கவிதையின் ஜனனம்

படிப்பவர்கள் இல்லையென்றே
எழுதுபவர்களின் கைகள்
எழுத மறுத்தும்
கவிதைகள் அவர்களை
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றன.
காதில் வந்து வண்டு போல்
சதா ரீங்கரித்து
கொண்டே இருக்கின்றன
கவிதைகள்.
மூக்குகளை மூர்ச்சையாக்குகிற
அளவிற்கு ஊடுருவிப்
பாய்கின்றன
கவிதைகளின் வாசம்.

தங்கப் பெண்

ஃபேன்சி கடையில்
வேலை பார்க்கும் அவள்
அலங்காரமாய் பேசி
கவரிங் நகைகளை
விற்று வீட்டுக்கு
திரும்பும் வழியில்
வழக்கம் போல் அந்த
பெரிய நகை கடையில்
தொங்கும் தங்க
விலைப் பட்டியலைப்
பார்த்தாள். தற்போதெல்லாம்
கிராமின் விலைக்கும்
அவள் எதிர்கால
நம்பிக்கைக்குமான தூரம்
வெகு தொலைவாகி
விட்டதால் அவள்
அந்த கடை வருகிறபோது
குனிந்தே செல்கிறாள்.
அந்த கடையில்
வேலை பார்க்கும்
அந்த பையன்
மிகவும் வருத்தத்தில்
இருக்கிறான் இப்போதெல்லாம்
அவள் தன்னை
பார்ப்பதில்லை என்று.

தாத்தா தந்த கடிகாரம்



குமரி எஸ். நீலகண்டன்
எனது தாத்தா இறக்கும் முன் ஒரு நாள் அவரது ஓடாத பழைய கடிகாரத்தை எனக்கு பரிசாக தந்துவிட்டு போனார்.
தாத்தாவின் இதயம் துடிக்கும் அதை நான் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன்.
உலகம் போற்றும் அந்த சிற்பி தற்போது புதிதாய் கவிதை எழுத துவங்கி இருக்கிறார் கவிதை பக்கம் செல்லாதவர்களும் தற்போது அவரது கவிதையைப் புகழ்ந்து போற்றுகின்றனர். கவிதையே போடாத பத்திரிகைகளும் தற்போது அவரது கவிதைக்காக ஒரு பக்கம் ஒதுக்கி உள்ளன.
நான் தற்போது அந்த கவிதைகளையெல்லாம் ஒரே ஒரு தடவை மட்டும் படித்துவிட்டு தாத்தா தந்த அந்த கடிகாரத்தின் அடியில் வைத்து பாதுகாத்து வருகிறேன்
குமரி எஸ். நீலகண்டன்

தொண்டையின் துயரம்

இனிப்பான பலகாரத்திலிருந்து
உப்பில்லா உணவு
கொதிக்கிற தேனீரிலிருந்து
குளிர்ச்சியான ஐஸ் க்ரீம்
எதிர் வீட்டு பால் அப்பம்
எதிரி சுட்ட பணியாரம்
சந்த்ருவின்
பிறந்த நாள் கேக்
ஆஞ்சநேயரின்
வடைமாலையில்
பிரசாதமாய்
எஞ்சிய வடை என
எல்லா உணவு
பதார்த்தங்களையும் தொண்டை
அனுமதித்து விடுகிறது.
திடீரென
வயிற்றில் தள்ளு முள்ளு
கலவரம் அடிதடி என
நடக்கிற போது
வயிற்றிற்காக இரக்கம் காட்டி
கலவரக்காரர்களை
வாய் வழியாக
தண்ணீர் பீய்ச்சி
வெளியேற்றியும் விடுகிறது.

ஆனால் வினோதமாய்
ஒரு உறங்கும்
உண்மை மட்டும்
தொண்டைக்குள் முள்ளாய்
குத்திக் குத்திக் குதறுகிறது
வெளியேற இயலாமல்..

பொய் தவத்தில் புண்ணாய்
தொண்டை நாறிக்
கொண்டிருக்கிறது
பல நேரங்களில்

கிழிசல் சேலை



கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செயயாதவர்களுக்கான பெட்டியில் பயணம் செய்வது தாயம்மா பாட்டிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. நாகர்கோவிலில் ரயில் ஏறிய போது அந்த பெட்டியில் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அவ்வளவாக இல்லை. இருக்கையில் காலை வசதியாக நீட்டி வைக்க முடிந்தது. ரயில் ஆரல்வாய்மொழி, நாங்குநேரி, வள்ளியூர், என சினன ரயில் நிலையங்களைக் கடந்த போதுகூட பயணிகள் கூட்டம் எல்லா இருக்கைகளையும் நிரபபி விடடது. இருக்க ஓரததில் சிறிது இடம் கேடடவர்கள், சிறிது நேரததில் இடம் தந்தவர்களை இறுக்கி இருக்கையில் சவுகரியமாக உட்கார எததனித்தார்கள். தாயமமா பாடடி தன்னைவிட வயதான ஒருவருக்கும் , ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குமாக இடம் கொடுத்து கடைசியில் தரையிலேயே உட்கார்ந்தாள். தனக்கு துணையாக வந்த அந்த கோட்டாறுக் கடைக்காரப் பையன் பககவாட்டில் உயரததில் சாமான்கள் வைப்பதற்கான அநத குறுகிய இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் பார்த்து தாயம்மா பாட்டிக்கு பயம் கொடுதது விடடது.

‘எப்பா விழுந்திராதப்பா|கீழே இறங்கு|’ என உட்காரச் சொன்னாள். அவன் படுத்திருக்கும் இடததில் அவன் உடம்பின் கால் பகுதி வெளியே துருத்திக் கொண்டிருந்தது. சிறிது கவனமின்றி கண் அயர்ந்தால் கூட கீழே விழ வேண்டியதுதான். கீழே விழுநதால் தலையில் அடி விழுந்து உயரே போய் விடும் ஆபத்து. இபபடி கவலையில் பாட்டி அவனை உரககக் கூப்பிட்டு அச்சுறுத்தினாள். சுற்றி இருககும் சிலருககு அது பொழுது போக்கு களமானது. எல்லோரும் பாட்டியை கிண்டல் செய்தார்கள். உட்கார்ந்தால் தலை தட்டுகிற அந்த குறைந்த உயரத்தில் அவனைப் போல் பலரும் படுத்திருந்தார்கள். அதிலும் அதிசயமாய் ஒருவர் தனது பருத்த தொப்பை ரயிலின் கூரையைத் தட்ட ரயிலுக்கு இணையாய் குறட்டை ஒலியால் கூவிக் கொண்டிருந்தார். அவர் தன் மேல் விழுந்து விடுவாரோ என அஞ்சி கீழே உட்கார்ந்திருந்த ஒருவர் இடம் மாறி சென்று விட்டார். இந்த அதிசயங்களோடு பயணிகளின் அவஸ்தைகளையெல்லாம் சகித்துக் கொண்டு ரயில் உற்சாகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

ரயிலை விட விரைவாய் பாட்டியின் மன ஓட்டம் இருந்தது. இது கூட அவளுக்கு எதிர்பாராமல் எதிர் கொள்ளும் பயணமாக இருந்தது. செனனையிலுள்ள தனது இளைய மகள் வழி பேத்திக்கு சென்ற வாரம்தான் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். உறவினர்கள் அதிகம் பேர் சொந்த ஊரில் இருந்ததால் அவர்களின் வசதிக்காக திருமணத்தை நாகர்கோவிலிலேயே நடத்தினார்கள். திருமணமென்ற சடங்கின் மூலம் தொலைவிலுள்ள தனது பிள்ளைகளையும் உறவினர்களையும் ஒன்றாகப் பார்க்க இயல்வதில் தாயம்மாவிற்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. தான் தற்போது வசிக்கும் ஊர், அதன் மக்கள், அங்குள்ள சடங்குகள், பிளளைகள், அதன் பள்ளிகள், அவர்களின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் சொநத ஊரில் கூடிப் பகிர்ந்து கொண்டார்கள். இத்தோடு ஒரு சிலரின் பேச்சிலும் சிரிப்பிலும் அவர்கள் பலரிடம் கொண்ட வன்மப் பகையின் சாயல்கள் கொடிய மிருகமாய் பதுங்கி இருந்தன. தாயம்மா பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகம் எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறது. தனது மூத்த மகள் ரமணியையும் இளைய மகள் சுனிதாவையும் இப்போதுதான் பள்ளிக்கு கொண்டு விட்டது போல் இருக்கிறது. அதற்குள் அவர்கள் பெரியவர்களாகி, திருமணமாகி, குழந்தைகளும் பெற்று, அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து, பெரியவர்களும் ஆக்கி, அவர்களுக்கும திருமணம் நடந்தாகி விட்டது. பேத்தியின் திருமணம் முடிந்து சென்னையில் நடைபெறும் விருந்து வைபவத்திற்காக, இளைய மகளின் நிர்ப்பந்தத்தில் பாட்டி சென்னைக்கு பயணமாகிக் கொண்டிருக்கிறாள்.

தாயம்மா பாட்டிக்கும் சேர்த்துத் தான் மொத்தம் இருபது டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருந்தும் அந்த குடும்பத்தின் மூத்த குடிமகளான அவளுக்கு மட்டும் பதிவு செய்யப் படாத பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை. அதுதான் அவளை இந்த நரக வேதனைக்குள்ளாக்கியது.

தான் தனது அம்மா அப்பாவை நேசித்த அளவிற்கு தனது பிள்ளைகள் தன்னை நேசிக்காதது தாயம்மா பாட்டிக்கு வருத்தத்துடன் ஆச்சரியமாகவும் இருந்தது. அதற்கான காரணங்களையும் அலசி ஆராய்ந்தாள்… எதுவும் பிடிபடவில்லை. ஆனாலும் அவள் தன் பிள்ளைகளைப் பற்றி மோசமாக யாரிடமும் எதுவும் சொன்னது கிடையாது.

பிள்ளைகள் சிறிதாக இருந்த போது இருவரில் இளைய மகள் சுனிதாவைப் பற்றித்தான் மிகவும் கவலைப் படுவாள். பொறுமையானவள். பிழைக்கத் தெரியாதவள், சூது வாது தெரியாது… எதைச் சொன்னாலும் நம்பி விடுவாள். இன்னொரு வீட்டில் மணமாகி செல்லப் போகிற இவள் எப்படி குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கப் போகிறாள் என்று கவலைப் பட்டு புத்திமதி சொல்வாள். அன்று பல இரவுகள் உறங்காமல் தான் கவலைப் பட்ட அந்த மகளா இன்று இவ்வளவு பெரிய சாமரத்தியசாலி. மிகுந்த ஆச்சரியமாக இருந்த்து அவளுக்கு.

தாயம்மா பாட்டிக்கு எண்பது வயதாகி விட்டது. சில மாதங்களாக முதுமை காரணமாக உடல்நலமின்றி மிகவும் பலவீனமாகவே இருந்தாள். திருமணம் நாகர்கோவிலிலேயே நடந்ததால் மிகவும் சந்தோஷப்பட்டாள். தனது உடல் நலனைக் காரணம் காட்டி சென்னைக்கு விருந்துக்கு வர மறுத்தாள். இளைய மகளோ ‘ அம்மா நீங்க நிச்சயம் வரணும் . மாப்பிள்ளை வீட்டுக் காரங்க உங்களை கண்டிப்பா சென்னை விருந்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்க. அதனாலே நீங்க நிச்சயம் வந்தே ஆகணும். நீங்க வரல்லைண்ணா அவங்க தப்பாதான் எண்ணுவாங்க. இன்னும் உன் இளைய பேத்திக்கு இஞ்சினியரிங் அட்மிஷன் வேற இருக்கு. அதுக்கு கருமுத்து செட்டியார்ட்டே நீ வந்து நேரிலே சொன்னாதான் காரியம் நடக்கும். ஒரு வாரம் எங்கக் கூட இருந்திட்டு திருப்பி வந்திடலாம் ‘என்று சொன்னாள்.

இளைய மகள் சுனிதா எந்த அளவிற்கு மாறி விட்டாள். திருமணமெல்லாம் முடிந்து சாமான்களையெல்லாம் பத்திரமாக பெட்டிகளாகக் கட்டிக் குவித்த போதே தனது மகளின் சாமர்த்தியத்தை எண்ணி ஆச்சரியப்பட்டாள். அவளுடைய நகைகளையும் துணிகளையும் மருமகன் பெரிய பைக்குள் அடைத்தபோது அவள் கூறிய வார்த்தைகள் இன்னமும் பாட்டியின் காதுகளில் அலைகளாய் அடித்துக் கொண்டிருக்கின்றன.

‘என்னங்க பையிலே துணியை இப்படி யாராவது அடுக்குவாங்களா? கிழிசல் சேலையை பத்திரமா உள்ளே வச்சிகிட்டு நகையை மேலே வச்சிருக்கீங்க| இபபடி வச்சா ஊரு போனா கிழிசல் சேலைதான் கிடைக்கும். முதல்லே நகையை பத்திரமா அடியிலே வச்சுகிட்டு எல்லா துணியையும் வச்ச பின்னாடி அம்மாவுக்க அந்த கிழிசல் சேலையை கடைசியிலே வைங்க .அது தொலைஞ்சு போனாலும் பரவாயில்ல’ என்றாள்.

அப்போது தனது மகளுக்கு இவ்வளவு புத்தி வநது விடடதே என சந்தோஷப் பட்டாள். ஆனால் இன்று அந்த வார்த்தைகள் கத்தியாய் அவள் நெஞ்சைக் குத்திக் கிழிப்பது போல் இருக்கிறது. தானும் ஒரு கிழிந்த சேலையாய் அவளுக்கு பட்டது. கல்யாண நிகழ்வுகள் மிகவும் சிறப்பாகவும் சந்தோஷமாகவும்தான் நடந்தன. சுனிதாவைவிட அவளது சம்பந்தக்காரர்கள் தாயம்மாவை மிகவும் கவனித்து மரியாதை செலுத்தினார்கள். நிச்சயமாக சென்னை விருந்திற்கு வரவேண்டுமென விரும்பி வற்புறுத்தினார்கள். இறுதியில அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தாயமமாவும் ரயிலுக்கு முன்பதிவு செய்ய சம்மதம் தெரிவித்தாள். சம்பந்தக்காரர்கள் கல்யாணம் முடிந்த மறுநாளே சென்னை திரும்பி விட்டனர். பெண்வீட்டாரோ திருப்பி கொடுக்க வேண்டிய கல்யாண சாமான்கள் பாத்திரங்களையெல்லாம் சரி செய்து விட்டு மூன்றாவது நாள் திரும்பினர்.

துணிமணிகள், கல்யாண அவசியத்திற்காக சென்னையிலிருந்து கொண்டு வந்த பொருட்களென எல்லாவற்றையும் கட்டிப் பெட்டிகளாக்கிய போது ரயில் புறப்படுவதற்கு இன்னமும் ஒரு மணி நேரமே இருந்தது. பக்கத்திலிருந்த ஒரு பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டு அவசர அவசரமாக காரைப் பிடித்து ரயில் நிலையம் வந்த போது அரை மணி நேரம் ஆகி இருந்தது. பிளாட் ஃபார்மில் எல்லாப் பொருட்களையும் வைத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் ரயிலின் வருகைக்காக காத்திருந்தார்கள். கன்னியாகுமரியிலிருந்து ரயில் சிறிது கால தாமதமாகவே வந்தது. இவர்கள் ஏற வேண்டிய எஸ்.8 பெட்டியும் அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியே இருந்தது. ரயில் புறப்படுவதற்கு பதினைந்து நிமிடங்களே இருந்தன. தாயம்மா பாட்டியைப் பொருட்களுக்கு காவலாய் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஒவ்வொரு பொருளாக பெட்டிக்கு கொண்டு போனார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பெட்டியில் சேர்க்கவும் ரயிலும் புறப்பட்டு விட ஒரு துணிப்பையுடன் தாயம்மா பாட்டி மட்டும் ரயில் நிலையத்தில் மாட்டிக் கொண்டாள். தாயம்மா பாட்டிக்கு எனன செய்வதென்றேத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அவளிடம் மூத்த மகள் வாங்கி கொடுத்த அந்த பழைய செல்ஃபோன் அலறியது. பாட்டி பதட்டத்துடன் செல்ஃபோனை எடுக்கவும் இணைப்பு தடை பட்டது. வீட்டிற்கே திரும்பி விடலாம் என்றால் வீட்டுச் சாவி கூட ரயிலிலுள்ள பையில்தான் இருக்கிறது. அடுத்து வந்த அழைப்புகளிலும் ரயில் நிலையத்திற்கே உரிய ஒலிப் பின்னணியில் எதிர் முனை பேச்சினை அவளால் உள் வாங்க இயலாமல் பக்கத்திலிருந்த ஒரு இளைஞனின் உதவியுடன் ரயிலிலிருந்து அழைத்த மகளுடன் பேசினாள். ஒரு பயனுமில்லாத அசிரத்தையான வருத்தத்தை மகள் தெரிவித்தாள்.

‘அம்மா பத்திரமா அதே இருக்கையில் இரு| கோட்டாற்றிலே நம்ம கடைக்கார பையனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கிறேன். அவன் ஒரு மணி நேரத்திலே வந்திடுவான். அம்மா அடுத்த டிரெயின்லே அவன் கூட வந்திடு’ என்றாள்.

அரை மணி நேரத்தில் அந்த கடைக்காரப் பையனும் வந்து டிக்கெட் எடுத்து பாட்டியை பத்திரமாக இருக்கையிலும இருத்தினான். அவனின் பாசம் பாட்டிக்கு சிறிது ஆறுதலைத் தந்தது. அவன் முடிந்த அளவு பாட்டியை சவுகரியமாக உட்கார வைத்தாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கே உரிய அசவுகரியங்களை அவள் அனுபவிக்க வேண்டி இருந்தது. அதிலும் கோடை விடுமுறைக் கூட்டம் வேறு. இந்த கூட்டத்தில் யாரும் யாரையும் மிதிக்கலாம். இந்த அசவுகரியத்தில் சமத்துவமும் சகிப்புத் தன்மையும் தானாகவேப் பிறக்கிறது. எந்த வசதியுமற்ற இந்தச் சூழலில் சிலர் குறட்டை விட்டு தூங்குவதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கும். வீட்டில் இவர்கள் இவ்வளவு சுகமாகத் தூங்குவார்களா என நினைக்கத் தோன்றும். நாள் முழுக்க உழைத்த அவர்களின் உழைப்பின் களைப்போ என அனுதாபம் ஒருபுறம். மற்றவர்களின் இடங்களை ஆககிரமித்து நீட்டி நிமிர்த்தி படுத்திருக்கும் அவர்களது சுய நலத்தை எண்ணி கோபிக்கும் ஒரு மனம்.

தனது எண்பது வயது வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை கண்ட அவள் ரயிலில் இன்னும் புதிய மனிதர்களை சந்தித்தாள். எல்லாவற்றையும் விட தான் பெற்று வளர்த்த மகளே மிகவும் புதிதாகத் தெரிந்தாள்.

தாயம்மா பாட்டியின் அருகில் அழுக்குத் துணிகளும் பொருட்களும் நிறைந்த பையும் குழந்தைகளுமாக ஒரு தம்பதி உட்கார்ந்திருந்தது. கைக் குழந்தை அழுது கொண்டிருக்க இன்னொரு பையன் அவனது அப்பாவின் தலை முடியை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அம்மாவோ தலை வலியில் புழுவாய் துடித்துக் கொண்டிருக்க அப்பாவோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். தாயம்மா தலைவலிக்காக பையில் வைத்திருந்த ஹோமியோபதி மருந்தினை எடுத்து அநத பெண்ணிடம் கொடுத்து உதவினாள். சிறிது நேரத்திலேயே அவள் தலைவலியிலிருந்து விடுபட்டு நன்றி சொனனாள். தனது அவஸ்தை மிகுந்த இந்த பயணத்திலும் பாட்டிக்கு ஒரு திருப்தி. இந்தப் பெட்டியில் பயணம் செய்ததால் தானே இந்தப் பெண்ணிற்கு உதவ முடிந்தது என்று.

மணி அதிகாலை மூன்றாகி இருக்கும். பாட்டி உறக்கம் வந்தும் உறங்க முடியாமல் அரைத் தூக்கத்தில் இருந்தாள். அப்பொழுது ஒரு கனவு. ஒரு பெரிய பைக்குள் கீழே பாட்டியின் பிள்ளைகள் படுத்துக் கிடக்க அதன் மேல் பட்டுச் சேலைகள் போர்த்தி இருக்க பாட்டி பையின் மேல் பகுதியில் கிழிசல் சேலையுடன் படுத்து கிடந்தாள். கனவு மயக்கத்தில் களைத்த பாட்டி நிலையத்தில் நின்ற ரயிலின் ஹாரன் ஒலியில் திடுக்கிட்டு விழித்தாள். பக்கத்தில் இருந்த அந்த ஏழைப் பெண் பாட்டியின் காலைத் தொட்டு நன்றி கூறி விட்டு குடும்பத்துடன் ரயிலை விட்டு இறங்கினாள். அதற்குள் ரயில் புறப்படுவதற்கான ஹாரன் ஒலித்துவிட அநத பெண் கணவனிடம்

‘ நீங்க முதல்லே குழந்தையை இறக்குங்க. ரயில் புறப்பட்டாச்சு. சீக்கிரம் …. சாமான்ங்க போனாப் பரவாயில்ல கடைசியிலே எடுத்துக்கலாம் சீக்கிரமா குழந்தையை இறக்குங்க ‘ என்றாள்.



பூனைகள் பூனைகள் பூனைகள் 22


திருட்டுப் பூனை
எல்லோருக்கும் உரியது எல்லாம் என்று எண்ணி இயங்குகிற பூனைக்கு கிட்டியப் பெயர் திருட்டுப் பூனை.
திருடாத பூனைக்கும் உண்டு இப்பட்டம். இன்னொரு இனத்தால் இடப் பட்ட ஈனப் பெயர். இரையாகிற எலிகள் கூட நம்புகிறபோது இவர்களுக்கு மட்டும் திருட்டுப் பூனை. கட்சித்தொண்டனாய் தீக் குளித்தும் காட்ட முடியாது அதற்கு அதன் விசுவாசத்தை.
பாவம் விசுவாச அரிதாரம் பூசத் தெரியாத விழிகளுடன் பதுங்கி பதுங்கி வாழும் பரம சாதுவாய் திருட்டுப் பூனை

பூனைக் கனவு

பிரசவ அறையின் வெளியே
களைப்புடன் திகைப்புடன்
அரை தூக்கத்தில்
காத்திருந்த என்னுள்
என்னை மீறி
ஒரு கனவு
உளவு பார்த்தது.
அதில் ஒரு பூனை
பதுங்கி பதுங்கி வந்தது.
விழிகளில் ஒளி மிளிர
வீலென்று கத்திற்று
அந்த பூனை.
அதற்குள் சார் உங்களுக்கு
ஆண் குழந்தை
பிறந்திருக்குது என்று
என்னைத் தட்டி
எழுப்பி செய்தி
சொன்னாள் அந்த
மருத்துவமனை தாதி.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……20


ஆறுதல்

விடுமுறையில்
குழந்தைகளுடன் மனைவி
ஊருக்குச் சென்றுவிட்டாள்
குழந்தையின் பூனைக்கத்தல்,
அவனின் சிரிப்பு,
குறும்பு, குதூகலங்களின்
பின்னணியில்
மிக்ஸியின் காட்டுப் பிளிறல்
சமையலறையில்
பாத்திரங்கள் உருள்கிற
விழுகிற
பின்வாசலில்
வாளிகள் மோதுகிற
சப்தம் எதுவுமின்றி
குக்கர் விசில்,
குழாயில் தண்ணீர்
விழும் சப்தம், என
ஏதுமின்றி ஒரே நிசப்தம்.
தனிமையில் அவன்.
உயிர்களற்ற உலகில்
அவன் மட்டும்
தனிமையில்
உலவுவது போல்
ஒரு உணர்வு அவனுள்.
என்னவோ போல்
இருந்தது.
சமையலறையில் திடீரென
பாத்திரங்கள்
உருளும் சப்தம்.
அதிர்ச்சியில் அங்கே
சென்று பார்த்தான்
ஒரே ஆறுதல்.
சமையலறையில்
பதுங்கி வந்தன
எதிர் வீட்டுப் பூனை
அதன் குட்டிகளுடன்.

அழுகையும் அவனின் நகைச்சுவையும்




நான் இழந்து விட்டேன். எல்லாவற்றையும் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என அழுதான் அவன்.
அவனைச் சுற்றிலும் கல் நெஞ்சைக் காட்டி கனத்துயர்ந்த மலைகள்.
பூமித் தாய்க்காய் நீரில் நெய்த வெள்ளிச் சேலையாய் வளைந்தோடும் அருவிகள்.
இடைவிடாது காற்றை வீசி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் மரங்கள்.
இளமைத் துடிப்புடன் அவனோடு இடறி விளையாடும் இளந் தாவரங்கள்.
வனப்பான நட்சத்திரங்களுடன் வளைந்து விரிந்த வானம்.
அவன் மனதை விரித்து உலர்த்த விரிந்த மயானம்.
மனதை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும் பதமான நீர் துளிகள்.
சுற்றி இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்து அழுதான்.
கதறி கதறி அழுதான்.
” நான் இழ்ந்து விட்டேன் எல்லாவற்றையும்……. இனி இழப்பதற்கு எதுவுமில்லை ” எனப் புலம்பி அழுதான்.
சுற்றி இருக்கும் அனைத்தும் அவனைப் பார்த்து சிரித்தன.
அந்த சிரிப்பொலி மட்டும் அவனுக்குக் கேட்கவே இல்லை.