மீன்கொத்தி ஆறு

மீன்கொத்தி ஆறு                       




கரை ததும்பி
நகர்கிற ஆறு
நின்றவாறு பார்க்கிறீர்கள்


உங்கள் கால் விரல்களை
அதன் ஈர நுனிகள்
வருடி விடுகின்றன


நீர்க்குமிழிகள்
உங்களை
மிதக்க அழைக்கின்றன


உங்கள் மூச்சுக்காற்றின்
ஓசை போல
ஆறு உங்களோடு
தனிமையில் இருக்கிறது
அதன்
வசீகிர நீர்ச்சுழி
உங்களை வரவேற்கிறது


திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள்
சட்டென்று
ஒரு துளிசிதறாமல்
மீனைப்போல
தாவிப் பாய்கிறீர்கள்


காத்திருந்த ஆறு
மீன் கொத்தியாகி
உங்களை கவ்விக்கொல்கிறது!

ரவிஉதயன்

“மீன்கொத்தி ஆறு” இல் ஒரு கருத்து உள்ளது

இராஜராஜேஸ்வரி உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன