இரு கவிதைகள்

முதலில்

முதலில் யானை மேலிருந்து இறங்கு
பிறகு பேசுவோம்
மராமத்து
வெள்ளைத்துரை உனைக் கண்டு
வேர்த்து வெளவெளத்து
வேஷ்டியைத் தழையவிட்டு
வளைந்து வணங்கும் காலம் போச்சு
கொலம்பஸ் பிறக்குமுன்பே
கடலோடி வணிகர் நாங்கள்
அதனால் பையா அடக்கி வாசி
எங்கள் சந்தை எங்கள் சட்டம்
எந்தக் கொம்பனும் அதற்கு அடக்கம்
சம்மதம் என்றால் கடையை விரி
சரிப்படாதென்றால்
கடையைக் கட்டு
அரிசி, பருப்பு, ஆமணக்கு,
காய், கறி மிளகாய், உப்பு,
மஞ்சள், வெல்லம், மாம்பழம்,
வாங்கலாம்.  உன் சரக்கை நீ
விற்கலாம்.  வாரந்தோறும் சந்தை உண்டு
அடாவடி விலைக்கு அனுமதி இல்லை
அடிமை வாணிபம் செய்வதற்கில்லை
வணிகம் செய்ய வந்தவன்
வணிகம் மட்டும் செய்வது நல்லது
உலவு பார்ப்பது கலகம் செய்வது
சித்துவேலை ஏதும் செய்தால்
சீவி விடுவோம் பனங்காய்போல.
உள்கோட்டில் பிஸ்டலை மறைத்து
உதட்டோ ரம் புன்னகை மலர்த்தி
கைக்குலுக்கும் கபடம் எனக்கும் தெரியும்
நெடுநாள் முன்பு பிஸ்டல் செய்வது
குடிசைத் தொழிலாய் இருந்தது
எங்களூரில்…..

இலவசம்

கோழி வாங்கினால்
முட்டை இலவசம்

ஜாடி வாங்கினால்
மூடி இலவசம்

பழம் வாங்கினால்
கொட்டை இலவசம்

கடன் வாங்கினால்
அட்டை இலவசம்

கட்டில் வாங்கினால்
மெத்தை இலவசம்

மெத்தை வாங்கினால்
தலையணை இலவசம்

என்ன வாங்கனால்
எத்தரே நொட்டுவது இலவசம்.

“இரு கவிதைகள்” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன