சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசியவர்களைக் கேட்கும்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. பல பேர் பரவலாகப் பத்திரிக்கைகளில் வெகு ஜன ரஞ்சகமாக வரும் எழுத்துக்களின் உண்மைத் தரத்தை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்துக்கள் திருப்தி தருவதாக இல்லையென்பதும் தெரிகிறது.
ஆனால் நல்ல இலக்கியமும் எழுத்தும் எங்கே கிடைக்கும், யார் யார் எழுதுகிறார்கள் என்பதும் அவ்வளவாகத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதைத் தேடிப் போவதற்கு அவர்களுக்கு வழிவகைகள் தெரியவில்லை.
எல்லா மொழிகளிலும், எல்லாப் பிராந்தியங்களிலும் இலக்கியமல்லாதது. போலி இலக்கியம் செழித்து கொண்டுதான் இருக்கிறது. ஷேக்ஸ்பியர் காலத்திலும் அப்படித்தான்: ஹோமர் காலத்திலும் அப்படித்தான். கம்பர் காலத்திலும் காதுக் குறும்பை அறுக்கும் விமரிசகக் கவிகள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நல்லது, நல்லதல்லாதது என்கிற நினைப்பு தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது. அச்சு இயந்திர சாதனங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், போலிகளும் பெருகிவிட்டன் ; போலிகளின் ஆதிக்கமும் பெருகிவிட்டது.
இலக்கியத்தில் அக்கறையுள்ளவர்கள், நல்ல இலக்கியத்திலிருந்து போலியைத் தரம் பிரித்துக்காண முயன்று வெற்றி பெறவேண்டும், தரமானதைத் தரமில்லாததிலிருந்து பிரித்துக் காண ஒரு இலக்கிய ஆர்வமும், ஒரு இலக்கியத் தேர்ச்சியும் தேவையாக இருக்கிறது. இந்த இரண்டையும் தமிழர்களில் ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் பேர்வழிகளுக்கிடையே உண்டாக்கிவிட முயலுபவன், தமிழ் இலக்கியத்துக்கு இன்று மிகவும் சிறப்பான அளவில் சேவை செய்தவன் ஆவான் என்று எனக்குத் தோன்றுகிறது.
நல்ல இலக்கியத்தைத் தெரிந்து கொள்வதற்கும் பரப்புவதற்கும் ஒரு பரவலான இலக்கிய இயக்கம் நம்மிடையே தேவைப்படுகிறது. பாரதியில் தொடங்கி இன்றுவரை எழுதியுள்ளஎத்தனையோ சீர்குலைவுகளுக்கும் ஈடுகொடுத்துக் கொண்டு எழுதிவந்துள்ள பத்திருபது முப்பது நாற்பது ஐம்பது இலக்கியாசிரியர்களைப் பட்டியல் போட்டுப் பார்க்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐம்பது பேர் வரையில் பெயர் சொல்லக் கூடியவர்கள் இருப்பதைப் பெருத்த இலக்கிய வெற்றியாகக் கருதவேண்டும். இந்த ஐம்பது பேர் தரமாக எழுதினார்கள் என்பதுடன், இதில் குறைந்தபட்சம் இரண்டு மூன்று நான்கு ஐந்து பேர்வழிகளாவது அடுத்த நூற்றாண்டிலும் நினைக்கப்படுவார்கள். படிக்கப்படுவார்கள் என்று நம்புகிற தெம்பு நமக்கு வேண்டும்.
தாக்ஷண்யத்துக்காக, சொந்த விருப்பு வெறுப்பு பயிற்சி மனக்குறுகல் கோணல்களினால் விமரிசகன் நாலைந்து பேர்வழிகளைத் தன் பட்டியலில் அதிகமாகச் சேர்த்துச் சொல்லிவிடலாம். காலம் கொஞ்சம்கூடத் தாக்ஷண்யமில்லாமல் பல பெயர்களைத் தட்டி விட்டுவிடும். மிஞ்சுவது எல்லாம் கூட நல்ல இலக்கியம்தான் என்று சொல்லிவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் தேவையினால், ஒருசிலருடைய எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுவிடலாம். ஒரு நூறாண்டு முழுவதும் நிலைத்து விடுகிற எழுத்தைக் கூட அப்படியொன்றும் பிரமாதமான இலக்கியம் என்று முடிவுகட்டிவிட முடியாது. ஒரு தலைமுறைக்கு உகக்கிற இலக்கியம் மறு தலைமுறைக்கு அவசியமில்லாது போய்விடலாம்தான். இதையெல்லாம் ஊன்றிப் பார்க்கிறபோது, இரண்டு முக்கியமான விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
ஒன்று: இலக்கிய மதிப்பீடு செய்து தராதரம் உணர்ந்து படிக்கக்கூடிய வாசகர்கள் ஒரு üஐயாயிரம் பேர்வழிகளாவது இருக்கிற சமுதாயத்தை இலக்கியப் பிரக்ஞையுள்ள சமுதாயம் என்று சொல்லலாம். தமிழில் இன்று கணக்கெடுக்கப் போனால் ஒரு ஐநூறு பேர்வழிகள் தேறுமா என்பது சந்தேகமே 1 1930 முதல் 1980 வரையுள்ள ஐம்பது ஆண்டுகளில் இது எண்ணிக்கையில் கூடாததற்குத் தமிழ்ச் சமுதாயத்தில் காரணம் தேடிச் சொன்னால் அது ஐனரஞ்சகப் பத்திரிகைகளினால் ஏற்பட்ட ஒரு சூழல் என்றுதான் சொல்ல வேண்டியதாக இருக்கிறனது.
காசு பண்ணுவதற்காகத் தோன்றிச் செயல்படுகிற ஒவ்வொரு ஐனரஞ்சகமான பத்திரிகையும், வெகுஐன ஆதரவுக்காகவும் வாசகர்களின் அடிமட்ட அறிவு நினைவுக்கு ஏற்பவும் (கர்ஜ்ங்ள்ற் இர்ம்ம்ர்ய் ஹஸ்ங்ழ்ஹஞ்ங் ர்ச் ண்ய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங் ண்ய் ற்ட்ங் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) எழுத்து என்று தேடி ஒவ்வொரு இதழிலும் எட்டு எட்டுப் பக்கங்களாவது வெளியிடாத பத்திரிகைகளைச் சமுதாயம் தெரிந்தே பகிஷ்காரம் செய்ய வேண்டும் இதற்குச் சட்டம் இயற்ற இயலாமல் இருக்கலாம். ஆனால்ல் சமுதாய அபிப்ராயத்தை உருவாக்கி, இந்த மாதிரிப் பத்திரிகைகள் இலக்கியத் தரத்தைக் குறைப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிற வியாபார ரீüதியில் மட்டும் செயல்படுகிற பத்திரிகைகளை இலக்கியத்தையும் ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தலாம் சமுதாய ரீதியாக.
பத்திரிகைகளை விட்டுவிட்டு இலக்கியம் செயல்பட முடியாதா என்று கேட்கலாம். பத்திரிகைப் பிரக்ஞை என்பது மிகவும் கீழ்த்தரமானதாக இன்று இருக்கிறதே என்று கேட்கலாம். உண்மையில் பத்திரிகைகள் இன்று வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சம். புஸ்தகங்களை விடவும் அதிகமாகவே பத்திரிகைகள் உலகெங்கும் விற்பனையாகின்றன. புஸ்தகப் படிப்பு என்பது ஓய்வு நேரம் குறைந்து கொண்டிருப்பதாலும் வேறு நேரம் போக்கும் சாதனங்கள் – சினிமா, டிவி, போன்றவை வந்துவிட்டதாலும் – ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை படிப்பவர்கள் அதிகமாகவும், நூல்களைத் தேடிப் படிப்பவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள். முக்கியமாகத் தமிழில் இது கண்கூடாகக் காண்கிற விஷயம். இதை மிக மோசமான அளவில் சாத்தியமாக்கியவர்கள் என்று பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் சொல்லலாம். அவர்களும் படிக்கமாட்டார்கள்; பிறரையும் நல்லதைத் தேடிப் படிக்க விடமாட்டார்கள்.
தரமான இலக்கியத்துக்கான ஒரு இயக்கத்தைப் பத்திரிகைகள் ஏற்று நடத்துவதுதான் நியாயமான காரியம் என்று இன்னொரு காரணத்துக்காகவும் எனக்குத் தோன்றுகிறது. இந்த இலக்கியத் தரம் தெரியாத நிலைமையைப் பரவலாகத் தோற்றுவித்தவர்கள் இந்தப் பத்திரிகைகள் தான். அந்தக் குற்றத்தை இப்பொழுது சரிப்படுத்த அவர்களே செயல்படுவது தான் நியாயம். இலக்கியத் தரமான விஷயங்களை, எண்பது பக்கங்களில், எட்டுப் பக்கமாவது தராத பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என்று ஒரு ஐம்பதாயிரம்,லட்சம் வாசகர்களாவது உடனடியாக விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது சாத்தியமா? யார் அந்த எட்டுப் பக்கத்தின் இலக்கியத் தரத்தையும் தரமின்மையையும் நிர்ணயிப்பது என்பதெல்லாம் மிகவும் சாதாரணமான கேள்விகள். இலக்கியத் தரத்தை உணர்ந்து செயலாற்றத் தீர்மானித்து விட்டால், தானே தீர்ந்துவிடக் கூடிய பிரச்னைகள் இவை. இப்போது எந்த விஷயத்தைப் பிரசுரித்தால் வாசகர் எண்ணிக்கை குறையும் என்று எண்ணுகிறார்களோ அந்த விஷயத்தை வெளியிட்டு, எண்பதில் எட்டுப் பக்க அளவிலாவது வெளியிட்டு வந்தார்களானால், அதுவும் பரவலாகப் படிக்கப் படுகின்ற விஷயமாகிவிடும்.
இதை முதல் காரியமாக ஏற்றுக் கொள்வது வேண்டும். சமூகச் சீர்திருத்தவாதிகளில் பலரும் இலக்கிய அறிவு, இலக்கிய ரசனை இவையும், மொழி சம்பந்தபட்ட விஷயங்கள் என்பதனால் மட்டுமல்லாமல் அந்த மொழி பேசுகிற சமுதாயத்தின் ட்ங்ஹப்ற்ட் சம்பந்தமான விஷயம் என்பதனால், சமுதாயத்தில் முக்கியம் பெறுகிறது. இலக்கிய அறிவும் இலக்கியத் தேர்ச்சியும் இல்லாத ஒரு சமூகம் ஒரு கலைச் சூன்யத்தை நாடிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
இரண்டாவது விஷயமாகச் சொல்ல வேண்டியது, சென்ற ஒரு நூற்றாண்டு கால கட்டத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு நாற்பது ஐம்பது நூல்களின் கட்டாய அறிவு மக்களிடையே பரவலாக ஏற்படச் செய்வது என்பதாகும். விமரிசகர்கள் கூடிச் செய்கிற காரியம் அல்ல இது. ஏனென்றால் இரண்டு மூன்று வாசகர்கள் கூட ஒரே நூலைப்பற்றிப் பலவிதமான அபிப்ராயங்கள் சொல்லக்கூடும்தான். ஆனால் பல விமர்சகர்கள் தனித் தனியாகச் சொல்லி இந்த ஐம்பது நூல்கள் பட்டியலில் எந்தெந்த நூல்கள் இருக்க வேண்டும் என்ற பொதுஐன அபிப்ராயத்தை ஏற்படுத்தலாம். இந்தப் பட்டியலில் தமிழ் நூல்கள் மட்டும் இடம் பெற்றால் போதாது. கட்டாயமாகச் சில மொழி பெயர்ப்புகளும் இருக்க வேண்டும். உதாரணத்துக்குச் சம காலத்திய இரண்டு நூல்களை நான் சொல்கிறேன்-இரண்டையும்சேர்த்துச் சொல்கிறேன் என்பதும் இன்றுள்ள நிலையில் கவனிக்க வேண்டிய விஷயம். சாவர்க்காரின்üஎரிமலைý அதேபோல காந்தியின் üசத்திய சோதனைý.
பொதுவாக மொழி பெயர்ப்புகளைப்பற்றி ஒரு தப்பான அபிப்ராயம் தமிழ் வாசகர்களிடையே இருந்துவருகிறது. தமிழ் தானாகத் தழைத்துவிடும் என்று கால்டுவெல்ஐயர் அன்று சொன்ன விஷயத்தை உடும்பாகப் பற்றிக் கொண்டு, மொழி பெயர்ப்புகள் இல்லாத ஒரு சமுதாயத்தை நம் ஊரில் ஸ்தாபிக்க முயலுகிறார்கள். அது இலக்கிய ரீதியில் தவறான காரியம் ஆகும். மொழியின் வளர்ச்சிக்கு, இலக்கியத்தின் தாக்கத்துக்கு மொழி பெயர்ப்புகள் மிகவும் அவசியமானவை.
பழசும் புதுசுமாக ஒரு நூறு நூல்கள் எப்போதும் படிக்க விரும்புகிறவர்களுக்குக் கிடைக்கும்படியாகச் சர்க்கார் தரப்புப் பிரசுரலாயங்களோ அல்லது தனியார் தரப்புப் பிரசுராலயங்களோ செயல்பட வேண்டும். இது மிகமிக அவசியம். யாரும் இந்தக் குறிப்பிட்ட நூல் கிடைக்கவில்லை, அதனால் படிக்கவில்லை என்று சொல்கிற நிலை ஏற்படக் கூடாது.
மூன்றாவதாக ஒரு விஷயம். சினிமாவை ரசிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்துகிறார்கள். அதேபோல இலக்கிய ரஸனையை வளர்ப்பதற்கும் வகுப்புகள் – பொது ஐன வகுப்புகள் இந்தக் கால கட்டத்தில் மிகமிக அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. படிப்பது எப்படி, எதையெதைப் படிக்க வேண்டும். படித்ததில் தரம் பிரித்துக் காண்பது எப்படி என்றெல்லாம், ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு ஊரிலும் சொல்லித் தர ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இது கல்வி இலாகாக்கள் கையில் சிக்கிக்கொள்ளாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ABC of Reading என்று எஸ்ரா பவுண்டு, இலக்கியாசிரியர்களுக்காக ஒரு நூல் எழுதினார். அதுமாதிரியான ஒரு அடிப்படை நூல் இன்று தமிழில் அவசரத் தேவை என்று எனக்குத் தோன்றுகிறது.
எதையாவது சொல்லட்டுமா……..40
முதியோர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? இந்தக் கேள்வி சமீபத்தில் தோன்றி கொண்டிருந்தது. 89 வயது முடிந்து அப்பாவிற்கு 90வது வயது நடந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. கடந்த 2 மாதங்களாக அவர் என்னுடைய சகோதரன் வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார். அங்கு எல்லா வசதிகளுடனும் அவர் தங்கிக் கொண்டிருக்கிறார். தேவைக்கு அதிகமாக சாப்பாடு. 24 மணி நேரமும் டிவி என்று பொழுது போவதற்கு எல்லா அம்சங்களும் உண்டு. ஆனால் அவர் அந்த வீட்டிலிருந்து எங்கும் செல்ல முடியாது. சகோதரன் குடும்பத்தைத் தவிர வேறு யாருடனும் உரையாட முடியாது.
90 வயதில் இது ஒரு பிரச்சினை. யாரிடமாவது எதாவது பேசாமல் அவர்களால் இருக்க முடியாது. 90 வயதில் நான் எப்படி இருப்பேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நிச்சயமாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்த நோய் என்று போராடிக் கொண்டிருப்பவன் நான். 90 வயதைத் தொடக் கூட முடியாது. அப்பாவிற்கு எந்த நோயும் கிடையாது. முதுமையைத் தவிர.
காலையில் அவர் எழுந்தவுடன் ஒரு சொம்பு நிறையா தண்ணீர் குடிப்பார். பின் எழுந்து நிதானமாக மாடிக்குச் செல்வார். நடை நடை என்று 1 மணி நேரம் மேல் நடப்பார். பல்லே இல்லை என்பதால் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் நிதானமாக சாப்பிடுவார்.
என் பெண்ணிற்கு உதவி செய்ய மனைவி போய் விட்டதால், நான் இருக்கும் போஸ்டல் காலனி வீட்டில் யாருமில்லை. ஞாயிறுகளில் நான் மட்டும் வந்து தங்கிவிட்டுப் போய் விடும். அப்பா என்னுடன் இருக்கும்போது தினமும் போன் செய்யாமல் இருக்க மாட்டார். ”ஒண்ணுமில்லை. சும்மாதான் போன் செய்தேன்,” என்பார். என் நண்பர்கள் என்று யாராவது என்னைத் தேடி வந்துவிட்டால் போதும். அப்பாவிடம் கட்டாயம் மாட்டிக்கொண்டு விடுவார்கள். அவர்களிடம் அப்பா ஹோமியோபதியைப் பற்றி பேசி பேசி அலுக்க அடித்துவிடுவார். பின் அரசியலைப் பற்றி பேசுவார்….அந்தக் காலத்தில் அவர் லஞ்சம் வாங்காத அதிகாரியாக இருந்ததைப் பெருமையாகப் பேசுவார். ..எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதில் வல்லவர். சமீபத்தில் கலைஞர் மு.க மாதிரி பேசுவதில் ஒருவித திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். எல்லோரிடமும் அப்படிப் பேசிக் காட்டுவார்.
தம்பி வீட்டிலும் அவர் அப்படிப் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கெல்லாம் கடுமையாக கோபம் வந்துவிட்டது. அப்படியெல்லாம் யாராவது வந்தால் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டுவிட்டார்கள். அவர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால், அவர்களுடன் பேசக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். அதனால் அப்பாவிற்கு தெம்பு குறைந்து விட்டதுபோல் தோன்றியது.
போன ஞாயிற்றுக்கிழமை, தெலுங்கு வருஷம் ஒட்டி திங்களும் விடுமுறை என்பது அப்பாவிற்கு தெரிந்து விட்டது. ‘கழுத்து வலி தாங்க முடியவில்லை. ஹெல்த் சென்டருக்குப் போய்க் காட்ட வேண்டும்.’ என்று நான் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். தம்பி வீட்டில் சொகுசை அனுபவித்தவர், இங்கு குறுகிய இடத்தில் கட்டிலில் அவருக்கு சரியாக தூங்க முடியவில்லை. என் வீட்டில் அவருக்கு உள்ள சுதந்திரம். எல்லா இடத்திற்கும் அவர் எளிதாக செல்வது. யாரைப் பார்த்தாலும் எதையாவது பேசுவது? டெலிபோன் மணி ஒலித்தால் போதும், போனை கையில் எடுத்து God Bless You என்று சொல்லாமல் இருக்க மாட்டார். திங்கள் காலையில் ஹெல்த் சென்டருக்கு தானாகவே நடந்து செல்ல ஆரம்பித்து விட்டார். பரபரப்பாக இருக்கும் ஆர்யா கவுடா தெருவில் நடப்பதைப் போல் ஆபத்து எதிலும் இல்லை. ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்க மாட்டார். இங்குதானே இருக்கிறது. நடந்தே போய் விடலாம் என்று பிடிவாதமாக கூறுவார். ஜெய் சங்கர் தெருவில் இருக்கும் சாய்பாபா கோயிலுக்கும் அவர் இப்படித்தான் நடந்தே போய்விடுவார். பலமுறை கண்டித்தும் அவர் கேட்க மாட்டார்.
எப்போதும் தெருவில் நடக்கும் போது, தெருவில் யாராவது புகை பிடித்துக் கொண்டு சென்றால், அவர்களை நிற்க சொல்லிவிட்டு, ‘சிகரெட் உடம்பிற்குக் கெடுதல், பிடிக்காதீர்கள்,’ என்பார். ஒருமுறை ஒருவர் கோபத்துடன், Mind your business என்று கூற அதைக் கேட்டு I mind my business. but you mind your health என்று கூறினாராம்.
என் வீட்டைச் சுற்றிலும் இருக்கும் மற்ற குடியிருப்போர்கள், அப்பா வரவில்லையா என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
‘ஒன்றுமில்லை. கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது’ என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். ‘ஒன்றுமில்லை. கழுத்தைத் தூக்கி டிவியைப் பார்க்காமல் இருந்தால் சரியாகிவிடும்,’ என்றான் என் சகோதரன்.
‘செவ்வாய்க் கிழமைதான் எக்ஸ் ரே தருவதாக சொல்கிறார்கள்….வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன்…” என்றார் அப்பா. நான் சீகாழி போய்விட்டால் அப்பாவை தனியாக எப்படி விட்டுவிட்டுச் செல்வது. ‘நீ பயப்படாதே…போ..’ என்றார் அப்பா. என் சகோதரன், ‘என் வீட்டிற்கு வந்து விடு…அங்கிருந்து கார் வைத்து உன்னை ஹெல்த் சென்டருக்கு அனுப்புகிறேன்,’ என்றான் சகோதரன். அங்கு போகத் தயாராய் இல்லை அப்பா.
மார்ச்சு மாதம் அலுவலகக் கெடுபிடியால் என்னால் லீவு எடுத்துக் கொள்ள முடியவில்லை. ‘வேறு வழியில்லை. நான் போய்த்தான் ஆக வேண்டும்.’ என்றேன். சகோதரன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான். அப்பாவோ என்னிடம், ‘அவனிடம் எதுவும் சொல்லாதே…நான் ஹெல்த் சென்டருக்கு போய்விட்டு மாலை அடையார் சென்று விடுகிறேன்,’ என்றார். நான் சீர்காழி வந்தவுடன் அப்பாவைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். காலையில் அப்பா போன் செய்தார். ‘ஏன் அவனிடம் சொன்னாய்…அவன் லீவு எடுத்துக் கொள்வதாக சொல்கிறான்…’ என்றார் அப்பா. திரும்பவும் அப்பா சகோதரனையும் லீவு எடுத்துக்கொள்ள வேண்டாமென்று சொல்லிவிட்டார். பின் தானாகவே ஆட்டோ வைத்துக்கொண்டு ஹெல்த் சென்டருக்குச் சென்றுவிட்டு மாத்திரிகைளை வாங்கிக்கொண்டு ஆட்டோ வில் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு பத்திரமாக வந்துவிட்டேன் என்று எனக்கு போன் செய்தார்.
மாலை சகோதரனுடன் அடையார் சென்று விட்டார். நான் அப்பாவிற்குப் போன் செய்தேன்..’வந்துவிட்டேன்…..இனிமேல் போர்….சாப்பிட வேண்டியது…டிவி பார்க்க வேண்டியது…’என்றார் அப்பா.
(இன்னும் வரும்-.)
எதையாவது சொல்லட்டுமா……..39
குளிர் காலத்தைவிட கோடைகாலம் மிகக் கடுமையானது. அதுவும் என் அலுவலகக் கட்டிடத்தை விட மட்டமானது எதுவுமில்லை. காலையில் மயிலாடுதுறையில் 6 மணிக்கு மின்சாரத்தை நிறுத்தினால் 9 மணிவரை ஆக்கி விடுகிறார்கள். சூடு பறக்கும் தேர்தல் நேரம் வேறு. யாருக்கு நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானே கேட்டுக்கொள்கிறேன். போனமுறை என் பெயரும், நடிகர் கமல்ஹாசன் பெயரும் வாக்களர் பட்டியலில் இல்லை. என் பெயர் இல்லை என்பதைப் பற்றி யாரும் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் பெயர் விடுப்பட்டிருந்தது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துவிட்டது. நான் சாமான்யன் என்பதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
சரி யாருக்கு ஓட்டுப் போடுவது. ஒவ்வொரு முறையும் நான் ஓட்டுப் போடும்போது எல்லாக் கட்சிகளிலும் ஓட்டுப் போடுவேன். சிலசமயம் முகம் தெரியாத தனித்து நிற்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுவேன். அல்லது ஓட்டே போடாமல் போய்விடுவேன்.
ஓட்டுப் போட்டு எதாவது கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களுடைய குறையைத் தீர்க்க முடியாது. பெரிய புரட்சியை செய்து விட முடியாது. ஆனால் நியாயமான நிர்வாகத்தை வெளிப்படுத்தினால் போதும். அது மாதிரி தரக்கூடிய கட்சி எது?
திராவிடக் கட்சிகளை விட மாற்று எதாவது உண்டா என்றால் இல்லை. காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எல்லோரும் தலைவர்களாக தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். கட்சிக்குள்ளேயே கொடும்பாவி எரிக்கும் சம்பவம் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் நடக்காது. பாரதிய ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சிதான். இந்துத்துவா முத்திரை பலமாக விழுந்துவிட்டதால் அதற்கு ஓட்டு கிடைப்பது கடினம்.
பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சியாகப் போய்விட்டது. தமிழ் நாட்டில் பரவலாக உள்ள மற்ற ஜாதி மக்களுக்கு அவர்கள் சேவை போய்ச் சேராது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அப்படிப்பட்டதுதான். எல்லா மக்களுக்குமான கட்சியாக அவர்களால் மாற முடியாது. அதனால் அவர்கள் ஓட்டும் குறிப்பிட்ட வகுப்பினரின் ஓட்டுகளாகவே இருக்கும்.
நான் விரும்புவது தோழர்கள் கட்சியைத்தான். குறிப்பாக மார்க்கிஸ்ட் கட்சி. ஆனால் அவர்களாலும் தனிப் பெரும் கட்சியாக தமிழ் நாட்டில் உருவாக முடியவில்லை. திரும்பத் திரும்ப திமுக, அதிமுக கட்சிகளையே பார்த்தாயிற்று. ஒரு மாற்றம் வேண்டும். விஜய்காந்த் கட்சியான தேமுதிகவை எடுத்துக்கொண்டால், அவர் கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் விஜய்காந்த் பேசுவதைக் கேட்டால், ஒரே ஆவேசமாகப் பேசுகிறார். அப்படி ஏன் பேச வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. பொதுவாக நான் விஜய்காந்த் படம் அவ்வளவாகப் பார்க்க மாட்டேன்.
சரி யாருக்கு ஓட்டுப் போடுவது? ஒவ்வொருமுறையும் மக்கள் நிதானமாகத்தான் தீர்பளிக்கிறார்கள். ஒருமுறை திமுக என்றால், அடுத்தமுறை அதிமுக. ஒவ்வொரு முறை ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்காக செய்யும் திட்டங்கள் பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கிறது. இதையே அவர்கள் முழு வீச்சாக செய்தால் எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது. கலைஞர் ஆட்சி பாலங்கள் ஆட்சி என்று சொல்லலாம். எல்லா இடங்களுக்கும் எல்லோரும் போய்வருவதற்கு பாலங்களை அசுர சாதனையாக செய்திருக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லை. விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள். அடையாரில் அண்ணா நூலகத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.
அதிமுகாவும் முக்கியமான கட்சிதான். அவர்கள் காலத்தில் மின்சாரம் கட் ஆகவில்லை. அந்தக் கட்சியின் தலைவி எல்லா விஷயங்களிலும் பிடிவாதம் பிடிப்பதைத் தளர்த்திக் கொண்டால் நன்றாக இருக்கும். ஒரு ஆட்சி 5 ஆண்டுகள் ஆண்ட பிறகு, வேறு கட்சிதான் வரவேண்டும். அப்போதுதான் ஒருவித மாற்றம் தெரியும். முக்கியமான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு எல்லோருக்கும் இலவசமாக அளிப்பதாக வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்கள். சரி மக்களிடம் வாங்கும் வரிப் பணத்தில்தானே எல்லாம் கொடுக்க முடியும்?
வங்கிகளில் நாங்கள் கடன் தருகிறோம். அரசாங்கத்தின் இலவசத் திட்டத்தால், வங்கியிலிருந்து கிடைக்கும் கடனும் இலவசமாக நினைத்துக் கொள்கிறார்கள். டிபிஎன்னில் கையெழுத்து வாங்க ((கையெழுத்துப் போடவில்லை என்றால் கடனே தள்ளுபடி ஆகிவிடும்) a) சாலிகிராமில் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு கையெழுத்துதான் போட்டார். கடன் எவ்வளவு தள்ளுபடி ஆகும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார். பணம் கட்டும் நோக்கம் சிறிதும் இல்லை.
அரசாங்கம் இலவசமாக எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க ஆரம்பித்தால், கடன் என்ற பெயர்கூட இலவசம் என்று ஆகிவிடும். சரி, நானும்தான் க.நா.சு நூற்றாண்டை முன்னிட்டு அவருடைய சில கவிதைகள் புத்தகத்தை அளிக்கிறேன் என்று கூறினாலும் கூட, யாரும் இலவசமாகக் கூட வாங்கி வைத்துக்கொள்ள தயாராக இல்லை. ஏன்?
(இன்னும் வரும்)
எது கவிதை……..3
எனக்கு அலுவலகம் போகும்போதுதான் கவிதையைப் பற்றி சிந்திக்க சரியான நேரம். கவிதையைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். சீனா சென்று வந்த என் நண்பர் ஒருவர், ‘நீங்கள் அங்கு சென்றால், அங்கு கவிதை எழுத ஏராளமான இடம் இருக்கும். உங்களை நினைத்துக்கொண்டேன்,’ என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கவிதை எழுதுவது ஒருவித மனநிலை. அதற்கும் கவிதை எழுதுவதற்கும் எந்தச் சம்மதமும் இல்லை. எங்கு சென்றாலும் கவிதையும் எழுத முடியும் அல்லது எழுத முடியாது. பெரும்பாலும் எனக்குக் கவிதை எழுத பஸ் ஸ்டாண்டில் பஸ் பிடிக்க நிற்கும்போதுதான் தோன்றும்.
அதே சமயத்தில் வலுகட்டாயமாக கவிதையும் எழுதக் கூடாது. ஆனந்த்தை ஒரு முறை அவர் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றேன். ‘விருட்சத்திற்கு எதாவது கவிதை இருந்தால் கொடுங்கள்,’ என்று கேட்டேன். ‘கொஞ்ச நேரம், இருங்கள்,’ என்று கூறியவர். உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து கவிதையை எழுத ஆரம்பித்து விட்டார். எழுதியதைக் கொடுத்தும் விட்டார். ‘எப்படி இது மாதிரி?’ என்று கேட்டேன். ‘நீங்கள் கேட்டவுடன் எழுதிக் கொடுத்தேன்,’ என்றார்.
இப்படியும் கவிதை எழுத முடியும். ரொம்பவும் யோசித்து கவிதை எழுத நினைத்தால், கவிதை வராமலே போய்விடும். கவிதையை எழுதிவிட்டு கவிதையைப் பற்றி விளக்கம் கூறுவது. எந்தச் சந்தர்ப்பத்தில், எப்படி கவிதை எழுதினேன் என்று எழுத ஆரம்பத்தால், கவிதையைப்படிக்கும் போது உண்டாகும் சுவாரசியம் குறைந்து விடும்.
‘சில க.நா.சு கவிதைகள்’ புத்தகத்தை ஒருவருக்குக் கொடுத்தேன் (இலவசமாக வழங்கப்படுகிறது). அதைப் பார்த்துவிட்டு அந்தக் காலத்தில் பிள்ளைத் தமிழில் இப்படித்தான் எழுதுவார்கள் என்றார். அவர் முடிதிருத்தம் செய்யும் கடை வைத்திருக்கிறாராம். அவரே 1000 கவிதைகள் எழுதியுள்ளதாகக் கூறினார். எல்லாம் நோட்புக்கில் இருக்கிறது என்றார். இப்படி சொல்பவரும் இருக்கிறார்கள்.
ஒருவர் கவிதையை எழுதிவிடுவார். பின் சந்தேகம் வந்துவிடும். வரியை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே இருப்பார். பிரமிள் அவர் கவிதையை பலமுறை மாற்றி மாற்றி எழுதிக்கொண்டே இருப்பார். ரொம்பவும் மாற்றிக்கொண்டே போனால் கவிதை நம்மை விட்டு ஓடிப் போய்விடும். ஒருவித சாமர்த்தியம்தான் அதில் தென்படும்.
கவிதையை இந்த subjectல் எழுத வேண்டுமென்றும் எழுதக் கூடாது. கவிதை வராது. ஓடிப்போய்விடும். இன்னும் சிலருக்கு கவிதை மனதிற்குள்ளே இருக்கும். ஆர்.ராஜகோபாலன் என்ற கவிஞர், கவிதையை மனதிற்குள் எழுதிவிட்டேன். பேப்பர் பேனா எடுத்து வந்து எழுத வேண்டும் என்பார். என்னால் அதுமாதிரி கவிதை எழுத முடியாது. அதேபோல் கவிதையை மனதிற்குள் வைத்திருக்க முடியாது. ஒருமுறை எழுதிப் பார்த்துவிட்டு, திரும்பவும் எழுத ஆரம்பித்தால் முன்பு எழுதியது மாதிரி கவிதை வராது.
க.நா.சுவிடம் எனக்குப் பிடித்த விஷயம். கவிதையை அலட்சியமாக எழுதுவது. ஒரு நோட்புக் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு ஒரு கவிதை என்றெல்லாம் எழுதியிருக்கிறார். அவருடைய ‘விலை’ என்ற கவிதையைப் படித்து எனக்கு ஆச்சரியம். 22 நாட்களில் சர்மாவின் உயில் என்ற நாவலை எழுதியிருக்கிறார்.
விலை என்கிற கவிதையை அந்தக் காலத்தில் எழுதியிருந்தாலும், இந்தக் காலத்திற்கு ரொம்பவும் பொருந்துகிறது.
ஓ..ஓ…ஓ…ஓ
இவனுக்குத் தேச பக்தி
நிறைய வுண்டு. தேசத்தை
விற்கும்போது
நல்ல விலை போகும்படிப்
பார்த்துக் கொள்வான்
இவனுக்கு தேசபக்தி
நி-றை-ய வுண்டு
ஓ….ஓ…..ஓ……ஓ
கவிதையில் ஓ….ஓ…என்கிறாரே அது எதைக் குறிக்கிறது. க.நா.சுவின் இந்தக் கவிதை எனக்குப் பிடித்த கவிதை. எளிமையாகப் புரியும்படி கவிதை இருப்பதோடு இல்லாமல், இன்றைய ஊழல் செய்யும் அரசியல்வாதியைப் பார்த்தா ஓ ஓ என்கிறார்.
இந்தப் புத்தகத்தைத்தான் இலவசமாக எல்லோருக்கும் அனுப்புகிறேன் என்கிறேன. ஒரு கார்டில் உங்கள் முகவரியை அனுப்புங்கள் என்கிறேன். இன்று வர 6 பேர்களைத் தவிர யாரும் புத்தகம் வேண்டுமென்று கேட்கக் கூட இல்லை. ஓ ஓ ஓ ஓ……
(இன்னும் வரும்)
இரவும் பகலும்
ஏழு வண்ணங்களோடும்
களித்து களைத்த
ஏழு கடல்களும்
பகலை பரந்து
உள் வாங்கிக் கொண்டன.
இருளின் மயக்கத்தில்
இமைகள் மூடின.
பலரின் வீட்டிற்கும்
பலரும் வந்தார்கள்.
காந்தி வந்தார்.
ஒபாமா வந்தார்.
கலாம் வந்தார்.
கிளின்டன் வந்தார்.
எம்.ஜி.ஆர் வந்தார்.
சுந்தர ராமசாமி வந்தார்.
க.நா.சு வந்தார்.
பழைய பேப்பர்காரன்
வந்தான்.
வீரப்பன் வந்தான்.
திருடர்கள் வந்தார்கள்.
இவர்களோடு கடவுளும்
வந்தார்.
உயிரோடு இருப்பவர்கள்,
உயிரோடு இல்லாதவர்கள்
சிங்கங்கள், புலிகள் என
எல்லாமே
யாருக்கும் தெரியாமல்
அவரவர் உலகத்துள்
வந்து போயினர்.
இருண்ட ரகசியங்களோடு
இமைகள் புதைந்திருக்க
பரந்த வானத்தின்
இருளைத் துடைத்தெடுத்த
பகல் காத்திருக்கிறது
சிறிய இமைகளின்
வெளியே வேட்டை நாயாய்
மூடிய இமைகளுக்குள்
முடங்கிய இருண்ட உலகின்
இருளைத் துடைத்தெடுக்க.
மொழம்
‘பண்டிகை நேரம்
பதினஞ்சு ரூவாய்க்குப்
பைசா குறையாது மொழம்’
காசில் கறாராய் இருந்தாலும்
களை கட்டியிருந்தது
அவள் கடையிலே வியாபாரம்.
வந்து நின்ற பேருந்திலிருந்து
இறங்குகிறாள் ஒரு இளந்தாய்
கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த
மூன்று குட்டித் தேவதைகளுடன்.
எண்ணெய் வைத்து வாரிமுடித்த
பூச்சூடாப் பின்னல் நுனிகள்
பச்சை மஞ்சள் ஊதா ரிப்பன்களில்.
கூடைமல்லி பார்த்ததுமே தவிப்பாகிக்
குழந்தைகளை இழுத்துக் கொண்டு
வேகமாகக் கடந்தவளைக்
கூவி அழைத்துக்
கொடுக்கிறாள் பூக்காரம்மா
‘அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.
*** *** ***
பிறிதொன்று
கோலமிட குனிந்தவள் மீது
பனித்துளி விழுந்தது
ஊரையே கழுவி
துடைத்து வைத்திருந்தது
நேற்றிரவு பெய்த மழை
சகதியில் உழலும் பன்றிகள்
சந்தன வாசனையை அறியாது
நரகல் தின்னும் நாய்
காலை வேளையில்
குளத்துக் கரையையே
சுற்றி வரும்
காற்று கேட்ட கேள்விக்கு
விடைதெரியாமல்
மரங்கள் இலை உதிர்த்தன
வெண்மேகம் மயிலுக்கு
என்ன துரோகம் செய்தது
வீதியில் நடப்பவர்கள்
மற்றவர் முகம் பார்த்து
நடப்பதில்லை
நெல் கொறிக்கும்
சிட்டுக்குருவி
எப்படி விளைந்ததென்று
அறியாது.
கோடையின் உவப்பு
இந்த கோடையின் வெம்மை
இனிமையானதொரு உவப்பை வெளியிடுகிறது.
ஒரு பழங்கால அறையை போன்ற இந்த பூமி
அதன் ஆதி சாயல் துலங்கித் தெரிய
இலைகள் உதிர்த்த பற்பல கிளைகள் வழி
வானைக் கண்ணுக்குள் அணுக்கி வைக்கிறது.
ஒரு மங்கலான சோபை வழியும்
நான்கு மணி மனிதர்கள்
விருப்பு வெறுப்பற்ற ஞானியராய்
பேருந்தில் சாய்ந்தபடி இருக்கிறார்கள்
அவர்களின் பார்வையற்ற பார்வை
கலைக்க முடியாதொரு அமைதியை
வழியெங்கும் பேசிச் செல்கிறது
பயணம் முடிந்து திரும்பும் வேளை
அந்தியின் சோபை அவர்களை அழகூட்ட
மெல்லக் கரைகிறார்கள் கோடையின் உவப்பில்
பின்/
பழங்களாய் சூரியன் தணிய
கனிந்து விம்முகிறது கோடைப் பழம்.
போர்ப் பட்டாளங்கள்
மேசையில் ஊர்வலம் போகும்
குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன்
உறங்கிப் போயிருந்தான்
சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த
முற்றத்தில் யானைகளின் நடனம்
தூரத்து மேகங்களிடையிருந்து
திமிங்கிலங்கள் குதித்திட
பாய்மரக் கப்பல்களின் பயணம்
கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையின் காலடியில்
படை வீரர்களின் வாட் போர்
கதை சொல்லும் தங்கையின் மொழியில்
கடற்குதிரை நடை
சிங்க வேட்டை சுவர்ப்படத்தின் கீழே
சிறுவனிடம் கதை கேட்கும் கிழச் சிங்கம்
விளக்கின் நிழலில் குள்ளநரி
கூடையில் இரட்டைக் குழந்தைகள்
தாலாட்டும் அம்மாவின் புத்தகத்தில்
கதைமாந்தர்களின் உறக்கம்
செதுக்கிய மரச் சிற்பங்களிடையிருந்து
எழுந்து நிற்கும் புதுச் சிலை
அப்பாவின் கை தொட்டு
உரத்துப் பேச ஆரம்பிக்கிறது
நிலவிலிருந்து இறங்கிவரும் பாலம்
யன்னல் கதவிடையில் முடிய
கட்டிலுக்கு இறங்கி வருகின்றனர்
தேவதைகளும் சாத்தான்களும் ஒருசேர
படுக்கையில் எழுப்பிய மாளிகை உச்சிகளில்
கொடிகள் பறக்கின்றன
வழமை போலவே
கீற்றுப்படைகளோடு வந்த ஒளி
மூடியிருந்த கண்ணாடி யன்னலோடு போரிட
சிதறிய வெளிச்சம் அறை நிரப்பி
என் கனவு கலைத்திற்று
ஜோல்னாப் பைகள்
விதம்விதமாய் ஜோல்னாப் பைகளை
சுமந்து வருவேன்
பார்க் ரயில்வே ஸ்டேஷன் வாசலில்
கூவி விற்பார்கள் ரூபாய்க்கு பத்தென்று
வகைவகையாய்ப் பைகளை வாங்குவேன்
வீட்டில் உள்ளவர்களுக்கு
ஏனோ பிடிப்பதில்லை
நான் வாங்கும் ஜோல்னாப் பைகளை
பைகளில் ஸ்திரமற்ற தன்மையை
கொஞ்சம் அதிக கனமுள்ள
புத்தகங்களை சுமக்காது
ஓரம் கிழிந்து தொங்கும்
இன்னொரு முறை தையல் போடலாமென்றால்
மூன்று பைகளை வாங்கும்
விலையை வாய்க்கூசாமல் கேட்பார்கள்
ஜோல்னாப் பைகள்
மெது மெதுவாய் நிறம் மாறி
வேறு வேறு விதமான
பைகளாய் மாறின
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை
உறவினர் வீட்டிலிருந்து
அளவுக்கதிமாய் தேங்காய்களை
உருட்டிவர
சாக்குப் பைகள் தயாராயின
மைதிலிக்கு மனசே வராது
என்னிடம் பைகளைத் தர
வீட்டில் புத்தகக் குவியலைப்
பார்க்கும் கடுப்பை
பைகளில் காட்டுவாள்
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை
பைகளில் இன்னது என்றில்லாமல்
எல்லாம் நுழைந்தன சுதந்திரமாய்
வீரன் கோயில் பிரசாதம்
மதியம் சாப்பிடப் போகும் பிடிசாதம்
வழுக்கையை மறைக்க
பலவித நிறங்களில் சீப்புகள்
உலக விசாரங்களை அளக்க
ஆங்கில தமிழ் பத்திரிகைகள்
சில க.நா.சு கவிதைகள் புத்தகங்கள்
எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும்
போன ஆண்டு டைரி
பின்
பின்
உடைந்த சில
கண்ணாடி வளையல் துண்டுகள்
பேப்பர் வெயிட்டுகள்
எல்லாம் எப்படி வந்தன
பைக்குள்…