன் போட்டியில் வெளிவந்து கொண்டிருந்தது.

இதோ ‘மாற்றம்’ என்ற பெயரில் 67வது சிறுகதையும் டிஸம்பர் 2017ஆம் ஆண்டு வெளிவந்து விட்டது. இன்னும்கூட என் கற்பனையில் கதை இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் முன்பு இருந்த முனைப்பு கொஞ்சம் குறைந்துவிட்டது.

இதோ கதைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்ற என் ஆர்வம் சற்றும் குறையவில்லை. 650 பக்கங்கள் தயார் செய்துவிட்டேன். இப்புத்தகத்தின் விலை ரூ.600. ஆனால் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.300க்குக் கொடுக்க விருப்பம். புத்தகக் காட்சி வரைதான் இந்தச் சலுகை.

இதைப் படிப்பவர்களுக்கு இப் புத்தகம் வேண்டுமென்றால் ரூ.300 கொடுத்தால் போதும். நவீன விருட்சம் கணக்கில் பணம் அனுப்பி பதிவு செய்துகொள்ள வேண்டுகிறேன். கணக்கைப் பற்றிய விபரம் இதோ:

Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
ACCOUNT NUMBER No. 462584636
`IFSC CODE : IDIB 000A031

பணத்தைக் கட்டிவிட்டு எனக்குத் தகவல் அனுப்பவும். என்னுடைய தொலைபேசி எண்: 9444113205 9176613205.

நானும் புத்தகம் வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் பங்களூர் சென்றேன்

இந்த மாத முதல் வாரத்தில் நான் பங்களூர் சென்றேன். நெருங்கிய உறவினரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக. அங்கு மூன்று நாட்கள் இருந்தேன். ஒரு கல்யாணம் மூன்று நாட்கள் நடப்பதை அறிந்து ரொம்பவும் யோசனை செய்துகொண்டிருந்தேன். மூன்று நாட்களாக நடக்கும் திருமணத்தில் ஏற்படும் செலவுகளைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இது குறித்து யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு திருமணம் ஒரு நாளிலேயே முடிந்துவிட வேண்டுமென்று நினைக்கிறேன்.
மூன்று நாட்கள் அங்கே இருக்கும்படி இருந்ததால் நான் லேப்டாப் எடுத்துக்கொண்டு போயிருந்தேன். அங்கே போய் விருட்சம் 104வது இதழைக்கொண்டு வந்தேன். லாப்டாப் மூலம் அச்சடிக்க அனுப்பி அச்சடித்தேன்.
மீதி நாட்களில் புத்தகக் கடைகளுக்குச் செல்ல தீர்மானித்திருந்தேன். முன்பு நான் பார்த்த பங்களூர் மாதிரி இல்லை. முன்பு என்றால் நான் மெஜஸ்டிக் போய் அங்கிருந்து பஸ் பிடித்து எல்லா இடங்களுக்கும் செல்வேன். எங்கே போகவேண்டுமென்று ஒரு இலக்கிய நண்பரைக் கேட்டேன். அவரும் எனக்குத் துணையாக வந்தார். அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டதால் குறிப்பிட வில்லை. மகாத்மா காந்தி ரோடில் உள்ள பிளாஸம்ஸ் என்ற இடத்திற்கு ராஜாஜி நகரில் உள்ள சத்திரத்திலிருந்து கிளம்பிப் போய் சில புத்தகங்கள் வாங்கினேன். புத்தகக் கடை பெரிய இடமாக இருந்தது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மேலும் பழையப் புத்தகங்களையும் விற்கிறார்கள். புத்தகம் பின்னால் அட்டையில் விலையைத் தீர்மானித்து விடுகிறார்கள். அதிலிருந்து குறைப்பது இல்லை. நாலைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு சத்திரத்திற்கு வந்து விட்டேன்.
அடுத்தநாள் எழுத்தாளர் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுத்தேன். பின் அவருடன் இன்னும் சில புத்தகக் கடைகளுக்குப் போனேன்.
சுதா புக் ஹவுஸ் என்ற இடத்திற்குச் சென்றேன். ரொம்ப சின்ன இடம். அந்த சின்ன இடத்தில் ஏகப்பட்ட புத்தகங்கள். அங்கே பல ஆண்டுகளுக்கு முன்பே போகவேண்டுமென்று நினைத்தேன். அந்தக் கடை சத்திரம் இருக்கும் இடத்திலேயே பக்கத்தில் இருந்தது.
எல்லாம் பழைய புத்கங்கள். விலை பின் அட்டையில் அவர்கள் எழுதியிருப்பதுதான். அதற்குக் குறைந்து அவர்கள் புத்தகங்களை விற்கத் தயாராய் இல்லை. அங்கிருந்து இன்னும் ஆக்குருதி என்ற பழைய புத்தகக் கடைக்குப் போனேன். அங்கு சில புத்தகங்களை வாங்கினேன். எல்லாம் பழையப் புத்தகங்கள். திருப்பிக்கொடுத்தால் பாதி விலைக்கு இன்னொரு புத்தகம் எடுத்துக்கொள்ளலாமாம்.
நான், ‘தி புக் தீவ்’ என்ற புத்தகத்தை வாங்கினேன். ரொம்ப பழைய புத்தகம். விலை ரூ.250. அப் புத்தகத்தில் இப்படி எழுதியிருந்தது.

Dear Viji and Sunil,

Hope you Enjoy This Book As much As I did.Don’t know if there is a book in all of us, but thereis definitely ‘Book Thief” in some of us.

Love
Wheny
12.09

அப்புத்தகத்தில் எழுதியிருந்த வாசகங்கள் என்னைக் கவர்ந்தன. நான் மொத்தம் 14 புத்தகங்கள் வாங்கினேன். மொத்தம் ரூ.3500 வரை ஆயிற்று. ரூ.25
என்னன்ன புத்தகங்கள் வாங்கினேன் என்பதை இங்கே கொடுக்க விரும்புகிறேன். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள்.

1. No More Questions – The Final Travels of U G Krishnamurti – Louis Brawley 2. Though is your enemy – Coversations with U G Krishnamurti 3. Osho Fragrance – Swami Chaitanya Keerti 4. Intuition – Knowing Beyond Logic – Insighrts for a mew way of living – OSHO 4. Murakami – Wind PinBall 5. Kazuo Ishiguro – When We Were Orphans 6. Umberto Eco – Travels in Hyper Reality 7. Kundera – Immortality 8. J M Coetz – The Master of Petersburg 9. Dylan Thomas – Collecrted Poems 1934-1952 10. The Periodic Table – Primo Levi 11. Other People’s Trades – Primo Levi 12. the famished road – BenOkri 13. the Book Thief – Markus Zusak

சத்திரத்திற்கு நான் திரும்பியபோது யார் கண்ணிலும் படாமல் புத்தகங்கள் நான் தங்கியிருந்த அறையில் பதுக்கினேன். வழக்கம்போல் புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டுப் பார்க்கிறேன். இனிமேல்தான் ஒவ்வொன்றாகப் படித்துவிட்டு என்ன எழுத முடியுமென்று பார்க்க விரும்புகிறேன். .

இன்னொரு முறை பார்க்க வேண்டும்….

நான் இந்த 15வது சென்னை சர்வதேசப் பட விழாவில் பார்த்த ஒரே தமிழ்ப்படம் üமனுசங்கடாý. அம்ஷன்குமார் இயக்கியப் படம் இது. இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு எனக்குத் தோன்றியது இலக்கிய நண்பர் ஒருவருடன் பல ஆண்டுகளுக்கு முன் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த குருதத்தின் படம். படம் முடியும் தருவாயில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலக்கிய நண்பர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார். அவருடைய அழுகை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஒரு சினிமாப்படம் என்பது என்ன? அது நமக்குத் தெரியாத இன்னொருவர் வாழ்க்கையைச் சொல்வது. அதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும் திகைப்பும் ஏற்படுகின்றன. சிலசமயம் தாங்க முடியாத வருத்தத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. அம்ஷன்குமார் படம் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
வாழ்க்கையில் தென்படும் சோகம் மனதின் துயரத்தை அதிகரித்துவிடும். படம் பார்த்தாலும் இந்த உணர்வு ஏற்படாமல் இருக்காது. ஆனால் நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு முக்கியம். மனுஷங்கடா படம் கூட ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை ஒரு சோக நிகழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது. அப்பாவின் மரணத்தால் துயரமடைகிற இளைஞன் கோலப்பன் தன்னுடைய கிராமத்திற்குச் செல்கிறான். அங்கே அவன் எதிர்கொள்கிற பிரச்சினை எல்லோர் மனதிலும் ஒரு கேள்விக்குறியை உருவாக்காமல் இருக்காது.
ஊருக்குச் சென்ற இளைஞனைத் தேடி அவனுடைய தோழி அவன் கிராமத்திற்கு வருகிறாள். அவன் வசிக்குமிடத்தை பாதையில் எதிர்படுகிற இளைஞர்களிடம் கேட்கிறாள். அப்படிக் கேட்பதன் மூலம் அவனமானப்படுகிறாள். அவளுக்கு அந்தக் கிராமம் எப்படி என்பது புரிந்து விடுகிறது.
பிணத்தின் முன் கோலப்பனின் அம்மா பாடுகிற ஒப்பாரி பாடலுடன் படத்தின் முக்கியக் கட்டம் நகர்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அம்ஷன்குமார் படம் எடுத்துள்ளார். இப்படம் பார்க்கும்போது பல தமிழ்ப் படங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. உண்மையில் இந்தப் படத்திற்கும் ஞாபகத்தில் வருகிற அந்தப் படங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கதை விஷயத்தில். உதரரணமாக ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், ஜான் அப்ராஹமின் அக்ரஹாரத்தில் கழுதை
ஏன சில பாலசந்தர் படங்களை நாம் எப்படிப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோமோ அப்படித்தான் இந்தப் படத்தையும் நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். ஆனால் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருப்பதாகப் படுகிறது அந்தப் படங்களைப்போல் கதை நகர்கிற விதத்தில்.
கோலப்பன் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என்று சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பிணத்தை எடுத்துக்கொண்டு பொது வழியில் போய்ப் புதைக்க முடியவில்லை. தலித்துக்கென்று இருக்கின்ற வழியில் செல்ல முடியவில்லை. அது காட்டுப் பகுதியாக இருக்கிறது. தலித்துக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள போராட்டம்தான் இந்தக் கதை.
பின்னணி இசை இல்லாமல் கிராமத்தின் மௌனத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். பார்வையாளர்களுக்கு தாமும் ஒரு கிராமத்தில் இருப்பதான உணர்வு ஏற்படாமல் இருக்காது. எந்தக் காட்சியிலும் மிகைப்படுத்தப்படாத உணர்வை எழுப்புகிறார்.
கோலப்பனின் அம்மா அவனுடைய தோழிக்கு அவன் அக்காவை அறிமுகப்படுத்தும் காட்சி துக்கத்திலும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
பொது வழியில் பிணத்தை எடுத்துக்கொண்டு போக கோர்ட் சாதகமாக தீர்ப்பு வழங்கியும், பிணத்தை எடுத்துக் கொண்டு போக முடியவில்லை. ஆதிக்க சாதியினரின் கெடுபிடிதான் இதற்குக் காரணம். இங்கு போலீஸ்காரர்கள், அரசாங்க ஊழியர்கள் என்று எல்லோரும் எதிராக உள்ளார்கள். சென்னையில் ஒரு மூலையில் இருக்கும் எனக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
கோலப்பனையும் அவன் உறவினர்களையும் போலீஸ் வண்டியில் வலுக்கட்டாயமாக அழைத்துப் போகிறார்கள். கோர்ட் உத்தரவு இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் போலீஸ் வண்டியில் அழைத்துக்கொண்டு போகும்போது ஒரு காட்சி வெளிப்படுகிறது. போகும் வழியில் ஆதிக்க ஜாதியினர் கல்லெடுத்து அடிக்கிறார்கள். பார்க்கக் கொடுரமாக இருக்கிறது.
இறுதியில் இன்குலாப் எழுதிய கவிதை பாடலாக ஒலிக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம். படம் தொய்வில்லாமல் வசனத்திற்கு அதிகம் முக்கியத்துவம் தராமல் காட்சியாகவே பலவற்றைக் காட்டியிருக்கிறார்.
இந்தப் படம் தியேட்டரில் வெளிவந்தால் இன்னொரு முறை பார்ப்பதாக இருக்கிறேன்.