தேவதையும் கோடரியும்


 

மரம் வெட்டி
தான் தொலைத்த கோடரி
வேண்டி நின்றான்

தேவதையிடம் 
தொலைத்த கோடரி தவிர

வேறெந்த உலோகக்கோடரியும்
வேண்டேன் என்றான்
அவன்

எந்தக்கோடரியும்

மரத்தை வெட்டவே பயன்படும்
ஆதலால் உனக்கு கோடரிகள்
நான் கொடுப்பதிற்கில்லை
கனி தரும் கன்றுகள்
யாம் தருவோம்
பயிர் செய்து பிழைத்துக்கொள்
என்றாள் தேவதை.
மரக்கன்றுகள் வாங்கி
அவன் சென்று விட்டான்
கொடுத்த மகிழ்வில்
தேவதையும்
மறைந்து விட்டாள்.
இப்போது என்
கையில் இருக்கிறது
அந்தக்கோடரி. 

“தேவதையும் கோடரியும்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன