துடைத்து எறிய

 


காற்றில் மிதந்து

அல்லது 
அல்லாடிப் பறந்து
தன்மீதே
குழந்தையின் கிறுக்கெழுத்தில்
நல்ல நீல நிற மசியினில்
எழுதப்பட்டிருந்த
அந்த சில வரிகளைக் கொண்டு
அது யாரைத்தேடுகின்றது?
மிதந்து நடனமாட
தென்றலையா?
யாராவது படித்து
“ஆஹா” போடுவதற்கா?
எழுதிய குழந்தை வந்து
மீதத்தை எழுதி முடிக்கவா?
நானறியேன்-
எடுத்து
என்  காலணியிலிருந்த
அழுக்குத்துளியைத்
துடைத்தெறிந்தேன்-

பாஞ்சாலி சபதம்

 
 
தொலைபேசியில்
உன் முகம்
வாரந்தோறும் நிழலாடும்-
இது தவிர வேறென்ன
உன் நினைவு
பாலைவனத்து எண்ணைக் கிணறுகள்
டாலரின் முகம் காட்டி
உன் முகத்தைப் பறித்தது பழங்கதை
மறந்து போன கதை
 
நீ அனுப்பிய டாங்க் ஆரஞ்ஜ்
யாருடைய தாகத்தை
தணிக்காதே பெருக்கியதென்பதை
நீ அறியாதிருப்பதே நலம்-
 
காலையின் உதயம்
கலைந்ததைச் சரிசெய்யும்
உன் நினைவுகள்
அடுத்த வாரம் வரை
காத்தேயிருக்கும்-
 
ஒன்றில் மட்டும்
உறுதியுண்டு
சபதமென-
குழந்தையொன்று
பேறானால்
அது உன்னுடையதாகத்தான்
இருக்கும்
பிறக்கும்
இது
சத்தியமே
 

எஸ் எம் எஸ் மட்டுமே

அவள் எழப் போவதில்லை 

பேத்தியின் கல்யாணம் என்ன ஆச்சு என்று 
கேட்கப்போவதில்லை-
டாக்டர் வந்து பல்ஸ் பிடித்து 
உதட்டைப் பிதிக்கி 
இல்லை என்று சொல்லியும் ஆச்சு-
அவன் பேசலேன்னா, நீ அவனை 
கூப்பிடக்கூடாதா என்று சொல்ல இனி 
மூச்சுமில்லை –
நாம் அனைவரும்-
அண்ணன்கள், தம்பிகள்,
தங்கைகள், அக்காக்கள், 
அப்பாவின் தம்பிகள்,
அப்பாவின் கிராமத்து அக்காவின் பெண்கள் 
எல்லோரது பங்கும் அவளது
வடுக்களாய் விடாது மூச்சையும் மீறி
உடலில் ஊமைசொல்லென 
சாம்பலாகக் காத்திருந்தன, 
ஒன்று மட்டும் அறியாமல்-
எங்களது விருந்தோம்பல் என்பது
ஸ்ரார்த்தம் வழி 
அதுவும் வாழைக்காய் அரிசி பருப்பு மட்டுமே
கா கா வழி
தினமும் ஜன்னல்வழி-
எங்களை மன்னித்து விடு
மற்றவர் வடுக்கள்
உன்னைப் போல 
சுமக்க 
எங்களுக்கு 
இடமும் அவகாசமும் இல்லை
பேசுவதற்குக் கூட நாங்கள் 
எஸ் எம் எஸ் மட்டுமே 
அறிவோம்
..

அனுவாகம்

ஒரு நிமிடம் தான்திரும்பி ஒரே ஒரு பார்வை தான்குசுகுசுக்கள் எல்லாம் அடங்கினஇங்கே பார்வைகள் மட்டுமே காக்காய்கள் போல இப்படியும் அப்படியும்ஆட்டம் கண்டன- மௌன சொற்கள் இல்லை மௌனத்தில் சொற்கள்பதுங்கிச் செல்லும் படுத்துப் பதுங்கிச் செல்லும் ஜீவன்கள் போலே-ஏதோ இரண்டு வெவ்வேறு கபடி ஆட்டக் கட்சிகள் போல- சிந்சியரிட்டி இல்லையென்றால் ஏன் இங்கு? என்னுடைய செல் போன்கூவியது- இல்லை நடுங்கியது.. அணைத்து வைக்க முடியவில்லைபாஸ் அழைத்தால்? எடுத்துப் பார்த்துபின்னரேகவனித்தேன்அடுத்த அனுவாகத்துக்குஎல்லோரும் சென்றிருந்தனர்குகுசுத்தவர்களும்கூடவே

இரண்டு கவிதைகள்

ஏன் வீண் பரீக்ஷை?காலையில் ஜாகிங்க் செல்லஒரு தனி ஷூ வாங்க வேண்டும் என்றார்கள்-என்ன ரேஞ்ஜ் என்று கேட்ட கடையின் பையன்எதை எனக்குக் காண்பிப்பதென்றும்கையிலிருந்த ரூபாய் ஆயிரத்து ஐனூறுநான் வாங்கவேண்டிய ஷூவையும்முடிவு செய்தன… எங்கள் வீட்டு ஜோச்யர்எட்டில் சனியென்றுஎன் சனி காலைகளை மற்றும் மாலைகளையும்முடிவு செய்தார்.. இந்த வாரம் எப்படிநான் வணங்க வேண்டிய கடவுளரையும்சொல்ல வேண்டிய தோத்திரங்களையும்முடிவு செய்தது.. என் காலைகளைதண்ணீர் வரும் நேரமும்பள்ளிக்கூட ஊர்த்தியின் நேரமும்சபர்பன் ரயிலின் டைம்டேபிளும்என் எதிர் வீட்டு நண்பனும்மனைவியின் வேகமும்இன்னம் எத்தனையோ-பல உதவாவிட்டாலும்உபத்திரவம் பண்ணமுடியுமே- என் நாளைஎன் மானேஜர் உட்பட பலர்.. யாருக்கு என்ன-எல்லோரும் இதே பாடானால்இது ஒன்றும் புதிய பாடல் அல்லவேஆனாலும் புதுப்புது ராகங்கள்விதவித தாளங்கள்வாத்தியங்கள் டெக்னாலஜி வழி மாறினென்ன! என் ஷூ சரியாகவே யிருந்ததுப்ராண்டடாகயில்லாவிட்டாலென்ன-என் வேண்டுதல்கள் ஏதோரு விதத்தில்எனக்கு மட்டுமின்றிதாய் மற்றும் மனைவி மக்களுக்குஇதமாகவே யிருந்தது…. எல்லோருக்கும் நான்என் மனோ வாக்கு காயங்களையும்ஒப்படைத்து விட்டுஅதன் சௌகரியங்களிலேயேமுணுமுணுத்துக் கொண்டே…..ஏன் வீண் பரிக்ஷை?- பகல் மயக்கம்உன்னிடம் அது இல்லைஇனியும்.எங்கிருந்தாலும் பரவாயில்லைமயிலையானாலும்சிங்கபூரானாலும்சாண்டியாகோவானாலும்-உண்மையாகத்தான்இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல- பல வருடங்கள் முன்புநான் சொல்வதுண்டுகோவில் வாசற்படிகளில்வெளியேவரும்போதுஉட்கார்ந்து கொண்டு-என் அன்னை பார்வதிஅப்பா பரமேச்வரன்சிவபக்தர்கள் என் பந்துக்கள்மூவுலகமும் என் சொந்ததேசமேஎன்று- என் அப்பா இருந்தார்அம்மா இருந்தாள்மாமாக்கள், மாமிகள்,அத்தைகள்,சித்தப்பாக்கள், சித்திகள்,பாட்டன்மார்கள்,கொள்ளு சொந்தங்கள்,பலர், பலர்…… தெரு முனையில்பெரியார், அண்ணா, சிவப்பு கொடிஎன்றுபல கூட்டங்கள் உண்டுஅம்மன் கோவிலில் உத்சவங்கள்உண்டுபுலவர் கீரன் சொற்பொழிவுகள்அந்தந்த சீசன் களில்உண்டு..நெட்டுமில்லை, சர்ப் செய்வதுமில்லைகூகிள், யாகூ தேடல்கள் யாரறிவார்? ஏதோ பெயர்களும், கதைகளும்எல்லாமே எப்படியோ வந்தனச்லோகங்களும், கீர்த்தனைகளும்ப்ராணாயாமமும்ஒரு தெரபியாகவோஆல்டெர்னேட் மருத்துவமென்றோபெயர்புனைந்து வாராதுவந்தன- கோவிலைச்சுற்றிதெருக்கள்திசைபெயருடன் ரதம் கொண்டு-கடவுள் புறப்பட்டுவீதிகளில் என் கொள்ளுப் பாட்டி காணயென்றேஉலா வருவார்- அந்த வீதிகளில்அந்த புழுதியிலும் மண்ணிலும்நான் புரண்டுஉடன் கொண்டுஅத்தனை செக்யுரிடி செகிங்க்எல்லாவற்றையும் தாண்டிஉலகம் முழுவதும்மூன்று லோகமும்சென்றது- இப்போதுகலிபோர்னியாவும்கோயம்புத்தூரும்ஒன்றேஎங்கு வாழ்ந்தாலும்யாவரும் ஒரு விருந்தினர் போன்றே எந்த ஊரின் ரதத்தெருக்களிலும்பழய புழுதிகள் மண் என்றுசுத்தம் செய்து அப்புறப்படுத்தவையெல்லாம்மணல் மூட்டைகளாகசேண்ட் எம்பாங்க்மெண்ட்ச் என்று வடிவுகொண்டு… கோவில்கள் அதீத செக்யுரிடி வட்டங்களானது..யாவாருமே இங்கு சந்தேகப்படவேண்டியவர்களே-சுற்றும் முற்றும் நம் பார்வைகள்சந்தேகப் பார்வைகளாகவே ஆனது… இங்கு தூக்கங்களின் ஆட்சிபயங்கரக் கனவுகள் மீது போயேபோனது-பகலில் விழித்து இருப்பதேதன்னைத் தானேசந்தேகப்படவே யென்றானது