கதா மஞ்சரி கதை -3

அழகியசிங்கர்
 
 
 
வீடு நிறைந்த பொருள்
 
 
 
ஒருவன் பதினாயிரம் வராகன் வைத்திருந்தான். அவன் தனக்கு இறக்குங்காலம் அடுத்திருப்பதை அறிந்தான். தன் இரு மக்களையும் அழைத்தான். ஒவ்வொருவனுக்கும் ஐந்தைந்து பணங் கொடுத்ôன். üüஇதனாலே வீட்டை நிறையும்படி செய்பவனுக்கு என் பொருள் முழுவதும் தருவேன்,ýý என்ளான். அவர்களிலே மூத்தவன் ஐந்து பணத்துக்கு மலிந்த பொருளாகிய வரகு வைக்கோலை வாங்கிவந்து வீடு நிறையக் கொட்டி பரப்பி வைத்தான். இளையவன் நல்ல விளக்கு வாங்கிவந்து வீடெங்கும் விளக்கமாகப் பொருள்கள் தெரிய ஏற்றி வைத்தான். தந்தை அவ்விரண்டையும் பார்த்தான். இளையவன் அறிவை வியந்து பாராட்டினான். அவனுக்கே தன் உடைமை முழுவதையும் ஒப்புவித்தான். ஆதலால், அறிவுடை ஒருவனே பெரியவன் ஆவான்.
 
கதா மஞ்சரி கதையை இப்போது எழுதினால் எப்படி இருக்கம்?
 
ஒரு பணக்காரர். மரணம் அடையும் தறுவாயில் அவர் இருக்கிறார். தன் சொத்து முழுவதும் அவருடைய இரண்டு புதல்வர்களில் யார் அறிவில் சிறந்தவர்களோ அவர்களுக்கு அளிக்க விரும்புகிறார். புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு அனுப்பினார். இருவரகளும் வந்தனர். ‘உங்கள் இருவருக்கும் ஒரு பரிட்சை வைக்கப் போகிறேன். அதில் யார் வெற்றிப் பெறுகிறாரோ அவருக்கு என் சொத்து முழுவதும் கொடுக்க விரும்புகிறேன்,’ என்றார். மகன்கள் இருவரும் சிறிது நேரம் யோசித்தார்கள். அப்பாவுக்கு மூளை பிசகிப் போய்விட்டது என்று முடிவுக்கு வந்தார்கள். ஆனாலும் அப்பாவிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் அப்பா ஆளுக்கு ஒரு லட்சம் ருபாய் பணம் கொடுத்து, ‘இந்த வீட்டில் உள்ள அறை முழுவதும் ஒரு லட்சம் ரூபாயக்கு எதாவது வாங்கி நிரப்ப வேண்டும். யார் நிரப்புகிறார்களோ அவர்கள் அறிவை மெச்சி என் சொத்து முழுவதும் தரப்படும்’ என்றார். மூத்தப் பையன் யோசித்தான். இந்த அறை முழுவதும் நிரப்ப கவிதைப் புத்தகம்தான் லாயிக்கு என்று கவிதைப் புத்தகங்களாக வாங்கி வீடு முழுக்க நிரப்பி விட்டான். இளையவன் யோசித்தான். பெரிய குத்துவிளக்குப் போதும் என்று அவனுக்குத் தோன்றியது. பொரிய குத்துவிளக்கை வாங்கிக்கொண்டு, எண்ணெய் இட்டு விளக்கு ஏற்றினான். அவர்கள் அப்பா அவர்கள் இருவரும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தார். பெரிய பையன் மீது கோபமான கோபம். யாராவது கவிதைப் புத்தகங்களை வாங்குவார்களா என்ற கோபம்தான். இரண்டாவது பையனின் செய்தது அவருக்குப் பிடித்திருந்தது. வீட்டிற்கே விளக்கு ஏற்றிவிட்டான் என்று எண்ணினார். தன் சொத்து முழுவதும் இரண்டாவது பையனுக்கு எழுதிக் கொடுக்க எண்ணி அவர் கருத்தைக் கூறினார். முதல் பையன் அவர் பேச்சைக் கேட்டு, ‘கிழவா.. உனக்கு புத்தி எதாவது பிசகிப் போச்சா…ஒழுங்கா பாதிப் பாதியாக சொத்தைப் பிரித்துக்கொடு.. இல்லாவிட்டால் கொலை விழும்,’ என்று மிரட்டினான்.
 
இரண்டாவது பையனோ, ‘சொன்னபடி முழு சொத்தையும் என் பெயருக்கு மாற்று….இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன்,’ என்று மிரட்டினான்.
 
செல்வந்தார் அவர்கள் இருவரும் பேச்சைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
 
 

“கதா மஞ்சரி கதை -3” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன