புத்தக விமர்சனம் 9

புத்தக விமர்சனம் 9
                                                   அழகியசிங்கர்
சமீபத்தில் சிறுகதைத் தொகுதியா கவிதைத் தொகுதியா எது விற்பனை ஆகிறது என்று கணக்கெடுக்கும்போது, இரண்டுமே பெரிதாக விற்பதில்லை என்பதைக் கண்டுகொண்டேன்.  பெரிய பத்திரிகைகள் சிறுகதைகளை நம்ப மறுத்ததால், சிறுகதைகள் வெளி வருவதே நின்றுவிட்டன.  அதுவும் இலக்கியத் தரமான கதைகளை கண்டு பிடிப்பதே பெரிய பாடாக இருக்கிறது. 
 இந்தத் தருணத்தில்தான் ராமலக்ஷ்மி எழுதிய ‘அடை மழை’ என்ற சிறுகதைத் தொகுதி என் கண்ணில் பட்டது.
ஒரு புத்தகம் படிக்க எடுக்கும்போது, ஒரு நிதான வாசிப்பில் நம்மை தள்ளி விட்டால், அது ஓரளவு தரமான புத்தகமாக இருந்து விடும்.  கவிதைகளையும், சிறுகதைகளையும் நிதான வாசிப்பில்தான் நாம் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். 108 பக்கங்கள் கொண்ட 13 கதைகளைக் கொண்ட தொகுப்புதான் அடை மழை என்ற தொகுப்பு. இதில் உள்ள எல்லாக் கதைகளும் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகி இருக்கின்றன. 
2010லிருந்து இவர் கதைகள் எழுதி வருகிறார்.  கவிதை, மொழிபெயரப்பு கவிதைகள் என்று பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  அகநாழிகை பதிப்பகம் மூலம் வெளிவந்த இத் தொகுப்பின் பின் அட்டையில் பொன் வாசுதேவன் இப்படி குறிப்பிடுகிறார் : காலத்தின் போக்கில் கண் முன்னே நசிந்து கொண்டிருக்கும் அபத்த வாழ்வின் சகல பக்கங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற போலித்தனங்கû அழுத்தமாகச் சொல்கின்றன ராமலக்ஷ்மியின் கதைகள்.
ரிஷபன் என்பவரோ, üகதைகளை ஒவ்வொன்றாய் சொல்லி என்ன ரசித்தேன் என்று விவரிக்கலாம்.  அதுவேதான் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நேரப் போகிறது என்பதால் கொஞ்சம் விலகி நின்று உங்களுக்கு வழி விடுகிறேன்.  வாசித்து முடிந்ததும் சேர்ந்து கை தட்டலாம் நாம்,ý  ரிஷபனும் இப்படி சொல்லி தப்பி விடுகிறார். 
‘எளிய மக்களின் வலிகளும், சராசரி மனித வாழ்வின் நிதர்சனங்களுமே இக் கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன,’ என்கிறார்
ராமலக்ஷ்மி. இதையெல்லாம் படித்தால், ராமலக்ஷ்மி எதுமாதிரி கதை எழுதுகிறார் என்பதைக் கண்டு பிடித்து விட முடியாது.  பொதுவாக இவருடைய கதைகளில் ஒரு பொதுவான தன்மையை என்னால் கண்டு பிடிக்க முடிந்தது.   அது அநீதிக்கு குரல் கொடுக்கும் தன்மை.  பின் ஏழ்மையைக் கண்டு கண் கலங்கும் தன்மை.  பின், எல்லாப் பிரசசினைகளுக்கும் கதைகள் மூலம் தீர்வு கொடுத்து விடுகிறார்.  
பொட்டலம் என்ற கதை.  இக் கதையை தலை முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வரவில்லை என்பதால், ஒரு பையனின் தலைமுடியை ஆசரியை வெட்டி, வெட்டிய தலை முடியை அவனிடம் அள்ளிக் கொடுத்து விடுகிறாள்.  இது எவ்வளவு கொடுமை.  இதற்கு அடிப்படையாக தலை முடியைக் கூட வெட்ட முடியாமல் போகிற வறுமையை காரணம் வைக்கிறார்.  இது மாதிரியான வறுமைச் சித்தரிப்புக் கதைகளை பலர் தமிழில் எழுதி எழுதி படித்தாயிற்று.  சம்பவங்கள் வேற மாதிரி இருக்கிறதே தவிர, அடிப்படை காரணமான வறுமை மாறவில்லை.
கதைகளை உருக்கமாக எழுதுவதில் ராமலக்ஷ்மி தேர்ந்தவராக இருக்கிறார்.  முதல் கதையான வசந்தா என்ற பெயரில் உள்ள கதையில், வசந்தா மேலே படிக்க முடியாமல் போன கோபத்தை வெளிப்படுத்துகிறார்.  படிப்பவரை நெகிழ வைக்கும் கதை இது.
ஈரம் என்ற கதையில் இரண்டு பேர்கள் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலையில், பிறந்த குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு ஓட வேண்டிய அவதியை விவரிக்கிறார்.
இவர் கதைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?  ஒருவித ஒழுங்கு எல்லாக் கதைகளிலும் இருக்கிறது.  அதுதான் இவருடைய கதைகளை குலைப்பதாக தோன்றுகிறது.  என்னதான் பிரச்சினையாக இருக்கட்டும், இவர் கதைகளில் எலலாம் சுலபமாக முடிந்து விடுகிறது.  
உலகம் அழகாலனது என்ற கதையில் அறிவுரை கூற ஆரம்பித்து விடுகிறார்.
“என்ன சொல்லி புரிய வைப்பது? விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் போன்ற கடைக்கோடி மனிதர் முதல் கோடானு கோடீஸ்வரர் வரை ‘சர்வைவல் ஆஃப்  தி பிட்டஸ்ட்’ எனச் சொல்லித் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு, இவ்வுலகையே போட்டியும் பொறாமையும் நிறைந்ததாகி விட்டார்கள் என்றே தோன்றியது..” என்றெல்லாம் அறிவுரை வழங்க ஆரம்பிக்கிறார்.  இது கதையின் சுவாரசியமான தன்மையைப் பெரிதும் குறைத்துவிடும் என்று எனக்குப் படுகிறது.  
இது இவருடைய முதல் கதைத் தொகுதி என்பதால், ஒரு சில குறைபாடுகளை பார்த்தாலும் அவற்றைப் பெரிது படுத்தக் கூடாது என்று தோன்றுகிறது.
இதுவும் கடந்து போகும் என்ற கதையில் தானே புயலால் படும் அவதியை எழுதுகிறார்.அடைக் கோழி என்ற கதையில் கோழி முட்டையைப் பறறி சொல்கிறார்.  இப்படி மாற்றி மாற்றி பல விஷயங்களை விவரிக்கிறார்.  பயணம் என்ற கதையில் தொடர்பு படுத்த முடியாத இரண்டு நிகழ்ச்சிகளை விவரிக்கிறார்.  கதையின் பிரச்சினை ரயில் பயணத்திலேயே ஆரம்பித்து முடிந்து விடுகிறது.
கதையின் தீர்வு என்பது ஆபத்தில்லா தீர்வாக இருக்கிறது.
அடைமழை – சிறுகதைகள் – ராமலக்ஷ்மி – வெளியீடு : அகநாழிகை பதிப்பகம் – எண். 33 மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306 – பேச :
9994541010 – விலை ரூ.100


  

கசடதபற ஜøலை 1971 – 10வது இதழ்


அம்மாவின் பொய்கள்

ஞானக்கூத்தன்




பெண்ணுடன் சிநேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறத் தவிடடுக்காக
வாங்கினேன் என்னை என்றாய்
எத்தனைப் பொய்க் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்?
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா
எனக்கினி பொய்கள் தேவை
இல்லை யென்றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னை விட்டு
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

ஒருமுறை ஞானக்கூத்தன் சொன்னார்.  எழுத்து பத்திரிகையில் 
அவர் கவிதைகள் வரவில்லை என்று.  எனக்கு அதைக் கேட்டபோது நம்பமுடியாமல் இருந்தது.  சிசு செல்லப்பாவுடன் அவர் நெருங்கி பழகியிருந்தாலும், ஞானக்கூத்தன் கவிதைகளை ஏன் அவர் பிரசுரம் செய்யவில்லை என்று தெரியவில்லை.
ஞானக்கூத்தன் கவிதைகள் அதன் பின் ‘நடை’, ‘கசடதபற’ பத்திரிகைகளில் வெளிவந்தன.  கசடதபற வரும்போது ஞானக்கூத்தன் ஒரு முக்கியமான கவிஞர்.  முதன்மையான கவிஞரும் கூட.  
‘அம்மாவின் பொய்கள்’ என்ற இந்தக் கவிதை எல்லோராலும் பேசப்பட்ட ஒரு முக்கியமான கவிதை. இதில் ஒரு வரி எழுதியிருக்கிறார்: வயதானோர்களுக்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா? என்று.
10வது இதழ் கசடதபற அட்டையில் இடம் பெற்ற கவிதை இது.

பாரதியாரைப் பற்றிய நினைவுகள்

அழகியசிங்கர்
09.09.2015 புதன் கிழமை திருவல்லிக்கேணி போயிருந்தேன்.  போகிற வழியில் பாரதியார் நினைவு இல்லத்தைப் பார்த்துக் கொண்டேபோனேன்.   அலங்காரம் பண்ணி இருந்தார்கள்.  பாரதியாரின் நினைவு நாளைகொண்டாடுவதற்காக இருக்கும்.  பாரதியின் நினைவுநாள் 11ஆம் தேதி.  வெள்ளிக்கிழமை. 
உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல.  எல்லா இடங்களிலும் இருக்கிறார்.  எல்லார் மனதிலும் புகுந்து கொண்டிருக்கிறார். 
தி நகரில் ஒரு பிரபலமான ஓட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட ஒருமுறை சென்றபோது,  அந்த ஓட்டலைச் சுற்றி பார்வையை ஓட விட்டேன்.  சுவரில் ஒரு படம் தொங்கிக் கொண்டிருந்தது.  யார் படம் என்று சறறு உற்றுப் பார்த்தேன்.  பாரதியார் படம். பாரதியார் ஏன் சாப்பிடற இடத்திற்கு வந்திருக்கிறார் என்று யோசித்தேன்.
பாரதியார் எழுதி குவித்திருக்கிறார்.  அவர் படைப்புகள் எல்லாவற்றையும் எல்லோரும் படித்து விட முடியாது.  அவருடைய சில கவிதைகள் எளிதில் புரிந்து விடாது.  எப்படி பாரதியார் புகழ் பரவியது.  அவர் எல்லாவற்றையும் பாடியிருக்கிறார்.  உலகத்தைப் பற்றி, நாட்டைப் பற்றி என்று எல்லாவற்றைப் பற்றியும் கவலைப் பட்டிருக்கிறார்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது பாரதியார் எழுதிய கட்டுரைகளை மின்சார வண்டியில் படித்துக்கொண்டே வருவேன்.  அக் கட்டுரைகளை எல்லாம் பெ தூரன் தொகுத்திருக்கிறார். எங்கள் கல்லூரி லைப்ரரியிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து படிப்பேன.  எனக்கு கெமிஸ்டிரி புத்தகம் படிப்பதை விட பாரதியார் புத்தகம் படிக்கப் பிடிக்கும்.  ஆனால் என் கூட படிக்கும் மற்ற மாணவர்கள் இது மாதிரி அவஸ்தையில் மாட்டிக்கொள்வது கிடையாது. 
பாரதியார் கட்டுரைகள் அவருடைய கவிதைகளை விட விறுவிறுப்பாக இருப்பதாக தோன்றும்.  எது எழுதினாலும் படிப்பவருக்குப் புரிகிற மாதிரி தெளிவாக எழுத வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் பாரதி.  ஒருமுறை தாகூருடன் பாரதியார் நோபல் பரிசு பெற போட்டி போட்டதாக குறிப்பிடுவார்கள்.  இது உண்மையா பொய்யா என்பதெல்லாம் தெரியாது.  ஆனால் அந்தத் தகுதி பாரதிக்கு தாகூரைவிட அதிகம் உண்டு.  
ஒரு காலத்தில் மணிக்கொடி காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிதையில் புது முயற்சி செய்து பார்க்க பாரதியார்தான் முக்கியமானவர்.  அவருடைய வசன கவிதை முயற்சிதான் அவர்களுக்கு உந்துதல்.  இன்று எழுதப்படுகிற கவிதைகள் எல்லாம் பாரதியார் கொடுத்த கொடைதான்.
எனக்குக் கூட பாரதியார் வசன கவிதைமுன் முன்பு எழுதிய கவிதை முறை எல்லாவற்றையும் உடைத்துவிட்டுப் போய்விட்டாரோ என்று தோன்றும். 
காட்சி என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்.
இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
யுடடைத்து. காற்றும் இனிது.
தீ இனிது.  நீர் இனிது.  நிலம் இனிது.
ஞாயிறு நன்று.  திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன….
என்றெல்லாம் பாடிச் செல்கிறார். 
பாரதியார் கவிதை புரிகிறதோ இல்லையோ ஒரு ஓட்டலில் பாரதிமேல் உள்ள பக்தியால் அவர் படத்தை வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.  உண்மையில் அங்கே பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரதி பற்றி எதாவது தெரியுமா என்பது தெரியாது.
பாரதியார் ஒரு மதிக்கக் கூடிய ஒருவராக மாறி விட்டார்.  எனக்குத் தெரிந்து தமிழ் மொழிக்காக பாரதியாருக்குத்தான் இந்தத் தகுதி கிடைத்துள்ளது.  இனிமேல் எழுதப் போகிற எழுதுகின்ற யாருக்கும் இதுமாதிரி தகுதி கிடையாது. அதாவது எல்லா தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்கிற தகுதி.
ஆனால் பாரதியார் உயிரோடு இருந்தபோது அவர் அடைந்த கொடுமைகள் அதிகம்.  
மகாகவி பாரதியார் என்ற புத்தகத்தில் வரா இப்படி எழுதுகிறார்:
“ஒரு மகான் எந்தத் துறையில் வேலை செய்தாலும், அவரது ஜீவிய காலத்திலேயே, அவருக்கு ஏற்ற பெருமையுடன் மக்களால் கொண்டாடப்படுவதில்லை.  உலக மகாகவி என்று போற்றப்படும் ஷேக்ஸ்பியரை அவருடைய காலத்தில் மதித்தார்களா? 
இதைப் போலவே பாரதியாரைப் பற்றியும் சிறிது காலம் மதிப்பு இருந்து வந்தது.  பாரதியார் இலக்கணம் அறியாக் கவிஞன் என்று பண்டிதர்கள் ஆதாரமும் பொருளுமின்றிப் பேசினார்கள்.  பாரதியார் வெறும் தேசியக் கவி என்று பலர் பேசிக் கொண்டார்கள்.  பாரதியார் பெண் விடுதலை நண்பன் என்று சிலர் ஆத்திரப்பட்டார்கள்.  மற்றும் பலர் ஆர்வத்துடன் பேசினார்கள். 
 பாரதியார் வெறுங்கஞ்சாப் புலவர் என்று ஏசினதையும் என் காதால் கேட்டிருக்கிறேன்.  மார்க்கெட்டில் ஒன்றும் வாங்கத் தெரியாமல் ஒரு கூடைக் கீரையை வாங்கின பாரதிதானே என்று சிலர் புரளி செய்வதைக் கேட்கும் துர்பாக்கியமும் நான் பெற்றதுண்டு.  ஆனால், இவைகளெல்லாம் யோசிக்காமல் ருசுவில்லாமல் எதையும் பேச முடியும் என்பதற்கு அத்தாட்சிகள் ஆகின்றன அல்லாமல், பாரதியாரைப் பற்றிய விமர்சனம் ஆகமாட்டா.”
வரலாறை திரும்பிப் பார்க்கும்போது பாரதியாரை சரியாக அந்தக் காலத்தில் புரிந்துகொள்ள வில்லை என்றே தோன்றுகிறது.  இது எல்லோருக்கும் ஏறபடுகிற ஒன்று.  ஒருமுறை சென்னைக்கு வந்திருந்த காந்தியைச் சந்தித்து ஒரு கூட்டத்தில் பேச அவரை அழைத்தார்.  அந்தத் தருணத்தில் காந்தியைப் பார்க்க வந்த பாரதியை யாரும் பொருட்படுத்தத் தயாராய் இல்லை.  முதலில் பாரதியை காந்திக்கு யாரும் அறிமுகப்படுத்தவே இல்லை.  நேராக காந்தியிடம் பாரதி சென்று அவர் முன் இருக்கையில் அமர்ந்து, “மிஸ்டர் காந்தி, இன்றைக்கு சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவலலிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?” என்று கேட்கிறார்.
காந்தி அவருடைய உதவியாளர் மகாதோவபாய் அவர்களைக் கூப்பிட்டு மாலையில் அவருடைய அலுவலகள் என்ன என்று கேட்கிறார்.அவர் முடியாது என்று சொன்னவுடன், காந்தியும் பாரதியாரிடம் வர முடியாது என்று மறுத்து விடுகிறார். பாரதி காந்தியை ஆசிர்வாதம் செய்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறார்.
பாரதியார் அங்கிருந்து போனவுடன், காந்தி பாரதியாரைப் பற்றி விஜாரிக்கிறார்.  அவரைப் பற்றி தெரிந்து கொண்டு, காந்தி பாரதியாரைப் பற்றி இப்படி சொல்கிறார் : üüஇவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.  இதற்கு தமிழ் நாட்டில் ஒருவரும் இல்லையா?ýý என்கிறார்.
உண்மையில் பாரதியாரைப் பற்றி மிகக் குறைவாகவே பலருக்குத் தெரிகிறது.  காந்தியின் பக்கத்தில் வீற்றிருந்த ராஜாஜியோ சத்தியமூர்த்தியோ பாரதியாரை காந்தியிடம் சரியாக அறிமுகப் படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.  
இதேபோல் திருவண்ணாமலையில் உள்ள ரமணரை பாரதியாரைப் பார்க்கப் போயிருக்கிறார்.  ரமணர் முன்னால் பாரதி ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.  பின் எழுந்து போய்விட்டார். அங்குள்ளவர்கள் பாரதியாரைப் பற்றி அவர் போனபின்தான் ரமணரிடம் சொல்லியிருக்கிறார்களாம்.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடும் பாரதி பார்த்தசாரதி கோயில் யானையை தன் சகோதரனாக எண்ணி பழகினார்.  எப்போதும் தேங்காய் பழம் கொண்டு போவார்.  இவைகள் சாமிக்காக இல்லை. யானைக்காக.  எப்போதும் யானையின் துதிக்கையில் கொடுத்துவிட்டு அதை வருடிக் கொடுப்பார்.  ஒரு முறை இதுமாதிரி நடந்து கொண்டிருக்கும்போது யானை எதிர்பாராதவிதமாக வெறிகொண்டு அவரை சேர்த்து பிடித்து இழுத்துத் தான் இருக்கும் கொட்டத்துக்குள் கொண்டு விட்டது.  யானை மேலும் அவரை காலால் மிதிப்பதற்கு முன் பாரதியாரிடம் உயிராக இருந்த குவளைக் கண்ணன் என்ற அன்பர் தான் பாரதியாரைக் காப்பாற்றினார்.
ஏன் இதுமாதிரியான ஒரு நிகழ்ச்சி பாரதியார் வாழ்வில் நடைபெற வேண்டும்.
இது ஒரு விபத்தாக இருந்தாலும், இந்த விபத்தால் அவர் மரணம் அடையாவிட்டாலும், மரணம் பாரதியாரை கவர்ந்து செல்ல ஒத்திகை செய்ததா?
நம்மைப் பொறுத்தவரை பாரதியார் ஒரு அடையாளம்.  அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவோம், அவர் நினைவுநாளை கொண்டாடுவோம்.  அவர் எழுத்துக்களை படிப்போம்.
விருட்சம் வெளியீடாக பாரதி நினைவாக பாரதியாரின் தோத்திரப் பாடல்கள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  100 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.80 தான்.  விரும்புவர்கள்
navina.virutcham@gmail.com என்ற இ மெயிலில் தொடர்பு கொள்ளவும். தொலை பேசி எண் : 9444113205.

எதையாவது சொல்லட்டுமா 100……

நீங்கள் இயற்கை வைத்தியரா?
                                                              அழகியசிங்கர்


.
நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் அந்த இயற்கை வைத்தியரைச் சந்தித்தேன்.  அவரும் என்னைப் போல் ஒரு வங்கி ஊழியர்.  ஊழியராக இருந்தாலும் அவர் இயற்கை வைத்தியர்.  அவர் அந்தத் துறைக்கு வந்ததும் தற்செயலான நிகழ்ச்சி.  அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது.  அதைத் தடுக்க அலோபதி மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை அவர் எடுத்துக்கொள்ள வில்லை.  அதற்குப் பதில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிட ஆரம்பித்தார்.  அப்போதுதான் அவர் இயற்கை வைத்தியத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.  ஒரு புத்தகம் கூட எழுதினார்.  அது ஆயிரக்கணக்கில் விற்று அவர் பெயர் பிரபலமானது.  அந்தச் சமயத்தில் நான் கவிதைப் புத்தகம் போட்டதால் என் பெயர் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது.
அவர் ஒழுங்காக பயிற்சி எடுத்துக்கொண்ட இயற்கை வைத்தியர் இல்லை.  இருந்தாலும் அவர் தன்னை இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டார்.  பல ஊர்களுக்குச் சென்று இயற்சை வைத்தியத்தைப் பற்றி பிரச்சாரம் செய்தார்.   
அலுவலகத்தில் அவரை மதியம் சந்திப்பேன்.  அவர் கையில் காரேட், தக்காளிப் பழம், வெள்ளரிக்காய், தேங்காய் இருக்கும்.  அவற்றை பச்சையாக சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.  அலுவலக வாசலில் விற்கும் வாழைப்பழங்கள், பப்பாளிப்பழங்கள், கொய்யாப் பழங்கள் எல்லாம் வாங்கி வாங்கி வாயில் திணித்துக் கொள்வார்.  என்னையும் அவர் அப்படி சாப்பிடச் சொல்வார்.  அப்படி சாப்பிட்டால், ரத்த அழுத்தம் ஓடிப் போய்விடும் என்பார்.  தனக்கு அப்படி ஓடிப் போய்விட்டது என்றும் சொல்வார்.  எனக்கு அவர் சொல்ல சொல்ல ஆச்சரியமாக இருக்கும்.  நறுக் நறுக்கென்று தேங்காயை திருகிச் சாப்பிடும்போது பொறாமையாக இருக்கும்.
“சமைக்கிற உணவையே சாப்பிட மாட்டீர்களா?” என்று கேட்பேன்.
“தொட மாட்டேன்.  எனக்கு ஒரு நோயும் கிடையாது.  பிபியெல்லாம் பறந்து போய்விட்டது,” என்பார்.
ஒருநாள் கான்டினில் அவர் பூரி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டேன்.   மதியம் சிறிது நேரம் கழித்து வந்து திருட்டுத்தனமாக சாப்பிடுவதுபோல் தோன்றியது.  “என்ன இன்னிக்கு பூரி சாப்பிடுகிறீர்கள்? இயற்கை உணவு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். 
அவர் சிரித்துக்கொண்டே, “எவ்வளவு வருஷம் சமைச்ச உணவையே சாப்பிட்டிருக்கிறோம்.  என்னிக்காவது சாப்பிடத் தோன்றும்,”என்பார்.
நானும் அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.  இந்த இயற்கை வைத்தியர் வித்தியாசமாக இருக்கிறாரே என்று நினைத்துக் கொள்வேன்.  அவர் டீ காப்பி எல்லாம் சாப்பிட மாட்டார்.  
நானும் அந்தச் சமயத்தில் பிபி மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  அவரைப் போல தைரியமாக இயற்கை உணவில் இறங்க எனக்கு தைரியம் இல்லாமல் இருந்தது.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் வாழ்க்கையில் மடமடவென்று உயர்ந்து விட்டார்.  இயற்கை வைத்தியம் நடத்துவதற்காக ஒரு க்ளினிக் வைத்தார்.  அதில் பலர் நோய் தீர்வதற்கு சேர்ந்தார்கள்.  
எல்லோருக்கும் அவர் சொல்வது: பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.  சமைச்ச உணவைச்  சாப்பிடாதீங்க,  பால் எதுவும் குடிக்காதீங்க.  தீங்கு அது என்பதுதான்.  
அவர் சொல்வதை யாராலும் செய்து பார்க்க முடியாது.  எனக்குக் கூட சந்தேகமாக இருக்கும்.  வீட்டில சமைச்ச உணவை ஒரு அடி அடிக்கிறாரோ என்று.
அவரை மாதிரி காரெட்டைத் தின்பது, முட்டைக்கோûஸக் கொரிப்பதெல்லாம், வயிற்றை எப்போதும் நிரப்பாது.  
ஒரு முறை தஞ்சாவூரில உலகத் தமிழ் மாநாடு நடந்தது.  நானும் கலந்து கொண்டேன்.   என் புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு விற்பதற்குக் கலந்து கொண்டேன்.  ஒரே இருமலுடன் ஒரு மூட்டை நிறையா புத்தகங்களை எல்லாம் கட்டி எடுத்துக்கொண்டு போனேன்.  எனக்கு ஒரு ஸ்டால் கொடுத்தார்கள்.  உண்மையில் என் ஸ்டாலுடன் இன்னொருவரையும் சேர்த்து விட்டார்கள்.  அந்த இன்னொருவர் வேற யாருமில்லை.  என்கூட பணிபுரியும் இயற்கை வைத்தியர்தான்.  எனக்கு திகைப்பாக இருந்தது.  கவிதைப் புத்தகங்கள் விற்கிற இடத்தில் இயற்கை வைத்தியர் என்ன செய்யப் போகிறார் என்று குழப்பமாக இருந்தது.  எங்கள் இருவரையும் சேர்க்க எப்படி விழா ஏற்பாடு செய்தவர்களுக்குத் தோன்றியது?
ஆனால் நான் புத்தகங்களைக் கொண்டு வந்ததுபோல் அவர் பல பொடிகளைப் பொட்டலங்களாக அள்ளிக் கொண்டு வந்தார்.  அவர் கடையைப் பார்த்துக்கொள்ள இரண்டு பேர்களை ஏற்பாடு செய்திருந்தார்.  ஸ்டைலாக முதல்நாளும் கடைசி நாளும் வந்தார். உண்மையில்  என் கடைக்கு ஏகப்பட்ட கூட்டம்.  என்னைப் பார்த்த இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் என் மேல் பொறாமை.  
“என்ன உன் கடையில் ஏகப்பட்ட கூட்டம்.  கவிதைப் புத்தகமெல்லாம் கலை கட்டுதா?” என்றார்கள்.
“அதெல்லாம் இல்லை.  வருபவர்கள் எல்லாம் பொட்டலம் பொட்டலமாய் வாங்கிக் கொண்டு போகிறார்கள்.  விருட்சம் பத்திரிகையைக் கூட யாரும் தொட மாட்டேங்கிறார்கள்,”என்றேன் சிரித்துக்கொண்டே.
அந்த முறை இயற்கை வைத்தியருக்கு ஏகப்பட்ட வருமானம்.  எனக்கு ஒன்றுமில்லை. யாரும் என் புத்தகத்தை மதிக்கவே இல்லை. மருந்துக்குக் கூட யாரும் புத்தகத்தைப் புரட்டியும் பார்க்கவும் இல்லை.  வாங்கவும் இல்லை.  அப்போதுதான் நினைத்துக் கொண்டேன்.  இதுமாதிரி உலகத் தமிழ் மாநாட்டுக்கெல்லாம் தலையே வைத்துப் படுக்கக் கூடாதென்று.  
இயற்கை வைத்தியர் அன்றிலிருந்து கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார்.  ஒரு கட்டத்தில் அவர் வேலையை விட்டுப் போய்விட்டார்.  அதன்பின் நான் அவரைச் சந்திப்பதில்லை.  ஆனால் அவர் தயாரிக்கும் பவுடர்கள் சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகளில் நாட்டு மருந்து கடைகளில் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  அந்தக் கடைமகளில் அவர் எழுதிய புத்தகங்குளம் தொங்கிக் கொண்டிருக்கும். 
தஞ்சை பிரகாஷ் உடல்நிலை சரியில்லாதபோது அவர் மருத்துவமனையில்தான் தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டார்.
என் கேள்வி?  உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன? அதற்கு தொடர்ந்து அலோபதி மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?  மருந்து எடுத்துக்கொள்பவர்கள் அதை நிறுத்தினால், என்ன மாதிரி பிரச்சினை வருமென்று சொல்ல முடியாது என்று பயமுறுத்துகிறார்கள்.   
என் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு டீச்சருக்கு ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக. மாத்திரைகளை  ஒருவாரம் சாப்பிடாமல் இருந்து பார்த்தார்.  அவருக்கு ஒரு பக்கம் பக்கவாத நோய் வந்துவிட்டது.  அவரால் அதிலிருந்து அவ்வளவு சுலபமாய்  குணமாக முடியவில்லை.  படுத்தப் படுக்கையாக ஆகிவிட்டார்.  
இப்போது அந்த இயற்கை வைத்தியர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.  ஆனால் அவர் நல்ல மனிதர்.
குறிப்பு : 
எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் நான் பெரிதும் சிறியதுமாக பல கட்டுரைகள் எழுதி உள்ளேன்.  நான் சந்தித்த மனிதர்கள், இடங்கள், புத்தகங்கள் என்ற பலவற்றை பதிவு செய்திருக்கிறேன்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக இத் தலைப்பில் நான் எழுதியது தொடராக அமிருதா இதழிலு; மாதம் ஒரு முறை தொடராகவும் வந்தது.  எனக்கு வாய்ப்ளித்த திலகவதி அவர்களுக்கும், தளவாய் சுந்தரத்திற்கும் என் நன்றி.  
இந்த எதையாவது சொல்லட்டுமா 100 என்ற இலக்கை எட்டி உள்ளது.  இதை ஒரு புத்தகமாகக் கொண்டு வர நான் முயற்சி செய்து வருகிறேன்.

புத்தக விமர்சனம் ………


புத்தக விமர்சிப்பவர்  : ஜெ.பாஸ்கரன்
மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் –
டயான்
ப்ரோகோவன்

தமிழில்  ஆனந்த் 


மரணம் எல்லோருக்கும் பொதுவானது. திடீரென எதிர்கொள்ளும்போது அது
மரணித்தவர்களுக்கு ஓர் அமைதியையும், இன்னும் இருப்பவர்களுக்கு ஒரு மூர்க்கத்தனமான
வலியையும் கொடுக்கவல்லது !அது தோற்றுவிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும்,
காலங்களைக் கடந்த மிக நுட்பமான வாழ்க்கை பிம்பங்களும் ஆழ்மனதில் வலியைக் கொடுப்பவை
!
ஒரு பனிப்பிரதேசத்தில் தனியாய்க் கணவன் ஜூல்ஸுடன் வசிக்கும் ஆலிஸ், பனி
மிகுந்த ஒரு நாள் காலை, காபியின் மணத்துடன் எழுந்து கொள்கிறாள் – ஜூல்ஸ்
வழக்கம்போல் காலைச் சிற்றுண்டியையும், காபியையும் தயார் செய்வதன் மணம்தான் அது.
படுக்கையறையிலிருந்து வந்து, ஹாலில் சோபாவில் அன்றைய தினசரியுடன் அமர்ந்திருக்கும்
கணவன் அருகில் அமர்கிறாள் ஆலிஸ். அசைவுகள் ஏதுமில்லாமல் அமர்ந்திருக்கும் அவரைக்
கூப்பிடுகிறாள் – தோளில் கைவைத்த போதுதான் தெரிகிறது ஜூல்ஸ் இறந்து போயிருக்கிறார்
என்று !
ஓலமிட்டு அழுது ஊரைக்கூட்டித் தன் துயரத்தினை வெளியிட்டால், உடனே –
அலங்கரிக்கப் பட்ட அழகிய பெட்டியில் சில மணி நேரங்களில் ஜூல்ஸை எடுத்துச்
சென்றுவிடுவார்கள். மனது ஏற்கவில்லை. இன்னும் ஒரே ஒரு நாள் ஜுல்ஸுடன் வாழ்ந்து
விடுவது என்று முடிவு செய்கிறாள். வெளி உலகிலிருந்து மறைப்பதற்கான வழிகளைத்
திட்டமிடுகிறாள். அவளது மனப்போராட்டங்களும், துயரங்களும், தினசரி நிகழ்வுகளும்
ஜூல்ஸின் உடலைச் சுற்றி நடப்பதுவும், கடந்த கால நினைவுகளும், நிகழ்கால வலிகளும்,
எதிர்கால வெறுமையும் அவளை வாட்டுகின்றன. அலுவலக நேரத்தில், மகனிடம் இந்தச்
செய்தியைச் சொல்வது தவறு என்று அவனிடம் கூட தெரிவிக்க மனம்
ஒப்பவில்லை.
கீழ்ப் ப்ளாட்டிலிருந்து சரியாகப் பத்து மணிக்கு ஜூல்ஸுடன்
சதுரங்கம் ஆட வரும் ஆடிஸ்டிக் சிறுவன் டேவிட் அன்று சற்று முன்னதாகவே வந்து விட,
அவனுடன் ஜூல்ஸுக்கு பதிலாகத் தான் விளையாடுகிறாள். ஆனால் டேவிட் ஜூல்ஸின் மரணத்தை
அறிந்து கொள்கிறான் – ஆலிஸின் மனத்தை அறிந்தவன் போல், அது பற்றி ஒன்றும் கூறாமல் –
தன் அம்மாவிடம் கூட – மிக இயல்பாக தன்னை நடத்திக் கொள்கிறான். சிற்றுண்டி தயாரிக்க
சமையலறையில் ஆலிஸுக்கு உதவுகிறான். அவனது இந்தப் புரிதல், ஆலிஸை மட்டும் அல்ல,
வாசகனையும் வியக்க வைக்கிறது.
டேவிட்டின் தாய் பியா, அவள் அம்மாவுடன்
மருத்துவ மனையில் தங்க நேர்வதால், அன்று இரவு தன் வழக்கத்திற்கு மாறாக, டேவிட்
ஆலிஸுடன், ஜூல்ஸின் படுக்கையில் உறங்கி விடுகிறான் – அவனுக்கு அவன் நேரப்படி
எல்லாம் நடக்க வேண்டும்.
ஆலிஸ், ஜூல்ஸுடன் பேசுகிறாள்; கீழே விழுந்து
கிடக்கும் அவரது மூக்குக்கண்ணாடியைத் தன் நைட்டியில் துடைத்துப் போட்டுவிடுகிறாள்;
குளிர் என்பதால், அவரது கட்டம் போட்ட சால்வையைப் போர்த்தி, கால்களில் காலணிகளை
மாட்டி விடுகிறாள். சிறிது நேரம் அருகே படுத்து உறங்க முயற்சி
செய்கிறாள்.
 ” நீங்கள் ஏன் படுக்கையிலேயே செத்துப் போகவில்லை ? “ என்று
கேட்கிறாள். “ அப்போது நாம் போர்வைக்குள்ளேயே ஒரு குட்டித் தூக்கம்
போட்டிருக்கலாம்.”
ஒரு கணம் அவர் மறைந்து போனதை மறந்து விடுகிறாள்;
தப்பிக்கவே முடியாத இந்த உண்மை மீண்டும் அவளைத் தாக்கியபோது, அவள் கண்கள் கண்ணீரால்
நிரம்புகின்றன.
அவருடன் பேசிக்கொண்டே, செய்தித்தாளை அவர் மடியில்
போட்டுவிட்டு, காலைச் சிற்றுண்டி உண்கிறாள். குளித்து, தேர்ந்தெடுத்த ஆடைகளை
அணிகிறாள். வெளியே இனி கடைகளுக்குத் தனியாகச் செல்லவேண்டும் என்ற நினைப்பில், மனம்
உடைந்து போகிறாள்.
ஜூல்ஸிடம் கடந்த காலத்தில் தான் மறைத்திருந்த ஓர் உண்மையை
அவரிடமே சொல்கிறாள். அவருக்கு மிகவும் பிடித்த, வோல்கா என்னும் பெண்ணிடம்
அவருக்கிருந்த காதலை (அவளை உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்தானே ?), அவர் அறியாமலே
எப்படி முறியடித்தாள் என்று விவரிக்கிறாள். அந்த வன்மத்தின் பின்னே, அடிநாதமாக,
அவள் அவருக்காக ஏங்கும் அன்பும் காதலும் இழைந்தோடுவதை உணர்ச்சி பூர்வமாக
வெளிப்படுத்துகிறாள். பனிக்கட்டிபோல் சில்லிட்டிருந்த அவரது இதழ்களில் முத்தமிட்டு,
“ தயவு செய்து என் மேல் கோபப்படாதீர்கள்.” என்று சொல்கிறாள் . “கடைசீயில் நான்
அதைச் சொல்லிவிட்டேன் என்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது .“
 குற்ற உணர்ச்சி
இப்போது இல்லை.
ஜூல்ஸின் வங்கி வேலையுடன் இணைத்து, தேன்நிலவுக்காகப் பாரீஸ்
சென்றதையும் ,
” நீங்கள் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தீர்கள் ஜூல்ஸ்.
தலைமுடியில் தைலம் தடவி, பனிபோல் வெண்மையான சட்டையை அணிந்திருந்தீர்கள். என் நாசி
உங்கள் கழுத்தில் உரச, உங்கள் சட்டையில் கழுத்துப்பட்டையைப் பொருத்தும்போது,
உங்களிடமிருந்து எழுந்த வாசனை எனக்கு தெள்ளத் தெளிவாக நினைவில்
இருக்கிறது.”
அங்கு ஆரம்பக் கட்ட ’கருச்சிதைவு’ தனக்கேற்பட்டதையும்
நினைத்துப் பார்க்கிறாள். ‘ நாம் இருவருமே இதைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளவே இல்லை –
உங்கள் கல்லறைக்கு எடுத்துப் போகும் இந்த ரகசியம் மட்டும் நாம் இருவரும்
பகிர்ந்துகொள்ளும் ஒன்று ‘ என்று நெகிழ்கிறாள்.
மிக நுட்பமாக, ஒவ்வோர்
எண்ணத்தையும் பிம்பமாக வரைந்திருக்கிறார் இதன் ஆசிரியர் டயான் ப்ரோகோவன் –
ஃப்ளெமிஷ் எழுத்தாளர் ; ஒரு நேர்காணலில் அவர் கூறுகிறார், ‘ வயதாக ஆக எழுதுவதற்குக்
குறைவான சொற்களே தேவைப் படுகின்றன. சொற்களுக்கிடையில் உள்ள மெளனங்கள், சொற்களின்
அளவுக்கு முக்கியமானவை “ . இந்த நாவலைப் படிக்கும்போது, நம்மால் இதனை உணர
முடியும்.
இந்நாவலை மொழிபெயர்த்துள்ள திரு ஆனந்த் (பி. 1951), ஒரு கவிஞர்,
நாவலாசிரியர்; ஜோஸே ஸரமாகோவ், ராபர்ட்டோ கலாஸ்ஸோவ் ஆகியோர் நூல்களை இவர்
மொழிபெயர்த்திருக்கிறார்.
வாழ்தல், இறத்தல் பற்றிய தெளிவானதொரு சிந்தனையை
நம் முன் தோற்றுவிக்கிறது இந்த நாவல். ஒரு வித்தியாசமான படைப்பு என்றுதான்
சொல்லவேண்டும்.

மிஸ்டர் ஜøலஸ÷டன் ஒரு நாள் – ஆசரியர் : டயான் ப்ரோகோவன் – தமிழில் : ஆனந்த் – நாவல் வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 – விலை ரூ.75 – தொலைபேசி எண் : 91-4652 278525

முதுமையின் இடப்பெயர்தல்

பிரேம பிரபா

கருணை துளியுமற்ற

கட்டுப்பாடுகளின்

முட்கிரீடம் தரித்த முதுமை

கனிந்துறுகிய

கடைசித் தருணங்களில்

தவிப்பின் உச்சமாய்

தத்தளிக்கிறது

இமைகளின் மென் துடிப்பு.

முதியவரின் அளப்பறிய யாசிப்பின்

அனைத்து வேண்டுதல்களும்

நிறைவேறிடத்  துடிக்கும்

மௌனமாக இடப் பெயர்தல்.

துளியும் அறிமுகம் இல்லாத

பெரு வெளியில்

முதியவரின் முதல்

சுதந்திரப்  பயணம்.

பாதைகளில் கிடக்கும்

முட்கிரீடங்களை விலக்கி

குழந்தையின் மகிழ்ச்சியில்

முன்னேறுகிறார் முதியவர்

புதுப் பிறவி அடைந்த மகிழ்ச்சியில்.

கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்

பனி எதிர் பருவம்


ஆங்கிலத்தில் : எட்வர்டு லீய்டர்ஸ்




 தமிழில் : மகாகணபதி




என்னுள் ஒரு                குழந்தை
இருள் வெளியில்
விழும் பனியை விரும்பும்

என்னுள் ஒரு குழந்தை
இருள் வெளியில்
விழும் பனியிடம் அஞ்சும்

என்னுள் ஒரு குழந்தை
வெளியில் இருட்டில்
விழும் பனியைக் காணமுடியும்

அக் குழந்தை
என்னுள்ளே

நான் உள்ளே

இருள் வெளியில் விழும் பனியை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது குழந்தையாக மாறி விடுகிறது மனம். என்னுள்ளேயே குழந்தையும் இருக்கிறது.  

கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்

என்னுடைய 30வது வயதில்

                              சீனம் : ச்சி ஸ÷யென் 


   ஆங்கிலம் வழி தமிழில் : ப கங்கை கொண்டான்


“சிகரெட் சாம்பல்கள்
சிதறிப் படிகின்றன –
எனது
வாழ்க்கை மலரின்
உதிர்ந்த இதழ்கள்
அவை.
தொடுவானத்தின்
சங்கமத்திற்கும்
அப்பால் –
மிகவும் அப்பால்
எனது ஒற்றை
நிழல் வளர்கிறது
நீளமாக –
மிகவும் நீளமாக! “

ஒரு கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதி விடுகிறார்கள்.  அதைப் புரிந்து கொள்பவர்கள் தன் மனநிலை, அறிவு நிலைக்கு ஏற்ப புரிந்து கொள்கிறார்கள்.  எழுதுகிறவர்களிடமிருந்து கவிதை நழுவிப் போய்விடுகிறது. படிப்பவர் ஒவ்வொருவரும் இந்தக் கவிதையை எப்படிப் புரிந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இந்தக் கவிதை தோற்றம் தரும்.

புத்தக விமர்சனம் 8

அழகியசிங்கர்
 
இமையம் அவர்களின் ‘எங்கதெ’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது.  சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.  தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள்.  அதேபோல் தீராநதியிலும், அமிருதாவிலும் இப் புத்தகம் பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள்.  மேலும் இப் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டம் நடந்தது.  
ஒருவிதத்தில் இப்படி இப் புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியானது என்று தோன்றுகிறது.  உண்மையில் நடுப்பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி இப்படி விமர்சனம் வருவது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு தமிழ் இந்து இல்லை, நூறு தமிழ் இந்துக்கள் உருவாக வேண்டும்.  நடுப்பக்கத்தில் கண்டுகொள்ளமால் விடப் படுகிற பல புத்தகங்களை எல்லோரும் எழுத வேண்டும்.  சினிமா படங்களுக்கு, சினிமா நடிகர், நடிகைக்குக் கிடைக்கிற முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும்.  இதெல்லாம் சொல்லலாம். ஆனால் நடக்காது. ஏனென்றால் புத்தகம் படிப்பவர் குறைவு.  சினிமா பார்ப்பவர்கள் அதிகம். 
இமையம் இதுவரை 4 நாவல்கள், 4 சிறுகதைகள் கொண்டு வந்துள்ளார்.  இதைத் தவிர தொடர்ந்து எழுதிக்கொண்டே வருகிறார்.   அவருடைய எல்லாப் புத்தகங்களையும் க்ரியாதான் வெளியிட்டுள்ளன.  இமையத்தின் முதல் நாவல் கோவேறு கழுதைகள் என்ற நாவல். வெளிவந்த ஆண்டு 1994. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2001ல் வெளிவந்துள்ளது.  இது குறிப்பிடப்பட வேண்டிய படைப்பு.  
இமையத்திற்கு இதுவரை சாகித்திய அக்காதெமியின் பரிசு கிடைக்கவில்லை.  அவருக்கு அந்தப் பரிசு கிடைக்க நான் பரிந்துரை செய்கிறேன்.
மே 2015ல் வெளிவந்த அவருடைய எங்கதெ பலருடைய கவனத்தைக் கவர்ந்துள்ளது.  ஒரு விதத்தில் இப் புத்தகம் பற்றி விமர்சனம் செய்யும்போது அவருடைய நாவலின் முழுக் கதையையும் எல்லோரும் எழுதி விட்டார்கள்.  ஒரு புத்தகத்தைப் பற்றி குறிப்பாக நாவலைப் பற்றி எழுதும்போது, முழுக் கதையும் எல்லோரும் எழுதும்படி நேரிடுகிறது.  முழுக்கதையும் சொல்லாமல் ஒரு நாவலை விமர்சனம் செய்வது முடியாத காரியமாக எனக்குத் தோன்றுகிறது.  மேலும் புத்தக விமர்சனத்தை மட்டும் படிப்பவர்கள், அதுதான் நாவலைப் பற்றி எழுதியதைப் படித்தாயிற்றே என்று நாவலை வாங்கிப் படிக்காமல் விட்டுவிடுவார்கள் என்ற எண்ணமும் தோன்றியது.  
எங்கதெ என்ற நாவல் கள்ள தொடர்பைப் பற்றி பேசுகிற நாவல்.   தன்னைப் பற்றி பேசுகிற மாதிரி இந் நாவல் ஆரம்பமாகிறது.  அதில் கமலா என்கிற பெண் வருகிறாள்.  பத்து வருடம் அவளுடன் வாழ்ந்த வாழ்வைப் பற்றிய கதைதான் இந்த நாவல்.  இமையம் இதைப் பேசுகிறமாதிரி எழுதிக் கொண்டு போகிறார்.  முப்பத்தி மூணு வயதாகிறவனுக்கு கமலா என்கிற இருபத்தெட்டு வயதாகிற விதவையுடன் ஏற்படுகிற கள்ளத் தொடர்புதான் கதை.  ஏற்கனவே விதவையான கமலாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.
பத்து வருடத் தொடர்பில், தன்னைப் பற்றிய நினைவு இல்லாதவன் கதை.   இக் கதையைச் சொல்றவன், படித்திருந்தும் வேலைக்குப் போகாதவன், வெட்டியாய் சுத்தறவன்.  வீட்டில் கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தினாலும், கல்யாணம் எதுவும் செய்ய விருப்பமில்லாமல் கமலாவை  சுற்றி சுற்றி வருகிறான்.
கமலா இளம் வயசுக்காரி.  புருஷன் இல்லாதவள்.  இரண்டு பொட்டைப் பசங்களுடன் வசிக்க வருகிறாள்.  அவள் புருஷன் அடிப்பட்டு இறந்ததால, கருணை அடிப்படையில் டிகிரி படிச்சதால அவளுக்கு கிளார்க்கு வேலை அரசாங்கப் பள்ளிக்கூடம் ஒன்றில் கிடைக்கிறது.  
அவள் அழகைப் பார்த்து, எல்லோரும் அவளுக்கு சலுகைத் தருகிறார்கள்.  சிதம்பரம் புள்ளையோட வீட்டுல தங்கறதுக்கு இடம் கொடுக்கிறார்.  அவ கொடுக்கிற வாடகையை வாங்கிக்கிறார். பேரம் பேசவில்லை.  அவ வந்து இரண்டு நாள்ல ஊருக்குத் தெரிஞ்ச ஆளா, ஊரே பேசற ஆளா மாறி விடுகிறாள்.  
இந் நாவல் கமலாவைச் சுற்றி இருந்தாலும், கமலாவே தானே பேசற மாதிரி கதை இல்லை.  பொதுவா பார்க்கப் போனால், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாகிற கூடா ஒழுக்கம் பற்றிய கதைதான் இது.
இருவரும் விரும்பித்தான் இதை ஏற்றுக் கொள்கிறார்கள்.  கமலாவைப் பற்றி கதையை கதா நாயகன் சொல்லும்போது, நல்ல பாம்பு மாதிரி சரசரவென்று வந்தாள் என்று விவரிக்கிறான்.  அப்போதே கமலாவைப்பற்றிய விபரம் வெளிவரத் தொடங்கி விடுகிறது.  
அவளுடன் பழகும்போது மகுடி முன்னால் பாம்பு மயங்குவதுபோல இவன் மயங்கி விடுகிறான்.  அவள் சொல்றதையெல்லாம் கேட்கிறான்.  நில்லுன்னா நிக்கறான்.  உட்காருன்னா  உட்காறான்.  அவளோட வீட்டிலேயே பெரும்பாலும் இருக்கான்.  இது இவன் குடும்பத்துக்கு எரிச்சலாக இருக்கிறது.  ஒரு கல்யாணம் கூட பண்ணாம இருக்கானே என்று அவன் அப்பா அம்மா வருத்தப்படறாங்க.  அவன் தங்கைகள் எல்லாம் எவ்வளவு எடுததுச் சொன்னாலும் அவன் கேட்கறதில்லை.  வேலைக்குப் போவதில்லை.  இப்படி ஒரு வெட்டியா சுத்தறவன் கதைதான் இது.
கமலாவுக்கு இரண்டு பெட்டை குழந்தைகள் இருக்குன்னு தெரிஞ்சும், அவளையே சுத்தி சுத்தி வர்றான்.  ஒரு பார்வையில, ஒரு சிரிப்பில அவனை ஒரு நாய் குட்டியா மாத்தி விடறா.  அந்த ஊர்ல இருக்கும்போது, கமலாவை வேற யாரும் நெருங்கலை.  ஏன்னா அவன்தான் எல்லாம்.  அவன் அவளை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கலை.  அவளுக்கும் தோணலை.  இந்தக் கூடா நட்பில், அவ வீட்டுக்கு அவளுடைய பெற்றோர்கள், மாமனார் மாமியார் வரும்போதெல்லாம் அவன் இருக்க மாட்டான்.  
கமலா அந்த ஊரிலிருந்து வேற ஊருக்குப் போகும்போது பெரிய மாற்றம் ஏற்படுகிறது.  கமலாவுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது.  அவள் கடலூர் மாற்றப்படுகிறாள்.  இவன்தான் அவளை அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தகிறான்.  
இங்குதான் பிரச்சினை ஏற்படுகிறது.  ஒரு பெரிய ஆபிஸில் வேலை பார்க்கும்போது, அவளுக்கு பல பேருடன் தொடர்பு ஏற்படுகிறது.   சி இ ஓன்னு ஒருத்தன் கமலா வாழ்வில் நுழைகிறான்.  இன்னும் இரண்டு மூன்று வருஷத்துல ரிட்டையர்ட் ஆகப் போகிறவனுக்கு கமலா மீது மோகம்.  கமலா வீட்டுக்கு வந்து அவன் அவ்வளவு வசதியும் செய்து கொடுக்கிறான்.  அவன் அவளுக்கு மேல் உள்ள அதிகாரி. 
இக்கதையில் கூடா ஒழுக்கம்  ஷிப்ட் ஆகிறது.  இதை கமலா அவனிடம் மறைக்கிறாள்.  அவனுக்குத் தெரிந்தவுடன்,  அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அவனுக்கு இந்த சி இ ஓ வர்றது பிடிக்கலை.  அவ முன்னாடி ஒரு கட்டத்தில சி இ ஓ அவனை அலட்சியப் படுத்துகிறான்.
கமலா எப்போதும் போல் இருக்கிறாள்.  அவனும், சி இ ஒவும் அவளைப் பொறுத்தவரை ஒன்றுதான்.  பள்ளிக்கூடம் படித்த அவள் பசங்க கல்லூரிக்குப் போகிறார்கள்.  அம்மாவை அவர்கள் அப்படியேதான் பார்க்கிறார்கள். அம்மாவுடைய நடத்தையைத் தெரிந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. சி இ ஓ குடும்பத்தினர்கள் அவள் வீட்டுக்கு வந்து அவமானம் செய்தும், அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை.  வீட்டை மட்டும் மாற்றிக் கொள்கிறாள்.  அவளைப் பொறுத்தவரை அவளை விரும்புகிற ஆண்களை ஏற்றுக்கொள்கிறாள்.
தமிழில் கூடா ஒழுக்கம் பற்றிய கதை இதுதான் என்பதில்லை.  ஏற்கனவே பலர் எழுதி விட்டார்கள்.  ஜானகிராமனின் பெரும்பாலான கதைகள் கூடா ஒழுக்கம் பற்றியதுதான்.  நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், நாவல்கள் பெரும்பாலும் காந்தியுகத்தைப் பற்றி வெளிவந்து கொண்டிருந்தன.  சி சு செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன் போன்றவர்கள் காந்தியுக நாவல்களை எழுதி இருக்கிறார்கள்.  அதன்பின் உன்னதமான கதாபாத்திரங்களைக் கொண்ட நாவல்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றன. கல்கி, நா பார்த்தசாரதி போன்றவர்களின் பங்கு இதில் முக்கியமானது.  அரசியல் ஒழுக்கமின்மையைப் பற்றிய நாவலை இந்திரா பார்த்தசாரதி எழுதி உள்ளார்.  நடுத்தர வர்க்க மாந்தர்களைப் பற்றியும், விளிம்பு நிலை மாந்தர்களைப் பற்றியும் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. 
கூடா ஒழுக்கம் பற்றிய இந்த நாவலில் கதை சொல்றவனுக்கு (அவன் பெயர் இதில் சொல்லப்பட வில்லை), பத்து வருஷம் ஏற்படுத்திய பாதிப்பை விட்டு அவ்வளவு சுலபமாக வெளிவர முடியவில்லை.  அந்த வலியைத் தாங்க முடியவில்லை.  இறுதியில் கமலாவை கொலை செய்யவே முடிவு செய்கிறான். 
அவள் வீட்டிற்கு வந்து எப்போதும்போல் பழகுகிறான்.  அவள் கழுத்தை நெரித்து கொலை செய்ய நினைக்கும்போது, அவன் மனம் மாறி விடுகிறது.  அந்தப் பெண் பிள்ளைகள் அவள் இல்லை என்றால் அனாதை ஆகிவிடும் என்ற நினைப்பு வருகிறது.  பத்து வருடம் அவளுடன் இருந்தாகி விட்டது.  அதுவே போதும்,  அவள் அந்தப் பெண் பிள்ளைகளுக்காக இருக்க வேண்டும் என்று நினைத்து 
üüநீ யார் கூட வேணுமின்னாலும் இரு.  எப்பிடின்னாலும் இரு.  ஆனா உசுரோட இரு.  இதான் என் ஆச,ýý என்று ரகசியமா அவள் காதுல சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறான்.  ஆனா அப்படி சொலலிவிட்டு வருவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.  இமையம் இந்த நாவலை சிறப்பாக இப்படி முடித்து இருக்கிறார்.
எங்கதெ – நாவல் – இமையம் – பக்கம் : 110 – வெளியீடு : 
             Cre-A, New No.2, Old No.25, 17th East Street, Kamarajar Nagar,
             Thiruvanmiyur, Chennai 600 041, Phone  : 72999 05950
  
 

கசடதபற ஜøன் 1971 – 9வது இதழ்

ஹரி : ஓம் : தத் : ஸத்
           
                                                                                                 ஐராவதம்




நெடுஞ்சாலை நடுவினிலே
நான்
நீண்ட நேரம் படுத்திருக்க
நினைத்ததுண்டு

பச்சை விளக்கு எரிகையிலே
பாய்ந்து வரும் கார்கள்
பஸ்கள்,  லாரிகள், டாக்ஸிகள்
ஸ்கூட்டர்கள், சைகிள்கள்
அத்தனையும் என் பொருட்டு
நின்றுவிடும் எனக் கற்பனை
செய்ததுண்டு.

கடற்கரைக் கூட்டத்தில் கல்லெறிய
துடித்ததுண்டு
ஒளிச்சர விளக்குகள்
ஒலித்துச் சிதற
பலி ஆடு மந்தையென
பார்த்திருப்போர் கூட்டம்
ம்மே ம்மே என அலறிச் சிதற
மேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ
களேபரச் சந்தடியில்
காற்றாய் மறைய நினைத்ததுண்டு

பாட்டுக் கச்சேரியில்
பட்டுப் புடவைகள் வைரத்தோடுகள்
நவரத்தினக் கழுத்தணிகள்
நாற்புறமும் சிதற
கீர்த்தனை கிறீச்சிட
முத்தாய்பபு விழிதெறிக்க
சங்கதிகள் அந்தரத்தில்
சதிராட
வெடிகுண்டு வீசிடவும்
என் கைகள் துடித்ததுண்டு.

நகரத்தின் தெருக்களில்
நான் இன்னமும் நடக்கிறேன்…..
நடக்கிறேன்…..நடக்கிறேன்…..

ஐராவதத்தின் இந்தக் கவிதை விபரீதத்தை விளக்கும் கவிதை.  நெடுங்சாலையில் யாராவது படுத்திருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா? படிப்பவரை அதிர்ச்சி அளிக்கும்.  ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இதெல்லாம் அதிர்ச்சி இல்லை.  மனப்பிறழ்வை உண்டாக்கும் ஒன்றாக நினைக்கலாம்.
கடற்கரையில் கூட்டம் நடக்கிறது.  ஏன் கல்லெறிய வேண்டும்.  அதனால் ஏற்படும் பின் விளைவுகளை எள்ளல் தன்மையுடன் வெளிப்படுத்துகிறார்.  பாட்டுக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஏன் வெடிகுண்டு வீச நினைக்கிறார்.  
புரியவில்லை.