விஸ்வரூபம்

மூன்றடி நிலம்தானே என்றிருந்தமஹாபலியின் கர்வத்துடன் இருந்துவிட்டேன்வெறும் பார்வைதானே என்றுவானளந்து மண்ணளந்துஅவன் தலை அளந்தவாமனன்போல் உன் காதல்என்னுயிர் அளந்து உடலளந்துஇன்னும் ஓர் அடிக்கு எதை அளக்க உன்னில்எனக் கேட்டபடி………………

என் ஏகாந்த வனம்


எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
என் அடர்ந்த வனங்களில்
படர்ந்த முதல் சூரியக் கிரணம் நீ
ஏனோ இப்போது
என் காட்டில் குயில்கள் எல்லாம்
கூவித் திரிகின்றன
உன் பெயரை….
உன் வருகைக்குக் காத்திருக்கும்
என் வாசனைப் பூக்கள்….
நீ கால் நனைக்க
கன்னம் சிவக்கும்
என் காட்டு நீரோடை…..

எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
ஏனோ இப்போது
என் வசமில்லை என் வனம்
ஏன் நுழைந்தாய் உன் புல்லாங்குழலுடன்
என் ஏகாந்த வனத்தில்……?