இரண்டு கவிதைகள்

ஏன் வீண் பரீக்ஷை?காலையில் ஜாகிங்க் செல்லஒரு தனி ஷூ வாங்க வேண்டும் என்றார்கள்-என்ன ரேஞ்ஜ் என்று கேட்ட கடையின் பையன்எதை எனக்குக் காண்பிப்பதென்றும்கையிலிருந்த ரூபாய் ஆயிரத்து ஐனூறுநான் வாங்கவேண்டிய ஷூவையும்முடிவு செய்தன… எங்கள் வீட்டு ஜோச்யர்எட்டில் சனியென்றுஎன் சனி காலைகளை மற்றும் மாலைகளையும்முடிவு செய்தார்.. இந்த வாரம் எப்படிநான் வணங்க வேண்டிய கடவுளரையும்சொல்ல வேண்டிய தோத்திரங்களையும்முடிவு செய்தது.. என் காலைகளைதண்ணீர் வரும் நேரமும்பள்ளிக்கூட ஊர்த்தியின் நேரமும்சபர்பன் ரயிலின் டைம்டேபிளும்என் எதிர் வீட்டு நண்பனும்மனைவியின் வேகமும்இன்னம் எத்தனையோ-பல உதவாவிட்டாலும்உபத்திரவம் பண்ணமுடியுமே- என் நாளைஎன் மானேஜர் உட்பட பலர்.. யாருக்கு என்ன-எல்லோரும் இதே பாடானால்இது ஒன்றும் புதிய பாடல் அல்லவேஆனாலும் புதுப்புது ராகங்கள்விதவித தாளங்கள்வாத்தியங்கள் டெக்னாலஜி வழி மாறினென்ன! என் ஷூ சரியாகவே யிருந்ததுப்ராண்டடாகயில்லாவிட்டாலென்ன-என் வேண்டுதல்கள் ஏதோரு விதத்தில்எனக்கு மட்டுமின்றிதாய் மற்றும் மனைவி மக்களுக்குஇதமாகவே யிருந்தது…. எல்லோருக்கும் நான்என் மனோ வாக்கு காயங்களையும்ஒப்படைத்து விட்டுஅதன் சௌகரியங்களிலேயேமுணுமுணுத்துக் கொண்டே…..ஏன் வீண் பரிக்ஷை?- பகல் மயக்கம்உன்னிடம் அது இல்லைஇனியும்.எங்கிருந்தாலும் பரவாயில்லைமயிலையானாலும்சிங்கபூரானாலும்சாண்டியாகோவானாலும்-உண்மையாகத்தான்இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல- பல வருடங்கள் முன்புநான் சொல்வதுண்டுகோவில் வாசற்படிகளில்வெளியேவரும்போதுஉட்கார்ந்து கொண்டு-என் அன்னை பார்வதிஅப்பா பரமேச்வரன்சிவபக்தர்கள் என் பந்துக்கள்மூவுலகமும் என் சொந்ததேசமேஎன்று- என் அப்பா இருந்தார்அம்மா இருந்தாள்மாமாக்கள், மாமிகள்,அத்தைகள்,சித்தப்பாக்கள், சித்திகள்,பாட்டன்மார்கள்,கொள்ளு சொந்தங்கள்,பலர், பலர்…… தெரு முனையில்பெரியார், அண்ணா, சிவப்பு கொடிஎன்றுபல கூட்டங்கள் உண்டுஅம்மன் கோவிலில் உத்சவங்கள்உண்டுபுலவர் கீரன் சொற்பொழிவுகள்அந்தந்த சீசன் களில்உண்டு..நெட்டுமில்லை, சர்ப் செய்வதுமில்லைகூகிள், யாகூ தேடல்கள் யாரறிவார்? ஏதோ பெயர்களும், கதைகளும்எல்லாமே எப்படியோ வந்தனச்லோகங்களும், கீர்த்தனைகளும்ப்ராணாயாமமும்ஒரு தெரபியாகவோஆல்டெர்னேட் மருத்துவமென்றோபெயர்புனைந்து வாராதுவந்தன- கோவிலைச்சுற்றிதெருக்கள்திசைபெயருடன் ரதம் கொண்டு-கடவுள் புறப்பட்டுவீதிகளில் என் கொள்ளுப் பாட்டி காணயென்றேஉலா வருவார்- அந்த வீதிகளில்அந்த புழுதியிலும் மண்ணிலும்நான் புரண்டுஉடன் கொண்டுஅத்தனை செக்யுரிடி செகிங்க்எல்லாவற்றையும் தாண்டிஉலகம் முழுவதும்மூன்று லோகமும்சென்றது- இப்போதுகலிபோர்னியாவும்கோயம்புத்தூரும்ஒன்றேஎங்கு வாழ்ந்தாலும்யாவரும் ஒரு விருந்தினர் போன்றே எந்த ஊரின் ரதத்தெருக்களிலும்பழய புழுதிகள் மண் என்றுசுத்தம் செய்து அப்புறப்படுத்தவையெல்லாம்மணல் மூட்டைகளாகசேண்ட் எம்பாங்க்மெண்ட்ச் என்று வடிவுகொண்டு… கோவில்கள் அதீத செக்யுரிடி வட்டங்களானது..யாவாருமே இங்கு சந்தேகப்படவேண்டியவர்களே-சுற்றும் முற்றும் நம் பார்வைகள்சந்தேகப் பார்வைகளாகவே ஆனது… இங்கு தூக்கங்களின் ஆட்சிபயங்கரக் கனவுகள் மீது போயேபோனது-பகலில் விழித்து இருப்பதேதன்னைத் தானேசந்தேகப்படவே யென்றானது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன