ஏழாம் அறிவு

 
     
சாவதற்கு
பயமில்லாவிட்டாலும்
வருத்தமாக
இருக்கிறது.
புலன்கள் ஐந்தைக் கொடுத்து

ஒரு புல்லரிக்கும் உலகத்தை

நிரந்தரம் போல் காட்சியாக்கிப்
பின்
கண்களை மூடி விடக்
காத்திருக்கும்
கடவுளிடம் கோபம்
தடுத்தாலும் வருகிறது..
ஒரு வேளை ஆறுக்கும்
மேல் ஏழாவதாக
அறிவொன்றைக்
கொடுக்கமாட்டானா?
இறந்தவுடன் எனக்கே
சொந்தமான
எழிலுலகம் இன்னொன்றைக்
கண்டடைந்து
செத்தாலும் சாகாமல்
அங்கே
சலிக்கும் வரை
வாழ்ந்திருக்க!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன